நிறுவனம்: கலாநிதிமாறன் வழங்கும் சன் பிக்சர்ஸ்
தயாரிப்பு: கல்பாத்தி எஸ்.அகோரம்
இயக்கம்: ஆர்.என்.ஆர்.மனோகர் இசை: டி.இமான்
நடிகர்கள்: நகுல், சுனேனா, பவன், கருணாஸ், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், ராஜ்கபூர், சந்தானபாரதி, டெல்லிகணேஷ், மீராகிருஷ்ணன், மனோபாலா, தாரணி, பாடல்கள்: நா.முத்துகுமார், பா.விஜய், விவேகா
ஒளிப்பதிவு: வெற்றி, படத்தொகுப்பு: மனோஜ்,
கலை:எம்.ஜி.முருகன், ஸ்டண்ட்: சுப்ரீம் சுந்தர்.
நடனம்: அசோக்ராஜன், பிரேம் ரக்ஷித், யாசின்,
தயாரிப்பு நிர்வாகம்: வெங்கட் மாணிக்கம்,
மக்கள் தொடர்பு: மெளனம்ரவி
தப்பு செய்பவர்களை தட்டிக்கேட்பவன் மாசி. அவனுக்க நடனப் பள்ளியில் படிக்கும் திவ்யா மீது காதல். மாசியை ரவுடியாக பார்க்கிறாள் திவ்யா. அவளை மறக்க முடியாமல் தவிக்கும் மாசி நண்பர்களின் உதவியுடன் மணி என்ற பெயரில் திவ்யா வீட்ற்குள் திவ்யா இல்லாத நேரத்தில் புகுந்து, உதவி செய்வது பேhல நடித்த திவ்யாவின் குடும்பத்தினர் மனதில் இடம் பிடிக்கிறார்.
திவ்யாவுக்கே ஒரு கட்டத்தில் மணியை பார்க்க வேண்டும் என்று ஆவல் எற்படுகிறது. ஒரு முறை மணியை பார்த்த போது அவனை மாசி என்று சொல்லி ஏமாற்றிவிட்டான் என்று கோப்படுகிறார். ஆனால் மாசி வேறு மணி வேறு என்று நம்பவைக்ிகிறான் மணி. மாசியை வெறுக்கும்திவ்யா மணியை ககாதலிக்கிறார்.
அந்த எரியாவுக்கு காவல் துறை ஆய்வாளராக வரும் பவன் ஆரம்பத்துலயே மாசியால் அசிங்கப்படுகிறார். அவரது உறவுக்கார முறைப் பெண்தான் திவ்யா. அதனால் இருவரையும் பிரிக்க பல முறை முயற்சி செய்கிறார். இவனது சொல்வாக்கும், செல்வாக்கும் கண்டு, அதிரும் பவன் கடைசியில் எப்படி உண்மையை திவ்யாவுக்கு உணர்த்துகிறார். உண்மையை அறிந்த பிறகு திவ்யா என்ன முடிவுஎடுக்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.
நல்ல பொழுது போக்கு படம். அதை காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் கலந்து தந்திருக்கின்றார் இயக்கநர். காதலில் விழுந்தேன் படத்தில் நடித்த நகுலன் சுனேனா ஜோடி இந்தப் படத்திலும் மாசிலாமணி, திவ்யா பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நகுலன் முன்பைவிட சுறுசுறுப்பும் லூட்டியும் கலந்த வேடத்தில் சமாய்க்கிறார். தன்னை ஒரு ஆக்ஷன் கதாநாயகனாக நிருபித்திருக்கிறார். அவரோடு போட்டி போட்டு தன் திறமையை நிருபித்திருக்கிறார் சுனேனா. பாடல்காட்சிகளில் மட்டுமல்லாது வசனக்காட்சிகளிலும் அவரது பங்கு பலே. காதலில் விழுந்தேன் படத்தில் ஏமாற்றியவர் இதில் நடிக்கவும் செய்திருக்கிறார்.
பதரவைத்து பதறி போகும் காட்சிகளில் பளிச்சிடுகிறார் பவன். கருணாஸிடம் பணத்தை கொடுத்துவிட்டு சினிமாவில் நடிக்க ரஜினி, கமல் விஜய், சிம்பு, சூர்யா என பல நடிகர்களின் கெட்டப்பில் வந்து தியேட்டரை சிரிப்பில் அதிரவைக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர்.
நகுலன் நண்பர்களாக வந்து பல இடங்களில் சிரிக்க வைக்கின்றனர் சந்தானம், ஸ்ரீநாத் கூட்டணி. டெல்லிகணேஷ், மீராகிருஷ்ணன் தாரிணி, அழகு என படத்தில் பலர் நடித்திருக்கின்றனர்.
திரைத்துரையில் பல வருட அனுபவம் உள்ள ஆர்.என்.ஆர்.மனோகர் இந்தப்படத்தின் கதை எழுதி இயக்கியிருக்கிறார். துள்ளாத மனமும் துள்ளும் போன்ற சாயல் உள்ள படமாக இருந்தலும், அதை ஜாலியாக எங்கேயும் தொய்வில்லாமல் படுவேகத்தில் கொடுத்து வெற்றிபெற்றிருக்கிறார்.
அவருக்கு டி. இமானின் இசை துணை நிற்கிறது. "ஓயோடி விளையாட...", "ஓ திவ்யா திவ்யா.." பாடல்கள் தியேட்டரில் கலைகட்டுகிறது.
ஓடியோடி விளையாட .... மாசிலாமணி ஓகே.