தயாரிப்பு: எவி.எம்.கே. சண்முகம் நடிப்பு: பிரபு, அரவிந்த், நவ்தீப், ஹனிபா, கஞ்சா கருப்பு, லிவிங்ஸ்டன், சத்யன், சதீஷ், வாசுவிக்ரம், மோனிகா, சரண்யாமோகன், மனோரமா,
இயக்கம்: சபாபதி தெட்சிணாமூர்த்தி இசை: விஜய்ஆண்டனிஒளிப்பதிவு: அருள்தாஸ் படத்தொகுப்பு: ஓ சங்கர் - தங்கவேல்கலை: வெங்கல் ராவ் நடனம்: பாபி பி.ஆர்.ஓ.: நிகில்
பாடல்கள்: ஏக்நாத், அண்ணாமலை, பிரியன், விஜய் ஆண்டனி
சென்னையில் படித்து கிராமத்துக்கு திரும்பும் மோனிகாவிற்கு, அவரது தந்தை பிரபு, அரவிந்த்தை மருமகனாக்க முடிவு செய்கிறார். காதலனால் ஏமாற்றப்பட்டு கர்ப்பமான நிலையில் இன்னொருவனை ஏமாற்ற முடியாமலும், தந்தைக்கு எதிராக முடிவெடுக்க முடியாமலும் அல்லாடும் மோனிகா, தனது நிலையை மணமகன் அரவிந்திடமே சென்று கூறுகிறார். தனக்கு விபத்து என்று நாடகமாடி திருமணத்தை தள்ளிப்போடுவதோடு மோனிகாவின் காதலனை தேடி பிடித்து வந்து அவனுக்கும் மோனிகாவிற்கும் திருட்டு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார் அரவிந்த். முதலில் சம்மதித்த மோனிகா தந்தையின் மேல் உள்ள பாசத்தால் தந்தைக்கு அவமானம் வந்துவிடும் என்று திருட்டு திருமணத்துக்கு மறுக்கிறார். பிறகு அவர்கள் எப்படி சேர்கிறார்கள் என்பது பரபரப்பான கிளைமாக்ஸ்சாதாரண கதைதான். அதை நிறைய முடிச்சுகளும் பல திருப்பங்களும் உள்ள ஜாலியான படமாக தந்திருக்கிறார்கள். கடைசியில் பாசத்தால் மனதை தொடுகின்றனர்.மகளை நினைத்து உருகும் பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் பிரபு. அவர் மகள் மீது காட்டும் பாசமும், மகள் தந்தை மீது காட்டும் பாசமும் உயிரோட்டமானவை. மகளாக கலக்கியிருக்கிறார் மோனிகா. பாசமுள்ள காட்சிகளில் அவர் கண் கலங்கும் போது ரசிகர் கண்களிலும் ஈரம். நல்ல கணவன் கிடைக்கப் போகிறான் என்று துள்ளி குதித்து ஆடும் பெண்ணைப் போல, நல்ல மனைவி கிடைக்கப் போகிறாள் என ஆடிப் பாடும் காட்சிகளில் அமர்களப் படுத்தியுள்ளார் அரவிந்த்அரவிந்துக்கு ஜோடியாக அவரை கலாட்டா செய்யும் காட்சிகளில் மின்னுகிறார் சரண்யாமோகன். மோனிகாவின் காதலனாக பிளேபாய் பாத்திரத்தில் நடித்திரக்கிறார் நவ்தீப். கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம். வருகின்ற இடங்களில் எல்லாம் கை தட்டலை அள்ளுகிறார் ஹனிபா. மனோரமாவிடம் அடிவாங்குகிற காட்சியில் சிரிக்க வைக்கிறார் கஞ்சா கருப்பு.விஜய் ஆண்டனியின் இசையில் கன்னி வெடி காதல் சொல்லுதடி, மேனா மினுக்கி பாடல்கள் படு ஜோர். அருள்தாஸ் காமிரா அருவிகளில் அடேங்கப்பா போட வைக்கிறது.
தெலுங்கில் சந்தமாமா என்ற பெயரில் வெளியான படத்தை அஆஇஈ என்ற பெயரில் படமாக்கியிருக்கிறார் சபாபதி தெட்சிணாமூர்த்தி. சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கலகலப்பூட்டும் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார். இருக்கமான மனதுடன் செல்பவர்கள் அனிதா,ஆகாஷ், இளங்கோ, ஈஸ்வரி அடிக்கும் கூத்தைப் பார்த்துவிட்டு ரிலாக்ஸாக்கிக்கொண்டு வரலாம். குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் ஒரு பொழுது போக்கு படத்தை தந்துள்ளது ஏவி.எம்.
No comments:
Post a Comment