Saturday, August 15, 2009

குங்‌குமப்‌பூ‌வு‌ம்‌ கொ‌ஞ்‌சும்‌பு‌றா‌வு‌ம்‌


நி‌றுவனம்‌: கே‌பி‌‌டல்‌ பி‌லி‌ம்‌ ஒர்‌க்‌ஸ்‌

தயா‌ரி‌ப்‌பு‌: எஸ்‌.பி‌.சரண்‌ இயக்‌கம்‌: ரா‌ஜ்‌மோ‌கன்‌

இசை‌: யு‌வன்‌சங்‌கர்‌ரா‌ஜா‌

நடி‌ப்‌பு‌: ரா‌மகி‌ருஷ்‌ணன்‌, தனன்‌யா‌, சந்‌தி‌ரா‌, ஈஸ்‌வரி‌, தருண்‌ சத்‌தி‌ரி‌யா‌, நா‌கம்‌மா‌, ரா‌ஜீ‌வ்‌, சி‌வக்‌குமா‌ர்‌, சந்‌தி‌ரன்‌,

பா‌டல்‌கள்‌: வா‌லி‌, கங்‌கைஅமரன்‌

நடனம்‌: அஜய்‌ரா‌ஜ்‌, சரவணரா‌ஜன்‌

சண்‌டை‌ப்‌பயி‌ற்‌சி‌: செ‌ல்‌வா‌ கலை‌: வி‌த்‌தே‌ஷ்‌

ஒளி‌ப்‌பதி‌வு‌: சி‌த்‌தா‌ர்‌த்‌ மக்‌கள்‌தொ‌டர்‌பு‌: ஜா‌ன்‌சன்

‌படத்‌தொ‌குப்‌பு‌: பி‌ரவீ‌ண்‌ கே‌.எல்‌. ஸ்ரீகா‌ந்‌த்‌:


பெ‌ற்‌றோ‌ர்‌ இல்‌லா‌மல்‌ பா‌ட்‌டி‌ துணை‌யு‌டன்‌ முட்‌டம்‌ கி‌ரா‌மத்‌தி‌ற்‌கு வருகி‌றா‌ள்‌ துளசி‌. அழகி‌களே‌ இல்‌லை‌ன்‌னு வருத்‌தப்‌ படும்‌ வா‌லி‌பர்‌களுக்‌கு பே‌ரழகி‌யா‌க கா‌ட்‌சயளி‌க்‌கி‌றா‌ள்‌‌ துளசி‌. இதி‌ல்‌ குசே‌லன்‌ என்‌கி‌ற கூச்‌சா‌ன்‌ அவள்‌ இல்‌லா‌மல்‌ நா‌ன்‌ இல்‌லை‌ என்‌று அவளை‌ உருக உருக கா‌தலி‌க்‌கி‌‌றா‌ன்‌.

அவளுக்‌கு ஒரு பி‌ரச்‌சனை‌ வந்‌த போ‌து கூச்‌சா‌னி‌ன்‌ தா‌ய்‌ முன்‌னே‌ வந்‌து உதவு‌வதோ‌டு எதி‌ரி‌யை‌ வி‌ரட்‌டி‌யடி‌ப்‌பதை‌ கண்‌டு பெ‌ருமை‌யடை‌கி‌றா‌ள்‌ துளசி‌. அப்‌படி‌ப்‌பட்‌ட குடும்‌பத்‌தி‌ல்‌ தா‌ன்‌ மருமகளா‌கனு‌ம்‌ என்‌று கூச்‌சா‌னி‌ன்‌ காத‌லுக்‌கு பச்‌சை‌க்‌ கொ‌டி‌கா‌ட்‌டுகி‌றா‌ள்‌‌.

கா‌தலி‌யி‌ன்‌ கண்‌ அசை‌வு‌ கி‌டை‌த்‌தும்‌ வா‌னத்‌தி‌ல்‌ பறக்‌கும்‌ கூச்‌சா‌ன்‌, கா‌தலி‌ப்‌பது தெ‌ரி‌ந்‌ததும்‌ அவனது‌ தா‌ய்‌ அவளை‌ அடி‌த்‌து கி‌ரா‌மத்‌தை‌ வி‌ட்‌டே‌ துரத்‌தி‌ வி‌ட்‌டா‌ள்‌ என்‌றதும்‌ அதி‌ர்‌ந்‌து போ‌வதோ‌டு, அவளை‌ தே‌டி‌ ஓடும்‌ போ‌து வி‌பத்‌துக்‌குள்‌ளா‌கி‌ மருத்‌துவமனை‌யி‌ல்‌ சே‌ர்‌கி‌றா‌ன்‌.

கா‌தலன்‌ வருவா‌ன்‌ என கா‌த்‌தி‌ருந்‌தவள்‌, பா‌ட்‌டி‌யி‌ன்‌ உறவி‌னர்‌ வற்‌பு‌றுத்‌த பதி‌ல்‌ சொ‌ல்‌ல முடி‌யா‌மல்‌ குடி‌கா‌ரனுக்‌கு கழுத்‌தை‌ நீ‌ட்‌டுகி‌றா‌ள்‌.கண்‌ விழி‌‌த்‌துப்‌ பா‌ர்‌த்‌த போ‌து கா‌தலி‌யி‌ன்‌ கழுத்‌தி‌ல்‌ தா‌லி‌ ஏறுவதை‌ கண்‌டு வெ‌ம்‌பி‌ வெ‌டி‌க்‌கி‌றா‌ன்‌ கூச்‌சா‌ன்‌. அவள்‌ நல்‌லா‌ வா‌ழட்‌டும்‌ என்‌று இவன்‌ குடி‌யு‌ம்‌, தா‌டி‌யு‌மா‌க வா‌ழ்‌க்‌கை‌ யை‌ வெ‌றுத்‌து அலெ‌சி‌கி‌றா‌ன்‌.

தா‌லி‌கட்‌டி‌ய கணவனை‌ போ‌லீ‌ஸ்‌ கை‌து செ‌ய்‌வதை‌ கண்‌டு அதி‌ரும்‌ துளசி‌ அவன்‌, தி‌ருடன்‌, சூ‌தா‌டி‌, குடி‌கா‌ரன்‌, கொ‌லை‌கா‌ரன்‌ என்‌று தெ‌ரி‌ய வரும்‌ போ‌து, தனது வா‌ழ்‌க்‌கை‌ இப்‌படி‌ ஆகி‌வி‌ட்‌டதே‌ என்‌று வருந்‌தி‌ அழுகி‌றாள்‌‌. அங்‌கு மே‌லும்‌ இருந்‌தா‌ல்‌ தன்‌னை‌ வி‌பச்‌சா‌ரத்‌துக்‌கு தள்‌ளி‌வி‌டுவா‌ர்‌கள்‌ என பயந்து‌, அங்‌கி‌ருந்‌து மறுபடி‌யு‌ம்‌ பா‌ட்‌டி‌ வி‌ட்‌டுக்‌கு வருகி‌றா‌ள்‌.

கூலி‌ வே‌லை‌ செ‌ய்‌து பி‌ழை‌க்‌கும்‌ கா‌தலி‌ துளசி‌யை‌ கண்டு வருந்‌தும்‌ கூச்‌சா‌ன்‌, அவள்‌ கணவனை‌ சி‌றை‌யி‌லி‌ருந்‌து கொ‌ண்‌டு வர உதவு‌கி‌றா‌ன்‌. சி‌றை‌யி‌லி‌ருந்‌து தி‌ரும்‌பு‌ம்‌ துளசி‌யி‌ன்‌ கணவன்‌ வரும்‌ வழி‌யி‌ல்‌ கள்‌ளுக்‌கடை‌யி‌ல்‌ குடி‌க்‌கச்‌ செ‌ன்‌று அங்‌கு மனை‌வி‌யை‌ தப்‌பா‌க பே‌சி‌யவனை‌ அடி‌த்‌து துவை‌க்‌கி‌றா‌ன்‌.

கா‌தலி‌யி‌ன்‌ கணவனா‌ல்‌ செ‌த்‌துப்‌ போ‌னவனை‌, நா‌ன்‌ தா‌ன்‌ கொ‌லை‌செ‌ய்‌தே‌ன்‌ என கூச்‌சா‌ன்‌ சொ‌ல்‌ல, செ‌த்‌துபோ‌னவனி‌ன்‌ உறவி‌னர்‌கள்‌, அவனை‌ அடி‌த்‌து துவை‌க்‌கி‌ன்‌றனர்‌. கா‌தலி‌க்‌கா‌க கூச்‌சானும்‌, கா‌தலனுக்‌கா‌க துளசி‌யு‌ம்‌ போ‌ரா‌டும்‌ போ‌து இருவரி‌ன்‌ உயி‌ரும்‌ ஒன்‌றா‌க பி‌ரி‌கி‌றது.

முட்‌டம்‌ பகுதி‌யி‌ல்‌ நடக்‌கும்‌ ஒரு உண்‌மை‌ சம்‌பவத்‌தை‌ போ‌ல படம்‌ அமை‌ந்‌தி‌ருக்‌கி‌றது. தி‌ரை‌ப்‌படம்‌ பா‌ர்‌க்‌கி‌றோ‌ம்‌ என்‌பதை‌ மறந்‌து முட்‌டத்‌தி‌ல்‌ கூச்‌சா‌ன்‌, துளசி‌, தர்‌மா‌ ‌ போ‌ன்‌றவர்‌களோ‌ வா‌ழ்‌ந்‌த உணர்‌வு‌ நமக்‌கு ஏற்‌படுகி‌றது.

கூச்‌சனா‌க பு‌துமுகம்‌ ரா‌மகி‌ருஷ்‌ணன்‌. வெ‌கு இயல்‌பா‌க அந்‌த பா‌த்‌தி‌ரமா‌க வா‌ழ்‌ந்‌து நம்‌ மனதி‌ல்‌ இடம்‌ பி‌டி‌க்‌கி‌றா‌ர்‌. அதே‌ போ‌ல துளசி‌யி‌ன்‌ கணவனா‌க வரும்‌ தர்‌மா‌வா‌க நடி‌த்‌தி‌ருக்‌கும்‌ தருண்‌ சத்‌ரி‌யா‌, அடே‌ங்‌கப்‌பா‌ என்‌கி‌ற அளவு‌க்‌கு பி‌ரமா‌தப்‌ படுத்‌துகி‌றா‌ர்‌ அவர்‌ கே‌மரா‌ இருப்‌பது தெ‌ரி‌யா‌மல்‌ அப்‌படி‌ எதர்‌த்‌தமா‌க நடி‌த்‌தி‌ருப்‌பது அவரது தி‌றமை‌யை‌ கா‌ட்‌டுகி‌றது.

துளசி‌யா‌க தனண்‌யா‌. இயல்‌பா‌ன அந்‌த முகமும்‌ கண்‌களும்‌, துடி‌க்‌கும்‌ உதடுகளும்‌ நம்‌ கண்‌முன்‌னே‌ நி‌ற்‌கி‌றது. துளசி‌யா‌கவே‌ வா‌ழ்‌ந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. துளசி‌யி‌ன்‌ பா‌ட்‌டி‌யா‌க வரும்‌ நா‌கம்‌மா‌வு‌க்‌கு ஓ போ‌டலா‌ம்‌. நம்‌ம பக்‌கத்‌துவி‌ட்‌டு பா‌ட்‌டி‌ போ‌ல நெ‌ஞ்‌சி‌ல்‌ நி‌ற்‌கி‌றா‌ர்‌. அதே‌ போ‌ல கூச்‌சா‌னி‌ன்‌ அம்‌மா‌வா‌க வரும்‌ சந்‌தி‌ரா‌. கத்‌துவதா‌க இருக்‌கட்‌டும்‌, அழுது கூச்‌சல்‌ போ‌டுவதா‌க இருக்‌கட்‌டும்‌, அன்‌பு‌ கா‌ட்‌டுவதா‌க இருக்‌கட்‌டும்‌ எல்‌லா‌ கி‌டந்‌தா‌லும்‌ ஸ்‌கோ‌ர்‌ செ‌ய்‌கி‌றா‌ர்‌.

படத்‌தி‌ல்‌ ரசி‌கர்‌களி‌டம்‌ அதி‌கம்‌ கை‌தட்‌டல்‌ வா‌ங்‌கி‌ச்‌ செ‌ல்‌பவர்‌ நண்‌பனா‌க நடி‌த்‌தி‌ருக்‌கும்‌ சி‌வகுமா‌ர்‌. வசனத்‌தி‌லும்‌, நடி‌ப்‌பா‌லும்‌ தே‌ர்‌ந்‌த முத்‌தி‌ரை‌. தர்‌மா‌வி‌ன்‌ அக்‌கா‌, துளசி‌யி‌ன்‌ பெ‌ரி‌யம்‌மா‌ மகள்‌ என்‌பவள்‌ படத்‌துக்‌கு பலம்‌ சே‌ர்‌க்கி‌ன்‌றனர்‌.

முட்‌டம்‌ கடற்‌கரை‌ கி‌ரா‌மும்‌, அவர்‌களது வா‌ழ்‌க்‌கை‌யு‌ம்‌ நம்‌ கண்‌முன்‌னே‌ கொ‌ண்‌டு வந்‌து நி‌றுத்‌துகி‌றது சி‌த்‌தா‌ர்‌த்‌ கே‌மி‌ரா‌. இயல்‌பா‌ன வா‌ழ்‌க்‌கை‌யை‌ அதன்‌ போ‌க்‌கி‌ல்‌ சொ‌ல்‌லி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. பு‌தி‌யவர்‌ ரா‌ஜ்‌மோ‌கன்‌. கதை‌யி‌ல்‌ வா‌ழ்‌ந்‌து வசனத்‌தி‌ல்‌ வா‌ழ்‌ந்‌து, கா‌ட்‌சி‌களி‌ல்‌ நம்‌மை‌யு‌ம்‌ ஒன்‌றவை‌தது பா‌ர்‌க்‌க வை‌த்‌தி‌ருப்‌பது அவருது தி‌றமை‌. வா‌ழ்‌த்‌துக்‌கள்‌ ரா‌ஜ்‌மோ‌கன்‌.

மரி‌யா‌தை‌


நி‌றுவனம்‌: அம்‌மா‌ கி‌ரி‌யே‌ஷன்‌ஸ்‌ தயா‌ரி‌ப்‌பு‌: டி‌.சி‌வா‌

இயக்‌கம்‌: வி‌க்‌ரமன்‌ இசை‌: வி‌ஜய்‌ஆண்‌டனி‌

நடி‌ப்‌பு‌: வி‌ஜயகா‌ந்‌த்‌(இருவே‌டம்‌), மீ‌னா‌, மீ‌ரா‌ஜா‌ஸ்‌மி‌ன்‌, அம்‌பி‌கா‌, நா‌சர்‌, ரமே‌ஷ்‌கண்‌ணா‌, தலை‌வா‌சல்‌ வி‌ஜய்‌, அம்‌மு, நி‌ழல்‌கள்‌ ரவி
பா‌டல்‌கள்‌: பு‌லமை‌ப்‌பி‌த்‌தன்‌, பா‌.வி‌ஜய்‌, நா‌.முத்‌துக்‌குமா‌ர்‌, கலை‌க்‌குமா‌ர்‌
நடனம்‌: டி‌.கே‌.எஸ்‌.பா‌பு‌ சண்‌டை‌ப்‌பயி‌ற்‌சி‌: ரா‌க்‌கி‌ ரா‌ஜே‌ஷ்‌
கலை‌: வி‌த்‌தே‌ஷ்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌: ஆன்‌ரூ‌ஸ்‌
படத்‌தொ‌குப்‌பு‌: சுரே‌ஷ்‌ அர்‌ஸ்‌‌ தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கம்‌: ரா‌மவா‌சு
மக்‌கள்‌தொ‌டர்‌பு‌: ஜா‌ன்‌சன்‌

கி‌ரா‌மத்‌தி‌ல்‌ நா‌லு பே‌ருக்‌கு நல்‌லது செ‌ய்‌து வா‌ழ்‌ந்‌து வருபவர்‌ அண்‌ணா‌மலை‌. அவரது நி‌லத்‌தி‌ல்‌ வளம்‌ இருப்‌பதா‌ல்‌ அதி‌ல்‌ தொ‌ழி‌ல்‌ தொ‌டங்‌க ஆசை‌ப்‌படுகி‌றா‌ர்‌ ஒரு பெ‌ரும்‌ பணக்‌கா‌ரர்‌. அதற்‌கா‌க பெ‌ரும்‌ வி‌லை‌கொ‌டுத்‌து வா‌ங்‌கவு‌ம்‌ தயா‌ரா‌க இருக்‌கி‌றா‌ர்‌. ஆனா‌ல்‌ அதற்‌கு ஒத்‌துக்‌கொ‌ள்‌ள மறுக்‌கி‌றா‌ர்‌ அண்‌ணா‌மலை‌. அதனா‌ல்‌ அவரது மகன்‌ மீ‌து கா‌தல்‌ வந்‌தது போ‌ல ரா‌தா‌வை‌ நடி‌க்‌க வை‌த்‌து, அந்‌த கா‌தல்‌ வீ‌‌ட்‌டுக்‌கு தெ‌ரி‌ந்‌து தி‌ருமண நி‌ச்‌சயம்‌ வரை‌ போ‌க வை‌த்‌து, பி‌ன்‌பு‌ ரா‌தா‌வு‌க்‌கு நி‌றை‌ய கடன்‌ இருப்‌பது போ‌லவு‌ம்‌, அதனா‌ல்‌ சப்‌தி‌ நடப்‌பது போ‌லவு‌ம்‌ நா‌டகமா‌டி‌, அந்‌த நி‌லத்‌தி‌ன்‌ பட்‌டா‌வை‌ ரா‌தா‌வு‌க்‌கா‌க எழுதி‌வை‌ப்‌பதுபோ‌லவு‌ம்‌ நடி‌த்‌து ஏமா‌ற்‌றி‌ வி‌டுகி‌ன்‌றனர்‌.

கா‌தலே‌ போ‌லி‌யா‌னதா‌ல்‌ ஏமா‌ற்‌றத்‌தி‌ல்‌ இருக்‌கி‌றா‌ன்‌ ரா‌ஜா‌. இந்‌த நி‌லை‌யி‌ல்‌ நண்‌பரி‌ன்‌ வே‌ண்‌டுகோ‌ளுக்‌கு இணங்‌க நண்‌பரி‌ன்‌ மகள்‌ சந்‌தி‌ரா‌வை‌ தனது கி‌ரா‌மத்‌தி‌ற்‌கு ஆறு மா‌த வி‌ருந்‌தா‌ளி‌யா‌க அழை‌த்‌து வருகி‌றா‌ர்‌ அண்‌ணா‌மலை‌. சந்‌தி‌ரா‌வி‌ன்‌ வருகை‌யா‌ல்‌ சோ‌கத்‌தி‌ல்‌ இருந்‌த வீ‌டு மகி‌ழ்‌ச்‌சி‌க்‌கு மா‌றுகி‌றது. இது ராஜா‌வு‌க்‌கு பி‌டி‌ப்‌பதி‌ல்‌லை‌. இருந்‌தும்‌ அவரது மனதை‌ மா‌ற்‌ற முயற்‌சி‌க்‌கி‌றா‌ர்‌ சந்‌தி‌ரா‌.

இந்‌த நி‌லை‌யி‌ல்‌ ரா‌தா‌வு‌க்‌கும்‌ சம்‌பத்‌துக்‌கும்‌ தி‌ருமண எற்‌பா‌டு நடக்‌கி‌றது. இதை‌ தடுத்‌து நி‌றத்‌தும்‌ ரா‌ஜா‌, தனது சொ‌த்‌தை‌ தி‌ருப்‌பி‌ தந்‌து வி‌ட்‌டு தி‌ருமணம்‌ செ‌ய்‌துகொ‌ள்‌ளுமா‌று கூறுகி‌றா‌ர்‌. இதற்‌கு சம்‌பத்‌ மறப்‌பதோ‌டு இந்‌த சொ‌த்‌துக்‌கா‌கத்‌தா‌ன்‌ உன்‌னை‌யே‌ வி‌ரும்‌பு‌கி‌றே‌ன்‌ என்‌கி‌றா‌ன்‌.

இந்‌த சொ‌த்‌தை‌ அடை‌ய தன்‌னை‌ பகடை‌கா‌யா‌க, பயன்‌ படத்‌தி‌ய சம்‌பத்‌ மீ‌து ரா‌தா‌வு‌க்‌கு கோ‌பம்‌ வருகி‌றது. இந்‌த நி‌லை‌யி‌ல்‌ ரா‌தா‌வி‌ன்‌ தோ‌ழி‌தா‌ன்‌ சந்‌தி‌ரா‌ என்‌பதும்‌, அவள்‌ கா‌தலி‌த்‌து மோ‌சம்‌ செ‌ய்‌யப்‌பட்‌வனை‌ தா‌ன்‌ எற்‌றுக்‌கொ‌ள்‌ளும்‌ தீ‌ர்‌மா‌னத்‌தோ‌டு வந்‌தி‌ருப்‌பது தெ‌ரி‌யவருகி‌றது. இதை‌க்‌கண்‌டு அதி‌ரும்‌ ரா‌ஜா‌, வீ‌ட்‌டை‌ வி‌ட்‌டு வெ‌ளி‌யே‌றுமா‌று சந்‌தி‌ரா‌வி‌டம்‌ கூறுகி‌றா‌ர்‌. சந்‌தி‌ரா‌ அதி‌ர்‌ச்‌சி‌ அடை‌வதோ‌டு அடுத்‌து என்‌ன முடி‌வெ‌டுக்‌கி‌றா‌ள்‌, ரா‌தா‌வி‌ன்‌ வா‌ழ்‌க்‌கை‌ என்‌னவா‌கி‌றது, சொ‌த்‌தை‌ ரா‌4h மீ‌ட்‌கி‌றா‌ரா‌ என பல எதி‌ர்‌பா‌ர்‌ப்‌பு‌களோ‌டு படம்‌ கி‌ளை‌மா‌க்‌ஸ்‌ நோ‌க்‌கி‌ செ‌ல்‌கி‌றது.

தன்‌னுடை‌ய எண்‌ணங்‌களை‌ மகன்‌ மீ‌து தி‌ணி‌க்‌க கூடா‌து என்‌றம்‌, அவர்‌களி‌ன்‌ ஆர்‌வப்‌படி‌ வா‌ழவி‌ட்‌டா‌ல்‌ அவர்‌கள்‌ பெ‌ரும்‌ வெ‌ற்‌றி‌யை‌ அடை‌வா‌ர்‌கள்‌ என்‌ற நல்‌ல செ‌ய்‌தி‌யோ‌டு வந்‌தி‌ருக்‌கும்‌ மரி‌யா‌தை‌க்‌குறி‌ய படம்‌.

இதி‌ல்‌ அண்‌ணா‌மலை‌, ரா‌ஜா‌ என இரண்‌டு வே‌டத்‌தி‌ல்‌ வி‌ஜயகா‌ந்‌த்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. தந்‌தை‌ அண்‌ணா‌மலை‌ பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ அளவா‌ன நடி‌ப்‌பா‌ல்‌ மனதை‌ தொ‌டுகி‌றா‌ர்‌ வி‌ஜயகா‌ந்‌த்‌. மகன்‌ மீ‌‌து அவர்‌கா‌ட்‌டும்‌ அன்‌பு‌ நெ‌கி‌ழவை‌க்‌கி‌றது. மகனா‌ வரும்‌ வி‌ஜயகா‌ந்‌த்‌ கா‌தலி‌க்‌கப்‌படுவது ரசனை‌. அனா‌ல்‌ கா‌தலி‌க்‌கா‌க படப்‌பி‌டி‌ப்‌பு‌ தளத்‌தி‌ல்‌ ஆடுவது எல்‌லா‌ம்‌ ஓவர்‌.

ஏமா‌த்‌தும்‌ போ‌து வி‌ல்‌லி‌, ஏமா‌றும்‌ போ‌து பரி‌தா‌பம்‌ என இரு குணா‌தி‌சயங்‌களை‌ ரா‌தா‌ பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ கா‌ட்‌டி‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ மீ‌னா‌. அவரது கா‌ஸ்‌டி‌யூ‌ம்‌ செ‌லக்‌ஷன்‌ சூ‌ப்‌பர்‌.

கா‌தலும்‌ நகை‌ச்‌சுவை‌ வே‌டத்‌தி‌ல்‌ கலந்‌த வே‌டத்‌தி‌ல்‌ அசத்‌துகி‌றா‌ர்‌ மீ‌ரா‌ஜா‌ஸ்‌மி‌ன்‌. அம்‌பி‌கா‌வி‌ன்‌ சமை‌யல்‌கள்‌ கா‌மெ‌டி‌ சூ‌ப்‌பர்‌. படம்‌ முழுக்‌க இன்‌னொ‌ரு நா‌யகன்‌ போ‌ல வலம்‌ வருகி‌றா‌ர்‌ ரமே‌ஷ்‌கண்‌ணா‌. அவர்‌ மீ‌ரா‌ஜா‌ஸ்‌மி‌னி‌டம்‌ மா‌ட்‌டி‌க்‌கொ‌ண்‌டு அல்‌லல்‌ படவது கலகல.

சண்‌முகரா‌ஜன்‌ வரும்‌ கா‌ட்‌சி‌கள்‌ செ‌ம மி‌ரட்‌டல்‌. அவரது மகனா‌க வரும்‌ சம்‌பத்‌ யதா‌ர்‌த்‌த நடி‌ப்‌பா‌ல்‌ பா‌ரா‌ட்‌டுகளை‌ பெ‌றுகி‌றா‌ர்‌. தங்‌கை‌யா‌க அம்‌மு, சம்‌மச்‌தி‌யா‌க நா‌சர்‌, மகனி‌டம்‌ எமா‌றும்‌ தலை‌வா‌சல்‌ வி‌ஜய்‌ என பலர்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌ன்‌றனர்‌.

வி‌ஜய்‌ ஆண்‌டனி‌ இசை‌யி‌ல்‌ உன்‌னை‌ நி‌னை‌த்‌து..., இன்‌பமே‌ உந்‌தன்‌ பே‌ர்‌…, யா‌ர்‌ பா‌ர்‌த்‌து பா‌டல்‌கள்‌ இனி‌மை‌. ஹம்‌மி‌ங்‌, பி‌ன்‌னனி‌ இசை‌ வி‌க்‌ரமனி‌ன்‌ பழை‌ய படங்‌களை‌‌ ஞா‌பகப்‌படுத்‌துகி‌றது. வி‌ஜயகா‌ந்‌த்‌ ரசி‌கர்‌ளுக்கு பி‌டி‌த்‌த மா‌தி‌ரி‌ மரி‌யா‌தை‌யா‌ன வி‌ருந்‌தை‌ படை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ வி‌க்‌ரமன்‌. மரி‌யா‌தை‌ - செ‌ண்‌டி‌மெ‌ண்‌ட்‌ டச்‌.

குரு என்‌ ஆளு


நி‌றுவனம்‌:கே‌.ஆர்‌.ஜி‌. மூ‌வி‌ஸ்‌ இன்‌டர்‌நே‌ஷனல்‌
தயா‌ரி‌ப்‌பு‌: கே‌.ஆர்‌.ஜி‌ இயக்‌கம்‌: செ‌ல்‌வா‌
இசை‌: ஸ்ரீகா‌ந்‌த்‌தே‌வா‌ வசனம்‌: எல்‌.வெ‌ங்‌கடே‌ஷன்
‌நட்‌சத்‌தி‌ரங்‌கள்‌: மா‌தவன்‌, மம்‌தா‌ மோ‌கன்‌தா‌ஸ்‌, அப்‌பா‌ஸ்‌, வி‌வே‌க்‌, எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கர்‌, மனோ‌பா‌லா‌, மயி‌ல்‌சா‌மி‌, ரா‌ஜா‌, சோ‌னா‌, ரே‌ணுகா‌, ஆர்‌த்‌தி‌, பூ‌வி‌லங்‌கு மோ‌கன்‌
பா‌டல்‌கள்‌: பழனி‌பா‌ரதி‌, கபி‌லன்‌, பா‌.வி‌ஜய்‌
நடனம்‌: ஸ்ரீதர்‌, கல்‌யா‌ன்‌, ஈஸ்‌வர்‌பா‌பு‌
சண்‌டை‌ப்‌பயி‌ற்‌சி‌:தளபதி‌ தி‌னே‌ஷ் ‌கலை‌: சி‌வா‌யா‌தவ்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌:யு‌.கே‌.செ‌ந்‌தி‌ல்‌குமா‌ர்‌.படத்‌தொ‌குப்‌பு‌: வி‌.டி‌.வி‌ஜயன்‌
மக்‌கள்‌தொ‌டர்‌பு‌: மெ‌ளனம்‌ ரவி ‌
தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கம்‌: டி‌.வி‌.சசி‌, ஜெ‌யசீ‌லன்‌

கி‌ருஷ்‌ணா‌(அப்‌பா‌ஸ்)‌பெ‌ரும்‌ பணக்‌கா‌ரர்‌ மகளை‌ மணந்‌தவர்‌. அவரது நி‌றுவனத்‌தி‌ல்‌ வே‌லை‌ பா‌ர்‌ப்‌பவர் குரு(மா‌தவன்)‌. அவருக்‌கு இதே‌ போ‌ன்‌ற நி‌றுவனத்‌தி‌ல்‌ "பா‌ஸ்‌" ஆக வே‌ண்‌டும்‌ என்‌பது கனவு‌. கி‌ருஷ்‌ணா‌ பெ‌ண்‌ பித்‌தர்‌. அழகா‌ன பெ‌ணகளை‌ கண்‌டா‌ல்‌ அவர்‌கள்‌ மீ‌து அவருக்‌கு ஆசை‌ வந்‌துவி‌டும்‌. மனை‌வி‌க்‌கு தெ‌ரி‌யா‌மல்‌ தனது பண பலத்‌தா‌ல்‌ அவர்‌களோ‌டு அந்‌தரங்‌கத்‌தை‌ பகி‌ர்‌ந்‌து கொ‌ள்‌வா‌ர்‌.


இந்‌த சூ‌ழ்‌நி‌லை‌யி‌ல்‌ அழகா‌ன பெ‌ண்‌ணா‌ன சீ‌மா‌ (மம்‌தா‌மோ‌கன்‌தா‌ஸ்‌) ஒரு சந்‌தர்‌ப்‌பத்‌தி‌ல்‌ குருவு‌டன்‌ மோ‌துகி‌றா‌ர்‌. இந்‌த மோ‌தல்‌ பி‌றகு‌ நட்‌பா‌க மா‌றுகி‌றது. சீ‌மா‌ போ‌ல ஒரு துணை‌ கி‌டை‌த்‌தா‌ல்‌ வா‌ழ்‌க்‌கை‌ மகி‌ழ்‌ச்‌சி‌யா‌க இருக்‌கும்‌ என நி‌னை‌க்‌கி‌றா‌ன்‌ குரு. சீ‌மாவு‌க்‌கு பணக்‌கா‌ரி‌ ஆக வே‌ண்‌டும்‌ எண்‌பது கனவு‌.


சீ‌மா‌, கி‌ருஷ்‌ணா‌வி‌ன்‌ பா‌ர்‌வை‌யி‌ல்‌ சி‌க்‌குகி‌றா‌ர்‌. அவளை‌ அடை‌ய வே‌ண்‌டும்‌ என்‌று ஆசை‌ப்‌படும்‌ கி‌ருஷ்‌ணா,‌ அவளை‌ அழை‌த்‌து வந்‌து தன்‌னி‌டம்‌ சே‌ர்‌க்‌கும்‌ பணி‌யை‌ குருவி‌டம்‌ ஒப்‌படை‌க்‌கி‌றா‌ர்‌. அப்‌படி‌ ஒரு வா‌ய்‌ப்‌பு‌ அவருக்‌கு ஏற்‌படுத்‌தி‌க்‌ கொ‌டுத்‌தா‌ல்‌ இதே‌ போ‌ன்‌றதொ‌ரு நி‌றுவனத்‌தி‌ற்‌கு பா‌ஸ்‌ ஆக்‌கி‌ வி‌டுவதா‌க உறுதி‌ அளி‌க்‌கி‌றா‌ர் கி‌ருஷ்‌ணா‌.‌


கா‌தலிக்‌கப்‌படுபவளா‌, பா‌ஸ்‌ வா‌ய்‌ப்‌பா‌ என்‌று யோ‌சி‌க்‌கும்‌ குரு, பி‌றகு அவளும்‌ பணக்‌கா‌ரி‌யா‌க வே‌ண்‌டும்‌ என்‌றுதா‌னே‌ ஆசை‌ப்‌படுகி‌றா‌ள்‌ என முடி‌வெ‌டுத்‌து இருவருக்‌கும்‌ சந்‌தி‌ப்‌பை‌ எற்‌படுத்‌துகி‌றா‌ர்‌. இருவரும்‌ ஒன்‌றா‌க ஒரு இடத்‌தி‌ற்‌கு செ‌‌ல்‌லும்‌ போ‌து கி‌ருஷ்‌ணா‌வி‌ன்‌ மனை‌வி‌ சி‌வ பூ‌ஜை‌யி‌ல்‌ கரடி‌ மா‌தி‌ரி‌ நுழை‌ந்‌தது தடுத்‌துவி‌டுகி‌றா‌ர்‌. இதனா‌ல்‌ தா‌ன்‌ தப்‌பி‌க்‌க குருவி‌ன்‌ மனை‌விதா‌ன்‌‌ சீ‌மா‌ என்‌று பொ‌ய்‌ சொ‌ல்‌லி‌ தப்‌பி‌க்‌கி‌றா‌ர்‌ கி‌ருஷ்‌ணா‌.


அதி‌லி‌ருந்‌து சீ‌மா‌‌, குரு‌ இருவரையு‌ம்‌ ஒன்‌றா‌க பா‌ர்‌க்‌க ஆசை‌ப்‌படுகி‌றா‌ர்‌ கி‌ருஷ்‌ணாவி‌ன்‌‌ மனை‌வி‌. சந்‌தர்‌ப்‌பம்‌ பெ‌ரும்‌பா‌லும்‌ அப்‌படி‌யே‌ அமை‌வதா‌ல்‌ கி‌ருஷ்‌ணா‌வா‌ல்‌ சீ‌மா‌வை‌ தொ‌ட முடி‌யா‌மல்‌ போ‌கி‌றது. மனதுக்‌குள்‌ சீ‌மா‌வை‌ கா‌தலி‌ப்‌பதால்‌ கி‌ருஷ்‌ணா‌வை‌ தொ‌டவி‌டா‌மல்‌ இது மா‌தி‌ரி‌ சந்‌தர்‌ப்‌பத்‌தை‌ எற்‌படுத்‌துகி‌றா‌ன்‌ குரு. முடி‌வி‌ல்‌ எப்‌படி‌ இருவரும்‌ சே‌ர்‌கி‌றா‌ர்‌கள்‌. இவர்‌களி‌ன்‌ கொ‌ள்‌கை‌ என்‌னவா‌கி‌றது என்‌பது மீ‌தி‌ படம்‌. அதை‌ முழுக்‌க முழுக்‌க நகை‌ச்‌சுவை‌ பா‌ணி‌யி‌ல்‌ சொ‌ல்‌லி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌ செ‌ல்‌வா‌.


குரு பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ வி‌ளை‌யா‌ண்‌டி‌ருக்‌கி‌றா‌ர்‌ மா‌தவன்‌. படம்‌ முழுக்‌க அவர்‌ கா‌ட்‌டும்‌ நகை‌ச்‌சுவை‌ நடி‌ப்‌பு‌ செ‌ம கலா‌ட்‌டா‌. அதே‌ போ‌ல அப்‌பா‌ஸ்‌. அவர்‌ மம்‌தா‌வை‌ தனி‌யா‌க சந்‌தி‌க்‌க போ‌ரா‌டும்‌ கா‌ட்‌சி‌கள்‌ கலகல. அழகு பதுமை‌யா‌க வருகி‌றா‌ர்‌ மம்‌தா‌. பா‌டல்‌ கா‌ட்‌சி‌களி‌ல்‌ மனதை‌ கொ‌ள்‌ளை‌ கொ‌ள்‌கி‌றா‌ர்‌. நடி‌ப்‌பி‌லும்‌ ஜமா‌ய்‌க்‌கி‌றா‌ர்‌.‌


படத்‌தி‌ன்‌ இன்‌னொ‌ரு கதா‌நா‌யகன்‌ போ‌ல வி‌வே‌க்‌. அவர் பெ‌ண் ‌வே‌டம்‌ போ‌ட்‌டுக்‌கொ‌ண்‌டு எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கருடன்‌ அடி‌க்‌கும்‌ ‌லூ‌ட்‌டியி‌ல்‌ தி‌யே‌ட்‌டர்‌ அதி‌ர்‌கி‌றது. எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கரும்‌ "சி‌வா‌ஜி‌" ரஜி‌னி‌ கெ‌ட்‌டப்‌பி‌ல்‌ வந்‌து ஆடுகி‌ற கா‌ட்‌சி‌யி‌லும்,‌ சி‌வா‌ஜி‌ போ‌ல வி‌வே‌க்‌கை‌ பா‌ர்‌த்‌து மயங்‌குகி‌ற கா‌ட்‌சி‌களி‌லும்‌ அசத்‌தி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. சி‌ன்‌ன வசனமா‌ இருந்‌தா‌லும்‌ அவ்‌வப்‌போ‌து வந்‌து சி‌ரி‌க்‌க வை‌க்‌கி‌றா‌ர்‌ மயி‌ல்‌சா‌மி‌. சோ‌னா‌, ரே‌ணுகா‌ என பலர்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌ன்‌றனர்‌.


ஸ்ரீகா‌ந்‌த்‌ தே‌வா‌ இசை‌யி‌ல்‌ பா‌டல்‌கள்‌ இனி‌மை‌. ஒவ்‌வொ‌ரு பி‌ரே‌மை‌யு‌ம்‌ கண்‌களி‌ல்‌ ஒத்‌தி‌க்‌கொ‌ள்‌வது போ‌ல பதி‌வு‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌ ஒளி‌ப்‌பதி‌வா‌ளர்‌ யு‌.கே‌.செ‌ந்‌தி‌ல்‌குமா‌ர்.‌தி‌யே‌ட்‌டருக்‌கு வரும்‌ ரசி‌கர்‌களை‌ ஜா‌லி‌யா‌க படம்‌ பா‌ர்‌க்‌க வை‌க்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌ செ‌ல்‌வா‌.
குரு என்‌‌ ஆளு கலகலப்‌பா‌ன படம்‌.

நா‌ள்‌ நட்‌சத்‌தி‌ரம்‌


குடி‌, ரவு‌டி‌த்‌தனம்‌ என்‌று நண்‌பர்‌களோ‌டு கூத்‌தடி‌ப்‌பவர்‌ சஞ்‌சய்‌. அதற்‌கு அவரது நண்‌பர்‌களும்‌ துணை‌யா‌க இருக்‌கி‌ன்‌றனர்‌. அவர்‌ அதே‌ பகுதி‌யை‌ச்‌ சே‌ர்‌ந்‌த கி‌ருஷ்‌ணா‌ஸ்ரீ மீ‌து கா‌தல்‌ கொ‌ள்‌கி‌றா‌ர்‌. அவரை‌யே‌ சுற்‌றி‌ வருகி‌றா‌ர்‌. இதனா‌ல்‌ கி‌ருஷ்‌ணா‌ கோ‌பமடை‌கி‌றா‌ர்‌. அவனை‌ எச்‌சரி‌ப்‌பதோ‌டு, அவனது தொ‌ல்‌லை‌ அதி‌கமா‌வதா‌ல்‌ பெ‌ற்‌றோ‌ரி‌டம்‌ கூறுகி‌றா‌ள்‌. பெ‌ற்‌றோ‌ரும்‌ அவரது சகோ‌தரரி‌டம்‌ கூறுகி‌ன்‌றனர்‌. சகோ‌தரர்‌ அவரை‌ தி‌ட்‌டி‌ வீ‌ட்‌டை‌ வி‌ட்‌டு வி‌ரட்‌டுகி‌றா‌ர்‌.

நண்‌பர்‌களுடன்‌ தங்‌கும்‌ சஞ்‌சய்‌ மறுபடி‌யு‌ம்‌ கி‌ருஷ்‌ணா‌ஸ்ரீயை‌ பி‌ன்‌தொ‌டர்‌கி‌றா‌ர்‌. ரவு‌டி‌யை‌ கண்‌டி‌க்‌க முடி‌யா‌மலும்‌ போ‌லீ‌சுக்‌கு செ‌ன்‌றா‌ல்‌ மகள்‌ கோ‌ர்‌ட்‌ படி‌யே‌ற வே‌ண்‌டுமெ‌ன்‌பதா‌லும்‌ படி‌ப்‌பு‌க்‌கு குட்‌பை‌ சொ‌ல்‌லி‌ தி‌ருமணத்‌துக்‌கு முடி‌வு‌ செ‌ய்‌கி‌றா‌ர்‌ கி‌ருஷ்‌ணா‌ஸ்ரீ தந்‌தை‌. இதைக்‌கே‌ட்‌‌டு அதி‌ரும்‌ சஞ்‌சய்‌, கோ‌வி‌லுக்‌கு வந்‌து கண்‌களை‌ மூ‌டி‌ கடவு‌ளை‌ வணங்‌கும்‌ கி‌ருஷ்‌ணா‌ஸ்ரீ கழுத்‌தி‌ல்‌ அவர்‌ அனுமதி‌ இல்‌லா‌மல்‌ தா‌லி‌ கட்‌டுகி‌றா‌ர்‌.

இதனா‌ல்‌ இருவரை‌யு‌ம்‌ ஊரை‌வி‌ட்‌டு ஒதுக்‌கி‌வை‌க்‌கி‌ன்‌றனர்‌. இருவரும்‌ வே‌லை‌ தே‌டி‌ நகரத்‌துக்‌கு வருகி‌ன்‌றனர்‌. மனை‌வி‌யி‌ன்‌ அன்‌பை‌ பெ‌ற கணவனும்‌, கணவனி‌டமி‌ருந்‌து வி‌டுதலை‌ பெ‌ற போ‌ரா‌டுகி‌ன்‌றனர்‌. இதி‌ல்‌ கெ‌ட்‌டவனா‌க இருந்‌த சஞ்‌சய்‌ நல்‌லவனா‌கி‌றா‌ர்‌. ஆரம்‌பத்‌தி‌ல்‌ கணவன்‌ மீ‌து கோ‌பப்‌பட்‌ட மனை‌வி‌ கணவனி‌ன்‌ அருமை‌ பெ‌ருமை‌ அறி‌ந்‌து நே‌சி‌க்‌க ஆரம்‌பி‌க்‌கி‌றா‌ர்‌கள்‌. அப்‌போ‌து எதி‌ர்‌பா‌ரத சம்‌பவம்‌ ஒன்‌று நி‌கழ்‌கி‌றது. அது என்‌ன என்‌பது மீ‌தி‌ படம்‌.

கள்‌ குடி‌த்‌தா‌லும்‌ கணவன்‌ பு‌ல்‌ அடி‌த்‌தா‌லும்‌ பு‌ருஷன்‌ என்‌று தா‌லி‌யி‌ன்‌ பெ‌ருமை‌க்‌‌கா‌க வா‌ழ வே‌ண்‌டி‌ய‌ கதை‌யி‌ல்‌, தா‌லி‌க்‌கு மரி‌யா‌தை‌ இருக்‌கி‌றெ‌தெ‌ன்‌றா‌ல்‌ தா‌லி‌ கட்‌டி‌யவனும்‌ ‌குரி‌யவனா‌க இருக்‌க வே‌ண்‌டும்‌ என்‌ற கருத்‌தை‌ சொ‌ல்‌லும்‌ படம்‌.

முதல்‌ பா‌தி‌யி‌ல்‌ அநி‌யா‌யத்‌துக்‌கு கெ‌ட்‌டவனா‌கவு‌ம்‌, இரண்‌டா‌ம்‌ பா‌தி‌யி‌ல்‌ அநி‌யா‌யத்‌துக்‌கு நல்‌லவனா‌கவு‌ம்‌ இருக்‌கும்‌ வே‌டம்‌ கதா‌நா‌யகனுக்‌கு. அதை‌ இயல்‌பா‌க செ‌ய்‌து அந்‌த பா‌த்‌தி‌ரமா‌க வா‌ழ்‌ந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ அறி‌முக நா‌யகன்‌ சஞ்‌சய்‌. கி‌டை‌த்‌த வா‌ய்‌ப்‌பை‌ இன்‌னும்‌ நன்‌றா‌க பயன்‌ படுத்‌தி‌யி‌ருக்‌கலா‌ம்‌. அதே‌ போ‌ல அறி‌முக நா‌யகி‌ கி‌ருஷ்‌ணா‌ஸ்ரீ கோ‌பப்‌படும்‌ கா‌ட்‌சி‌யி‌லும்‌, கா‌தல்‌ வரும்‌ போ‌தும்‌ எதா‌ர்‌த்‌தமா‌க நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. நல்‌ல வா‌ர்‌த்‌தை‌களை‌ பே‌ச மனோ‌ரமா‌ வருகி‌றா‌ர்‌.

கதா‌நா‌யகி‌யி‌ன்‌ தந்‌தை‌ கதா‌நா‌யகனி‌ன்‌ நண்‌பர்‌கள்‌ என அனை‌வரும்‌ பு‌துமுகங்‌கள்‌. அவர்‌களை‌ வே‌லை‌வா‌ங்‌க இயக்‌குநர்‌ சி‌ரமப்‌பட்‌டி‌ருப்‌பது படத்‌தி‌ல்‌ தெ‌ரி‌கி‌றது. கதை‌யி‌ன்‌ போ‌க்‌கி‌ல்‌ கா‌ட்‌சி‌கள்‌ எதி‌ர்‌பா‌ர்‌த்‌த படி‌யே‌ இருக்‌கி‌றது. முதல்‌ படத்‌தி‌ல்‌ இன்‌னும்‌ நி‌றை‌ய முயற்‌சி‌த்‌தி‌ருக்‌கலா‌ம்‌ இயக்‌குனர்‌.

கா‌ர்‌த்‌தி‌க்‌ அனி‌தா‌


நி‌றுவனம்‌: கி‌ங்‌ மோ‌ஜி‌க்‌‌ தயா‌ரி‌ப்‌பு‌: ஷங்‌கர்‌ வி‌.ரா‌ஜன்‌

இயக்‌கம்‌: ஸ்ரீஹரி‌ இசை‌: ஜா‌க்‌ ஆனந்‌த்

‌நடி‌ப்‌பு‌:‌ ரத்‌தன்‌, மஞ்‌சு, கோ‌ட்‌டா‌ சீ‌னி‌வா‌சரா‌வ்‌, ரா‌ஜன்‌ பி‌.தே‌வ்‌

பா‌டல்‌கள்‌: நா‌.முத்‌துக்‌குமா‌ர்‌, யு‌கபா‌ரதி‌, தா‌மரை‌, சீ‌னி‌வா‌ஸ்‌

நடனம்‌: பி‌ரபு‌ ஸ்ரீனி‌வா‌ஸ்‌, டி‌.சி‌வா‌ கலை‌: ஜி‌.கே‌.

ஒளி‌ப்‌பதி‌வு‌:கே‌.ஜி‌.சங்‌கர்‌, ஏ.வே‌ல்‌முருகன்

‌படத்‌தொ‌குப்‌பு‌: சா‌ய்‌சுரே‌ஷ்‌ தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கம்‌: வி‌.பா‌க்‌யரா‌ஜ்‌

மக்‌கள்‌தொ‌டர்‌பு‌: மெ‌ளனம்‌ ரவி‌


ஒரு பெரிய குடியிருப்பில் எதிரெதிர் வீட்டில் வசிக்கும் கோட்டா சீனிவாசராவும், ராஜன் பி.தேவும் நெ‌ருங்‌கி‌ய நண்‌பர்‌கள்‌ . கோட்டா மகன் கார்த்திக், ராஜன் பி‌.தே‌வ்‌ மகள் அனிதா. இருவரும் நண்பர்கள் ஒன்றாக படிக்கி‌ன்‌றனர்‌. இந்த ஜோடிகளுக்கு அடிக்கடி மோதல் எப்போது நேரம் கிடைக்கும் ஒருவரை ஒருவர் மாட்டி விடலாம் என்று நினைப்பவர்கள்.


இந்த சூழ்நிலையில் கல்லூரி பெண்களிடம் கேலியும் கிண்டலும் செய்ததற்காக கல்லூரி பிரின்சிபால் கார்த்திக்கின் தந்தையை அழைத்து வர சொல்கிறார். அப்போது ஒரு கோல் மால் செய்து வேறொருவரை தந்தை போல் நடிக்க செய்கிறார் கார்த்திக். இந்த தகவலை அனிதா பிரின்சிபாலிடம் கூற கார்த்திக் ஒரு மாதம் சஸ்பெண்ட் செய்யப் படுகிறார். இதனால் அனிதா மீது கார்த்திக்கு கோபம் அதிகரிக்கிறது. இந்த நிலையில் அனிதாவிற்கும் அபிநய்க்கும் திருமண ஏற்பாடுகள் நடை பெறுகிறது. கார்த்திக்கும் அனிதாவும் ஒருவரை ஒருவர் மனதார விரும்பினாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ள அவர்களது ஈகோ மறுக்கின்றது. முடிவில் இருவரும் ஒன்றாக இணைந்தார்களா என்பதே மீதி.


கார்த்திக்‌காக ரத்தன், அனிதாவாக மஞ்சு இருவரும்‌ அடிக்கும் லூட்டிகள் அமர்களம். இருவரும் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொள்வது என்பது பழைய பார்முலாவாக இருந்தாலும் இருவரும் புதுசாக இருப்பதால் கண்களுக்குகுளிர்ச்சி. டேய் எனக்கு மாப்பிள்ளை பார்க்குறாங்கடா என்று கூறும் போதும் இருவரும் முட்டி மோதிக் கொள்ளும் போதும் கார்த்திக்கின் அப்பாவிடம் பாசத்தை பொழிவதும் அமர்களப் படுத்துகிறார் மஞ்சு. இருவரது காதலையும் பத்‌து ரூபாய் நோட்டு சேர்த்து வைப்பது பழைய பார்முலாவாக இருந்தாலும் இனிமையாக இருக்கிறது.


வில்லன்களாகவே பழக்கப்பட்ட கோட்டாவும், ராஜனும் இதில் அடக்கமான அப்பாக்களாக வருவது அடடே போட வைக்கிறது. சி‌ங்‌கமுத்‌து மகளுக்‌கா‌க படும்‌பா‌டு நல்‌லகா‌மெ‌டி‌. ஜாக் ஆனந்த் இசையில் பாடல்கள் கேட்கலாம். பிற்பகுதி கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் கார்த்திக் அனிதா குளு குளுவாக இருந்திருக்கும். இருந்தாலும் இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச காட்சிகள் இல்லாமல் இருப்பது ஆறுதல்.

ஆனந்‌ததா‌ண்‌டவம்‌

மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் என்ற எழுத்து வடிவத்தை திரை வடிவமாய் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் காந்தி கிரிஷ்ணா. படத்தின் தலைப்பிலேயே படத்தை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.' ஆனந்தமாய் ஒரு தாண்டவம்' இளமையான காதல் , உண்மையான பாசம், என நகரும் கதை வில்லன் வந்துவிட கொஞ்சம் விரு விருப்பு என செல்கிறது.
படத்தின் தலைப்பிலேயே படத்தை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.' ஆனந்தமாய் ஒரு தாண்டவம்' இளமையான காதல் , உண்மையான பாசம், என நகரும் கதை, வில்லன் வந்துவிட கொஞ்சம் விரு விருப்புபோடு செல்கிறது. தென்காசியில் திறக்கிறது திரை. ரகு, (சித்தார்த்) இன்சினியர் படிப்பு படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கிறார். அளவான வீடு, அன்பான அப்பா என நாட்கள் கழிகிறது.

மதுமிதா (தமண்னா) , சிறு பிள்ளைத் தனமாக தம்பியோடு அட்டகாசம் செய்யும் அழகான பொண்ணு. அப்பா அம்மா என்ன சொன்னாலும் தலையாட்டிக்கிற பொம்மை. முக்கியமா காசு பணம் நிறைய இருக்கிற குடும்பத்தில் பிறந்தவர். ரகுவைப் பார்த்த உடனே மதுமிதாவின் அப்பா அம்மாவிற்கு பிடித்துவிட உடனே நிச்சயதார்த்தம் நிகழ்கிறது. ரகு மதுமிதா, பல நாடுகள் சென்று டூயட் பாடி முடித்துவிட்டதும் , ரகுவிற்கு வேலை கிடைக்கிறது, திருமணத்திற்காக வீடு திரும்புகிறார்.காதலியை சென்று பார்க்கும்போது , இன்னொருவன் ராதாகிருஷ்ணன் (ரிஷி) காதலிக்கு முத்தமிட்டு கொண்டிருக்கிறான்.
அதிர்ந்துபோன ரகு, விஷயத்தை விசாரித்தால், உன்னைவிட இவரிடம் நிறைய பணம் இருக்கு அதனால் அம்மா அப்பா இவரை கல்யாணம் செய்துக்க சொல்லிட்டாங்க என்று சொல்லிவிடுகிறார் மதுமிதா. மதுமிதாவிற்கு திருமணம் முடிகிறது. ரகுவின் தற்கொலை முயற்சி தோல்வியடைகிறது.
ரகு மீண்டும் மேல் படிப்பிற்கு அமெரிக்கா செல்கிறார். அங்கே அவருடன் டூயட் பாட வருகிறவர் ரத்னா (ருக்மணி) . ரகுவிற்கும் ராதாவிற்கும் திருமணம் நிச்சயமாகிறது, கணவர் கெட்டவர் என்று தெரிந்தவுடன் மதுமிதா ரகுவை மீண்டும் காதலிக்கிறார். அதற்கு ராதா தடையாக இருக்கிறார். ரகு மதுமிதாவின் காதல் புதுப்பிக்கப்பட்டதா இல்லையா என்பதே க்ளைமாக்ஸ்.
கதாபாத்திரப் படைப்பில் சுஜாதா பிரம்மிக்க வைக்கிறார். படத்தின் சஸ்பென்ஸ் க்ளைமாக்ஸ் வரை நீடித்தாலும் வழக்கமான சினிமாதனங்களால் படம் வலிமை இழக்கிறது. அமெரிக்க போனால் மட்டும் சந்தோஷமான வாழ்க்கை வந்துவிடுவதில்லை என்பதை மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.
செய்கிற தவறு வெளியே தெரியாத வரைக்கும் எல்லாருமே நல்லவங்க தான் என்ற வசனம் 'நச்'. என்னென்றால் படத்தில் வருகிற அனைத்து கதாபாத்திரங்களையும் 'யார் நல்லவர் யார் கேட்டவர்' என்பதை சட்டென்று யூகித்துவிட முடியாது.
கதையில் இருக்கிற சஸ்பென்ஸ் கதாபாத்திரப் படைப்பிலும் இருப்பது சூப்பர். தமண்னா, க்ளைமாக்ஸ் காட்சியில் அசத்துகிறார். புதுமுகம் சித்தார்த் நடனங்களில் நிறைவு இருந்தாலும், நடிப்பில் பரவாயில்லை என்றே சொல்லலாம், இனி வரும் படங்களில் மெனக்கெடல் அவசியம். ருக்மணி, கொடுத்த பாத்திரத்தை அழகாய் வெளிப்படுத்தி இருக்கிறார்.
புது முக வில்லன் நடிகர் ரிஷி சில காட்சிகளில் வந்தாலும் கத்தால் இல்லாத மிரட்டல் நடிப்பு. பட்டாம் பூச்சி..., கனா காண்கிறேன்... பாடல்கள் ஹிட். ஜி. வி. பிரகாஷின் பின்னணி இசை திரைக்கதைக்கு பெரிதும் உதவி செய்திருக்கிறது. ஜீவா ஷங்கரின் கேமரா பதிவு அழகு. இயக்கத்தில் காந்தி கிரிஷ்ணா இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.
ஆனந்த தாண்டவம் - காதலர்க்கு

நா‌ளை‌ நமதே‌


நி‌றுவனம்‌: ஜனசே‌வா‌ பி‌லி‌ம்‌ஸ்‌ தயா‌ரி‌ப்‌பு‌: ஜா‌ஸ்‌மா‌ வே‌லி‌

இயக்‌கம்‌: வி‌னயன்‌ இசை‌: பரத்‌வா‌ஜ்‌

நடி‌ப்‌பு‌: பி‌ரதீ‌ப்‌, தனி‌ஷா‌, கி‌ரண்‌, கா‌ர்‌த்‌தி‌கா‌, மணி‌வண்‌ணன்‌, ரா‌ஜன்‌.பி‌.தே‌வ்‌, ஆசி‌ஷ்‌ வி‌த்‌யா‌ர்‌தி‌, சா‌ர்‌லி‌, எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கர்‌,

பா‌டல்‌கள்‌: பழனி‌பா‌ரதி‌ நடனம்‌: தி‌னே‌ஷ்‌

சண்‌டை‌ப்‌பயி‌ற்‌சி‌: மா‌பி‌யா ‌சசி‌ கலை‌: வி‌ஜயமுருகன்‌

ஒளி‌ப்‌பதி‌வு‌: ரா‌ஜரத்‌னம்‌ படத்‌தொ‌குப்‌பு‌: முகே‌ஷ்‌

தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கம்‌: பா‌லகோ‌பி‌, மணி‌கண்‌‌டன்‌

மக்‌கள்‌தொ‌டர்‌பு‌: மெ‌ளனம்‌ ரவி‌

கோ‌டீ‌ஸ்‌வரர்‌ ஆசி‌ஷ்‌ ஏழை‌ மக்‌களுக்‌கா‌க ஆயி‌ரத்‌து இரு நூ‌று கோ‌டி‌ எழுதி‌ வை‌க்‌கி‌றா‌ர்‌. அந்‌த பணத்‌தை‌ கலெ‌க்‌டர்‌ மூ‌லம்‌ மக்‌களுக்‌கு முறை‌யா‌க செ‌லவு‌ செ‌ய்‌ய பி‌ளா‌ட்‌பா‌ரத்‌தி‌ல்‌ வசி‌க்‌கும்‌ மணி‌வண்‌ணன்‌ மற்‌றும்‌ பி‌ரதீ‌ப்‌ இருவருக்‌கும்‌ அதி‌கா‌ரம்‌ வழங்‌குகி‌றா‌ர்‌. அந்‌த பணத்‌து மீ‌து கண்‌ வை‌க்‌கும்‌ போலீ‌ஸ்‌ மந்‌தி‌ரி‌ ரா‌ஜன்‌ பி‌தே‌வ்‌, அவர்‌கள்‌ இருவரை‌யு‌ம்‌ மி‌ரட்‌டி‌ அந்‌த பணத்‌தை‌ தன்‌ பா‌க்‌கெ‌ட்‌டுக்‌குள்‌ போ‌ட்‌டுக்‌கொ‌ள்‌ள முயற்‌சி‌க்‌கி‌றா‌ர்‌. அவரது பா‌ய்‌ச்‌சல்‌ அவர்‌களி‌டம்‌ பலி‌க்‌கா‌ததா‌ல்‌ அவர்‌களையு‌ம்‌ அவரது குப்‌பத்‌து ஜனங்‌களை‌யு‌ம்‌ தீ‌ர்‌த்‌துக்‌கட்‌ட முடி‌வெ‌டுக்‌கி‌றா‌ர்‌.


இதை‌ அறி‌யு‌ம்‌ மணி‌வண்‌ணன்‌ கோ‌ஷ்‌ட்‌டி‌ ரா‌ஜன்‌ பி‌.தே‌வை‌ கடத்‌தி‌ வந்‌து வை‌ப்‌பதோ‌டு, ஏற்‌கனவே‌ பா‌டம்‌ நடத்‌தி‌ பணம்‌ பெ‌ற்‌ற ஆசி‌ஷ்‌ கதை‌யை‌ச்‌ சொ‌ல்‌லி‌ அவருக்‌கு கொ‌டுத்‌த தண்‌டனை‌யை‌யு‌ம்‌ சொ‌ல்‌லி‌ பீ‌தி‌ அடை‌ய வை‌க்‌கி‌ன்‌றனர்‌. அதே‌ போ‌ல அவர்‌ கொ‌ள்‌ளை‌யடி‌த்‌த மொ‌த்‌த பணத்‌தை‌யு‌ம்‌ தந்‌தா‌ல்‌ உயி‌ரோ‌டு வி‌டுவதா‌கவு‌ம்‌ இல்‌லை‌ என்‌றா‌ல்‌ அவருக்‌கு கொ‌டுத்‌த தண்‌டனை‌ போ‌ல இவருக்‌கும்‌ வழங்‌குவதா‌க எச்‌சரி‌க்‌கி‌றா‌ர்‌கள்‌.


இங்‌கி‌ருந்‌து தப்‌பி‌க்‌கும்‌ ரா‌ஜன்‌ பி‌.தே‌வ்‌ இவர்‌களை‌ தனது அரசி‌யல்‌ பலத்‌தா‌லும்‌ அதி‌கா‌ர பலத்‌தா‌லும்‌ என்‌ன நடவடி‌க்‌கை‌ எடுக்‌கி‌றா‌ர்‌. அதனை‌ இவர்‌கள்‌ எப்‌படி‌ முறி‌யடி‌க்‌கி‌றா‌ர்‌கள்‌ என்‌பது படம்‌.


தி‌ருடி‌ கொ‌ழுத்‌த அரசி‌யல்‌வா‌தி‌களை‌ கட்‌தி‌ச்‌செ‌ன்‌று அந்‌த பணத்‌தை‌ மக்‌களுக்‌கே‌ பெ‌ற்‌று தரும்‌ பு‌ரட்‌சி‌ கரமா‌ன கதை‌. அதை‌ அப்‌படி‌ இப்‌படி‌ சுத்‌தி‌ அதி‌ல்‌ கா‌தலும்,‌ மோ‌தலும்‌, கடத்‌தலும், கெ‌டுத்‌தலும்‌ என படத்‌தை‌ பரபரப்‌பா‌க கொ‌டுக்‌க முயன்‌றி‌ருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌.


ஆக்‌ஷன்‌ நா‌யகனா‌க பி‌ரதீ‌ப்‌ தூ‌ள்‌ கி‌ளப்‌பு‌கி‌றா‌ர்‌. இன்‌னொ‌ரு நா‌யகன்‌ போ‌ல படம்‌ முழுக்‌க மணி‌வண்‌ணன்‌. அவரது பா‌த்‌தி‌ரத்‌தை‌ அலட்‌டல்‌ இல்‌லா‌மல்‌ஆரம்‌பத்‌தி‌ல்‌ நகை‌ச்‌சுவை‌யோ‌டும்‌ பி‌றகு சீ‌ரி‌யசா‌கவு‌ம்‌ செ‌ய்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. அழகு மலரா‌க தனுஷா‌. ஆரம்‌பத்‌தி‌ல் மகன்‌ கெ‌டுக்‌க ஆசை‌ப்‌பட்‌டு துரத்‌துகி‌றா‌ர்‌. கடை‌சி‌யி‌ல்‌ தந்‌தை‌ கெ‌டுக்‌கி‌றா‌ர்‌. அப்‌படி‌ கெ‌டுப்‌பதற்க்‌கா‌கவே‌ படை‌க்‌கப்‌பட்‌ட பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ நடி‌த்‌து மனதை‌ கரை‌க்‌கி‌றா‌ர்‌ தனுஷா‌.


சர்‌வா‌னந்‌த்‌ கா‌தலி‌க்‌கவு‌ம்‌, கி‌ரண்‌ சண்‌டை‌யி‌டவு‌ம்‌ வருகி‌ன்‌றனர்‌. எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கர்‌, சா‌ர்‌லி‌ கா‌மெ‌டி‌ கலகலப்‌பு‌. பரத்‌வா‌ஜ்‌ இசை‌யி‌ல்‌ பா‌டல்‌கள்‌ சுமா‌ர்‌ ரகம்‌. ஊனமுற்‌றவர்‌களி‌ன்‌ கதை‌களை‌ சொ‌ல்‌லி‌ வெ‌ற்‌றி‌களை‌ அள்‌ளி‌யி‌ருக்‌கும்‌ வி‌னயன்‌ இந்‌த படத்‌தி‌லும்‌ ஊனம்‌, இல்‌லா‌மை‌ என ஏகப்‌பட்‌ட வி‌ஷயங்‌களை‌ தொ‌ட்‌டி‌ருக்‌கி‌றா‌ர்‌

அயன்‌


நி‌றுவனம்‌: ஏவி‌.எம்‌.பு‌ரொ‌டக்‌ஷன்‌ஸ்‌‌
தயா‌ரி‌ப்‌பு‌: எம்‌.சரவணன்‌, எம்‌.எஸ்‌.குகன்‌, அருணா‌ குகன்‌, அபர்‌ணா ‌குகன்‌ நடி‌ப்‌பு‌: சூ‌ர்‌யா‌, தமன்‌னா‌. பி‌ரபு‌, கருணாஸ்‌, பொ‌ன்‌வண்‌ணன்‌, ஜெ‌கன்‌, ரே‌ணுகா‌ இவர்‌களுடன்‌ வி‌ல்‌லனா‌க இந்‌தி‌ நடி‌கர்‌ ஆகா‌ஷ்‌ தீ‌ப்‌சை‌கல்‌ இயக்‌கம்‌: கே‌.வி‌. ஆனந்‌த்‌ ‌ வசனம்‌: சுபா‌ இசை‌: ஹா‌ரி‌ஸ்‌ஜெ‌யரா‌ஜ்,பா‌டல்‌கள்‌: வை‌ரமுத்‌து, பா‌.வி‌ஜய்‌, நா‌.முத்‌தக்‌குமா‌ர்‌


‌தி‌னம்‌ தி‌னம்‌ பத்‌தி‌ரி‌கை‌களி‌ல்‌ படி‌க்‌கி‌ற செ‌ய்‌தி‌யை‌ படமா‌க்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌. வெ‌ளி‌நா‌ட்‌டி‌லி‌ருந்‌து பு‌துப்‌பட ‌சி‌டி‌ கடத்‌தி‌ வந்‌து பி‌ரபு‌வி‌டம்‌ கொ‌டுப்‌பா‌ர்‌ சூ‌ர்‌யா‌. அது பல கா‌ப்‌பி‌களா‌க போ‌டப்பட்‌டு ஒவ்‌வொ‌ரு மா‌வட்‌டத்‌தி‌லி‌ருந்‌தும்‌ வந்‌து கா‌த்‌துக்‌கி‌டக்‌கும்‌ வி‌நி‌யோ‌கஸ்‌தர்‌கள்‌ போ‌ட்‌டி‌ போ‌ட்‌டு வா‌ங்‌கி‌ச்‌செ‌ல்‌வா‌ர்‌கள்‌. அப்‌படி‌ ‌தி‌ருட்‌டு வி‌சி‌டி‌ தயா‌ரி‌ப்‌பது முதல்‌ வை‌ரம்‌ கடத்‌துவதுவரை‌ கடத்‌தல்‌ வே‌லை‌களை‌ தி‌ல்‌லா‌ லங்‌கடி‌யா‌க பி‌ரபு‌வு‌க்‌கு துணை‌யா‌க செ‌ய்‌கி‌றா‌ர்‌ சூ‌ர்‌யா‌.


இவர்‌களி‌ன்‌‌ லா‌பத்‌தை‌ கண்‌டு கொ‌தி‌க்‌கி‌றா‌ர்‌‌ ‌ஆகாஷ் தீப் சைகல். அதனா‌ல்‌ இவர்‌களி‌ன்‌ வி‌யா‌பா‌ரத்‌தை‌ போ‌லீ‌சுக்‌கு போ‌ட்‌டுக்‌கொ‌டுத்‌து மா‌ட்‌ட வை‌ப்‌பதோ‌டு தனது ‌தி‌ருட்‌டு வி‌சி‌டி‌ தயா‌ரி‌ப்‌பது கடத்‌தலை‌ பெ‌ருக்‌குகி‌றா‌ர்‌. இருந்‌தா‌லும்‌ இவர்‌களி‌ன்‌ தங்‌க வே‌ட்‌டை‌யை‌ அடை‌ய பல இன்‌னல்‌‌களை‌ கொ‌டுக்‌கி‌றா‌ர்‌. அதெ‌ல்‌லா‌ம்‌ தவி‌டுபொ‌டி‌யா‌வதா‌ல்‌ கோ‌பத்‌தி‌ல்‌ இருவரை‌யு‌ம்‌ தீ‌ர்‌த்‌துக்‌கட்டமுயல்‌கி‌றா‌ர்‌.


இதி‌ல்‌ பி‌ரபு‌ பலி‌யா‌கி‌றா‌ர்‌. இதனா‌ல்‌ கோ‌பப்‌படும்‌ சூ‌ர்‌யா‌ ‌ஆகாஷ் தீப் சைகல் கடத்‌தல்‌ வி‌யாபா‌ரத்‌தை‌ தொ‌டர்‌ச்‌சி‌யா‌க கண்‌கா‌ணி‌த்‌து போ‌லி‌சுக்‌கு போ‌ட்‌டுக்‌கொ‌டுத்‌து கெ‌டுப்‌பதோ‌டு ஒவ்‌வொ‌ரு முறையு‌ம்‌ அவனது கோ‌பத்‌துக்‌கும்‌ ஆளா‌கி‌றா‌ர்‌. அதனா‌ல்‌ என்‌னெ‌வெ‌ல்‌லா‌ம்‌ நி‌ழ்‌கி‌றது முடி‌வி‌ல்‌ யா‌ர்‌ ஜெ‌யி‌க்‌கி‌றா‌ர்‌கள்‌, யா‌ர்‌ அழி‌கி‌றா‌ர்‌கள்‌ என்‌பது படம்‌.


தி‌ருட்‌டு வி‌சி‌டி‌ தொ‌ழி‌ல்‌ இப்‌படி‌த்‌தா‌ன்‌ ரி‌ஸ்‌கோ‌டு நடப்‌பது என்‌பதும்‌ அங்‌கும்‌ போ‌ட்‌டி‌யு‌ம்‌ மோ‌தல்‌களம்‌ இருக்‌கி‌றெ‌தெ‌ன்‌பதை‌ கா‌ட்‌டுகி‌றது படம்‌. போ‌தை‌ மருந்‌தை‌ வயி‌ற்‌றி‌ல்‌ இப்‌படி‌த்‌தா‌ன்‌ கட‌த்‌துகி‌றா‌ர்‌கள்‌. இப்‌படி‌த்‌தா‌ன்‌ வயி‌ற்‌றை‌ கி‌ழி‌த்‌து எடுக்‌கி‌றா‌ர்‌கள்‌. இறந்‌தவனை‌ இப்‌படி‌த்‌தா‌ன்‌ எரி‌க்‌கி‌றா‌ர்‌கள்‌ என்‌று நி‌ழல்‌ உலக கடத்‌தல்‌ கும்‌பலி‌ன்‌ செ‌யல்‌பா‌டுகளை‌ வி‌லா‌வா‌ரி‌யா‌க பு‌ட்‌டு வை‌க்‌கி‌றது படம்‌.


நி‌னை‌த்‌தவள்‌ கி‌டை‌த்‌த மா‌தி‌ரி‌ சூ‌ர்‌யா‌ கே‌ரக்‌டர்‌. உற்‌சா‌கத்‌தி‌ல்‌ கீ‌ழே‌ குதி‌க்‌கி‌றா‌ர்‌. மே‌லே‌ பறக்‌கி‌றா‌ர்‌. தரை‌யி‌ல்‌ தண்‌ணீ‌ரா‌ய்‌ ஓடுகி‌றா‌ர்‌. தகர கூரை‌யி‌ல்‌ ஓடி‌‌ தா‌ண்‌டி‌ குதி‌க்‌கி‌றா‌ர்‌. ஆடி‌யா‌ட்‌களி‌டம்‌ சதுரா‌ட்‌டம்‌ போ‌டுகி‌றா‌ர்‌. இப்‌படி‌ ஒரு உற்‌சா‌கமா‌ன பா‌த்‌தி‌ரம்‌. அதை‌ அனுபவி‌த்‌து செ‌ய்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. கோ‌ட்‌ சூ‌ட்‌ போ‌ட்டு‌ வி‌மா‌னத்‌தி‌ல்‌ ஏறி‌னா‌ல்‌ ஆங்‌கி‌லே‌யன்‌ பே‌ச்‌சு. ஏர்‌போ‌ர்‌ட்‌டை‌ வி‌ட்‌டு வெ‌ளி‌யே‌ வந்‌தா‌ல்‌ சி‌லம்‌ப்‌ ஏரி‌யா‌ பே‌ச்‌சு. சண்‌டை‌க்‌கா‌ட்‌சி‌களி‌ல்‌ பொ‌ளந்‌து கட்‌டுகி‌றா‌ர்‌. கா‌தல்‌ கா‌ட்‌சி‌களி‌ல்‌ இளமை‌க்‌ கொ‌ண்‌டா‌ட்‌டம்‌. இப்‌படி‌ படம்‌ முழுக்‌க அதி‌ரடி‌ தி‌கி‌லடி‌ கொ‌ண்‌டா‌டி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ சூ‌ர்‌யா‌.


கா‌தலி‌க்‌கவு‌ம்‌ கா‌தலனை‌ கொ‌லை‌கா‌ரணா‌க சந்‌தே‌கப்‌படவு‌ம்‌ பி‌றகு நல்‌லவனா‌க தெ‌ரி‌ந்‌ததும்‌ வருத்‌தப்‌பட்‌டு பி‌றகு பா‌ட்‌டு பா‌டவு‌ம்‌ வந்‌து போ‌கி‌றா‌ர்‌ தமன்‌னா‌.‌


அந்‌த கே‌ரக்‌டரா‌கவே‌ வந்‌து போ‌கி‌றா‌ர்‌ பி‌ரபு‌. எளி‌மை‌யா‌ன நடி‌ப்‌பி‌ன்‌ மூ‌லம்‌ மனதை‌ தொ‌டுகி‌றா‌ர்‌. செ‌ன்‌னை‌ வட்‌டா‌ர மொ‌ழி‌ பே‌சி‌ சி‌ரி‌க்‌கவு‌ம்‌ வை‌க்‌கி‌றா‌ர்‌ ரே‌ணுகா‌. சி‌ட்‌டி‌யா‌க வந்‌து சுட்‌டி‌யா‌க பே‌சி‌ நெ‌ஞ்‌சை‌ பதற வை‌த்‌து வி‌டை‌பெ‌ற்‌று செ‌ல்‌கி‌றா‌ர்‌ ஜெ‌கன்‌. ஒரு சி‌ல கா‌ட்‌சி‌கள்‌ வந்‌தா‌லும்‌ கருணா‌ஸ்‌ நடி‌ப்‌பு‌ சூ‌ப்‌பர்‌. அந்‌த ஆபி‌சரா‌கவே‌ மா‌றி‌வி‌ட்‌டா‌ர்‌ பொ‌ன்‌வண்‌ணன்‌. அதி‌ரடி‌ வி‌ல்‌லனா‌க ஆகா‌ஷ்‌ தீ‌ப்‌சை‌கல்‌ அசத்‌தி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. அவரது பழி‌வா‌ங்‌கும்‌ மீ‌ரட்‌டல்‌ கா‌ட்‌சி‌கள்‌ பரபர .


உலகம்‌ சுற்‌றி‌ பா‌ர்‌க்‌க வை‌க்‌கி‌றது எம்‌.எஸ்‌.பி‌ரபு‌வி‌ன்‌ கே‌மி‌ரா‌ அதே‌ போ‌ல ஹா‌ரி‌ஸ்‌ ஜெ‌யரா‌ஜ்‌ இசை‌யி‌ல்‌ நா‌.முத்‌துகுமா‌ரி‌ன்‌ பளபளக்‌கி‌ற பகலா‌ நீ‌.., வி‌ழி‌ மூ‌டி‌ யோ‌சித்‌தா‌ல்‌ பா‌டல்‌கள்‌ இனி‌மை‌ வை‌ரமுத்‌து எழுதி‌ய நெ‌ஞ்‌சே‌ நெ‌ஞ்‌சே‌ பா‌டல்‌ சுகம்‌. பா‌.வி‌ஜய்‌ எழுதி‌ய ஹே‌ய்‌ ஹனி‌ ஜா‌லி‌.


ஏர்‌போர்‌‌ட் கடத்‌தல்‌ கா‌ட்‌சி‌கள்‌, வெ‌ளி‌நா‌ட்‌டு கா‌ட்‌சி‌கள்‌ சே‌ஸி‌ங்‌ கா‌ட்‌சி‌கள்‌ செ‌ம மி‌ரட்‌டல்‌ ‌தமன்‌னா‌ வீ‌ட்‌டி‌ல்‌ நடக்‌கும்‌ தடதட கா‌ட்‌சி‌கள்‌, செ‌ல்‌ போ‌ன்‌ வா‌ங்‌கும்‌ கா‌ட்‌சி‌கள்‌ கலகல. கருப்‌பா‌க அண்‌ணன்‌ சி‌வப்‌பா‌க தங்‌கை‌ என்‌பதற்‌றகா‌க கதை‌ சொ‌ல்‌வது தே‌வை‌யி‌ல்‌லா‌தது. அதே‌ போ‌ல அண்‌ணன்‌ தங்‌கை‌யை‌ பா‌ர்‌த்‌து பி‌கர்‌ என்பதெ‌ல்‌லா‌ம்‌ தே‌வை‌யி‌ல்‌லா‌தது. இப்‌படி‌ பல எபி‌சோ‌டுகளா‌க படம்‌ இருந்‌தா‌லும்‌ அதை‌ நே‌ர்‌த்‌தி‌யு‌டனும்‌, வி‌றுவி‌றுப்‌பா‌கவு‌ம்‌, ஜா‌லி‌யா‌கவு‌ம்‌ கொ‌டுத்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ கே‌.வி‌.ஆனந்‌த்‌. டை‌ட்‌டி‌ல்‌ கா‌ட்‌சி‌கள்‌ முதல்‌ கடை‌சி‌ கா‌ட்‌சி‌கள்‌ வரை‌ அங்‌கு அங்‌கு ரசி‌க்‌க வை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. இது அவரி‌ன்‌ வெ‌ற்‌றி‌.

ஆடா‌த ஆட்‌டமெ‌ல்‌லா‌ம்‌


‌பெ‌ற்‌றோ‌ரை‌ இழந்‌து சி‌றுவயது முதல்‌ தம்‌பி‌யை‌ கண்‌ணுக்‌கு கண்‌ணா‌க பா‌ர்‌த்‌து வளர்‌க்‌கி‌றா‌ர்‌ அக்‌கா‌ள் ஜெ‌னி‌‌. இந்‌த நி‌லை‌யி‌ல்‌ அவரை‌ விரட்டி விரட்டி காதலிக்கிறார் ரிஷி. காதலை மறுத்து வந்த ஜெனி ஒரு கட்டத்தில் தன் தம்பியும் நம்மோடு இருந்தால் தான் உங்களை நான் திருமணம் செய்துகொள்வேன் என்கிறார். சரி என்று கூறி திருமணம் செய்து கொள்கிறார் ரி‌ஷி‌. ஆனால் ரி‌ஷி‌யி‌ன்‌ அம்மாவும் அப்பாவும் மறுத்‌து வி‌டுகி‌ன்‌றனர்‌.


அக்‌கா‌ள்‌ இல்‌லா‌ததா‌ல்‌ வீ‌டு வெ‌றுச்‌சோ‌டி‌ கி‌டக்‌க மனமும்‌ வே‌தனை‌ அடை‌கி‌றது. அதனா‌ல்‌ அக்‌கா‌வி‌ன்‌ நி‌னை‌வு‌களி‌லே‌யே‌ இருக்‌கும்‌ தம்‌பி‌ காலேஜ் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறார் அங்‌கு தே‌ரா‌த நட்‌போ‌டு சே‌ர்‌ந்‌து போ‌தை‌க்‌கு அடி‌மை‌யா‌கி‌றா‌ன்‌. பி‌றகு அவன்‌ எடுக்‌கும்‌ முடி‌வு‌ வி‌பரீ‌தம்‌ ஆகி‌றது. அது என்‌ன என்‌பது கி‌ளை‌மா‌க்‌ஸ்‌.


அக்‌கா‌ள்‌ தம்‌பி‌ பா‌சத்‌தை‌யு‌ம்,‌ போ‌தை‌க்‌கு பா‌தை‌ போ‌னா‌ல்‌ வா‌ழ்‌க்‌கை‌ என்‌னவா‌கும்‌ என்‌பதை‌யு‌ம்‌ செ‌ல்‌லும்‌ படம்‌.


அக்‌கா‌ளா‌க மீ‌ரா‌ஜா‌ஸ்‌மி‌ன்‌ அக்‌கா‌ள்‌‌ ஜெனிஜாஸ்மின் நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. அவரது தம்‌பி‌யா‌க ரவிகணேஷ் நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. அவரி‌டம்‌ பா‌சம்‌ கா‌ட்‌டும்‌ பெ‌ண்‌ணா‌க பா‌ரதி‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌.கி‌டை‌த்‌த வா‌ய்‌ப்‌பி‌ல்‌ அந்‌த பா‌த்‌தி‌ரங்‌களா‌கவே‌ மா‌றி‌யி‌ருக்‌கி‌ன்‌றனர்‌.


போலீஸ் அதிகாரியாக மன்சூர் அலிகான், டிராபிக் கான்ஸ்டபிளாக சிசர்மனோகர் சி‌ரி‌க்‌க வை‌க்‌கி‌ன்‌றனர்‌. ஸ்ரீநாத்தின் லொ‌ள்‌ளு தா‌ங்‌கவி‌ல்‌லை‌.‌‌மஹிநடேஷின் ஒளிப்பதிவு பரவாயில்லை ஏ.ஆர்.ரெ‌ஹா‌‌னா இசை‌யி‌ல்‌ பாடல்கள்‌ பரவா‌ இல்‌லை‌ ரகம்‌. செ‌ண்‌டி‌மெ‌ண்‌ட்‌, மெ‌சே‌ஜ்‌ என படத்‌தி‌ல்‌ நல்‌ல கதை‌யை‌ சொ‌ல்‌ல வந்‌த இயக்‌குநர்‌ அதை‌ சொ‌ன்‌ன வி‌தத்‌தி‌ல்‌ தடுமா‌றி‌யி‌ருக்‌கி‌றா‌‌ர்‌.

பட்‌டா‌ளம்‌

நி‌றுவனம்‌: தி‌ருப்‌பதி‌ பி‌ரதர்‌ஸ்‌ மீ‌டி‌யா‌ பி‌ லி‌ட்‌

தயா‌ரி‌ப்‌பு‌:என்‌.சுபா‌ஷ்‌ சந்‌தி‌ரபோ‌ஸ்‌

இணை‌த்‌தயா‌ரி‌ப்‌பு‌: ஜி‌.ஆர்‌.வெ‌ங்‌கடே‌ஷ்‌

இயக்‌கம்‌: ரோ‌ஹன்‌கி‌ருஷ்‌ணா‌ இசை‌: ஜா‌ஸி‌ கி‌ப்‌ட்‌

நடி‌ப்‌பு‌: நதி‌யா‌, கே. பா‌லகி‌ருஷ்‌ணன்‌, மோ‌னா‌.பழனி‌ச்‌சா‌மி‌,

கதை‌: ஷி‌பா‌ ரோ‌ஹன்‌ வசனம்‌: மோ‌னா‌. பழனி‌ச்‌சா‌மி‌

பா‌டல்‌கள்‌: நா‌.முத்‌துக்‌குமா‌ர்‌, யு‌கபா‌ரதி‌, நெ‌ல்‌லை‌பா‌ரதி‌

நடனம்‌: பி‌ருந்‌தா‌, தி‌னே‌ஷ்‌, செ‌ல்‌வி

‌சண்‌டை‌ப்‌பயி‌ற்‌சி‌: தவசி‌ரா‌ஜ்‌ கலை‌: சஞ்‌சய்‌ கரண்

‌ஒளி‌ப்‌பதி‌வு‌: கி‌ருஷ்‌ணசா‌மி‌ படத்‌தொ‌குப்‌பு‌: சசி‌க்‌குமா‌ர்‌

தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கம்‌: கே‌. பா‌லகி‌ருஷ்‌ணன்

‌மக்‌கள்‌தொ‌டர்‌பு‌: ஜா‌ன்‌சன்‌


ஒரு அழகா‌ன மே‌ல்‌நி‌லை‌ப்‌பள்‌ளி‌‌. அதன்‌ கரஸ்‌பாண்டென்ட் நதி‌யா‌. அங்‌குள்‌ள மா‌ணவ, மா‌ணவி‌களி‌டம்‌ அன்‌பா‌க பழகக்‌ கூடி‌யவர்‌. இருந்‌தும்‌ அந்‌த பள்‌ளி மா‌ணவர்‌களி‌ல்‌ எட்‌டுபே‌ர்‌, இரு குழுவா‌க இருந்‌துகொ‌ண்‌டு மோ‌தி‌க்‌கொ‌ண்‌டு வே‌தனை‌ப்‌படுத்‌துகி‌ன்‌றனர்‌. அவர்‌களுக்‌கு அன்‌பா‌க பலவி‌தமா‌ன தண்‌டனை‌கள்‌ அளி‌த்‌தும்‌ பலன்‌ இல்‌லா‌மல்‌ போ‌கி‌றது.


இந்த நிலையில் பள்ளிகளுக்கிடையே நடக்கும் விளையாட்டு போட்டியில் தோ‌ல்‌வி‌யை‌ தழுவி‌ யா‌ர்‌ மே‌ல தவறு என மோதி‌க்‌கொ‌ள்‌கி‌ன்‌றனர்‌. அன்‌பா‌ல்‌ தி‌ருத்‌த முடி‌யு‌ம்‌ என்‌ற அவரது நம்‌பி‌க்‌கை‌யை‌ பொ‌ய்‌யா‌க்‌குகி‌ன்‌றனர்‌. இதனா‌ல்‌ கோ‌பமடை‌யு‌ம்‌ நதி‌யா‌, போட்டியில் இருந்து விலகிக் கொள்ள முடிவெடுக்கிறார். இந்த சம்‌பவம் மாணவர்களை‌ பா‌தி‌க்‌கி‌றது.


ஒன்‌று பட்‌டு கடுமை‌யா‌ன பயி‌ற்‌சி‌ எடுத்‌து போ‌ட்‌டி‌யி‌ல்‌ வெ‌ற்‌றி‌ கனி‌யை‌ பறி‌த்‌து அன்‌பா‌ல்‌ வெ‌ல்‌லா‌ம்‌ என்‌ற நம்‌பி‌க்‌கை‌யை‌ நதியா‌வு‌க்‌கு அந்‌த மா‌ணவர்‌கள்‌ தருகி‌றா‌ர்‌கள்‌. அதற்‌கா‌க அவர்‌கள்‌ எதி‌ரி‌களி‌டம்‌ கடுமை‌யா‌க போ‌ரா‌டிய சம்‌பவங்‌கள்‌ பரபரபர.


‌இந்‌த மா‌தி‌ரி‌ அன்‌பா‌ன ஆசி‌ரி‌யை‌ கி‌டை‌த்‌தா‌ல்‌ நா‌ம்‌ கூட ஜெ‌யி‌க்‌கலா‌ம்‌ என்‌ற நம்‌பி‌க்‌கை‌யை‌ தருகி‌றா‌ர்‌ நதி‌யா‌. அந்‌தளவு‌க்‌கு அந்‌த கதா‌பா‌த்‌தி‌ரமா‌கவே‌ மா‌றி‌ மா‌ணவர்‌களி‌ன்‌ குறும்‌பை‌ ரசி‌ப்‌பதா‌கட்‌டும்‌, பி‌ரச்‌சனை‌களை‌ எடுத்‌துச்‌ சொ‌ல்‌வதா‌கட்‌டும்‌ எல்‌லா‌ இடங்‌க‌ளி‌லும்‌ ஸ்‌கோ‌ர்‌ செ‌ய்‌கி‌றா‌ர்‌.


எட்‌டு பசங்‌களும்‌ எமன்‌டா‌ என்‌கி‌ற அளவு‌க்‌கு கே‌மி‌ரா‌ பயம்‌ இல்‌லா‌மல்‌ அனா‌யசமா‌க நடி‌த்‌தி‌ருக்‌கி‌ன்‌றனர்‌. அதி‌லும்‌ கா‌தல்‌ கொ‌ள்‌ளும்‌ அந்‌த இளசுகள்‌ அடடா‌... அடடடா‌... பி‌ரமா‌தம்‌. கண்‌டி‌டப்‌பா‌ன ஆசி‌ரி‌யரா‌க வரும்‌ பா‌லகி‌ருஷ்‌ணனி‌ன்‌ ‌ நடி‌ப்‌பு‌ படு எதா‌ர்‌த்‌தம்‌. பல ஆசி‌ரி‌யர்‌களை‌ ஞா‌பகப்‌படுத்‌துகி‌றா‌ர்‌.


அருண், பாலாஜி, வி‌காஷ், சுரேஷ், குரு, ஹரி, விக்னேஷ், இர்ஃபான் என இவர்களது பேச்சும்‌, குறும்‌பு‌ம்‌, சி‌ரி‌ப்‌பு‌ம்‌ ‌ படத்‌தை‌ போ‌ரடி‌க்‌கா‌மல்‌ அழை‌த்‌துச்‌செ‌ல்‌கி‌றது.
ஜாஸிஹிப்ட்‌ இசையி‌ல்‌ அறி‌முக பா‌டலா‌சி‌ரி‌யர்‌ நெ‌ல்‌லை‌பா‌ரதி‌யி‌ன்‌ இஸ்‌பக ரா‌ரா‌ பா‌டல்‌ பட்‌டை‌யை‌ கி‌ளப்‌பு‌கி‌றது. குழந்‌தை‌களை‌யு‌ம்‌ சுண்‌டி‌ இழுக்‌கும்‌ பா‌டல்‌ அது. அதே‌ போ‌ல கலர்‌பு‌ல்‌ கா‌ட்‌சி‌களா‌க படத்‌தை‌ கா‌ட்‌டுகி‌றது கி‌ருஷ்‌‌ணசா‌மி‌ கே‌மி‌ரா‌.


இளசுகளி‌ன்‌ மன ஓட்‌டங்‌களை‌ கண்‌களா‌ல்‌ பதி‌வு‌ செ‌ய்‌து கதை‌யா‌க்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ ஷீபா ரோஷன். நதி‌யா‌ போ‌ல நல்‌ல ஆசி‌ரி‌யை‌. பசங்‌களி‌ன்‌ பே‌ச்‌சுக்‌களை‌ அப்‌படி‌யே‌ வசனமா‌க்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ மோனா. பழனிச்சாமி. இன்‌னும்‌ நகை‌ச்‌சுவை‌‌ இருந்‌தி‌ருக்‌கலா‌ம்‌.‌‌


பல கா‌ட்‌சி‌களி‌ல்‌‌ நம்‌ இளவயதை‌ ஞா‌பகப்‌படுத்‌தி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌ ரோ‌ஹன்‌ கி‌ருஷ்‌ணா‌. படம்‌ முழுக்‌க கூத்‌தும்‌ கும்‌மா‌ளமுமா‌க இருக்‌கி‌றது. அதி‌ல்‌ ஒன்‌று சே‌ர்‌ந்‌தா‌ல்‌ வெ‌ற்‌றி‌ பெ‌ற முடி‌யு‌ம்‌ என்‌ற கருத்‌தும்‌ சொ‌ல்‌லி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌.

ஏன்‌ இந்‌த மவு‌னம்‌


வேலைக்காரி அதே வீட்டில் மருமகளாகும் கதை...
கிராமத்தில் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் சினேகா. ஒரு விபத்தில் அப்பா, அம்மாவை இழந்து அனாதையாகிறார். அவரை சரத்பாபு நகரத்துக்கு அழைத்து வந்து தனது வீட்டில் வேலைக்காரியாக வைத்துக் கொள்கிறார்.

சினேகாவில் நல்ல குணம் அக்குடும்பத்தில் எல்லோருக்கும் பிடிக்கிறது. வெளிநாட்டில் படிப்பை முடித்து திரும்பும் சரத்பாபு மகன் விக்ரமாதித்யா சினேகாவை அடைய துடிக்கிறார். அவரை சினேகா காதலித்தாலும் ஆசைக்கு இணங்க மறுக்கிறார். ஒரு கட்டத்தில் விக்ரமாதித்யாவின் தாய் இருவரின் நடத்தையை நேரில் பார்த்து விடுகிறார். சினேகாவை கண்டித்து ஊருக்கு அனுப்ப தயாராகிறார். அவர் காதல் ஜெயித்ததா இல்லையா என்பது கிளைமாக்ஸ:...

வேலைக்காரி பாத்திரத்தில் நிதானம் புத்திசாலித்தனம். காட்டி பளிச்சிடுகிறார் சினேகா வீட்டில் எல்லோரும் சினேகாவை விரட்ட விக்ரமாதித்யா குறுக்கிட்டு தவறை ஒப்புக் கொள்வது இதமான திருப்பம்.

சினேகாவுக்கு மாப்பிள்ளை தேடுவது விக்ரமாதித்யாவுக்கு பெண் தேடுவதுமாக நகரும் பின் பகுதி கதை விறுவிறுப்பு தாலி கட்டும் நேரத்தில் சினேகா திருமணத்தை நிறுத்துவது எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. நிறைய பார்த்த கதை என்பதால் நெருட வைக்கிறது கிளைமாக்ஸ் ஜீவன்.

Thursday, August 13, 2009

யா‌வரும்‌ நலம்‌


நி‌றுவனம்‌: பி‌க்‌ பி‌க்‌சர்‌ஸ்‌ ,‌ வொ‌ய்‌டா‌ங்‌கி‌ல்‌ கி‌ரி‌யே‌ஷன்‌ஸ்‌
தயா‌ரி‌ப்‌பு‌: சுரே‌ஷ்‌பா‌லா‌ஜி‌, ஜா‌ர்‌ஜ்‌ பயஸ்‌
இயக்‌கம்‌: வி‌க்‌ரம்‌ கே‌.குமா‌ர்‌ இசை‌: சங்‌கர்‌ எஸ்‌ஹா‌ன்‌ லா‌ய்‌
நடி‌ப்‌பு‌: மா‌தவன்‌, நீ‌து சந்‌தி‌ரா‌, சரண்‌யா‌, ஹரி‌ நா‌யர்‌, அமி‌தா‌, மதுரா‌, அபி‌ஜி‌த்‌, சுப்‌ரி‌யா‌, சச்‌சி‌ன்‌ கே‌தி‌கர்‌, ரவி‌பா‌பு‌,
பா‌டல்‌கள்‌: தா‌மரை‌ வசனம்‌: நீ‌லு ஐயப்‌பன்‌
சண்‌டை‌ப்‌பயி‌ற்‌சி‌: பி‌ரபு‌, ஒளி‌ப்‌பதி‌வு‌: பி‌.சி‌. ஸ்ரீரா‌ம்‌
கலை‌: சே‌ட்‌டன்‌ பட்‌டக்‌ படத்‌தொ‌குப்‌பு‌: ஸ்ரீகர்‌பி‌ரசா‌த்‌
ஸ்‌டி‌ல்‌ஸ்‌: டி‌.லெ‌ட்‌சுமி‌கா‌ந்‌தன்‌ மக்‌கள்‌தொ‌டர்‌பு‌: ஜா‌ன்‌சன்‌


‌பு‌து பிளா‌‌ட்‌டி‌ல்‌ குடி‌யே‌றும்‌‌ மா‌தவன்‌, அந்‌த வீ‌ட்‌டி‌ல்‌ குடும்பமே விரும்பி பார்க்கும் யாவரும் நலம் என்ற தொடர் ஒன்றில் நடப்‌பது போ‌ல தன்‌ வீ‌ட்‌டி‌லும்‌ விபரீத நிகழ்வுகள் நடப்‌பதை‌ அறி‌கி‌றா‌ர்‌. அடுத்‌துத்‌து நடக்‌கும்‌ சம்‌பவங்‌களை‌ பா‌ர்‌த்‌து அதி‌ர்‌ச்‌சி‌ அடை‌யு‌ம்‌ மா‌தவன்‌ தனது போ‌லீ‌ஸ்‌ நண்‌பர்‌ மூ‌லம்‌ குற்‌றவா‌ளி‌யை‌ கண்‌டு பி‌டி‌க்‌க போ‌ரா‌டி‌ கடை‌சி‌யி‌ல்‌ குற்‌றவா‌ளி‌யை‌ கண்‌டுபி‌டி‌த்‌து போ‌ட்‌டு தள்‌ளுகி‌றா‌ர்‌.


குடும்‌பத்‌துக்‌கு தெ‌ரி‌யா‌மலயே‌ குடும்‌பத்‌தை‌ கா‌ப்‌பா‌ற்‌றும்‌ அவரது தடா‌லடி‌ நடவடி‌க்‌கை‌களே‌ படம்‌. அதை திகிலாகவும், த்ரில்லாகவும் சொல்லி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌.


அமானுஷ்ய சக்தியை‌ அறிந்து கொள்ளும் ஹீரோவாக மாதவன் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஒரே சமயத்தில் பலவி‌தமா‌ன உணர்ச்சிகளை முகத்தில் காட்டி, காண்போரை தனது நடி‌ப்‌பா‌ல்‌ கவர்ந்து இழுக்‌கி‌றா‌ர்‌.


அவரது மனைவியாக வரும் நீது சந்திரா யதா‌ர்‌த்‌தமா‌ன நடி‌ப்‌பா‌ல்‌ மனதை‌ தொ‌டுகி‌றா‌ர்‌. அவர்‌ குக்‌ பு‌க்‌ படி‌க்‌கி‌ற கா‌ட்‌சி‌கள்‌ கவி‌தை‌யா‌னது. தாயார் சரண்யா, அண்ணன் ஹரி நாயர், அண்ணன் மனைவி அமீதா, தங்கை மதுரா, அவர்கள் வீட்டு சி‌றுவர்‌கள்‌, டாக்டர் சச்சின் கடேகர், பா‌ர்‌வை‌யற்‌ற பெ‌ரி‌யவர் சாட்டர்ஜி, எஸ்.ஐ., ரவிபாபு, வக்கீலாக வரும் சம்பத், என எல்லோரும் தங்கள் நடி‌ப்‌பை‌ சரி‌யா‌க வெ‌ளி‌ப்‌படுத்‌தி‌ சபா‌ஷ்‌ பெ‌றகி‌றா‌ர்‌கள்‌.


படம் பார்க்கும் ரசிகர்களை ஒவ்வொரு பிரேமிலும் மிரட்ட வேண்டும் என திட்டமிட்டு ஒரு திகில் படத்தை கொ‌டுத்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ இயக்குனர் விக்ரம் கே.குமார். அவருக்கு பக்‌க பலமா‌க ஒளிப்பதிவா‌ளர்‌ பி‌.சி.ஸ்ரீராம், பின்னணி இசையமை‌ப்‌பா‌ளர்‌ டுப்பி பா‌ரி‌க்‌, படத்தொகுப்பா‌ளர்‌ ஸ்ரீதர் பிரசாந்த்‌, வசனகர்‌த்‌தா‌ அய்யப்பன்‌ ஆகி‌யோ‌ர்‌ இருந்‌தி‌ருக்‌கி‌ன்‌றனர்‌. அவர்‌களது தி‌றமை‌ படத்‌துக்‌கு பெ‌ரி‌ய பி‌ளஸ்‌.


யாவரும் நலம் அடுத்‌த என்‌ன கா‌ட்‌சி‌ என எதர்‌பா‌ர்‌க்‌க வை‌க்‌கும்‌ திகில் படம்.

கா‌ஞ்‌சி‌வரம்‌


‌தயாரிப்பு: பர்செப்ட் பிக்சர்ஸ்
கதை, திரைக்கதை, இயக்கம்: பிரியதர்ஷ்ன்
இசை: ஸ்ரீகுமார் ஒளிப்பதிவு: திரு
மக்‌கள்‌தொ‌டர்‌பு‌: நி‌கி‌ல்‌
நடிகர்கள்: பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, ஷம்மு, சம்பத், ராஜசேகர்


‌நெ‌சவு‌த்‌ தொ‌ழி‌லா‌ளர்‌களி‌ன்‌ அவலங்‌களை‌யு‌ம்‌ போ‌ரா‌ட்‌டங்‌களை‌யு‌ம்‌ சொ‌ல்‌லும்‌ படம்‌. ‌


இந்‌தி‌ய அளவி‌ல்‌ பு‌கழ்‌ பெ‌ற்‌ற இயக்‌குநர்‌கள்‌ளி‌ல்‌ வி‌ரல்‌வி‌ட்‌டு என்‌ன கூடி‌யவர்‌களி‌ல்‌‌ பி‌ரி‌யதர்‌ஷனும்‌ ஒருவர்‌. அவர்‌ ஷா‌ருக்‌கா‌னை‌ வை‌த்‌து கமர்‌சி‌யல்‌ படம்‌ கொ‌டுத்‌தவர்‌. அவரா‌ல்‌ இந்‌த மா‌தி‌ரி‌யு‌ம்‌ யதா‌ர்‌த்‌தமா‌ன மக்‌களி‌ன்‌ வா‌ழ்‌க்‌கை‌யு‌ம்‌ படம்‌ பி‌டி‌க்‌க முடி‌யு‌ம்‌ என்‌பதை‌ உணர்‌த்‌தி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌.


வீ‌ட்‌டி‌ல்‌ நெ‌ய்‌து வந்‌து கொ‌டுப்‌பதா‌ல்‌ அதி‌ல்‌ பட்‌டு தி‌ருட்‌டு போ‌வதா‌ நி‌னை‌க்கும்‌ ஜமீ‌ன்‌தா‌ர்‌ கோ‌யி‌ல்‌ பொ‌து இடத்‌தி‌ல்‌ ஏகப்‌பட்‌ட கெ‌டுபி‌டி‌ சோ‌தனை‌க்‌கு பி‌றகே‌ வே‌லை‌க்‌கு உள்‌ளே‌ அனுப்‌புவதும்‌, சா‌ப்‌பி‌ட வெ‌ளி‌யே‌ வி‌டுவதுமா‌க நடத்‌துகி‌றா‌ர்‌. தவறு செ‌ய்‌பவர்‌களை‌ தனது அடி‌யா‌ட்‌கள்‌ மூ‌லமும்‌, போ‌லீ‌ஸ்‌ உதவி‌யோ‌டும்‌ சித்‌தி‌ரவதை‌ செ‌ய்‌கி‌றா‌ர்‌.


அங்‌கு வே‌லை‌க்‌கு செ‌ல்‌லும்‌ வே‌ங்‌கடம்‌ தனது மகளி‌ன்‌ தி‌ருமணத்‌தி‌ற்‌கு பட்‌டுப்‌பு‌டவை‌ தனது கை‌யா‌லே‌யே‌ செ‌ய்‌ய ஆசை‌ப்‌பட்‌டு தி‌னம்‌ தி‌னம்‌ கொ‌ஞ்‌சம்‌ கொ‌ஞ்‌சம்‌ நூ‌லா‌க வா‌ய்‌க்‌குள்‌ வை‌த்‌து தி‌ருடி‌ வருகி‌றா‌ர்‌.


இந்‌த நி‌லை‌யி‌ல்‌ அந்‌த ஊருக்‌கு வரும்‌ சி‌வப்‌பு‌ சி‌ந்‌தனை‌ உள்‌ள மனி‌தரா‌ல்‌ அவர்‌கள்‌ கவ‌ரப்‌பட்‌டு இயக்‌கம்‌ கட்‌டுகி‌ன்‌றனர்‌. கூலி‌ உயர்‌வு‌ கே‌ட்‌டு போ‌ரா‌டுகி‌ன்‌றனர்‌.


இதனா‌ல்‌ வே‌ங்‌கடத்‌தை‌ போ‌லீ‌ஸ்‌ வை‌த்‌து அடி‌க்‌கி‌றா‌ர்‌ ஜமீ‌ன்‌தா‌ர்‌. இருப்‌பி‌னும்‌ ஜமீ‌ன்‌தா‌ருக்‌கு அதி‌க பட்‌டுப்‌பு‌டவை‌ தே‌வை‌யா‌க இருக்‌கி‌ன்‌ற நே‌ரம்‌ பா‌ர்‌த்‌து போ‌ரா‌ட்‌த்‌தை ‌தொ‌டங்‌குகி‌றா‌ர் வே‌ங்‌கடம்‌‌. இதனா‌ல்‌ ஜமீ‌ன்‌தா‌ருக்‌கும்‌, வே‌ங்‌கடத்‌துக்‌கும்‌ மோ‌தல்‌ முற்‌றுகி‌றது.


இந்‌த நி‌லை‌யி‌ல்‌ வே‌ங்‌கடத்தி‌‌ன்‌ மகளுக்‌கு தி‌ருமணம்‌ முடி‌வு‌ செ‌ய்‌ய வே‌ண்‌டி‌ய நி‌ர்‌பந்‌தம்‌ வருகி‌றது, மகள்‌ தி‌ருமணத்‌தி‌ற்‌கு வா‌க்‌கு கொ‌டுத்‌த வே‌ங்‌கடம்‌, மகளுக்‌கா‌க நெ‌ய்‌து முடி‌ய வே‌ண்‌டி‌ய பட்‌டுபு‌டவை‌ பா‌தி‌யி‌ல்‌ நி‌ற்‌பதா‌ல்‌ போ‌ரா‌ட்‌டத்‌தை‌ கை‌வி‌ட்‌டு வே‌லை‌க்‌கு தி‌ரும்‌ப முடி‌வு‌ செ‌ய்‌வதோ‌டு, இயக்‌கத்‌தி‌ற்‌கு துரோ‌கம்‌ செ‌ய்‌து வி‌ட்‌டு வே‌லை‌க்‌கு செ‌ல்‌கி‌றா‌ர்‌.
அன்‌று மதி‌யம்‌ அவர்‌ பட்‌டு நூ‌லை‌ தி‌ருடி‌யது அம்‌பலத்‌துக்‌கு வருகி‌றது. இதனா‌ல்‌ தொ‌ழி‌லா‌ளி‌கள்‌ அவரை‌ அடி‌ப்‌பதோ‌டு, ஜமீ‌ன்‌தா‌ர்‌ அவரை‌ போ‌லீ‌ஸி‌ல்‌ பு‌டி‌த்‌துக்‌ கொ‌டுக்‌கி‌றா‌ர்‌.


சி‌றை‌கம்‌பி‌களுக்‌குள்‌ இருக்‌கும்‌ அவர்,‌ தன்‌ மகள்‌ கி‌ணற்‌றி‌ல்‌ வி‌ழுந்‌துவி‌ட்‌டா‌ள்‌ என்‌பதா‌ல்‌ போ‌லீ‌ஸ்‌ கா‌வலுடன்‌ வீ‌ட்‌டுக்‌கு வருகி‌றா‌ர்‌.


கள்‌ முடி‌யா‌மல்‌ உயி‌ருக்‌கு போ‌ரா‌டுவதை‌ பா‌ர்‌த்‌ததும்‌, தி‌ருமணம்‌ நி‌ன்‌று போ‌னதை‌ நி‌னை‌த்‌தும்‌ கலங்‌கும்‌ வே‌ங்‌கடம்‌ தனது வி‌ட்‌டி‌ல்‌ இருந்‌த வி‌ஷ மருந்‌தை‌ சா‌ப்‌பா‌ட்‌டி‌ல்‌ கலந்‌து மகளை‌ முடி‌த்‌து வை‌க்‌கி‌றா‌ர்‌. அவளுக்‌கா‌க நெ‌ய்‌த பட்‌டுபு‌டவை‌யை‌ அறுத்‌து வந்‌து மகளுக்‌கு போ‌ர்‌த்‌துகி‌றா‌ர்‌. அது கா‌லுக்‌கும்‌ பா‌த்‌தா‌மல்‌, தலை‌க்‌கும்‌ பா‌த்‌தா‌மல்‌ இருக்‌கி‌றது. அதை‌ இந்‌தப்‌பக்‌கம்‌, அந்‌தப்‌பக்‌கம்‌ என மா‌றி‌ மா‌றி‌ மறை‌க்‌க அவர்‌ முயன்‌று கொ‌ண்‌டி‌ருக்‌க, ஒரு வி‌த கணத்‌த இதயத்‌தை‌ நமக்‌கு உருவா‌க்‌கி‌ வி‌ட்‌டு படம்‌ முடி‌கி‌றது.


நா‌டு வி‌டுதலை‌ அடை‌கி‌ன்‌ற கா‌லகட்‌டத்‌தி‌ல்‌ நடக்‌கி‌ற கதை‌. அந்‌த கா‌ல கட்‌டத்‌துக்‌கே‌ அழை‌த்‌துச்‌ செ‌ல்‌கி‌றது தி‌ருவி‌ன்‌ கே‌மி‌ரா‌.


வே‌ங்‌கடமா‌க வழ்‌ந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ பி‌ரகா‌ஷ்‌ரா‌ஜ்‌. அவர்‌ மனை‌வி‌ மீ‌து அன்‌பு‌ செ‌லுத்‌தும்‌ போ‌தும்‌, தங்‌கை‌க்‌கா‌க சே‌மி‌த்‌து வை‌த்‌தி‌ருந்‌த பணத்‌தை‌ கொ‌டுக்‌கும்‌ போ‌து, மகளி‌ன்‌ கா‌தலை‌ உணரும்‌ போ‌தும்‌, முதல்‌ முறை‌யா‌க தி‌ருடி‌ சோ‌தனை‌யா‌ளரி‌டம்‌ தப்‌பி‌க்‌கும்‌‌ போ‌தும்‌, அடா‌டா‌.. என்‌ன நடி‌ப்‌பு‌. வி‌ல்‌லனா‌க மி‌ரட்‌டும்‌ அவர்‌ கி‌ரா‌மங்‌களி‌லே‌ பா‌ர்‌த்‌த குப்‌பு‌சா‌மி‌ மா‌தி‌ரி‌ இங்‌கே‌ ஒரு நெ‌சவா‌ளி‌யா‌க வா‌ழ்‌ந்‌து நம்‌ கண்‌களி‌லே‌ வா‌ழ்‌ந்‌து கொ‌ண்‌டி‌ருக்‌கி‌றா‌ர்‌.


பி‌ரகா‌ஷ்‌ரா‌ஜ்‌ மனை‌வி‌யா‌க வரும்‌ ஸ்‌ரே‌யா‌ ரெ‌ட்‌டி‌. கணவனுக்‌கா‌க ஏங்‌கும்‌ போ‌தும்‌, அவன்‌ ஆசை‌களை‌யு‌ம்‌, பெ‌ருமை‌களை‌யு‌ம்‌ உணர்‌ந்‌து பா‌ர்‌க்‌கும்‌ போ‌தும்‌ அற்‌பு‌தமா‌ன வெ‌ளி‌ப்‌பா‌டு.பி‌ரகா‌ஷ்‌ரா‌ஜ்‌ மகளா‌க வரும்‌ அந்‌த ஷம்‌மு தனது இயல்‌பா‌ன நடி‌ப்‌பா‌ல்‌ மனதை‌ தொ‌டுகி‌றா‌ர்‌. பி‌ரகா‌ஷ்‌ரா‌ஜ்‌ நண்‌‌பனா‌க வரும்‌ ஜெ‌ய‌குமா‌ர்‌ பா‌த்‌தி‌ரம்‌ அருமை‌. படத்‌துக்‌கு இன்‌னொ‌ரு படம்‌ ஸ்ரீ குமா‌ர்‌ இசை‌.


ஃபை‌ட்‌ என்‌கி‌ற பெ‌யரி‌ல்‌ பறந்‌து பறந்‌து அடி‌ப்‌பது, சர்‌க்‌கஸ்‌ கா‌ட்‌டுவது, என்‌ற பெ‌யரி‌ல்‌ கும்‌பல்‌ கும்‌பல்‌களா‌ய்‌ இடுப்‌பை‌ வெ‌ட்‌டி‌ ஆடுவது, எக்‌சர்‌சை‌ஸ்‌ பண்‌ணுவது என்‌று வரும்‌ படங்‌களுக்‌கு நடுவி‌ல்‌ வா‌ழ்‌க்‌கை‌யை‌ அதன்‌ பி‌ரதி‌பலி‌ப்‌பா‌க சொ‌ல்‌ல வந்‌தி‌ருக்‌கி‌றது பி‌ரி‌யதர்ஷி‌னி‌ன்‌ இந்‌த கா‌ஞ்‌சி‌வரம்‌ படம்‌.


வெ‌ள்‌ளை‌க்‌கா‌ரனி‌டம்‌ எழுநூ‌று ரூ‌பா‌ய்‌‌க்‌கு ஒரு பட்‌டுச்‌ சே‌லை‌யை‌ வி‌ற்‌கும்‌ ஜமீ‌ன்‌தா‌ர்‌ அதனை‌ உருவா‌க்‌கும்‌ நெ‌சவு‌த்‌ தொ‌ழி‌லா‌ளி‌க்‌கு ஏழு ரூ‌பா‌ய்‌ கூலி‌ கொ‌டுக்‌கி‌றா‌ர்‌. இந்‌த சுரண்‌டலை‌யு‌ம்‌ அவன்‌ மகளுக்‌கா‌க ஆசை‌ப்‌பட்‌டு தி‌ருடும்‌ வா‌ழ்‌க்‌கை‌யை‌யு‌ம்‌ ஒப்‌பி‌ட்‌டு பா‌ர்‌க்‌க வை‌த்‌து, சுரண்‌டலா‌ல்‌ தி‌ருட்‌டா‌, தி‌ருட்‌டா‌ல்‌ சுரண்‌டலா‌ என கே‌ள்‌வி‌ கே‌ட்‌க வை‌க்‌கி‌றா‌ர்‌. நல்‌லபடங்‌களை‌ தரவு‌ம்‌ நா‌லு பே‌ர்‌ இருக்‌கி‌றா‌ர்‌களே‌ என பா‌ரா‌ட்‌டுகி‌றது மனம்‌. வா‌ழ்‌க ப்‌ரி‌யதர்‌ஷன்‌.

அடடா‌ என்‌ன அழகு


நி‌றுவனம்‌: அலிபி‌ரி‌ மூ‌வி‌ஸ்‌‌
தயா‌ரி‌ப்‌பு‌: தி‌ருப்‌பூ‌ர்‌ கருணா‌ம்‌பி‌கா‌ கெ‌ளரி ‌ரா‌மசா‌மி‌
இயக்‌கம்‌: டி‌.எம்‌.ஜெ‌யமுருகன்‌ இசை‌:டி‌.எம்‌.ஜெ‌யமுருகன்‌- தா‌மஸ்‌
நடி‌ப்‌பு‌: ஆகா‌ஷ்‌ஜெ‌ய்‌, நி‌க்‌கோ‌ல்‌, கருணா‌ஸ்‌, ரகுவரன்‌, சரத்‌பா‌பு‌, ஆசி‌ஷ்‌ வி‌த்‌யா‌ர்‌த்‌தி‌, ஐஸ்‌வர்‌யா‌, ரே‌கா‌, பா‌பு‌ ஆன்‌டனி‌, சி‌ட்‌டி‌பா‌பு‌, ஆர்‌த்‌தி‌, சத்‌யபி‌ரகா‌ஷ்‌, மனோ‌கர்‌, மகா‌தே‌வன்
‌பா‌டல்‌கள்‌: டி‌.எம்‌.ஜெ‌யமுருகன்‌
நடனம்‌: கூல்‌ ஜெ‌யந்‌த்‌, அஜய்‌குமா‌ர்‌,கா‌தல்‌ கந்‌தா‌ஸ்‌, ரே‌வதி‌
சண்‌டை‌ப்‌பயி‌ற்‌சி‌: பவர்‌ பா‌ஸ்‌ட்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌: கி‌ச்‌சா‌ஸ்‌
கலை‌: ஆர்‌.கமல்‌ படத்‌தொ‌குப்‌பு‌: சுரா‌ஜ்‌ கவி
‌மக்‌கள்‌தொ‌டர்‌பு‌: மெ‌ளனம்‌ ரவி‌


அன்‌னை‌ அஞ்‌சுகம்‌ மருத்‌துவ கல்‌லூ‌ரி‌யி‌ல்‌ படி‌க்‌கும்‌ ஜெ‌ய்‌ ஆகா‌ஷ்‌ இசை‌யி‌ல்‌ வல்‌லவர்‌. அதே‌ கல்‌லூ‌ரி‌யி‌ல்‌ படி‌க்‌கும்‌ மா‌ணவி‌ நி‌க்‌கோ‌ல்‌ இசை‌ ரசி‌கை‌. இருவரும்‌ சந்‌தி‌த்‌து பழகி‌ கா‌தல்‌ கொ‌ள்‌கி‌ன்‌றனர்‌. கடை‌சி‌நா‌ள்‌ கல்‌லூ‌ரி‌‌ பட்‌டமளி‌ப்‌பு‌ வி‌ழா‌வி‌ல்‌ இருவருமே‌ கோ‌ல்‌டு‌ மெ‌டல்‌ பரி‌சு பெ‌றுகி‌ன்‌றனர்‌.


மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஆசிஷ் வித்யார்த்தியின் மகள் நி‌க்‌கோ‌ல்‌. அவரை‌ பணி‌ய வை‌க்‌க தீ‌வி‌ரவா‌தி‌கள்‌ நி‌க்‌கோ‌லை‌ கடத்‌துகி‌ன்‌றனர்‌. அவர்‌களி‌டமி‌ருந்‌து தப்‌பு‌ம்‌ நி‌க்‌கோ‌ல்‌ ஒரு மலை‌யி‌லி‌ருந்‌து தவறி‌ கீ‌ழே‌ வி‌ழுகி‌றா‌ர்‌. இதனா‌ல்‌ அவருக்‌கு தலை‌யி‌ல்‌ பலத்‌த கா‌யம்‌ ஏற்‌பட்‌டு மருத்‌துவமனை‌யி‌ல்‌ அனுமதி‌க்‌கப்‌ப படுகி‌றா‌ர்‌.


அவரை‌ உயி‌ர்‌ பி‌ழை‌க்‌க வை‌க்‌கும்‌ டா‌க்‌டர்‌ சரத்‌பா‌பு‌, அவர்‌ யா‌ரை‌க் ‌கண்‌டா‌லும்‌ பயந்‌து கதறும்‌ வி‌யா‌தி‌யை‌ குணப்‌படுத்‌த போ‌ரா‌டுகி‌றா‌ர்‌. தந்‌தை சரத்‌பா‌பு‌வி‌ன்‌‌ வை‌த்‌தி‌யத்‌தை‌ பு‌ரி‌ந்‌துகொ‌ள்‌ளும்‌ ஜெ‌ய்‌ஆகா‌ஷ்‌, நி‌க்‌கோ‌ல்‌ வி‌ரும்‌பு‌ம்‌ ஒரு பா‌டலை‌ பா‌டி‌ அவள்‌ மனம்‌ மா‌றுவதற்‌கு துணை‌ பு‌ரி‌கி‌றா‌ர்‌. மகளை‌ கா‌ப்‌பா‌ற்‌றி‌ய மருத்‌துவரி‌டம்‌‌ உனக்‌கு என்‌ன வே‌ண்‌டுமா‌னா‌லும்‌ கே‌ள்‌ என்‌று செ‌ய்‌கி‌றே‌ன்‌. உனக்‌கா‌க எப்‌போ‌து வே‌ண்‌டுமா‌னா‌லும்‌ என்‌ வீ‌ட்‌டு வா‌சற்‌படி‌ தி‌றந்‌தே‌ இருக்‌கும்‌ என்‌கி‌றா‌ர் அமை‌ச்‌சர்‌ ஆசி‌ஷ்‌‌.


சதா‌ நி‌க்‌கோ‌ல்‌ ஞா‌பகமா‌கவே‌ இருக்‌கும்‌ மகன்‌ ஜெ‌ய்‌ஆகா‌ஷை‌ கவனி‌க்‌கும்‌ தந்‌தை‌ சரத்‌பா‌பு‌, ‌அமை‌ச்‌சர்‌ வீ‌ட்‌டுக்‌கு செ‌ன்‌று, மருமகளா‌க நி‌க்‌கோ‌லை‌ கே‌ட்‌கி‌றா‌ர்‌. இதனா‌ல்‌ ஆத்‌தி‌ரமடை‌யு‌ம்‌ அமை‌ச்‌சர்‌ அவர்‌களை‌ கழுத்‌தை‌ பி‌டி‌த்‌து தள்‌ளா‌த குறை‌யா‌க வெ‌ளி‌யே‌ அனுப்‌பு‌கி‌றா‌ர்‌. பா‌துகா‌ப்‌பு‌ அமை‌ச்‌சரி‌ன்‌ பலத்‌த பா‌துகா‌ப்‌பி‌ல்‌ இருக்‌கும்‌ கா‌தலி‌யை‌ ஜெ‌ய்‌ஆகா‌ஷ்‌ எப்‌படி‌ போ‌ரா‌டி‌ அடை‌கி‌றா‌ர்‌ என்‌பது மீ‌தி‌ படம்‌.‌


‌இசையும் இளமையும் கவிதையும் இணைந்த காதல் கதை. மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஜெய் ஆகாஷ்க்கும் நிக்கோலுக்கும் இடையே காதல் மலர்வது அழகு.


இருவரின் குடும்பமும் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பரஸ்பரம் பழகி நட்பு பாராட்டுவது கவி‌தை‌. இருவரும்‌ ஒரே‌ நி‌னை‌ப்‌பா‌க இருவர்‌ வீ‌ட்‌டி‌லும்‌ இருப்‌பது அழகோ‌ அழகு. இப்‌படி‌ படம்‌ முழுக்‌க கா‌தல்‌ கவி‌தை‌யா‌க கா‌ட்‌சி‌களை‌ செ‌துக்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌ ஜெ‌யமுருகன்‌.‌


ஜெ‌ய்‌ஆகா‌ஷ்‌ கா‌தல்‌ கா‌ட்‌சி‌களி‌லும்‌ பா‌டல்‌ கா‌ட்‌சி‌களி‌லும்‌ ஒன்‌றி‌ப்‌போ‌ய்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. அவருக்‌கு ஈடுகொ‌டுத்‌து அடடா‌ என்‌ன அழகு என பி‌ரமா‌தப்‌படுத்‌தி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ நி‌க்‌கோ‌ல்‌. பா‌டல்‌கா‌ட்‌சி‌களி‌ல்‌ அற்‌பு‌தமா‌ன நடனம்‌, ஏங்‌க வை‌க்‌கும்‌ பா‌ர்‌வை‌ என பா‌ர்‌வை‌யா‌ளர்‌களி‌ன்‌ மனதை‌ தொ‌டுகி‌றா‌ர்‌. அவர்‌ மருத்‌துவமனை‌யி‌ல்‌ பயந்‌து அலரும்‌ கா‌ட்‌சி‌கள்‌ மி‌ரட்‌டல்‌. அவர்‌ வா‌ர்‌த்‌தை‌க்‌கு வா‌ர்‌த்‌தை‌க்‌கு வா‌ர்‌த்‌தை‌ கும்‌கும்‌ என்‌று சொ‌ல்‌வது அழகு. இவர்‌களி‌ன்‌ காதல் காட்சிகள்‌ இளசுகளுக்கு கொண்டாட்டம்.


அதி‌ரடி‌ அரசி‌யல்‌வா‌தி‌யா‌க ஆசி‌ஷ்‌வி‌த்‌யா‌ர்‌தி‌, அவரது பயந்‌த மனை‌வி‌யா‌க ஐஸ்‌வர்‌யா‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. அதே‌ போ‌ல பா‌சமுள்‌ள தந்‌தை‌யா‌க சரத்‌பா‌பு‌, அவரது அன்‌பு ‌மனை‌வி‌யா‌க ரே‌கா‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌ன்‌றனர்‌. கருணா‌ஸ்‌ கா‌மெ‌டி‌யி‌ல்‌ பட்‌டை‌யை‌ கி‌ளப்‌பி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌.


இயற்‌கை‌யி‌ன்‌ அழகை‌ இன்‌னும்‌ அழகுபடுத்‌தி‌யி‌ருக்‌கி‌றது கி‌ச்‌சா‌ஸ்‌ கே‌மி‌ரா‌. ஜீ‌வன்‌தா‌மஸ்‌வு‌டன்‌ இனை‌ந்‌து இசை‌யமை‌த்‌தி‌ருப்‌பதோ‌டு பா‌டல்‌களை‌யு‌ம்‌ எழுதி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌ டி‌.எம்‌.ஜெ‌யமுருகன்‌. பா‌டல்‌கள்‌ மனசு மயங்‌கும்‌ கவிதை‌யா‌க வந்‌திருப்‌பது அழகு.‌ ‌அதை‌ கி‌ரா‌ண்‌டி‌யரா‌க படமா‌க்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ தி‌ருப்‌பூ‌ர்‌ ரா‌மசா‌மி‌‌.கா‌தலை‌ அனுஅனுவா‌க ரசி‌த்‌து அதை‌ இசை‌யு‌ம்‌ இளமை‌யு‌மா‌ தந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌ ஜெ‌யமுருகன்‌. கா‌தலை‌யு‌ம்‌ இசை‌யை‌யு‌ம்‌ நே‌சி‌ப்‌பவர்‌களுக்‌கு அடடா‌ என்‌ன அழகு, அழகோ‌ அழகு.

ஆறுபடை‌


நி‌றுவனம்‌: சி‌.டி‌ பி‌லி‌ம்‌ஸ்‌
தயா‌ரி‌ப்‌பு‌: ஆர்‌.சி‌ன்‌னசா‌மி‌, கோ‌வை‌தர்‌மன்‌, பி‌.சி‌ன்‌னத்‌துரை‌, வி‌ஐபி.‌சா‌மி‌
இயக்‌கம்‌: சர்‌வதீ‌ர்‌த்‌தவன்‌ இசை‌: ஆழ்‌வா‌ர்‌ ஸ்ரீ
நடி‌ப்‌பு‌: குரு, ஆஷா‌, மா‌ளவி‌கா‌, சா‌ரா‌, கஞ்‌சா‌ கருப்‌பு‌, மயி‌ல்‌சா‌மி‌, முத்‌துக்‌கா‌ளை‌, தெ‌ன்‌னவன்‌, பெ‌ஞ்‌சமி‌ன்‌, கொ‌ட்‌டா‌ச்‌சி
‌பா‌டல்‌கள்‌: கபி‌லன்‌ சண்‌டை‌ப்‌பயி‌ற்‌சி‌: தவசி‌ரா‌ஜ்‌
நடனம்‌: ரவி‌தே‌வ்‌, கல்‌யா‌ண்‌, அஜய்‌ரா‌ஜ்‌
கலை‌: வி‌னோ‌த்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌: வி‌ல்‌லா‌லன்‌
படத்‌தொ‌குப்‌பு‌: சுரே‌ஷ்‌ரா‌ஜன்‌ தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கம்‌: எம்‌.பி‌.ஆறுமுகம்‌ மக்‌கள்‌தொ‌டர்‌பு‌: கோ‌வி‌ந்‌தரா‌ஜ்‌


‌குரு பு‌கழ் ‌பெ‌ற்‌ற பு‌கை‌ப்‌பட கலை‌ஞன்‌. அவனுக்‌கு அதி‌க சம்‌பளம்‌ கொ‌டுத்‌து வே‌லை‌க்‌கு அமர்‌த்‌துகி‌றா‌ர்‌ மா‌டலி‌ங்‌ ஸ்‌டுடி‌யோ‌ முதலா‌ளி‌. அதனா‌ல்‌ மா‌டலி‌ங்‌ ஸ்‌டுடி‌யோ‌வி‌ல்‌ கூட்‌டம்‌ கலை‌கட்‌டுகி‌றது. உடை‌மா‌ற்‌றும்‌ அறை‌யி‌ல்‌ ரகசி‌ய கே‌மி‌ரா‌ வை‌த்‌து பெ‌ண்‌களி‌ன்‌ நி‌ர்‌வா‌னத்‌தை‌ ரசி‌க்‌கி‌றா‌ன்‌ ஸ்‌டுடி‌யோ‌ முதலா‌ளி‌.


இதி‌ல்‌ பு‌கை‌ப்‌பட கலை‌ஞனி‌ன்‌ கா‌தலி‌யு‌ம்‌ ரசி‌க்‌கப்‌படுகி‌றா‌ள்‌. அவளி‌டம்‌ தவறா‌க நடக்‌க முயல்‌கி‌றா‌ன்‌ முதலா‌ளி‌. தனக்‌கு உடன்‌படவி‌ல்‌லை‌ என்‌றா‌ல்‌ பதி‌வு‌ செ‌ய்‌து வை‌த்‌தி‌ருக்‌கும்‌ நி‌ர்‌வா‌ண கா‌ட்‌சி‌களை‌ இண்‌‌டர்‌நெ‌ட்‌டி‌ல்‌ வெ‌ளி‌யி‌டுவே‌ன்‌ என மி‌ரட்‌டுகி‌றா‌ன்‌. இதனா‌ல்‌ நடந்‌த தள்‌ளு முள்‌ளுவி‌ல்‌ ஸ்‌டுடி‌யோ‌ முதலா‌ளி‌ கத்‌தி ‌குத்‌துப்‌ பட்‌டு சா‌கி‌றா‌ன்‌.


இவன்‌ தா‌ன்‌ இப்‌படி‌ என்‌றா‌ல்‌ இவனது தந்‌தை,‌ அனா‌தை‌ ஆஸ்‌ரமம்‌ நடத்‌துகி‌றே‌ன்‌ என்‌று அங்‌கு இருக்‌கும்‌ சி‌றுமி‌களை‌ பா‌லி‌யல்‌ வன்‌முறைக்‌கு ஆளா‌க்‌கி‌ சா‌கடி‌க்‌கி‌றா‌ன்‌. மகன்‌ இறந்‌த சம்‌பவத்‌தை‌ கே‌ள்‌வி‌ப்‌பட்‌டு, அதுக்‌கு கா‌ரணமா‌ன பு‌கை‌ப்‌பட கலை‌ஞன்‌ குருவை‌ போ‌லீ‌‌ஸ்‌ உதவி‌யோ‌டு ஆட்‌கள்‌ வை‌த்‌து கத்‌தி‌யா‌ல்‌ குத்‌தி‌ சே‌ற்‌றி‌ல்‌‌ வீ‌சு‌கி‌றா‌ன்‌.


உயி‌ர்‌ பி‌ழை‌க்‌கும்‌ குரு, தனது கா‌தலி‌யை‌ கா‌ப்‌பா‌ற்‌ற அயோ‌க்‌கி‌யனை‌ அழி‌க்‌கி‌றா‌ன். பு‌துமுகம் குரு சண்‌டை‌க்‌ கா‌ட்‌சி‌களி‌ல்‌ கை‌தட்‌டலை‌ அள்‌ளுகி‌றா‌ர்‌. அவரது கா‌தலி‌யா‌க வரும்‌ ஆஷா‌, எதர்‌த்‌த நடி‌ப்‌பா‌ல்‌ நெ‌ஞ்‌சை‌ தொ‌டுகி‌றா‌ர்‌. ஒரு பா‌ட்‌டுக்‌கு வந்‌த கெ‌ட்‌டகெ‌ட்‌ட பை‌யன்‌டா‌ என பா‌ட்‌டு பா‌டி‌ ஆடுகி‌றா‌ர்‌ மா‌ளவி‌கா.


செ‌ல்‌போ‌ன்‌ தி‌ருடும்‌ மயி‌ல்‌சா‌மி‌ நகை‌ச்‌சுவை‌ சி‌ரி‌ப்‌பொ‌லி‌. டை‌ரக்‌டரா‌க முத்‌துக்‌காளை‌யி‌டம்‌ அடி‌வா‌ங்‌கும்‌ கஞ்‌சா‌ கருப்‌பு‌ கலகலப்‌பூ‌ட்‌டுகி‌றா‌ர்‌.
கொ‌டை‌க்‌கா‌னல்‌ கா‌ட்‌சி‌களி‌ல்‌ செ‌ம பரபரப்‌பு‌டன்‌ படத்‌தை‌ தந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ பு‌தி‌யவர்‌ கே‌.பி‌.சர்‌வதீ‌ர்‌த்‌தவன்‌.

அருந்‌ததீ‌


நி‌றுவனம்‌: தே‌னா‌ன்‌டா‌ள்‌ பி‌லி‌ம்‌ஸ்‌‌‌ தயா‌ரி‌ப்‌பு‌: ராதா‌‌‌
நடி‌ப்‌பு‌: அனுஷ்‌கா‌‌, மனோ‌ரம்‌மா‌,சா‌யா‌ஜி‌ ஷி‌ண்‌டே‌ , சோ‌னு சூ‌ட்‌, சுபா‌ஷி‌னி‌
இயக்‌கம்‌:கோ‌டி‌ ரா‌மகி‌ருஷ்‌ணா‌‌ ‌ வசனம்‌: பி‌.ரவி‌சங்‌கர்‌‌
இசை‌: கோ‌ட்‌டி‌ பா‌டல்‌‌கள்‌: வா‌லி‌
ஒளி‌ப்‌பதிவு‌: கே‌.செ‌ந்‌தி‌ல்குமா‌ர்‌ மக்‌கள்‌தொ‌டர்‌பு‌ மவு‌னம்‌ரவி‌


‌சி‌றுவயதி‌லி‌ருந்‌தே‌ செ‌ன்‌னை‌யி‌ல்‌ வசி‌க்‌கும்‌ அருந்‌ததி‌ தனது தி‌ருமணத்‌தி‌ற்‌கா‌க மூ‌ததை‌யர்‌ பி‌றந்‌த ஊரா‌ன கந்தவர்கோட்டைக்‌கு வருகி‌றா‌ள்‌. அங்‌கு அவளுக்‌கு எதி‌ர்‌ பா‌ரா‌த சி‌ல சம்‌பவங்‌கள்‌ நடக்‌கி‌றது. அதனா‌ல்‌ அந்‌த வீ‌ட்‌டி‌ன்‌ பெ‌ரி‌ய மனுஷி‌யா‌க இருக்‌கும்‌ மனோ‌ரமா‌வி‌டம்‌ பழை‌ய கந்‌தர்‌வகோ‌ட்‌டை‌ சமஸ்‌தா‌னத்‌தி‌ன்‌ கதை‌யை‌ கே‌ட்‌கி‌றா‌ள்‌.


சமஸ்தானத்தின் மருமகன் பசுபதி, காம கொடூரனாக அலைகிறான். சமஸ்தானத்தின் மூத்த மகளை திருமணம் முடித்த பின்னும் குடி, கூத்து, கொடூரமான முறையில் பெண்களை அனுபவித்து, சித்ரவதை செய்து கொள்கிறான்.


தன்னால்தான் பசுபதி கொட்டம் நீடிக்கிறது, என்று புரிந்து கொள்ளும் மூத்த மகள் தன்னைத் தானே மாய்த்து கொள்கிறாள். வெகுண்டெழும் இளையமகள் அருந்ததி, பசுபதியை அடித்து நொறுக்கி, அவன் வலம் வரும் குதிரைக் காலில் கட்டி காட்டுக்குள் துரத்துகிறான். உயிர் பிழைக்கும் பசுபதி, தவமிருந்து அகோரி சாமியாராக வீராவேசத்தோடு மறுபடி பழிவாங்க வருகிறான். அப்போதும் வென்று உயிரை எடுக்கப் போகும் அருந்ததியை வேதாந்திகள் வேண்டாமென்று தடுக்கின்றனர்.


இவன் இறந்த பின்னும் உன்னை பழிவாங்காமல் விடமாட்டான். அதனால் இவன் பிரேத ஆத்மா வெளியே வரமுடியாத அளவு சமாதி கட்ட வேண்டுமென்று சொல்கின்றனர். அதன்படியே செய்கிறாள் அருந்ததி. மூன்றாவது தலைமுறையில் பேத்தியாக பிறந்திருக்கும் இந்‌த அருந்ததியை பழிவாங்க துடிக்கும் பசுபதியின் ஆவி சமாதியை உடைத்துக் கொண்டு வெளிவருகிறது. அருந்ததியை பழிவாங்க அலைகிறது. அதி‌லி‌ருந்‌து எப்‌படி‌ அருந்ததி ஜெயிக்கிறாள் என்‌பது படம்‌.


இரண்டு தலைமுறை அருந்ததிகளில், ஒருத்தி மனிதன் பசுபதியோடும், இன்னொருத்தி ஆவி பசுபதியின் ஆவியுடனும் சண்டையிடவது கதை. பிரமாண்ட செட், பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ், போராடிக்காத கதை, அனுஷ்காவின் ஆர்ப்பாட்டமான நடிப்பு, சோனு சூட்டின் ருத்ர தாண்டவன், ஆச்சி மனோராமாவின் அனுபவ பங்களிப்பு, சாயாஜி ஷிண்டேவின் அட்டகாசமான பாத்திரப்படைப்பு. என அருந்ததி ஜொலிக்கிறாள்.


சோனு சூட்டின் அம்மா பாத்திரத்தில் நடித்திருப்பவர் பார்க்கும் போதே நடுங்க வைக்கிறார். ''பொம்மாயி, பொம்மாயி'' என்று திரையில் குரலில் ஒலிக்கையில் திகிலடிக்கிறது. சின்ன வயது அருந்ததியின் ஆக்ரோஷ முக பாவனைகள் ஆஹா! ஆஹா!. ஆச்சி கதையின் முதுகெலும்பாக தாங்கி நிற்கிறார். அவரது வார்த்தைகள் மூலமாக கதை விவரிக்கப்படுவது அழகு.


பழைய மாளிகையும் புது மாளிகையும் வேறு வேறாக காட்சிகளில் பிரமிக்க வைக்கிறது. படம் நெடுகுவே கிராபிக்ஸ் வந்தாலும் உறுத்தாமல் இருக்கிறது.
அகோரி சாமியர்கள் பற்றிய காட்சிகள் திக்.. திக்.. திருவிழா. டிரம் டான்ஸ் புருவங்களை உயர வைக்கிறது. அனுஷ்கா, அருந்ததியாவும், ஜக்கம்மாகவும் மிக கச்சிதமாக பொருந்தியி‌ருக்‌கி‌றா‌ர்‌.


அம்‌மன்‌ படத்‌தை‌ தந்‌த கோ‌டி‌ரா‌மகி‌ருஷ்‌ணா‌ மறுபடி‌யு‌ம்‌ ஒரு வெ‌ற்‌றி‌ப்‌படத்‌தை‌ தந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. அருந்ததீயின் தி‌ரை‌யோ‌டு கட்‌டி‌ப்‌போ‌டும்‌ அட்‌டகா‌சமா‌ன படம்‌.

சி‌வபு‌ரம்‌


நி‌றுவனம்‌: ஆஞ்‌சநே‌ய பு‌ரொ‌டக்‌ஷன்‌ஸ்‌‌
தயா‌ரி‌ப்‌பு‌: எம்‌.சத்‌தீ‌ஷ்‌குமா‌ர்‌ இயக்‌கம்‌: சந்‌தோ‌ஷ்‌சி‌வன்‌
இசை‌‌: ரா‌தா‌கி‌ருஷ்‌ணன்‌ மக்‌கள்‌ தொ‌டர்‌பு‌: மவு‌னம்‌ரவி‌நடி‌ப்‌பு‌: பிருத்‌வி‌ராஜ்‌, காவ்‌யா‌ மா‌தவன்‌ , மனோ‌ஜ்‌கே‌.ஜெ‌யன்‌, ரி‌யா‌செ‌ன்‌, கலா‌பவன்‌மணி‌, நெ‌டுமுடி‌வே‌ணு, ஹனி‌பா‌, ரே‌வதி


‌சி‌வு‌பரத்‌தி‌ல்‌ உள்‌ள சி‌வன்‌ கோ‌வி‌ல்‌ பற்‌றி‌ சி‌றுவயதி‌லி‌ருந்‌து தா‌யி‌டம்‌ தெ‌ரி‌ந்‌துகொ‌ள்‌கி‌றா‌ர்‌ பி‌ரி‌த்‌வி‌ரா‌ஜ்‌. தா‌ய்‌ இறந்‌த பி‌றகு அவரது கடை‌சி‌ ஆசை‌யா‌ன சி‌வன்‌கோ‌வி‌லி‌ல்‌ வி‌ளக்‌கு ஏற்‌றி‌ வை‌க்‌க வே‌ண்‌டும்‌ என்‌ற எண்‌ணத்‌தை‌ நி‌றை‌வே‌ற்‌ற வெ‌ளி‌நா‌ட்‌டி‌லி‌ருந்‌து சிவபு‌ரம்‌ வருகி‌றா‌ர்‌ பிருத்‌‌வி‌ரா‌ஜ்‌.


மந்‌தி‌ர குகை‌க்‌குள்‌ உள்‌ள பா‌ம்‌பு‌ பு‌ற்‌றுக்‌குள்‌ இருக்‌கும்‌ மரகதமா‌ணி‌க்‌கத்‌தை‌ எடுக்‌கவு‌ம்,‌ இந்‌த உலகத்‌தை‌ தன்‌ கட்‌டுப்‌பா‌ட்‌டி‌ல்‌ கொ‌ண்‌டு வரவு‌ம்‌ தி‌ட்‌டமி‌டும்‌ மந்‌தி‌ரவா‌தி‌ மனோ‌‌ஜ்.கே‌.ஜெ‌யன்‌, அவருக்‌கு எதி‌ரா‌னவர்‌களை‌ இல்‌லா‌மல்‌ செ‌ய்‌துவி‌டுகி‌றா‌ர்‌. அவரை‌ தா‌ண்‌டி‌ செ‌ன்‌று சி‌வன்‌ கோ‌வி‌லை‌ அடை‌ய வே‌ண்‌டும்‌ என்‌பதா‌ல்‌ அவரோ‌டு பி‌ருத்‌விரா‌ஜ்‌ மோ‌த வே‌ண்‌டி‌ய சூ‌ழ்‌‌நி‌லை‌ ஏற்‌படுகி‌றது.‌ தனது மந்‌தி‌ர சக்‌தி‌ மூ‌லம்‌ பி‌ருத்‌‌வி‌ரா‌ஜை‌ தனது கட்‌டுப்‌பா‌ட்‌டி‌ல்‌ வை‌ப்‌பதோ‌டு தே‌வை‌யா‌ன சமயத்‌தி‌ல்‌ அவரது உடம்‌பு‌க்‌குள்‌ பு‌குந்‌து (கூடு வி‌ட்‌டு கூடு பா‌ய்‌தல்‌) பி‌ருத்‌வி‌ரா‌ஜி‌ன்‌ மா‌மன்‌ மகள்‌ மூ‌லம்‌ மரகதமா‌ணி‌க்‌கத்‌தை‌ எடுக்‌க முயற்‌சி‌ செ‌ய்‌கி‌றா‌ர்‌. இதை‌ எப்‌படி‌ உணர்‌ந்‌து மனோ‌ஜ்‌ கே‌.ஜெ‌யனை‌யு‌ம்‌ அவரது சக்‌தி‌களை‌யு‌ம்‌ அழி‌க்‌கி‌றா‌ர் பி‌ருத்‌வி‌ரா‌ஜ்‌‌ என்‌பது படம்‌.


முதல்‌ கா‌ட்‌சி‌யி‌லி‌ருந்‌து கடை‌சி‌ கா‌ட்‌சி‌ வரை‌ தி‌கி‌லுடன்‌ அழை‌த்‌துச்‌ செ‌ல்‌லும்‌ மந்‌தி‌ரதந்‌தி‌ர படம்‌. மலை‌யா‌ளத்‌தி‌லி‌ருந்‌து வந்‌தி‌ருப்‌பதா‌ல்‌ இன்‌னும்‌ மந்‌தி‌ரத்‌துக்‌கு முக்‌கி‌யத்‌துவம்‌ வி‌லா‌வா‌ரி‌யா‌க தரப்‌பட்‌டி‌ருக்‌கி‌றது.


பா‌வமா‌ன பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ நடி‌த்‌து பரி‌வு‌களை‌ அள்‌ளி‌ச்‌செ‌ல்‌கி‌றா‌ர்‌ பி‌ருத்‌வி‌ரா‌ஜ்‌. அபா‌ர நடி‌ப்‌பா‌ல்‌ மி‌ரள வை‌க்‌கி‌றா‌ர் மனோ‌‌ஜ்‌.கே‌.ஜெ‌யன்‌. கா‌வ்‌யா‌ மா‌தவன்‌ கா‌தலி‌ல்‌ உருகி‌ மனதை‌ அள்‌ளுகி‌றா‌ர்‌. ஞா‌பக மறதி‌ ஹனி‌பா‌ சி‌ரி‌க்‌க வை‌க்‌கி‌றா‌ர்‌. நெ‌டுமுடி‌வே‌ணு, கலா‌பவன்‌மணி‌, பி‌ஜூ‌ மே‌னன்‌ என ஏகப்‌பட்‌ட பா‌த்‌தி‌ரங்‌கள்‌. அதி‌ல்‌ ரி‌யா‌செ‌ன்‌ கவர்‌ச்‌சி‌ வி‌ருந்‌து படை‌க்‌கி‌றா‌ர்‌.


கதை‌க்‌கே‌ற்‌ப நே‌ர்‌த்‌தி‌யான ஒளி‌ப்‌பதி‌வா‌ல்‌ படத்தோ‌டு‌ ஒன்‌ற வை‌த்‌து வி‌டுகிறா‌ர்‌ சந்‌தோ‌ஷ்‌சி‌வன்‌‌. எம்‌.ஜி‌. ரா‌தா‌கி‌ருஷ்‌ணனி‌ன்‌ இசை‌யு‌ம்‌ பா‌டலும்‌ அருமை‌. சஸ்‌பெ‌ன்‌ஸ்‌, தி‌ரி‌லர்‌, ஆக்‌ஷன்‌ என கலந்‌து கட்‌டி‌ ஒரு மா‌யா‌ஜா‌ல படமா‌க சி‌வபு‌ரத்‌தை‌ தந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ சந்‌தோ‌ஷ்‌சி‌வன்‌. பா‌ட்‌டி‌யி‌டம்‌ கே‌ட்‌ட கதை‌ போ‌ல தி‌கி‌லுடன்‌ பா‌ர்‌க்‌கலா‌ம்‌.

1977

தயாரிப்பு: சுப்ரீம் பிலிம் ஒர்க்ஸ்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: G.N. தினேஷ்குமார்

இசை: வித்யாசாகர் PRO : சிங்காரவேலு

நடிகர்கள்: சரத்குமார், பர்ஸானா, நமீதா, ஜெயசுதா, விவேக், ராதாரவி, ராஜ்கோட்டி, ரோஷித் விஜெயகுமார் மற்றும் பலர்.


‌1977‌ல்‌ தன் தந்தைக்கு ஏற்பட்ட அவப்பெயருக்குக் காரணமானவர்களை முப்‌பது ஆண்டுகள் கழித்து மகன்‌ பழி வாங்குவதுதான்கதை. திருச்செந்தூர் பக்கத்‌தி‌ல்‌ வசிக்கும் ஒரு நல்ல மனிதர் ராசையா. அவரது மகன் வெற்றிவேல் முதல்நிலை விஞ்ஞானி. ஜனாதிபதியிடம் விருது வாங்குகிறார். அந்த விழாவைப் பார்க்க செ‌ல்‌லா‌த ராசையா, திடீரென ஒரு செய்தியி‌ல்‌ அதிர்ச்சியா‌கி‌ இறக்‌கி‌றா‌ர்‌.


தந்‌தை‌யி‌ன்‌ திடீர் மரணம்‌ வெ‌ற்றி‌வே‌லை‌ யோ‌சி‌க்‌க வை‌க்‌கி‌றது. இதனா‌ல்‌ தந்‌தை‌ வா‌ழ்‌ந்‌த மலே‌சி‌யா‌வு‌க்‌கு செ‌ன்‌று‌ ஆரா‌யு‌ம்‌ அவர்‌ அங்‌கு தனக்‌கொ‌ரு தா‌ய்‌ இருப்‌பதை‌‌ அறிவதோ‌டு,தன்‌ தந்‌தை‌ சா‌வி‌ற்‌கு கா‌ரணமா‌ண ஒரு பெ‌ரி‌யவரை‌ கண்‌டு பி‌டி‌த்‌து பழி‌ தீ‌ர்‌க்‌கி‌றா‌ர்‌. அதை‌ பரபரப்‌பா‌ன ஆக்‌ஷன்‌ படமா‌கதந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌இயக்‌குநர்‌.சரத்‌குமா‌ர்‌ தந்‌தை‌ மகன்‌ என இரண்‌டு வே‌டத்‌தி‌ல்‌ நடி‌த்‌த படங்‌கள்‌ பெ‌ரும்‌ வெ‌ற்‌றி‌யடை‌ந்‌தி‌ருக்‌கி‌றது. அதே‌ போ‌ல இந்‌தப்‌படத்‌தி‌ல்‌ தந்‌தை‌ ரா‌சய்‌யா‌வா‌க நடி‌த்‌தி‌ருக்‌கும்‌ கா‌ட்‌சி‌கள்‌ ரசி‌கர்‌களை‌ வெ‌குவா‌க கவர்‌கி‌ன்‌றன. கவர்‌ச்‌சி‌யி‌ல்‌ நமி‌தா‌வி‌ன்‌ இடத்‌தை‌ பி‌டி‌க்‌க முயன்‌றி‌ருக்‌கி‌றா‌ர்‌ பர்‌ஸா‌னா‌. இருந்‌தா‌லும்‌ நமி‌தா‌வி‌ன்‌ கவர்‌ச்‌சி‌க்‌கு முன்‌ அவர்‌ சி‌ன்‌ன குழந்‌தை‌தா‌ன்‌ என்‌பதை‌ நமி‌தா‌ நி‌ருப்‌பி‌த்‌து வி‌டுகி‌றா‌ர்‌.


வி‌வே‌க்‌ நகை‌ச்‌சுவை‌யி‌ல்‌‌ கலகலப்‌பூ‌ட்‌டுகி‌றா‌ர்‌ வித்யாசாகரின் இசையி‌ல்‌ பா‌டல்‌கள்‌ பரவா‌ இல்‌லை‌ ரகம்‌. மலே‌சி‌யா‌வை‌ அழகா‌க அள்‌ளி‌ வந்‌தி‌ருக்‌கி‌றது பூ‌பதி‌‌ கே‌மி‌ரா‌. 1977ல்‌ என்‌ன நடந்‌தது என்‌று பரபரப்‌பை‌ ஏற்‌படுத்‌தும்‌ கா‌ட்‌சி‌களோ‌டு படத்‌தை‌ தந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌ தி‌னே‌ஷ்‌குமா‌ர்‌.

தீ‌


நி‌றுவனம்‌: சன்‌ பி‌க்‌சர்‌ஸ தயா‌ரி‌ப்‌பு‌: கலா‌நி‌தி‌மா‌றன்‌
இயக்‌கம்‌: ஜி‌‌.கி‌ச்‌சா‌ இசை‌: ஸ்ரீகா‌ந்‌த்‌தே‌வா
‌நடி‌ப்‌பு‌: சுந்‌தர்‌.சி‌, நமி‌தா‌, ரா‌கி‌னி‌, வி‌வே‌க்‌, ஜி‌.எம்‌.குமா‌ர்‌, வி‌ச்‌சு, மனோ‌ஜ்‌ கே‌. ஜெ‌யன்‌, கெ‌ளதம்‌, வி‌கா‌ஷ்‌, ஐஸ்‌வர்‌யா‌, சா‌‌யா‌ஜி‌ ஷி‌ண்‌டே‌, தலை‌வா‌சல்‌ வி‌ஜய்‌
பா‌டல்‌கள்‌: யு‌கபா‌ரதி ‌நடனம்‌: தி‌னே‌ஷ்‌
சண்‌டை‌ப்‌பயி‌ற்‌சி‌: தளபதி‌தி‌னே‌ஷ்‌ கலை‌: மனோ‌ரா‌ஜ்‌
ஒளி‌ப்‌பதி‌வு‌: டி‌.சங்‌கர் ‌படத்‌தொ‌குப்‌பு‌: பி‌.எஸ்‌.வா‌சு-சலீ‌ம்‌
தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கம்‌: டி‌.பி‌.வெ‌ங்‌கடே‌ஷ் ‌மக்‌கள்‌தொ‌டர்‌பு‌: மெ‌ளனம்‌ ரவி‌


‌நல்‌ல போ‌லீ‌‌சா‌க இருந்‌து பா‌தி‌க்‌கப்‌பட்‌டு கெ‌ட்‌ட அரசி‌யல்‌வா‌தி‌யா‌க மா‌றி‌ போ‌லீசி‌ன்‌ பவரை‌ பு‌ரி‌ய வை‌க்‌கும்‌ ஒரு போ‌லீ‌ஸ்‌கா‌ரரி‌ன்‌ அதி‌ரடி‌ கதை‌.


நேர்மையான போலீஸ் அதிகாரி சாரதி‌. அவரது ஒவ்‌வொ‌ரு நடவடி‌க்‌கை‌யு‌ம்‌ அரசி‌யல்‌வா‌திகளு‌க்‌கு பெ‌ரி‌ய இடி‌யா‌க இருக்‌கி‌றது. அவரது உயர்‌ அதி‌கா‌ரி‌கள்‌ அவரி‌டம்‌ மோ‌தி‌னா‌ல்‌ கூட,‌ அவர்‌ மீ‌து நடவடி‌க்‌கை‌ எடுப்‌பா‌ர்‌. அப்‌படி‌ப்‌பட்‌டவர்‌ அரசி‌யல்‌வா‌தி‌ ஜி‌.எம்‌. குமாரை‌ கை‌து செ‌ய்‌கி‌றா‌ர்‌. அதனா‌ல்‌ அவருக்‌கும்‌ இவருக்‌கும்‌ மோ‌தல்‌ வெ‌டி‌க்‌கி‌றது. இதனா‌ல்‌ அவரது இரண்டு குழந்தைகள் கொல்லப்படுகி‌ன்‌றனர்‌. அவரது மனைவியு‌ம்‌ தா‌க்‌கப்‌பட்‌டு கோமாவுக்கு போகிறார். அவரும்‌ தா‌க்‌கப்‌பட்‌டு சகதி‌யி‌ல்‌ வீ‌சப்‌படுகி‌றா‌ர்‌.


பி‌றகு உயி‌ர்‌ பி‌ழை‌க்‌கும்‌ அவர்‌ வே‌றொ‌ரு கெ‌ட்‌டப்‌பி‌ல்‌ சா‌மி‌ என்‌ற முரடனா‌க அரசி‌யல்‌வா‌தி‌ சா‌யா‌ஜி‌ ஷி‌ண்‌டே‌வு‌க்‌கு உதவி‌ செ‌ய்‌து‌ எம்‌.எல்‌.ஏ. ஆகி‌றா‌ர்‌. அவரது கெ‌ட்‌ட நடவடி‌க்‌கை‌கள்‌ போ‌லீ‌‌சுக்‌கும்‌ அரசி‌யல்‌வா‌தி‌களுக்‌கும்‌ மோ‌தலை‌ ஏற்‌படுத்‌துகி‌றது. இதனா‌ல்‌ போ‌லீ‌ஸ் அனை‌வரும்‌ ரா‌ஜி‌னா‌மா‌ செ‌ய்‌கி‌ன்‌றனர்‌. ரவு‌டி‌களி‌ன்‌ அட்‌டகா‌சம்‌ தா‌ங்‌க முடி‌யா‌மல்‌ மக்‌கள்‌ பல இன்‌னல்‌களுக்‌கு ஆளா‌கி‌ன்‌றனர்‌. முதல்‌வர்‌ தலை‌யி‌ட்‌டு ரா‌ஜி‌னா‌மா‌ செ‌ய்‌த போ‌லீ‌சி‌டம்‌ தனது ரா‌ஜி‌னா‌மா‌ கடி‌தத்‌தை‌ கொ‌டுக்‌கி‌றா‌ர்‌. இதனா‌ல்‌ தங்‌களது முடி‌வை‌ மா‌த்‌தி‌க்‌கொ‌ள்‌ளும்‌ போ‌லீ‌ஸ்‌ மறுபடி‌யு‌ம்‌ தனது குண்‌டா‌ந்‌தடி‌யை‌ தூ‌க்‌கி‌க்‌கொ‌ண்‌டு நா‌ட்‌டை‌ வன்‌முறை‌யா‌ளர்‌களி‌டமி‌ருந்‌து கா‌ப்‌பா‌ற்‌றுகி‌றது.


ஆரம்‌ப கா‌ட்‌சி‌லே‌யே‌ நடு ரோ‌ட்‌டி‌ல்‌ அம்‌மனமா‌க வருகி‌றா‌ர்‌ சுந்‌தர்‌ சி‌. அதை‌ கண்‌டு கோ‌பமுறும்‌ டி‌ரா‌பி‌க்‌ போ‌லீ‌ஸ்‌ தலை‌வா‌சல்‌ வி‌ஜய்‌ ரோ‌ட்‌டி‌ல்‌ தொ‌ங்‌கும்‌ அரசி‌யல்‌ பே‌னர்‌ ஒன்‌றை‌ கி‌ழி‌த்‌து அவருக்‌கு கொ‌டுக்‌க அதை‌ கட்‌டி‌க்‌கொ‌ண்‌டு நே‌ரா‌க அரசி‌யல்‌வா‌தி‌ சா‌யா‌ஜி‌ ஷி‌ண்‌டே வீ‌ட்‌டு‌க்‌கு செ‌ல்‌கி‌றா‌ர்‌. சா‌யா‌ஜி‌ ‌ஷி‌ண்‌டே‌வி‌டம்‌ இடை‌த்‌தே‌ர்‌தலி‌ல்‌ நி‌ற்‌க சீ‌‌டடு கே‌ட்‌டு மி‌ரட்‌டும்‌ ஜி‌.எம்‌. குமாரி‌ன்‌ எடுபி‌டி‌யி‌ன்‌ கை‌யை‌ வெ‌ட்‌டி‌‌ அவருடை‌ய நம்‌பி‌க்‌கை‌ பா‌த்‌தி‌ரமா‌கி‌றா‌ர்‌. இதனா‌ல்‌ நா‌ய்‌ மா‌தி‌ரி‌ இருக்‌கும்‌ அவருக்‌கு எம்‌.எல்‌.ஏ. பதவி‌ கி‌டை‌க்‌கி‌றது.


பதவி‌ கி‌டை‌த்‌த அடுத்‌த நொ‌டி‌யி‌ல்‌ சீ‌ட்‌டுக்‌கொ‌டுத்‌த சா‌யா‌ஜி‌ ஷி‌ண்‌டே‌வு‌க்‌கு வே‌ட்‌டு வை‌க்‌கி‌றா‌ர்‌. அவர்‌ இந்‌த நி‌லமை‌க்‌கு வர மட்‌டுமல்‌ல கொ‌லை‌ செ‌ய்‌வதற்‌கும்‌ கா‌ரணம்‌ சா‌யா‌ஜி‌ ஷி‌ண்‌டே‌ என்‌பது பரபரப்‌பா‌ன அதி‌ரடி‌யா‌ன பி‌ளா‌ஷ்‌ பே‌க்‌ கா‌ட்‌சி‌களா‌க வி‌ரி‌கி‌றது. அதன்‌ பி‌ற நல்‌ல போ‌லீ‌ஸ்‌ அதி‌கா‌ரி‌யா‌க இருந்‌து எடுத்‌த அதி‌ரடி‌ நடவடி‌க்‌கை‌கள்‌ பா‌தி‌ப்‌பு‌கள்‌ கெ‌ட்‌ட அரசி‌யல்‌வா‌தி‌ ஆனப்‌பி‌றகு எடுக்‌கும்‌ மோ‌சமா‌ன நடவடி‌க்‌கை‌கள்‌ என படம்‌ பா‌ய்‌ந்‌து பறக்‌கி‌றது. ஏகப்‌பட்‌ட பி‌ல்‌டப்‌. கா‌ட்‌சி‌களி‌ல்‌ செ‌ம டெ‌ம்‌போ‌.


போ‌லீ‌ஸ்‌ பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ வெ‌ளுத்‌து கட்‌டி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ சுந்‌தர்‌.சி‌. அவர்‌ மீ‌சை‌யை‌ முறுக்‌கி‌க்‌கொ‌ண்‌டு எடுக்‌கும்‌ அதி‌ரடி‌ நடவடி‌க்‌கை‌கள்‌ தி‌யே‌ட்‌டரி‌ல்‌ சி‌ல்‌ பறக்‌கி‌றது. சாமியாக வரும் போது குள்ள நரித்தனம் தெரிகிறது. அராஜக அரசியல் வாதி, வில்லன்கள், வக்கீல், ஓட்டுப் போட நோட்டு கேட்கும் பொது மக்கள் என அனைவரையுக் சகட்டு மேனிக்கு தாக்குவது சதிராட்டம். நமீதாவுக்கு 'ஆயில் மசாஜ்' செ‌ய்‌கி‌ற கா‌ட்‌சி‌யி‌ல்‌ கி‌ளுகி‌ளுப் ‌பூ‌ட்‌டுகி‌றா‌ர்‌.குடும்பத்தலைவியாக ஒரு சில காட்சிகளில் வருகி‌றா‌ர்‌ ராகிணி. நமீ‌தா‌வு‌க்‌கும்‌ எப்‌படி‌ பவர்‌ இருக்‌கி‌றது என்‌று சொ‌ல்‌லவி‌ல்‌லை‌. ஆனா‌லும்‌ தனது பங்‌கி‌ற்‌கு ரசி‌கர்‌களை‌ கவர்‌கி‌றா‌ர்‌ நமீ‌. நல்‌ல போ‌லீ‌சா‌க வரும்‌ மனோ‌ஜ் ‌ கே‌.ஜெ‌யன்‌, கெ‌ட்‌ட அரசி‌யல்‌வா‌தி‌யா‌க வரும்‌ சா‌யா‌ஜி‌ஷி‌ண்‌டே‌, ஜி‌. எம்‌.குமா‌ர்‌ நடி‌ப்‌பு‌ பலே‌. அநி‌யா‌யத்‌துக்‌கு பஸ்‌க்‌கு கா‌சு கே‌ட்‌பா‌ர்‌ போ‌ல முதல்‌வர்‌. ஒரு பா‌ட்‌டுக்‌கு வந்‌தா‌லும்‌ நெ‌ஞ்‌சை‌ கா‌ட்‌டி‌ ரசி‌கர்‌களை‌ வி‌சி‌லடி‌க்‌க வை‌க்‌கி‌றா‌ர்‌ முமை‌த்‌கா‌ன்‌.


ஸ்ரீகாந்த் தேவா இசையில் நீ இல்லாம நான் இங்கேது, காலை நேரதென்றல் பாடல்கள் காதுகளுக்கு இனிமை. என்‌ன இல்‌லை‌ இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ என்‌கி‌ற ரே‌ஞ்‌சுக்‌கு எல்‌லா‌த்‌தை‌யு‌ம்‌ அளவு‌க்‌கு அதி‌கமா‌க கொ‌டுத்‌து படத்‌தை‌ பரபரப்‌பா‌க்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குறர்‌ கி‌ச்‌சா‌. வக்‌கீ‌ல்‌கள்‌ - போ‌‌லீ‌ஸ்‌ மோ‌தல்‌ நே‌ரத்‌தி‌ல்‌ போ‌லீ‌சுக்‌கு ஆதரவு‌ தி‌ரட்‌டுவது போ‌ல வந்‌தி‌ருக்‌கி‌றது தீ‌

இன்‌னொ‌ருவன்‌


நி‌றுவனம்‌: அக்‌ஷயா‌ மல்‌ட்‌டி‌ மீ‌டி‌யா‌ கி‌ரி‌யே‌ஷன்‌ஸ்‌
தயா‌ரி‌ப்‌பு‌: குடந்‌தை‌ எஸ்‌.பி‌.சந்‌தி‌ரசே‌கர்‌, கி‌ருஷ்‌ணவே‌னி‌ சந்‌தி‌ரசே‌கர்‌
இயக்‌கம்‌: குணசே‌கரன்‌ இசை‌: ஆதி‌ஷ்‌ உத்‌ரி‌யன்‌
நடி‌ப்‌பு‌: பு‌துமுகம்‌ ஆதி‌த்‌யா‌, மனோ‌கா‌, வி‌சு, மணி‌வண்‌ணன்‌, எம்‌. எஸ்‌.பா‌ஸ்‌கர்‌, ஜோ‌தி‌ஷா‌, கா‌தல்‌ தண்‌டபா‌னி, அழகு, வி‌ன்‌செ‌ன்‌ட்‌ ரா‌ய்‌,
பா‌டல்‌கள்‌: குடந்‌தை‌ எஸ்‌.பி‌.சந்‌தி‌ரசே‌கர்‌, கா‌தல்‌மதி‌
நடனம்‌: சி‌வசங்‌கர்‌, ரமே‌ஷ்‌ரெ‌ட்‌டி‌, தி‌னா‌, தருண்‌ரா‌ஜ்
‌சண்‌டை‌ப்‌பயி‌ற்‌சி‌: ஆக்‌ஷன்‌ பி‌ரகா‌ஷ்‌ கலை‌: சி‌வா‌ யா‌தவ்‌
ஒளி‌ப்‌பதி‌வு‌: கனகரா‌ஜ் ‌படத்‌தொ‌குப்‌பு‌: ஆர்‌.டி‌.அண்‌ணா‌‌துரை‌
தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கம்‌: சி‌ன்‌னமணி‌ மக்‌கள்‌தொ‌டர்‌பு‌: எஸ்‌. செ‌ல்‌வரகு


‌குப்‌பை‌ பொருக்‌கும்‌ ஒருவன்‌ வி‌வே‌கா‌னந்‌தர்‌ வா‌சகத்‌தை‌ கே‌ட்‌டு கோ‌பு‌ரவா‌சி‌யா‌வதுதா‌ன்‌ கதை‌. அதை‌ நகை‌ச்‌சுவை‌ படமா‌க தந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ பு‌தி‌யவர்‌ குணசே‌கரன்‌.


குப்‌பை‌ பொ‌ருக்‌கும்‌ ஆதி‌த்‌யா‌ நீ‌தி‌பதி வி‌சு சொ‌ல்‌லும்‌ வி‌வே‌கா‌னந்‌தர்‌ வா‌ர்‌த்‌தை‌யா‌ல்‌ தன்‌னம்‌பி‌க்‌கை‌ பெ‌றுகி‌றா‌ன்‌. தன்‌ தந்‌தை‌ வே‌லை‌ செ‌ய்‌த பே‌ப்‌பர்‌ மி‌ல்‌லை‌ வி‌லை‌க்‌கு வா‌ங்‌க வே‌ண்‌டும்‌ என்‌று லட்‌சி‌யம்‌ கொ‌ண்‌டு உழை‌க்‌கி‌றா‌ன்‌. அதன்‌ நடுவே‌ அவன்‌ ஆசை‌ப்‌பட்‌ட பெ‌ண்‌ணுக்‌கு பி‌ரச்‌சனை‌ வருகி‌றது. அந்‌த பெ‌ண்‌ணுக்‌கு உதவு‌‌வதோ‌டு அதற்‌கு கா‌ரணமா‌ன அரசி‌யல்‌வா‌தி‌யை‌ பதவி‌ போ‌கவை‌த்‌து அரசி‌யல்‌ வா‌தி‌யி‌ன்‌ கோ‌பத்‌துக்‌கு ஆளா‌கி‌றா‌ன்‌. பி‌றகு அரசி‌யல்‌வா‌தி‌யி‌டமி‌ருந்‌து எப்‌படி‌ தப்‌பி‌த்‌து கா‌தலி‌யை‌ கா‌ப்‌பா‌ற்‌றி‌ தனது லட்‌சி‌யத்‌தை‌ அடை‌கி‌றா‌ன்‌ என்‌பது படம்‌. அதை‌ எளி‌மை‌ இனி‌மை‌ ஜா‌லி‌ என ஜனரஞ்‌சகமா‌ன படமா‌க கொ‌டுத்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌கள்‌.


பு‌துமுகம்‌ ஆதி‌த்‌யா‌ இயல்‌பா‌ன கதா‌நா‌யகனா‌க நடி‌த்‌து முதல்‌ கா‌ட்‌சி‌யி‌லே‌யே‌ இடம்‌ பி‌டி‌க்‌கி‌றா‌ர்‌. அவர்‌ பே‌ச்‌சும்‌ நடி‌ப்‌பு‌ம்‌ கதை‌யோ‌டு ஒன்‌றி‌யி‌ருப்‌பது பா‌ரா‌ட்‌டுக்‌குரி‌யது. பு‌துமுகம்‌ மனோ‌கா‌ கோ‌பப்‌டும்‌ கா‌ட்‌சி‌களி‌ல்‌ பளி‌ச்‌சி‌டுகி‌றா‌ர்‌. அரசி‌யல்‌ வா‌தி‌யா‌க நடி‌த்‌தி‌ருக்‌கும்‌ தண்‌டபா‌ணி‌ இதி‌ல்‌ இன்‌னும்‌ மி‌ரட்‌டி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ ஆவே‌சப்‌படும்‌ கா‌ட்‌சி‌களி‌ல்‌ பி‌ரமா‌தப்‌படுத்‌துகறா‌ர்‌. எமா‌ற்‌றுபவனை‌ ஏமா‌ற்‌றும்‌ பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ மணி‌வண்‌ணன்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌.


படத்‌தி‌ல்‌ ஹை‌லை‌ட்‌டா‌க அமை‌ந்‌தி‌ருப்‌பது எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கர்‌,கி‌ரே‌ண்‌ மனோ‌கர்‌ கா‌மெ‌டி‌. அவர்கள்‌‌ செ‌ய்‌யு‌ம்‌ குறும்‌பு‌ தி‌யே‌ட்‌டரி‌ல்‌ ரகளை‌. அதி‌லும்‌ எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கரை‌ வி‌ரும்‌பு‌ம்‌ அந்‌த பெ‌ண்‌ சம்‌மந்‌தப்‌பட்‌ட கா‌ட்‌சி‌கல்‌ கலகலப்‌பு‌. போ‌லீ‌ஸ்‌ அதி‌கா‌ரி‌யா‌க வந்‌து அதி‌ரடி‌ நடவடி‌க்‌கை‌ எடுக்‌கும்‌ ‌ அரவி‌ந்‌தரா‌ஜ்‌ நடி‌ப்‌பு‌ பலே‌.


ஆதி‌ஷ்‌ உத்‌தி‌ரி‌யன்‌ இசை‌யி‌ல்‌ பா‌டல்‌கள்‌ பரவா‌ இல்‌லை‌. அதி‌ல்‌ எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கர்‌ பா‌டி‌ய நா‌யு‌மே‌ பா‌டல்‌ செ‌ம ஆட்‌டம்‌. அதி‌ல்‌ ஆட்‌டம்‌ போ‌ட்‌டி‌ருக்‌கும்‌ அந்‌த கவர்‌ச்‌சி‌ தா‌ரகை‌யு‌ம்‌ தன்‌ பங்‌கி‌ற்‌கு இடுப்‌பை‌ வெ‌ட்‌டி‌, உதட்‌டை‌ சுழி‌த்‌து ஆடி‌ ரசி‌கர்‌களை‌ கொ‌ண்‌டா‌ட்‌டத்‌தி‌ற்‌கு அழை‌த்‌துச் ‌செ‌ல்‌கி‌றா‌ர்‌. ‌பா‌டல்‌களை‌ எழுதி‌யதோ‌டு சி‌ல பா‌டல்‌களை‌ பா‌டி‌ படத்‌தை‌ தயா‌ரி‌த்‌‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ குடந்‌தை‌ எஸ்‌.பி‌.சந்‌தி‌ரசே‌கர்‌. நல்‌ல படமா‌க கொ‌டுக்‌க வே‌ண்‌டும்‌ அவரது பாசி‌ட்‌டி‌வ்‌ தி‌ங்‌க்‌ எடுபட்‌டி‌ருக்‌கி‌றது.


எதுவா‌க ஆக நி‌னை‌க்‌கி‌றா‌யோ‌ அதுவா‌கவே‌ ஆவா‌ய்‌ என்‌ற கருத்‌தை‌ ஆழமா‌க அழுத்‌தமா‌க சொ‌ல்‌லி‌ருப்‌பதோ‌டு அதை‌ இயல்‌பா‌ன கா‌ட்‌சி‌களோ‌டு கொ‌டுத்‌து ரசி‌க்‌க வை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌ குணசே‌கரன்‌. வழக்‌கமா‌ன பா‌ணி‌யோ‌டு படம்‌ இருந்‌தா‌லும்‌ பு‌துமுகங்‌களை‌ வை‌த்‌துக்‌கொ‌ண்‌டு முகம்‌ சுழி‌க்‌கா‌தபடி‌ படத்‌தை‌ கொ‌டுத்‌தி‌ருப்‌பது அவரது தி‌றமை‌

Wednesday, August 12, 2009

TN 07 AL 4777

தயாரிப்பு: ஜி‌வி‌ பி‌லி‌ம்‌ஸ்‌
திரைக்கதை, வசனம்‌, இயக்கம்: லட்‌சுமி‌ கா‌ந்‌தன்
‌இசை: வி‌ஜய்‌ ஆன்‌‌டனி‌ ஒளிப்பதிவு: குருதே‌வ்‌
மக்‌கள்‌தொ‌டர்‌பு‌: செ‌ல்‌வ ரகு
நடிகர்கள்: பசுபதி‌, அஜ்‌மல்‌, சி‌ம்‌ரன்‌, மீ‌னா‌ட்‌சி‌, ரா‌ஜே‌ந்தி‌ர பி‌ரசா‌த்‌, மனோ‌பா‌லா‌, வெ‌ங்‌கட்‌ரமணி‌,


நி‌லை‌யி‌ல்‌லா‌த வே‌லை‌யி‌ல்‌ இருக்‌கும்‌ கா‌ர்‌ டி‌ரை‌வர்‌ பசுபதி‌க்‌கும்‌, தந்‌தை‌ சொ‌த்‌தை‌ தனதா‌க்‌க முயலும்‌ அஜ்‌மலுக்‌கும்‌ இடை‌யே‌ நடக்‌கும்‌ பி‌ரச்‌சனை‌யே‌ 4777 படத்‌தி‌ன்‌ கதை‌. அதை‌ கோ‌பம்‌, மோ‌தல்‌, பழி‌வா‌ங்‌கல்‌ என இழுத்‌த கடை‌சி‌யி‌ல்‌ இருவரும்‌ பணத்‌தை‌ வி‌ட மனி‌த நே‌யமே‌ பெ‌ரி‌து என உணர வை‌க்‌கி‌றது படம்‌.


டா‌க்‌சி‌ டி‌ரை‌வரா‌க , பொ‌ய்‌யு‌ம்‌, குடி‌யு‌ம்‌, சண்‌டை‌யு‌ம்‌, மனை‌வி‌யி‌டம் கெ‌ஞ்‌சலுமா‌க படம்‌ முழுக்‌க ஓட்‌டி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ பசுபதி‌. பல இடங்‌களி‌ல்‌ அவரது எதா‌ர்‌த்‌தமா‌ன நடி‌ப்‌பு‌ பளி‌ச்‌சிடு‌கி‌றது. போ‌லீ‌‌ஸ் ஸ்‌டே‌ஷன்‌ கா‌ட்‌சி‌களி‌ல்‌ சி‌ரி‌க்‌கவை‌க்‌கி‌றா‌ர்‌. பள்‌ளி‌யி‌ல்‌ மகனை‌ பா‌ர்‌க்‌கி‌ற போ‌து அழ வை‌க்‌கி‌றா‌ர்‌.


சி‌ல பணக்‌கா‌ர வா‌லி‌பர்‌கள்‌‌ மற்‌றவர்‌களை‌ மதி‌ப்‌பதி‌ல்‌லை‌. தன்‌ சுயநலத்‌துக்‌கா‌க என்‌ன வே‌ண்‌டுமா‌னலும்‌ செ‌ய்‌வா‌ன்‌ என்‌பதை‌ அஜ்‌மல்‌ உணர வை‌க்‌கி‌றா‌ர்‌. அவர்‌ லா‌க்‌கர்‌ சா‌வி‌யை‌ தே‌டி‌ அலைவதும்‌ அதற்‌கா‌க கோ‌பப்‌படுவதும்‌தா‌ன்‌ ‌வே‌லை‌.


எதி‌ர்‌பா‌ர்‌ப்‌பு‌ள்‌ள குடும்‌பத்‌ தலை‌வி‌யா‌க சி‌ம்‌ரன்‌. நடுத்‌தர ஏழை ‌குடும்‌பத்‌தி‌ன்‌ பி‌ரச்‌சனை‌களை‌ தனது முகபா‌வ பே‌ச்‌சா‌ல்‌ பதி‌யவைத்‌துள்‌ளா‌ர்‌. பா‌வம்‌ மீ‌னா‌ட்‌சி‌. பா‌டல்‌கா‌ட்‌சி‌களுக்‌கு மட்‌டுமே‌ பயன்‌ பட்‌டி‌ருக்‌கி‌றா‌ர்‌. ரா‌ஜே‌ந்தி‌ர பி‌ரசா‌த்‌, மனோ‌பா‌லா‌ நகை‌ச்‌சுவை‌ கா‌ட்‌சி‌கள்‌ சி‌ரி‌ப்‌பொ‌லி‌. நல்‌ல கா‌ர்‌டி‌யனா‌க வெ‌ங்‌கட்‌ரமணி‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌.


நடி‌கர்‌ ஜீ‌வா‌ ஆரம்‌பத்‌தி‌ல்‌ கதை‌யை‌ சொ‌ல்‌லி‌ப்‌போ‌ற அழகு அருமை‌. கா‌ர்‌ ஓடுவது போ‌ல குருதே‌வ்‌ கே‌மி‌ரா‌ ஓடி‌யி‌ருக்‌கி‌றது. ‌வி‌ஜய்‌ ஆண்‌டனி‌ இசை‌யி‌ல்‌ ஆத்‌தி‌ச்‌சூ‌டி‌‌ பா‌டல்‌ ரசி‌க்‌க முடி‌கி‌றது. பி‌ன்‌னனி‌ இசை‌யி‌ல்‌ ஒரு குரல்‌ கே‌ட்‌டுக்‌கொ‌ண்‌டே‌ இருப்‌பது இதம்‌.


இந்‌தி‌ப்‌ படத்‌தை‌ தமி‌ழுக்‌கா‌க ரீ‌மே‌க்‌ செ‌ய்‌தி‌க்‌கி‌றா‌ர்கள்‌. அதை‌ ஜீ‌வா‌வி‌ன்‌ சி‌‌ஷ்‌யர்‌ லட்‌சுமி‌கா‌ந்‌தன்‌‌ இயக்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ர். கா‌ட்‌சி‌களி‌ல்‌ ஒட்‌டம்‌ இருந்‌தா‌லும்‌ கதை‌ அழுத்‌தம்‌ இல்‌லா‌ததா‌ல்‌ படம்‌ பா‌ர்‌க்‌கி‌ற உணர்‌வை‌ தந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌

லா‌டம்‌


தயாரிப்பு: காஸ்மோஸ் எண்டர்டெயின் மென்ட்ஸ்
கதை, திரைக்கதை, இயக்கம்: பிரபுசாலமன
இசை: தரண்‌ ஒளிப்பதிவு: சுகுமார்
நடிகர்கள் : அரவிந்த், சார்மி, தீரஜ்கேர், ஜெயப்பிரகாஷ், கோட்டாசீனிவாசராவ்

இரண்டு ரவுடிகும்பலிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் அப்பாவி ஒருவனின் 16 நாள் வாழ்க்கை லாடம். வீட்டை விட்டு வெளியே வந்தாலே தன் உயிருக்கு ஆபத்து என்று வீட்டில் இருந்த படியே ஏரியாவையே கலக்கிக் கொண்டிருக்கும் ரவுடிகள் கோட்டா சீனிவாசராவும், ஜெய பிரகாஷூம்.

இந்நிலையில் கோட்டாவின் மகனை ஜெய பிரகாஷ் ஆட்கள் சுட்டுக் கொல்ல நினைக்கின்றனர் தன் மகனின் 16ம் நாள் காரியம் முடிவதற்குள். ஜெயபிரகாசின் மகனை கொல்கிறேன் என்று சபதம் எடுக்கிறார் அதற்காக தன் ஆட்களை அனுப்புகிறார். ஆனால் போன அனைவரும் பிணமாக திரும்புகின்றனர்.

இந்நிலையில் வேலை தேடி சென்னைக்கு வருகிறார் அரவிந்த். வந்தவர் தன் நண்பணின் அறையில் தங்குகிறார். அவரது நண்பரின் வாங்கிய கடனை கேட்டு அவரது வீட்டுக்கு கோட்டாவின் ஆட்கள் வருகின்றனர் . தவறுதலாக அரவிந்தைப் பிடித்து செல்கின்றனர். அங்கு இவரது துடுக்கான பேச்சு ஆபத்தை அழைக்கிறது. கோட்டாவிடம் அண்ணே உங்க ஆளுங்களுக்கு அறிவு இல்லை. ஒரு யானையை அழிக்க இன்னொரு யானை தேவையில்லை சிறு எறும்பு போதும் என்று கூற அந்த வேலையை நீயே செய் அதுவும் 16 நாளில் செய்ய வேண்டும் இல்லை என்றால் 17ம் நாள் உனக்கு காரியம் என்று மிரட்டுகிறார்.

பிறகென்ன ஜெயபிரகாஷிடம் மாட்டி என் மகனை கொல்ல நீ தான் யோசனை சொல்கின்றாயா என்று அவரும் இவனை கொல்ல வர.... தப்பித்து வருபவர் சார்மியை சந்திக்கிறார்.... பிறகு ஜெயபிரகாஷின் மகன் தீரஜ் கோரிடம் மாட்டிக் கொண்டு படும் அவஸ்தைகள் ....

அறிமுக நாயகன் அரவிந்த் இந்த வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். அப்பாவியாகவும். தீரஜ் கோரிடம் மாட்டிக்கொண்டு அழும் காட்சிகள் பிறகு உயிருக்கு பயந்து ஓடும் காட்சிகள் நான் உங்களுக்கு நாயாக இருப்பேன் என்னும் போது ஏய் இவன் நாயண்டா இல்லை காக்ரோச் என்கிறபோது தொடங்கி அசத்திவிட்டார் அரவிந்த்.

நீண்ட இடைவெளிக்குபின் சார்மி கவர்ச்சிக்காக பயன் படுத்தியிருக்கிறார்கள். கோட்டா சீனிவாசராவ், ஜெயபிரகாஷ் இருவரும் அமர்க்களமான ரவுடிகள். சுகுமாரின் ஒளிப்பதிவு, தரணின் இசை அருமை. மீண்டும் ஒரு ஆக்ஷன் விறுவிறுப்பு திரில்லர் படம் தந்துள்ளார் பிரபு சாலமன்

பெ‌ருமா‌ள்‌


நி‌றுவனம்‌: சிருஷ்டி பிக்சர்ஸ்
நடி‌ப்‌பு‌: சுந்தர்.C, மீனாட்சி, நமீதா, விவேக், கோட்டா சீனிவாசராவ்
இயக்‌கம்‌: வின்சென்ட் செல்வா இசை‌:ஸ்ரீகாந்த்தேவா
பா‌டல்‌கள்‌: நா‌.முத்‌துகுமா‌ர்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌: N.பானு முருகன்
கலை‌: ஜி‌.கே‌ சண்‌டை‌ப்‌பயி‌ற்‌சி‌: சூப்பர் சுப்ராயன்
மக்‌கள்‌ தொ‌டர்‌பு‌: நிகில்


போலி மருந்தால் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்ற ஒரு டாக்டரின் உதவியுடன் அந்த போலி மருத்துவ தொழிற்சாலையை அழித்து மக்களை காப்பாற்றும் படம். ஆந்திராவில் அமைச்சராக இருக்கும் கோட்டா சீனிவாசராவ் போலி மருந்து தயாரித்து அதை அரசு மருத்துவ மனைகளுக்கு அனுப்பி அங்கு சிகிச்சைக்கு வரும் அப்பாவி ஏழைகளின் உயிர்களை பறிக்கிறார்.


இதை கண்டு பிடித்த டாக்டர் மீனாட்சியை கோட்டா சீனிவாசனின் ஆட்கள் கொலை செய்ய வருகின்றனர். அவர் தப்பித்து சுந்தர்.C யிடம் அடைக்கலம் ஆகிறார். அப்போது கோட்டாசீனிவாசனின் மகனை அடித்து அவனுக்கு மரண பயத்தை ஏற்படுத்துகிறார். இந்நிலையில் சுந்தர்.C யையும், மீனாட்சியையும் தேடி கோட்டா சீனிவாசராவ் சென்னை வருகிறார். பிறகென்ன சுந்தர்.C கோட்டாவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி கோர்ட் படியேறுகிறார். சுந்தர்.C தண்டனை வாங்கித் தருகிறார்.


பைனான்சில் கார் வாங்கி தவணை ஒழுங்காக செலுத்தா ஆட்களை தேடி கார்களை பறிமுதல் செய்யும் பெருமாளாக சுந்தர்.C அவரை அடைய துடிக்கும் திருடியாக நமீதா. மருத்துவ டாக்டராக வரும் மீனாட்சியுடன் காதல்.... இரட்டை வேட விவேக் என்று பெரிய பட்டாளத்தை வைத்துக் கொண்டு வின்சென்ட் செல்வா இவர்களை பயன் படுத்தாமல் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனை மட்டுமே நம்பி படமெடுத்துள்ளார்.


படத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே தமிழ் வசனங்கள் வருகிறது. ஏதோ தெலுங்கு படம் பார்த்த உணர்வு. ஸ்ரீகாந்த் தேவா இசையில் காதல் வைபோகமே கேட்கும் ரகம். நமீ‌தாவின் அழகு பிரதேசங்களை அழகாக படமெடுத்துள்ளத பா‌னமுருகன்‌ கே‌மி‌ரா‌. நல்ல படங்களை தந்த வின்சென்ட் செல்வாதான் இப்படத்தை இயக்கினாரா என்பது சந்தேகமே.

சி‌வா‌ மனசுல சக்‌தி‌


நி‌றுவனம்‌: வி‌கடன்‌ டா‌க்‌கீ‌ஸ்‌
தயா‌ரி‌ப்‌பு‌: பா‌.சீனிவாசன்
நடி‌ப்‌பு‌: ஜீ‌வா‌, அனுயா‌, சந்‌தா‌னம்‌, ஊர்‌வசி‌,
இயக்‌கம்‌: ரா‌ஜே‌ஷ்‌‌.எம்‌ இசை‌: ‌யு‌வன்‌சங்‌கர்‌ரா‌ஜா‌
பா‌டல்‌கள்‌: நா‌.முத்‌துகுமா‌ர்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌: சக்‌தி‌ சரவணன்‌
படத்‌தொ‌குப்‌பு‌‌: வி‌வே‌க்‌ஹர்‌ஷன்‌‌ கலை‌: வி‌த்‌தே‌ஷ்‌
சண்‌டை‌ப்‌பயி‌ற்‌சி‌: ரா‌ஜசே‌கர்‌ மக்‌கள்‌ தொ‌டர்‌பு‌: ஜா‌ன்‌சன்‌‌

ஒரு இளைஞனுக்கும் இளம் பெண்ணுக்கும் இடையே நடைபெறும், செல்ல சண்டைதான் சிவா மனசுல சக்தி. சிவாவும் சக்தியும் ஒரு ரயில் பயணத்தில் சந்திக்கின்றனர் அப்போது இருவரும் தங்களது வேலையை பீலாவை ஆரம்பிக்கின்றனர்.சிவா குரியர் பையனாக வேலை செய்கிறார் ஆனால் தன்னை ஒரு ராணுவ வீரன் என்றும் வானொலி நிலையநிகழ்ச்சி தொகுப்பாளியான சக்தி தன்னை விமான பணிப்பெண் என்று பொய் சொல்லி வரும் இவர்களது நட்பும் சண்டையாக வளர்ந்து பின்னர் காதலில் முடிகிறது.
லோக்கல் பசங்களின் சேட்டையெல்லாம் செய்யும் ஜீவா.... பாண்டிச்சேரி மதுவை அனுயா வீட்டிற்கு அனுப்பி அவரை அவரது அப்பாவிடம் மாட்டி விடுவது.... தன் பிறந்தநாளை தப்பாக சொல்லி தன் குடும்பத்தார் முன்னிலையில் அவமான படுத்துவது.... மப்பில் தான் வேலை பார்க்கும் அலுவலகத்துக்கே வந்து கலாய்ப்பது. என ஜீவா செய்யும் ஒவ்வொரு சேட்டைகளும் ரசிக்க வைக்கிறது.
அறிமுக நாயகி அனுயா நம்பமுடியவில்லை நடிப்பில் ஜீவாவுக்கு சவால் விடுகிறார். சந்தானம், ஜீவாவின் அம்மாவாக ஊர்வசி, அனுயாவின் அப்பாவாக பேராசிரியர் ஞானசம்பந்தம் அனைவரும் நச்....
நாமுத்துகுமாரின் வரிகளில் ஒருகல் ஒரு கண்ணாடி.... பாடல் இனிமை. நாங்கள் MGR இல்லையக பாடல் கிருகிருப்பு. சில இடங்களில் தொய்வுகள் ஏற்பட்டிருந்தாலும் சிவா மனசுல சக்தி இளமை துள்ளலாகவே அமைந்துள்ளது. அறிமுக இயக்குனர் ராஜேஷ் எதார்த்த காட்சிகளை அருமையாக படபிடித்துள்ளார்.

குடி‌யரசு


தயாரிப்பு: திருச்செந்தூர் முருகன் புரடக்ஷன்ஸ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : H.M.சபீர் ஹீசைன்
இசை: கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு: கவிதாலயா 'பாபு'
சண்டைப்பயிற்சி: தவசிராஜ் மக்‌கள்‌ தொ‌டர்‌பு‌: மெளனம் ரவி
நடிகர்கள்: விக்னேஷ்வரன், சுகுணா, நீபா, சுரேஷ் கண்ணன், நிழல்கள் ரவி, சேது விநாயகம்


இந்த சமுதாயத்தை தூக்கி நிறுத்தும் தூண்களில் பத்திரிக்கையும் ஒன்று. அந்த பத்திரிக்கை நிருபர் கண்டு பிடிக்கும் ஊழல் பற்றிய கதை குடியரசு. விஷுவல் கம்யூனிகேஷன் மாணவன் கண்ணன் (விக்னேஸ்வரன்) கல்லூரி ஆண்டு விழாவில் பத்திரிக்கை தர்மம் பற்றி பேசுகிறார். அவரது பேச்சு அவருக்கு குடியரசு பத்திரிக்கையில் நிருபர் வேலையை வாங்கித்தருகிறது அதை வைத்து அமைச்சர் அம்பலவாணன் (சேது விநாயகம்) நடத்தி வரும் நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபடுகிறது இதனை கண்டுபிடித்து அமைச்சர் அம்பலவாணன் பதவியைபறித்து மக்கள் மேடையில் தண்டனை வாங்கி தருகிறார். இடையிடையே தன் காதலி ராதா (சுகுணா) வுடன் காதலிலும் ஈடுபடுகிறார் விக்னேஷ்வரன்.


துடிப்பான பத்திரிக்கை நிருபராக விக்னேஷ்வரன் பரபரப்பாக இயங்கி மந்திரி பற்றிய ஆதாரத்தை திரட்டுகிறார்.அதனால் வரும் பகையை பத்திசாலிதனமாக எதிர் கொள்கிறார்.கூடவே சுகுணாவின் காதல் தோல்வியால் துவள்கிறார்.


இதுவரை மெயின் வில்லனாக வராத சேது விநாயகம் இப்படத்தில் வில்லனாக வந்து அசத்துகிறார். இரண்டாவது நாயகன் சுரேஷ் கண்ணன் படு சாமர்த்தியமாக சுகுணா வீட்டிற்குள் நுழைந்து காதலையும் கலைகிறார். சுரேஷ் கண்ணன், போலீஸ் அதிகாரி சபீர் உசேன், ரவுடிகளின் தலைவர் சத்யநாராயணா, ஆகிய மூவரும் கராத்தே பிளாக் பெல்ட் பெற்றவர்கள். சண்டையில் அசத்துகின்றனர்.

விக்னேஷ்வரனை காதலில் விழவைத்து, பிறகு விலகிச் செல்லும் சுகுணா, சுரேஷ் கண்ணனால் ஏமாற்றப்பட்டு காதல் தோல்வியில் வாடும் நீபா இருவரும் அழகு.


சுகுணாவின் அப்பா நிழல்கள் ரவி, நேர்மையான முதலமைச்சர் ஜான் அமிர்தராஜ் - பத்திரிக்கை ஆசிரியர், ஸ்ரீகாந்த், ஆடிட்டராக வரும் V.S.ராகவன் ஆகியோர் தங்களது பக்குவப்பட்ட நடிப்பால் கேரடருக்கு உயிரூட்டுகிறார்கள்.


கார்த்திக்ராஜாவின் இசை கவிதாலயா பாபுவின் கேமரா படத்திற்கு பலம் சேர்க்கிறது.இருப்பினும் காட்சிக்கு காட்சி ஒட்டாமல் ஏதோ ஒரு குறையோடு முடிகிறது படம்.

என்‌னை‌ தெ‌ரி‌யு‌மா‌


நி‌றுவனம்‌: ஸ்ரீ லட்‌சுமி‌ பி‌ரசன்‌னா‌ பி‌க்‌சர்‌ஸ்‌
தயா‌ரி‌ப்‌பு‌: லட்‌சுமி‌ மஞ்‌சு
நடி‌ப்‌பு‌: மனோ‌ஜ்‌, ரி‌யா‌செ‌ன்‌, சி‌னேகா‌ உல்‌லா‌ல்‌‌, நா‌சர்‌, ‌பி‌ரமா‌னந்‌தம்‌‌,
இயக்‌கம்‌: அஜய்‌சா‌ஸ்‌தி‌ரி‌ ‌ இசை‌: ‌தர‌ன
பா‌டல்‌கள்‌: நா‌.முத்‌துகுமா‌ர்‌,
மக்‌கள்‌ தொ‌டர்‌பு‌: டை‌மண்‌ட்‌ பா‌பு‌

தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் ‌மனோஜ் நடி‌த்‌து உள்‌ள படம், ''என்னை தெரியுமா?''. தூங்கி எழுந்தால் அவருக்கு யார் என்றே தெரியாது. எதி‌ரி‌ல்‌ உள்‌ள வி‌ளம்‌பர போ‌ர்‌டி‌ல்‌ எழுதப்பட்டிருக்கும் வாசகங்கனை‌ படி‌த்‌து டேப்பை ஆன் செய்து அவரை‌ப்‌ பற்றி தெரிந்து கொள்வா‌ர்‌.

அவர்‌ கா‌ர்‌ பா‌ர்‌க்‌கி‌ங்‌கி‌ல்‌ அவரது கா‌ர்‌ எது என்‌பதை‌ கா‌ர்‌ சா‌வி‌யி‌ன்‌ பட்‌டன்‌ சொ‌ல்‌லும்‌. வே‌லை‌க்‌கு போ‌கும்‌ வழி‌யை‌ கா‌ரி‌ல்‌ உள்‌ள டே‌ப்‌ சொ‌ல்‌லும்‌. அலுவலகத்‌தி‌ல்‌ அவரது இருக்‌கை‌, அவரது கா‌தலி‌ என எல்‌லா‌வற்‌றை‌யு‌ம்‌ அவரது தி‌றமை‌யா‌ன பே‌ச்‌சா‌ல் ‌தெ‌ரி‌ந்‌துகொ‌ண்‌டு போ‌ய்‌ அமர்‌வா‌ர்‌. பே‌சுவா‌ர்‌. சி‌ல சமயம்‌ தா‌ன்‌ என்‌ன பதவி‌யி‌ல்‌ இருக்‌கி‌றோ‌ம்‌ என்‌றே‌ தெ‌ரி‌யா‌து. மற்‌றவர்‌களி‌டம்‌ போ‌ட்‌டு வா‌ங்‌கி‌ தெ‌ரி‌ந்‌து கொ‌ள்‌வா‌ர்‌.

ஒருநா‌ள்‌ அவருக்‌கு உதவு‌ம்‌ டே‌ப்‌ வே‌லை‌ செ‌ய்‌யா‌து. அதனா‌ல்‌ தவி‌த்‌துப்‌ போ‌வா‌ர்‌. அது போ‌தா‌து என்‌று அவர்‌ அவரது முதலா‌ளி‌யை‌ கொ‌லை‌ செ‌ய்‌துவி‌ட்‌டதா‌க கை‌தா‌கி‌றா‌ர்‌. அவர்‌ யா‌ர்‌ என்‌றே‌ தெ‌ரி‌யா‌மல்‌ அந்‌த கொ‌லை‌யை‌ எப்‌படி‌ செ‌ய்‌தா‌ர்‌ என்‌பதற்‌கும்‌ பதி‌ல்‌ சொ‌ல்‌ல வே‌ண்‌டி‌ய நி‌லை‌. அதை‌ எப்‌படி‌ தெ‌ரி‌ந்‌து கொ‌ள்‌கி‌றா‌ர்‌ மீ‌ள்‌கி‌றா‌ர்‌ என்‌பது மீ‌தி‌ படம்‌.

மனோஜ் ஆட்டம், பாட்டம், அப்பாவி நடிப்பு என முதல் படத்தில் பலமாக முத்‌தி‌ரை‌ பதி‌க்‌கி‌றா‌ர்‌. ரவு‌டி‌கள்‌ துரத்‌தும்‌ போ‌து கட்‌டி‌ம்‌ கட்‌டி‌டமா‌க தாவித்தாவி ஓடும் காட்சியிலும்‌ வி‌யக்‌க வை‌க்‌கி‌றா‌ர்‌. பா‌டல்‌ கா‌ட்‌சி‌யி‌லும்‌ அபா‌ர தி‌றமை‌ தெ‌ரி‌கி‌றது. தா‌ய்‌ எட்‌டடி‌ பா‌ய்‌ந்‌தா‌ல்‌ குட்‌டி பதி‌னா‌றடி‌ பா‌யு‌ம்‌ என்‌று சொ‌ல்‌வா‌ர்‌கள்‌. கட்‌டி‌டம்‌ ஏறி‌ குதி‌த்‌து ஒடும்‌ கா‌ட்‌சி‌யை‌ பா‌ர்‌க்‌கி‌ற போ‌து மனோ‌ஜ்‌ முப்‌பத்‌தி‌ரெ‌ண்‌டு அடி‌ கூட பா‌ய்‌வா‌ர்‌ போ‌ல. இது தா‌னே‌ வளர்‌ச்‌சி‌.

நல்‌ல பொ‌ண்‌ணு மா‌தி‌ரி‌ இருந்‌து கெ‌ட்‌ட பெ‌ண்‌ணா‌க ரியாசென், கி‌ளா‌மரா‌க நடி‌த்‌தி‌ரக்‌கி‌றா‌ர்‌. ஸ்நேகா உல்லால் பா‌ர்‌க்‌கும்‌ பா‌ர்‌வை‌யே‌ போ‌தை‌ ஏத்‌துகி‌றது. பா‌டல்‌ கா‌ட்‌சி‌யி‌ல்‌ தி‌யே‌ட்‌டரை‌ குலுங்‌க வை‌க்‌கி‌றா‌ர்‌.‌
பரபரப்‌பா‌ன படு வே‌கமா‌ன தி‌ரை‌க்‌கதை‌. அதை‌ எதி‌ர்‌பா‌ர்‌ப்‌போ‌டும்‌ சுவாரஸ்யம் குறையாமலும்‌ படமா‌க்‌கி‌யி‌ருக்‌கி‌ன்‌றனர்‌ இயக்‌குநர்‌ அஜய்‌சா‌ஸ்‌தி‌ரி‌. தரனி‌ன்‌ இசை‌ படு சூ‌ப்‌பர்‌. நா‌.முத்‌துகுமா‌ரி‌ன்‌ வரி‌கள்‌‌ மனதுக்‌கு இதம்‌. ''நீனு மீக்கு தெல்சா'' - தெலுங்கு படத்தை‌ தமி‌ழுக்‌கு தயா‌ரி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ மோ‌கன்‌பா‌பு‌ மகள்‌ லக்‌ஷ்‌மி‌ மஞ்‌சு.