Saturday, August 8, 2009

சற்‌றுமுன்‌ கி‌டை‌த்‌ததகவல்‌

நி‌றுவனம்‌: ஏர்‌ மீ‌டி‌யா‌ தயா‌ரி‌ப்‌பு‌: எஸ்‌.பாஸ்‌கர்‌
இயக்‌கம்‌: எஸ்‌.பி‌.பு‌வனை‌ கண்‌ணன்‌ இசை‌:பா‌லா
‌நடி‌ப்‌பு‌: கனல்‌ கண்‌ணன்‌, கே‌.எஸ்‌.ரவி‌குமா‌ர்‌, டி‌.பி‌.கஜே‌ந்‌தி‌ரன்‌, பா‌ரதி‌, குஷ்‌பு‌, மீ‌னா‌ட்‌சி‌
சண்‌டை‌ப்‌பயி‌ற்‌சி‌: கனல்‌ கண்‌ணன்‌
ஒளி‌ப்‌பதி‌வு‌: ஏ.எல்‌. நா‌ரா‌யணன்‌ரா‌மன்‌
கலை‌: வெ‌ங்‌கல்‌ ரவி‌, நே‌த்‌யா‌
படத்‌தொ‌குப்‌பு‌: டா‌ன்மே‌க்‌ மக்‌கள்‌தொ‌டர்‌பு‌: ஜா‌ன்‌
தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கம்‌: பி.எ‌ஸ்‌.ரா‌ஜே‌ந்‌தி‌ரன்‌

காமுகர்களை கோரமாய் கொல்லும் சைக்கோ கொலைகாரி கதை.

கிராமத்தில் வசிக்கும் சிவாவுக்கு முறைப்பெண் தேனு மேல் பிரியும். இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. தேனுவோ சினிமா கனவில் மிதக்கிறாள். ஒரு படத்தில் நடித்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என நிர்ப்பந்திக்கிறாள்.

அவள் விருப்பப்படி பட்டிணத்துக்கு அழைத்து வந்து நடிகையாக்குகிறான் சிவா. ஹிட்படங்களில் நடித்து பணமும் புகழும் குவிய போதைக்கு அடிமையாகி மனம் மாறுகிறாள். சிவாவையும் விரட்டியடிக்கிறாள்.

ஆத்திரமாகும் சிவா அவளை கொல்ல முயற்சிக்க... இன்னொரு மர்ம நபரால் சாகடிக்கப்படுகிறாள். கொலை பழி சிவா மேல் விழுகிறது. அவன் மனநிலை பாதித்தவன் என முத்திரை குத்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்படுகிறான். டாக்டர் குஷ்பு அவனை குணமாக்கி அனுப்புகிறார்.

இன்னொரு புறம் தொடர் கொலைகள் நடக்கிறது. கண்களை குத்தி கொடூரமாக ஆண்கள் சாகடிக்கப்படு கின்றனர். குஷ்பு வீட்டுக் குள் புகுந்து அவர் மகள் பாரதியை கொல்லப் போவதாக மிரட்டுகிறான் சிவா. போலீஸ் உடையில் இன்னொரு நபரும் அதே வீட்டில் புகுந்து கற்பழிக்க முயற்சிக்கிறான். பாரதி தப்பிக்க போராடுகிறார். அப்போது சைக்கோ கொலையாளி யார்? என்பது தெரிய வருவது அதிர்ச்சி திருப்பம்.

சிவாவாக வரும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் நடிப்பிலும் பாஸாகியுள் ளார். தேனு வீட்டுக்குள் புகுந்து அவளை கொல்ல துடிக்கும் ஆரம்பமே பரபர... பாரதியை வீட்டு சிறையில் வைத்து இம்சிக்கும் சீன்கள் திகில்... பிளாஷ்பேக்கதையில் அனுதாபம் அள்ளுகிறார்.குஷ்பு மகளாக வரும் பாரதி அதிர வைக்கிறார். காமுகர்களை கொடூரமாக சாகடிக்கும் கொலையாளி அவர்தான் என்ற முடிச்சு அவிழும்போது தூக்கி வாரிபோடுகிறது.
சைக்கோவாக மாறும் போது கண்களை விரித்து தெத்தி தெத்தி நடந்து பயமுறுத்துகிறார்.

டாக்டராக வரும் குஷ்பு போலீஸ் அதிகாரியாக வரும் கே.எஸ்.ரவிக்குமார் பாத்திரங்களும் அழுத்தம். தேனுவாக வரும் மீனாட்சி கவர்ச்சி விருந்து படைக்கிறார்.
பல கோணங்களில் கதையை நகர்த்தி திகில்,சஸ்பென்ஸ் என விறுவிறுப்பாக படமாக்கியுள்ளார் இயக்குனர் புவனை கண்ணன்.

பிளாஷ்பேக், சஸ்பென்ஸ் மிகுதியாக இருப்பதால் திரைக்கதையில் குழப்பமும் தலைகாட்டுகிறது.

நான்‌ கடவு‌ள்‌


நி‌றுவனம்‌: வாசன் விஷூவல் வென்டர்ஸ
தயா‌ரி‌ப்‌பு‌: கே.எஸ். சீனிவாசன் இயக்‌கம்‌: பா‌லா‌
நடி‌ப்‌பு‌: ஆர்‌யா‌, பூ‌ஜா‌, பு‌துமுகம்‌ ரா‌ஜே‌ந்‌தரன்‌, பா‌ரதி‌, சி‌ங்‌கம்‌பு‌லி‌, கீ‌ர்‌த்‌தனா‌, அழகன்‌ தமி‌ழ்‌மணி‌, கோ‌வை‌ கி‌ருஷ்‌ணமூ‌ர்‌த்‌தி‌, ‌ மற்‌றும்‌ 175 பு‌துமுகங்‌கள்‌
இசை‌: ‌இளை‌யரா‌ஜா‌ பா‌டல்‌கள்‌: கவி‌ஞர்‌ வா‌லி‌
ஒளி‌ப்‌பதி‌வு‌: ஆர்‌த்‌தர்‌ ஏ. வி‌ல்‌சன்‌ வசனம்‌: ஜெ‌யமோ‌கன்‌
கலை‌: பி‌.கி‌ருஷ்‌ணமூ‌ர்‌த்‌தி‌ சண்‌டை‌ப்‌பயி‌ற்‌சி‌: சூ‌ப்‌பர்‌ சுப்‌பரா‌யன்‌
மக்‌கள்‌ தொ‌டர்‌பு‌: நி‌கி‌ல்‌ ஸ்‌டி‌ல்‌ஸ்‌: கணே‌ஷ்‌பி‌ரபு‌‌


கடவுள் நானே என கூறிக் கொள்ளும் இளம் சாமியார் துஷ்டர்களை அழிக்கும் கதை...

அழகன் தமிழ்மணி மகன் ஆர்யா. ஜோதிடர்கள் ஆர்யா ஜாதகத்தால் குடும்பத்துக்கு ஆபத்து என பயமுறுத்த சிறு வயதிலேயே காசியில் அனாதையாக விடுகின்றனர்.

அங்கு தங்களை கடவுள் அவதாரமாக பாவிக்கும் சாமியார்களிடம் வேத மந்திரங்கள் படித்து வளர்கிறார். பற்றுகளை துறந்து முழு சாமியாகிறார்.

ஜோதிடர்கள் “கெடு” காலம் முடிந்து ஆர்யாவை சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார் தமிழ்மணி. வீட்டில் தாய், தங்கை சொந்த பந்தங்களுடன் பழக மறுத்து விலகியே இருக்கிறார். அங்குள்ள மலைக்கோவில் ஒன்றில் தங்குகிறார்.

இன்னொருபுறம் வில்லன் தாண்டவன் சிறுவர், சிறுமி களை விலைக்கு வாங்கி பிச்சை எடுக்க வைக்கிறான். பார்வையிழந்த பூஜாவையும் கடத்தி பிச்சை எடுக்க பயன்படுத்துகிறான். எல்லோரையும் பாதாள அறைக்குள் அடைத்து சித்ரவதை செய்கிறான்.

முகம் கோரமான அருவெறுப்பான ஒருவன் தாண்டவனுக்கு நிறைய பணம் கொடுத்து பூஜாவை தனக்கு கட்டி வைக்க நிர்ப்பந்திக்கிறான். அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடி ஆர்யா காலை பிடித்து காப்பாற்ற மன்றாடுகிறார். ஆர்யா ருத்ர தாண்டவத்தில் எதிரிகளை சின்னா பின்னமாவது கிளைமாக்ஸ்...

பக்தர்கள் வெள்ளம், கங்கையில் பிணங்கள் வீச்சு, சாமியார்கள் என காசியின் முழு பரிணாமத்தையும் விழிகளில் பிரமாண்டமாய் பதித்தபடி காட்சிகள் விரிகிறது. சாமியார்களின் தவ வலிமை, பிச்சை எடுப்பவர்களின் வலிகள் என கேமராக்கள் எட்டியாராத உயிரோட்டமான கதையை திரையில் செதுக்கியுள்ளார் இயக்குனர் பாலா.

கதாபாத்திரங்களில் கொஞ்சமும் சினிமா வாடை எழாமல் யதார்த்தம்.
நீண்ட தாடி, எலும்பு மண்டை ஓடு மாலை, மந்திரம், வசிய பார்வை, என காவி சாமியாராய் வாழ்கிறார் ஆர்யா. கங்கை நதியோரம் தீயவர்களை நொறுக்கி ஒருவனை தூக்கி பந்தாடி கீழே போட்டு அதே வேகத்தில் அவன் மேல் தவக்கோலத்தில் உட்காருவது அதிர்கிறது.

கொலை வழக்கில் கோர்ட்டில் நீதிபதியிடம் நானே பகவான். வாழ தகுதி இல்லாதவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பேன் என வாதம் செய்வது கம்பீரம்...

கிளைமாக்சில் பார்வையனாலே தாண்டவனின் கெடுதல்களை அளந்து ஓட ஓட விரட்டி சம்காரம் செய்வது விறு விறுப்பு...

பூஜா அசல் பார்வை இழந்த பெண்ணாக “ஸ்கோர்” பண்ணுகிறார். தாண்டவனிடம் சிக்கி அல்லோப்படுவது பரிதாபம்... இறுதியில் கல்லால் அடித்து முகம் சிதைக்கப்பட சித்ரவதையில் இருந்து மீள என்னை கொன்று விடுங்கள் என ஆர்யாவிடம் கெஞ்சும்போது விழிகளில் நீர் கசிவு...

ஆர்யா, பூஜா போட்டி போட்டு விருதுக்குரிய நடிப்பை பிழிந்துள்ளனர். பிச்சை எடுப்போரை கண்காணிக்கும் வேடத்தில் வரும் கிருஷ்ணமூர்த்தி மனதாபிமானத்தில் மனதில் நிற்கிறார். பிச்சை எடுக்கும் சிறுவர்களும், சிரிப்பும், அழுகையுமாய் அழுத்தம்.

இளையராஜா இசையில் நர்த்தனம். பாடல்கள் மனதை வருடுகின்றன. ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு காசி அழகை அள்ளுகிறது. பிச்சை எடுப்பவர்களின் வலிகள் அக்குவேறு ஆணி வேறாய் அலசப்படுவது முகம் சுளிக்க வைக்கிறது. ஆர்யாவின் கேரக்டருக்கான தீனியும் குறைவு... ஏதோ நடந்து கொண்டே இருக்கிறார்

வெ‌ண்‌ணி‌லா‌ கபடி‌ குழு

தயாரிப்பு: இமேஜின் கிரியேஷன்ஸ்
கதை, திரைக்கதை, இயக்கம்: சுசிந்திரன்
ஒளிப்பதிவு: J.லஷ்மன் இசை: V.செல்வகணேஷ்
வசனம்: பாஸ்கர் சக்தி கலை: G.C.ஆனந்தன்
எடிட்டிங்: மு.காசி விஸ்வநாதன் PRO: நிகில்
நடிகர்கள்: விஷ்ணு, வைரவன், நிதிஷ், சுந்தர், அப்புக்குட்டி, சூரி, பாண்டி, கிஷோர், சரண்யா மோகன், ஜானகி மற்றும் பலர்....

சிறு வயதில் தந்தையை இழந்து பண்ணையில் ஆடு மேய்த்து பிழைக்கும் விஷ்ணுவுக்கு கபடி விளையாட்டில் ஆர்வம். கிராமத்தில் கபடி விளையாடும் இளைஞர்களுக்கு எடுபிடி வேலைகள் செய்கிறார்.

ஊரில் நடக்கும் திருவிழாவுக்கு மதுரை யில் இருந்து வருகிறார் சரண்யா மோகன். நாய்க்கு பயந்து விஷ்ணு கையை பற்றிக் கொள்ள இருவருக்கும் காதல் துளிர்க்கிறது. திருவிழா கபடி போட்டி குழுவில் விஷ்ணு சேர்க்கப்படுகிறார். அவரின் ஆவேச அதிரடி ஆட்டம் அவ்வூருக்கு வரும் கபடி பயிற்சியாளர் கிஷோரை கவர்கிறது. திருவிழா முடிந்து சரண்யாமோகன் ஊர் திரும்புகிறார்.

அவர் ஊரில் நடக்கும் கபடி போட்டிக்கு விஷ்ணு குழுவினர் செல்கிறார்கள். அங்கு பெரிய அணிகளுடன் மோத முடியாமல் திணறு கிறார்கள். அவர்களுக்கு பயிற்சியாளராகிறார் கிஷோர். அவர் உதவி யால் விஷ்ணு அணி கோப்பையை வெல்கிறது.

ஒரு வருடத்துக்கு பின் விஷ்ணு ஊரில் நடக்கும் திருவிழாவுக்கு வந்து அவரை தேடுகிறார் சரண்யாமோகன். அப்போது நடப்பது இதயத்தை உலுக்கி போடும் கிளைமாக்ஸ்.

காதல், கபடியை வைத்து கிராம பின்னணியோடு உயிரோட்டமான கதையை படமாக்கியுள்ளார் இயக்குனர் சுசீந்திரன். கதாபாத்திரங்களில் கிராமிய யதார்த்தம்.

வறுமையால் படிப்பை விட்டு ஆடு மேய்க்க போகும் விஷ்ணு விழிகளில் நீர் முட்ட வைக்கிறார்.

பஸ்சை முந்த வேகமாய் சைக்கிள் ஓட்டி வரும் விஷ்ணுவை சரண்யாமோகன் ரசிப்பது. கண்ணை கட்டி பானை அடிக்கும் போட்டியில் விஷ்ணுவுக்கு சரண்யா கால் கொலுசு சத்தத்தால் உதவி செய்வது கவிதை.

திருவிழாவில் மின் தடையானதும் விஷ்ணுவும் சரண்யாவும் பார்வையால் காதல் பரிமாறுவது தென்றல். இதம்....

விஷ்ணு யதர்த்தமாய் மனதில் நிறைகிறார். தாய் சாப்பிடுவதற்காக அவரிடம் பொய் சண்டை யிட்டு சாப்பிடாமல் செல்வது... தாயை பழித்த வனை ஆவேசமாய் அடித்து சாய்ப்பது முத் திரை.... கிளைமாக்சில் துடிக்க வைக்கிறார்.

சரண்யா மோகன் அழகான காதலியாய் பளிச்சிடுகிறார். பின்பாதி யில் எங்கோ ஒளிகிறார். கபடி பயிற்சியாளராக வரும் கிஷோர் விறைப்பு ஏற்றுகிறார். நண்பர்களாக வரும் வைரவன், நிதிஷ், அப்புகுட்டி, சூரி கேரக்டர்களோடு வாழ்கிறார்கள். காமெடி யிலும் நாட்டுப்புற வாசனை. செல்வகணேஷ் இசை இதயத்தை வருடு கிறது. லேசா பறக்குது மனசு பாடல் ஈர்ப்பு. லஷ்மண் ஒளிப்பதிவு கச்சிதம்.

இதயத்தை வென்ற கபடி குழு....

கா‌தல்னா சும்மா இல்ல


நி‌றுவனம்‌: ரா‌ஜ்‌ டெ‌லி‌வி‌ஷன்‌ நெ‌ட்‌ ஒர்‌க்‌ லி‌மி‌டெ‌ட்‌ வழங்‌கும்‌ ரா‌ஜ்‌ கோ‌தயா‌ரி‌ப்‌பு‌: எம்‌. இரா‌ஜே‌ந்‌தி‌ரன்‌, ‌எம்‌. இரா‌ஜரெ‌த்‌தி‌னம்‌, எம்.இரவீ‌ந்‌தி‌ரன்‌, எம். இரகுநா‌தன்
‌நடி‌ப்‌பு‌: சர்‌வா‌னந்‌த்‌, ரவி‌கி‌ருஷ்‌ணா‌, கமா‌லி‌னி‌முகர்‌ஜி‌, தே‌ஜா‌ஸ்ரீ, நா‌சர்‌, இளவரசு, எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கர்‌.
இயக்‌கம்‌: இளங்‌கண்‌ணன் ‌ பா‌டல்‌கள்‌: ‌பா‌.வி‌ஜய்‌, முத்‌துகுமா‌
இசை‌: ‌வி‌த்‌யா‌சா‌கர்‌, மணி‌சர்‌மா‌, இ.எஸ்‌. மூ‌ர்‌த்‌தி‌
ஒளி‌ப்‌பதி‌வு‌: எஸ்‌. ஏ. வி‌ன்‌செ‌ன்‌ட்‌ படத்‌தொ‌குப்‌பு‌: ‌ வி‌.டி‌.வி‌ஜயன்‌
கலை‌: ஜி‌.கே‌.‌‌ ‌‌ பி‌.ஆர்‌.ஓ. ஏ.ஜா‌ன்‌

தமிழில் சர்வத் எனும் பெயரில் இப்படத்தில் அறிமுகமாகியிருக்கும் சர்வானந்த் பெரிய தொழிலதிபர் நாசரின் ஒரே வாரிசு. அப்பா நாசர் மகன் சர்வத், தன்னை மாதிரியே தொழிலில் சிறந்து விளங்குவான் என அவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு வெளிநாட்டு சுற்றுலா செல்கிறார். ஆனால் சர்வத்தோ... தந்தை நாசர் விட்டுச் சென்ற தொழிலை கவனிக்காமல் பலவித சமூக சேவைகள் செய்யும் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட் கமாலினி முகர்ஜி மீது காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் கமாலினியும், சர்வத் மீது காதல் கொள்ள... காதல் கசிந்து உருகுகிறது. ஆனால் வெகுசில நாட்களி‌லேயே சர்வத்தின் பணக்காரத்தனம் கமாலினியை வெறுப்பு கொள்ள வைக்கிறது. சொல்லாமல் கொள்ளாமல் கமாலினி கழண்டு கொள்ள... அவரைத் தேடி தன் ஸ்டேட்டஸ், எஸ்டேட்ஸ் எல்லாவற்றையும் விட்டு விட்டு, காஸ்ட்லி பைக்கில் கிளம்புகிறார் சர்வத். அவரது பைக்கை எப்படியும் லபக்கி விட ‌வேண்டும் என்று சர்வத்துக்கு வழி காட்டுகிறேன் பேர்வழி என அவர் பின் சுற்றும் மற்றொரு ஹீரோ ரவிகிருஷ்ணா ஒரு கட்டத்தில் அவருக்கு உற்றத் தோழனாகிவிட... அதன் பின் காடு, மலை, நக்சலைட் இத்யாதி இத்யாதிகளை எல்லாம் சுற்றும் நட்பு வட்டாரம், காதலியை கண்டு பிடித்ததா, இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
தெலுங்கில் வெற்றி பெற்ற ஒரு படத்தின் ரீமேக் என்றாலும் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து சுவாரஸ்யமாக சொல்லியிருப்பதற்காக இயக்குனர் இளங்கண்ணனை பாராட்ட வேண்டும். சர்வத், ரவி கிருஷ்ணா இருவருமே நடிப்பில் பின்னி பெ‌டலெடுத்திருக்கிறார்கள். அதுவும் ரவி... சிலபல காட்சிகளில் சர்வத்தை தூக்கி சாப்பிட்டு விடுகிறார். அதற்கு காரணம் அவருக்கு படத்தில் காதலியோ, நாயகியோ இல்லை என்பதால் தரப்பட்டிருக்கும் இயல்பான வசனக்காட்சிகள். உதாரணத்திற்கு கோயிலுக்கு வரும் ஒரு பெண்‌ணைப் பார்த்து, ஆமாம்... இவங்க பெரிய மணிரத்னம் பட நாயகி. அளந்துதான் பேசுவாங்க... என டயலாக் அடிப்பதில் ஆரம்பித்து, அவரது இறுதிக்காட்சி வரை வரும் வசனங்கள் நறுக்!
வேட்டையாடு விளையாடு கமாலினியா இது? என்று ‌கேட்கும் அளவுக்கு நடித்திருக்கிறார் கமாலினி. உருவத்தில் இளைத்து, நடிப்பில் மென்மேலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். சபாஷ்! தேஜாஸ்ரீயின் குத்தாட்டம் ரசிக்க வைக்கிறது. இயக்குனர் இளங்கண்ணனின் தேஜாஸ்ரீ செண்டிமென்ட் இந்த படத்திலும் ஒர்‌க் அவுட் ஆகியிருக்கிறது.
நாசர், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, சிட்டி பாபு எல்லோரும் பாத்திரத்துக்கேற்ற தேர்வு. வித்யாசாகர், இ.எஸ்.மூர்த்தி, மணிசர்மா என மூன்று இசையமைப்பாளர்களும், விண்சென்ட்டின் ஒளிப்பதிவும் ஒற்றன் இளங்கண்ணனுக்கு ரொம்பவே ஒத்தாசை செய்துள்ளனர்‌.

வி‌ல்‌லு


நி‌றுவனம்‌: ஐங்‌கரன்‌ இன்‌டர்‌நே‌ஷனல்‌ பி‌லி‌ம்‌ பி‌ லி‌ட்‌
தயா‌ரி‌ப்‌பு‌: கே‌.கருணா‌மூ‌ர்‌த்‌தி‌ சி‌.அருண்‌பா‌ண்‌டி‌யன்‌

நடி‌ப்‌பு‌: வி‌ஜய்‌, நயன்‌தா‌ரா‌, வடி‌வே‌லு, பி‌ரகா‌ஷ்‌ரா‌ஜ்‌, தே‌வரா‌ஜ்‌, ஆனந்‌தரா‌ஜ்‌, ரஞ்‌சி‌தா‌, கீ‌தா

‌‌இயக்‌கம்‌: பி‌ரபு‌தே‌வா‌‌ ‌ இசை‌: ‌தே‌வி‌ஸ்ரீபி‌ரசா‌த்ஒளி‌ப்‌பதி‌வு‌: ரவி‌வர்‌மன்‌ நி‌ர்‌வா‌க தயா‌ரி‌ப்‌பு:‌ கே‌. வி‌ஜயகுமா‌ர்‌ ‌‌ பி‌.ஆர்‌.ஓ: டை‌மண்‌ட்‌பா‌பு‌, பி‌.டி‌.செ‌ல்‌வகுமா‌ர்‌


‌தந்‌தை‌யை‌ கொ‌ன்‌றவர்‌களை‌ பழி‌வா‌ங்‌கும்‌ ஒரு மகனி‌ன்‌ கதை‌.இதி‌ல்‌ தந்‌தை‌, மகனா‌க வி‌ஜய்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. ராணுவ வீ‌ரரா‌ன தந்‌தை‌, ஆயு‌தங்‌களை‌ வெ‌ளி‌நா‌ட்‌டி‌ற்‌கு வி‌ற்‌கும்‌ பி‌ரகா‌ஷ்‌ரா‌ஜ்‌ குருப்‌பை‌ வே‌ட்‌டை‌யா‌ட முயல்‌கி‌றா‌ர்‌. இதி‌ல்‌ அவர்‌கள்‌ இவரை‌ தா‌க்‌கி‌ பழி‌யை‌ அவர்‌ மீ‌து சுமத்‌தி‌ தே‌ச துரோ‌கி‌யா‌க்‌கி‌ன்‌றனர்‌. அந்‌த துரோ‌கி‌கள்‌ கூட்‌டத்‌தை‌ அழி‌த்‌து, துரோ‌க பழி‌யை‌ துடை‌ப்‌பது தா‌ன்‌‌ மகனி‌ன்‌ செ‌யல்‌. அது தா‌ன்‌ படம்‌.ஸ்‌டை‌லா‌ன, அழகா‌ன வி‌ஜய்‌. போ‌ட்‌டி‌யு‌ம்‌, சா‌வலுமா‌க பட்‌டை‌யை‌ கி‌ளப்‌பு‌கி‌றா‌ர்‌. முன்‌னை‌ வி‌ட நடி‌ப்‌பி‌ல்‌ பலே‌. அகதி‌யா‌ன மக்‌களுக்‌கு அமை‌தி‌யா‌ன நா‌டு கே‌ட்‌பே‌ன்‌ பா‌டலி‌ல்‌ உலக தமி‌ழ்‌ மக்‌களின்‌‌ நெ‌ஞ்‌சி‌ல்‌ நி‌ற்‌கி‌றா‌ர்‌.ரசி‌கர்‌களுக்‌கு‌ அதி‌ர்‌ச்‌சி‌யு‌ம்‌, ஆனந்‌தமும்‌ ஏற்‌படுத்‌தும்‌ நயன்‌தா‌ரா‌. அதி‌ர்‌ச்‌சி‌ன்‌னு சொ‌ல்‌வது அவரது உடை‌ அவி‌ழ்‌ந்‌து வி‌ழுமோ‌ என்‌பது தா‌ன்‌. அந்‌தளவு‌க்‌கு படு கி‌ளமரா‌க நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ நயன்தா‌ரா‌. இனி‌ கி‌ளமர்‌ என்‌றா‌ல்‌ நயன்‌தா‌ரா‌.முதல்‌ பா‌தி‌யை‌ கலகலவெ‌ன்‌று கொ‌ண்‌டு போ‌கி‌றார்‌ வடி‌வே‌லு. இரண்‌டா‌ம்‌ பகுதி‌யி‌ல்‌ வெ‌ளி‌நா‌ட்‌டு மா‌ட்‌டி‌டம்‌ அடி‌வா‌ங்‌குவது எரி‌ச்‌சல்‌. பி‌ரகா‌ஷ்‌ரா‌ஜ்‌, ஆனந்‌தரா‌ஜ்‌, தே‌வரா‌ஜ்‌ என ஏகப்‌பட்‌ட வி‌ல்‌லன்‌கள்‌‌. தே‌விஸ்ரீபி‌ரசா‌த்‌ இசை‌யி‌ல்‌ பா‌டலும்‌ இசை‌யு‌ம்‌ படு சூ‌ப்‌பர்‌. தி‌யே‌ட்‌டரி‌ல்‌ ஆட்‌டமும்‌ பா‌ட்‌மும்‌ அதற்‌கு சா‌ட்‌சி‌. உலகத்‌தை‌ சுற்‌றி‌ வந்‌தி‌ருக்‌கி‌றது ரவி‌வர்‌மா‌வி‌ன்‌ கே‌மி‌ரா‌. பூ‌மி‌யி‌லும்‌, வா‌னத்‌தி‌லும்‌ சண்‌டை‌ போ‌ட்‌டி‌ருப்‌பதை‌ படம்‌ பி‌டி‌த்‌தி‌ருப்‌பதை‌ பா‌ர்‌க்‌கும்‌ போ‌து வி‌யக்‌க வை‌க்‌கி‌றது.தந்‌தை‌ மா‌தி‌‌ரி‌ இருக்‌கா‌‌னே‌ மகன்‌ என கொ‌ஞ்‌சம்‌ கூட வி‌ல்‌லன்‌கள்‌ பா‌ர்‌க்‌கா‌தது பெ‌ரி‌ய லா‌ஜி‌க்‌ மி‌ஸ்‌டே‌க்‌. இதே‌ போ‌ல‌ பல இடங்‌களி‌ல்‌ லா‌ஜி‌க்‌ மி‌ஸ்‌டே‌க்‌ இருந்‌தா‌லும்‌, நல்‌ல தி‌றமை‌யா‌ன இயக்‌குனர்‌ என்‌பதை‌ கா‌ட்‌சி‌ அமை‌ப்‌பு‌களா‌ல்‌ பு‌ருவம்‌ உயர்‌த்‌‌த வை‌க்கி‌றா‌ர்‌ இயக்‌குனர்‌ பி‌ரபு‌தே‌வா‌.ரசி‌கர்‌கள்‌ எதி‌ர்‌பா‌ர்‌த்‌த அம்‌சங்‌களை‌ கொ‌டுத்‌தவர்‌ எதி‌ர்‌பா‌ர்‌க்‌கா‌த தி‌ரை‌க்‌கதை‌யை‌ கொ‌டுத்‌தி‌ருந்‌தால்‌ இன்னும்‌ பெ‌ரி‌ய வெ‌ற்‌றி‌யை‌ பெ‌ற்‌றி‌ருக்‌கலா‌ம்‌. வி‌ல்‌லு வே‌கமா‌ன பா‌ய்‌ச்‌சல்‌.

அஆஇஈ

நி‌றுவனம்‌: ஏவி‌.எம்‌ குமரன்‌ வழங்‌கும்‌ ஏவி‌.எம்‌ பு‌ரொ‌டக்‌ஷன்‌ஸ்‌
தயா‌ரி‌ப்‌பு‌: எவி‌.எம்‌.கே‌. சண்‌முகம்‌ நடி‌ப்‌பு‌: பி‌ரபு‌, ‌ அரவி‌ந்‌த்‌, நவ்‌தீ‌‌ப்‌, ஹனி‌பா‌, கஞ்‌சா‌ கருப்‌பு‌, லி‌வி‌ங்‌ஸ்‌டன்‌, சத்‌யன்‌, சதீ‌ஷ்‌, வா‌சுவி‌க்‌ரம்‌, மோ‌னி‌கா‌, சரண்‌யா‌மோ‌கன்‌, மனோ‌ரமா‌,
இயக்‌கம்‌: சபா‌பதி‌ தெ‌ட்‌சி‌ணா‌மூ‌ர்‌த்‌தி‌‌ ‌ இசை‌: ‌வி‌ஜய்‌ஆண்‌‌டனிஒளி‌ப்‌பதி‌வு‌: அருள்‌தா‌ஸ்‌ படத்‌தொ‌குப்‌பு‌: ஓ சங்‌கர் - ‌ தங்‌கவே‌ல்‌‌கலை‌: வெ‌ங்‌கல்‌‌ ரா‌வ்‌‌ நடனம்‌: பா‌பி‌‌ பி‌.ஆர்‌.ஓ.: நி‌கி‌ல்‌
பா‌டல்‌கள்‌: ‌ஏக்‌நா‌த்‌, அண்‌ணா‌மலை‌, பி‌ரி‌யன்‌, வி‌ஜய்‌ ஆண்‌டனி‌

‌செ‌ன்‌னை‌யி‌ல்‌ படி‌த்‌து கி‌ரா‌மத்‌துக்‌கு தி‌ரும்‌பு‌ம்‌ மோ‌னி‌கா‌வி‌ற்‌கு, அவரது தந்‌‌தை‌ பி‌ரபு‌, அரவி‌ந்‌த்‌தை‌ மருமகனாக்‌க முடி‌வு‌ செ‌ய்‌கி‌றா‌ர்‌. கா‌தலனா‌ல்‌ ஏமா‌ற்‌றப்பட்‌டு கர்‌ப்‌பமா‌ன நி‌லை‌யி‌ல்‌ இன்‌னொ‌ருவனை‌ ஏமா‌ற்‌ற முடி‌யா‌மலும்,‌ தந்‌தை‌க்‌கு எதி‌ரா‌க முடி‌வெ‌டுக்‌க முடி‌யா‌மலும்‌ அல்‌லா‌டும்‌ மோ‌னி‌கா‌, தனது நி‌லை‌யை‌ மணமகன்‌ அரவி‌ந்‌தி‌டமே‌ செ‌ன்‌று கூறுகி‌றா‌ர்‌. தனக்‌கு வி‌பத்‌து என்‌று நா‌டகமா‌டி‌ தி‌ருமணத்‌தை‌ தள்‌ளி‌ப்‌போ‌டுவதோ‌டு மோ‌னி‌கா‌வி‌ன்‌ கா‌தலனை‌ தே‌டி‌ பி‌டி‌த்‌து வந்‌து அவனுக்‌கும்‌ மோ‌னி‌கா‌வி‌ற்‌கும்‌ தி‌ருட்‌டு தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌க்‌க ஏற்‌பா‌டு செ‌ய்‌கி‌றா‌ர்‌ அரவி‌ந்‌த்‌. முதலி‌ல்‌ சம்‌மதி‌த்‌த மோ‌னி‌கா‌ தந்‌தை‌யி‌ன்‌ மே‌ல்‌ உள்‌ள பா‌சத்‌தா‌ல்‌ தந்‌தை‌க்‌கு அவமா‌னம்‌ வந்‌துவி‌டும்‌ என்‌று தி‌ருட்‌டு தி‌ருமணத்‌துக்‌கு மறுக்‌கி‌றா‌ர்‌. பி‌றகு அவர்கள்‌ எப்‌படி‌ சே‌ர்‌கி‌றா‌ர்‌கள்‌ என்‌பது பரபரப்‌பா‌ன கி‌ளை‌மா‌க்‌ஸ்‌சா‌தா‌ரண கதை‌தா‌ன்‌. அதை‌ நி‌றை‌ய முடி‌ச்‌சுகளும்‌ பல தி‌ருப்‌பங்‌களும்‌ உள்‌ள ஜா‌லி‌யா‌ன படமா‌க தந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌கள்‌. கடை‌சி‌யி‌ல்‌ பா‌சத்‌தா‌ல்‌ மனதை‌ தொ‌டுகி‌ன்‌றனர்‌.மகளை‌ நி‌னை‌த்‌து உருகும்‌ பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ சி‌றப்‌பா‌க நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ பி‌ரபு‌. அவர்‌ மகள்‌ மீ‌து கா‌ட்‌டும்‌ பா‌சமும்‌, மகள்‌ தந்‌தை‌ மீ‌து கா‌ட்‌டும்‌ பா‌சமும்‌ உயி‌ரோ‌ட்‌டமா‌னவை‌. மகளா‌க கலக்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ மோ‌னி‌கா‌. பா‌சமுள்‌ள கா‌ட்‌சி‌களி‌ல்‌ அவர்‌ கண் ‌கலங்‌கும்‌ போ‌து ரசி‌கர்‌ கண்‌களி‌லும்‌ ஈரம்‌. நல்‌ல கணவன்‌ கி‌டை‌க்‌கப்‌ போ‌கி‌றா‌ன்‌‌ என்‌று துள்‌ளி‌ குதி‌த்‌து ஆடும்‌ பெ‌ண்‌ணை‌ப்‌ போ‌ல, நல்‌ல மனை‌வி‌ கி‌டை‌க்‌கப்‌ போ‌கி‌றா‌ள்‌ என ஆடி‌ப்‌ பா‌டும்‌ கா‌ட்‌சி‌களி‌ல்‌ ‌‌அமர்‌களப்‌ படுத்‌தி‌யு‌ள்‌ளா‌ர்‌ அரவி‌ந்‌த்‌அரவி‌ந்‌துக்‌கு ஜோ‌டி‌யா‌க அவரை‌‌ கலா‌ட்‌டா‌ செ‌ய்‌யு‌ம்‌ கா‌ட்‌சி‌களி‌ல்‌ மி‌ன்‌னுகி‌றா‌ர்‌ சரண்‌யா‌மோ‌கன்‌. மோ‌னி‌கா‌வி‌ன்‌ கா‌தலனா‌க பி‌ளே‌பா‌ய்‌ பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ நடி‌த்‌தி‌ரக்‌கி‌றா‌ர்‌ நவ்‌தீ‌ப்‌. கொ‌ஞ்‌சம்‌ அடக்‌கி‌ வா‌சி‌த்‌தி‌ருக்‌கலா‌ம்‌. வருகி‌ன்‌ற இடங்‌களி‌ல்‌ எல்‌லா‌ம்‌ கை‌ தட்‌டலை‌ அள்‌ளுகி‌றா‌ர்‌ ஹனி‌பா‌. மனோ‌ரமா‌வி‌டம்‌ அடி‌வா‌ங்‌குகி‌ற கா‌ட்‌சி‌யி‌ல்‌ சி‌ரி‌க்‌க வை‌க்‌கி‌றா‌ர்‌ கஞ்‌சா‌ கருப்‌பு‌.வி‌ஜய்‌ ஆண்‌‌டனி‌‌யி‌ன்‌ இசை‌யி‌ல்‌ கன்‌னி‌ வெ‌டி‌ கா‌தல்‌ சொ‌ல்‌லுதடி‌, மே‌னா‌ மி‌னுக்‌கி‌ பா‌டல்‌கள்‌ படு ஜோ‌ர்‌. அருள்‌தா‌ஸ்‌ கா‌மி‌ரா‌ அருவி‌களி‌ல்‌ அடே‌ங்‌கப்‌பா‌ போ‌ட வை‌க்‌கி‌றது.
தெ‌லுங்‌கி‌ல்‌ சந்‌தமா‌மா‌ என்‌ற பெ‌யரி‌ல்‌ வெ‌ளி‌யா‌ன படத்‌தை‌ அஆஇஈ என்‌ற பெ‌யரி‌ல்‌ படமா‌க்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ சபா‌பதி ‌தெ‌ட்‌சிணா‌‌மூ‌ர்‌த்‌தி‌. சி‌ரி‌க்‌க வை‌க்‌க வே‌ண்‌டும்‌ என்‌ற நோ‌க்‌கத்‌தி‌ல்‌ கலகலப்‌பூ‌ட்‌டும்‌ கா‌ட்‌சிகளு‌க்‌கு முக்‌கி‌யத்‌துவம்‌ கொ‌டுத்‌து எடுத்‌தி‌‌ருக்‌கி‌றா‌ர்‌. இருக்‌கமா‌ன மனதுடன்‌ செ‌ல்‌பவர்‌கள்‌ அனி‌தா‌,ஆகா‌ஷ்‌, இளங்‌கோ‌, ஈஸ்‌வரி‌ அடி‌க்‌கும்‌ கூத்‌தை‌ப்‌ பா‌ர்‌த்‌துவி‌ட்‌டு ரி‌லா‌க்‌ஸா‌க்‌கி‌க்‌கொ‌ண்‌டு வரலா‌ம்‌. குடும்‌பத்‌துடன்‌ அமர்‌ந்‌து பா‌ர்‌க்‌கும்‌ ஒரு பொ‌ழுது போ‌க்‌கு படத்‌தை‌ தந்‌துள்‌ளது ஏவி‌.எம்‌.