Saturday, August 8, 2009

சற்‌றுமுன்‌ கி‌டை‌த்‌ததகவல்‌

நி‌றுவனம்‌: ஏர்‌ மீ‌டி‌யா‌ தயா‌ரி‌ப்‌பு‌: எஸ்‌.பாஸ்‌கர்‌
இயக்‌கம்‌: எஸ்‌.பி‌.பு‌வனை‌ கண்‌ணன்‌ இசை‌:பா‌லா
‌நடி‌ப்‌பு‌: கனல்‌ கண்‌ணன்‌, கே‌.எஸ்‌.ரவி‌குமா‌ர்‌, டி‌.பி‌.கஜே‌ந்‌தி‌ரன்‌, பா‌ரதி‌, குஷ்‌பு‌, மீ‌னா‌ட்‌சி‌
சண்‌டை‌ப்‌பயி‌ற்‌சி‌: கனல்‌ கண்‌ணன்‌
ஒளி‌ப்‌பதி‌வு‌: ஏ.எல்‌. நா‌ரா‌யணன்‌ரா‌மன்‌
கலை‌: வெ‌ங்‌கல்‌ ரவி‌, நே‌த்‌யா‌
படத்‌தொ‌குப்‌பு‌: டா‌ன்மே‌க்‌ மக்‌கள்‌தொ‌டர்‌பு‌: ஜா‌ன்‌
தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கம்‌: பி.எ‌ஸ்‌.ரா‌ஜே‌ந்‌தி‌ரன்‌

காமுகர்களை கோரமாய் கொல்லும் சைக்கோ கொலைகாரி கதை.

கிராமத்தில் வசிக்கும் சிவாவுக்கு முறைப்பெண் தேனு மேல் பிரியும். இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. தேனுவோ சினிமா கனவில் மிதக்கிறாள். ஒரு படத்தில் நடித்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என நிர்ப்பந்திக்கிறாள்.

அவள் விருப்பப்படி பட்டிணத்துக்கு அழைத்து வந்து நடிகையாக்குகிறான் சிவா. ஹிட்படங்களில் நடித்து பணமும் புகழும் குவிய போதைக்கு அடிமையாகி மனம் மாறுகிறாள். சிவாவையும் விரட்டியடிக்கிறாள்.

ஆத்திரமாகும் சிவா அவளை கொல்ல முயற்சிக்க... இன்னொரு மர்ம நபரால் சாகடிக்கப்படுகிறாள். கொலை பழி சிவா மேல் விழுகிறது. அவன் மனநிலை பாதித்தவன் என முத்திரை குத்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்படுகிறான். டாக்டர் குஷ்பு அவனை குணமாக்கி அனுப்புகிறார்.

இன்னொரு புறம் தொடர் கொலைகள் நடக்கிறது. கண்களை குத்தி கொடூரமாக ஆண்கள் சாகடிக்கப்படு கின்றனர். குஷ்பு வீட்டுக் குள் புகுந்து அவர் மகள் பாரதியை கொல்லப் போவதாக மிரட்டுகிறான் சிவா. போலீஸ் உடையில் இன்னொரு நபரும் அதே வீட்டில் புகுந்து கற்பழிக்க முயற்சிக்கிறான். பாரதி தப்பிக்க போராடுகிறார். அப்போது சைக்கோ கொலையாளி யார்? என்பது தெரிய வருவது அதிர்ச்சி திருப்பம்.

சிவாவாக வரும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் நடிப்பிலும் பாஸாகியுள் ளார். தேனு வீட்டுக்குள் புகுந்து அவளை கொல்ல துடிக்கும் ஆரம்பமே பரபர... பாரதியை வீட்டு சிறையில் வைத்து இம்சிக்கும் சீன்கள் திகில்... பிளாஷ்பேக்கதையில் அனுதாபம் அள்ளுகிறார்.குஷ்பு மகளாக வரும் பாரதி அதிர வைக்கிறார். காமுகர்களை கொடூரமாக சாகடிக்கும் கொலையாளி அவர்தான் என்ற முடிச்சு அவிழும்போது தூக்கி வாரிபோடுகிறது.
சைக்கோவாக மாறும் போது கண்களை விரித்து தெத்தி தெத்தி நடந்து பயமுறுத்துகிறார்.

டாக்டராக வரும் குஷ்பு போலீஸ் அதிகாரியாக வரும் கே.எஸ்.ரவிக்குமார் பாத்திரங்களும் அழுத்தம். தேனுவாக வரும் மீனாட்சி கவர்ச்சி விருந்து படைக்கிறார்.
பல கோணங்களில் கதையை நகர்த்தி திகில்,சஸ்பென்ஸ் என விறுவிறுப்பாக படமாக்கியுள்ளார் இயக்குனர் புவனை கண்ணன்.

பிளாஷ்பேக், சஸ்பென்ஸ் மிகுதியாக இருப்பதால் திரைக்கதையில் குழப்பமும் தலைகாட்டுகிறது.

No comments:

Post a Comment