Tuesday, September 1, 2009

நீ‌ உன்‌னை‌ அறி‌ந்‌தா‌ல்‌


துரோகியான நண்பனை பழிவாங்கும் இளைஞன் கதை.

முரளியும், ரிஷிராஜும் நண்பர்கள். மீன் பாடி வண்டியில் லோடு ஏற்றி பிழைப்பு நடத்துகிறார்கள். இருவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். அவர்களுக்கு ஒரே மேடையில் திருமணம் நடத்த முரளி தாய் விரும்புகிறார். ஆனால் ரிஷி சதா போதையில் திரிவதால் அவரை மணக்க யாரும் முன்வரவில்லை.

முரளி மட்டும் முறைப்பெண் குஷியை திருமணம் செய்கிறார். ஒரு கட்டத்தில் குடித்து போதையில் வரும் ரிஷிராஜ் வீட்டில் தனியாக இருக்கும் குஷியை பலாத்காரம் செய்து மானபங்கப்படுத்தி கொலை செய்கிறார்.

ரிஷியை முரளிபழி வாங்குவது கிளை மாக்ஸ்...

முரளி, ரிஷி குடிசை பகுதி நண்பர்களாக அழுக்கு உடம்பில் கச்சிதமாக பொருந்துகின்றனர். முரளி, குஷி முதலிரவு கிளு கிளு. குஷி கொலையுண்டதும் கதறி சுடு காட்டில் மனைவியை புதைத்த இடத்தில் ஒப்பாரி வைத்து சோகபடுத்துகிறார். மனைவியை சாகடிதத்தது ரிஷிதான் என வேலைக்காரன் சொல்ல என் நண்பன் மீதே பழி சுமத்துகிறாயா என்று அவனை ஆவேசமாக அடித்து நொறுக்கி நட்பின் வீரியம் காட்டுகிறார்.

குடிகார ரிஷி வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். நண்பன் மனைவியை கற்பழித்து சாகடிப்பது திக். விலை மாதுவிடம் நடத்தும் களியாட்டங்கள் வெறுப்பேற்றும் வக்கிரம். ஆர்.கே.சுந்தர் இசையில் ஒத்த ஒத்த பாடல் இனிமை.

உன்‌னை‌ கண்‌ தே‌டுதே‌

நல்ல காதலில் இருந்து கள்ளக்காதல் வரைக்கும் எல்லா காதலையும் அலசிய தமிழ்சினிமாவில் மற்றுமொரு காதல் கதை... ஏழை ஹீரோ, பணக்கார காதலி. நொறுக்கு தீனியாக ஆரம்பிக்கிற லொள்ளு, ஒருகட்டத்தில் ஹீரோ உதயா மேல் காதலை வரவழைக்கிறது ஹீரோயின் சிந்துவுக்கு. கல்குவாரி ஓனரின் மகள் இப்படி தன் மேல் காதலாவார் என்பதை எதிர்பார்க்காத கூலித்தொழிலாளியின் மகன் உதயா எச்சில் விழுங்குகிறார். ஏற்பதா? வேண்டாமா? ஒருவழியாக எஸ் சொல்லி, ஏக்கத்தை தனித்தாலும் சூழ்நிலையே வில்லனாகிறது இவர்களின் காதலுக்கு. மீண்டும் சேர்ந்தார்களா? க்ளைமாக்ஸ்.

சேனல் ஒன்றுக்காக தனது கிராமத்து திருவிழாவை படம் எடுக்க போகும் உதயா, குவாரியில் கல் உடைக்கும் அம்மாவையும் பார்க்க போகிறார். அங்கேதான் ஹீரோயினின் நக்கல், நையாண்டி, இத்யாதி எல்லாம். சிந்து வாங்கிக் கொடுத்த புது டிரஸ்சை ஆசை ஆசையாக உதயாவை போட சொல்லி வற்புறுத்தும் அம்மா கலைராணி, அது பெண்கள் அணிகிற டிரஸ் என்பது தெரிந்ததும் சுருங்கி போவது ஏழைகளுக்கே உரிய இயலாமை.

உதயாவுக்கு அதிகம் வேலையில்லை. எந்நேரமும் கவலையோடு இருந்தால் போதும் என்று சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. சிரிக்கிற காட்சியிலும், சிம்னி விளக்கு மாதிரியே அமுங்கிக் கிடக்கிறார். ஒரே பாடலில் அண்ணாமலை ரேஞ்சுக்கு தொழில் அதிபர் ஆவதெல்லாம் ரொம்ப த்ரி மச். இவரது வாழ்வில் சார்மிளா குறுக்கிடும்போது சிந்து வந்து நிற்பதுதான் படத்தில் நிகழும் திடீர் திருப்பம்.

பந்து மாதிரி துள்ளுகிறார் சிந்து. தன்னால் ஒரு தாயும், மகனும் அடைகிற துன்பத்தை கண்டு தன்னையே கொடுக்க முன்வருவது அப்ளாஸ் அடிக்க வைக்கிறது. ஆனால், அவ்வளவு படித்தவர் போலீசிடம் வாயை திறந்து கூட தனது காதலர் இவர் அல்ல என்று சொல்லாமல் போனதுதான் ரொம்ப தப்ளாஸ்... கல்யாணமே கட்டிக்கொள்கிறாராம். பயங்கர டப்பாசு போங்க.

வையாபுரி, பாலாஜி, சாப்ளின் பாலு, ராம்ஜி என்று பழைய பெருங்காய டப்பாக்கள். காட்சியை திறக்கும்போதெல்லாம் காதடைத்து போகிறது.

சிற்பியின் இசையில் தை தை அச்சத்தை என்ற பாடல் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. ஒளிப்பதிவாளரும் தனது வேலையை கச்சிதாமாக செய்திருக்கிறார

சி‌ரி‌த்‌தா‌ல்‌ ரசி‌ப்‌பே‌ன்‌


பண்ணையார் மகளை காதலித்து மணக்க போராடும் இளைஞன் கதை... பண்ணை குடும்பத்து பெரியவர் எம்.எஸ். பாஸ்கர். தங்கையை மந்திரவாதி தியாகு காதலித்து கடத்தி போய் மணந்ததால் காதலையே வெறுக்கிறார்.
எம்.எஸ். பாஸ்கர் மகள் சுனுலட்சுமிக்கு தனது மகன் சத்யனை மணமுடித்து சொத்தை அபகரிக்க திட்டமிடுகிறார் தியாகு. ஆனால் சுனுலட்சுமிக்கு வீட்டு மானேஜர் மனோபாலா மகன் சத்யா மேல் காதல். ராத்திரிகளில் சந்தித்து ரகசியமாக காதலை வளர்க்கின்றனர்.ஒரு கட்டத்தில் காதல் விவகாரம் எம்.எஸ். பாஸ்கருக்கு தெரிய ஆவேசம். சத்யாவை விரட்டியடிக்கின்றனர். சுனுலட்சுமிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடு நடக்கிறது.
திருமணத்தை தடுத்து தன் மகனுடன் சுனுவை சேர்க்க தியாகு அடியாட்களுடன் வருகிறார். சத்யாவும் அனுவை கடத்தி போய் திருமணம் செய்ய வியூகம் வகிக்கிறார். அனுவை யார் மணந்தார் என்பது கிளைமாக்ஸ்...
முழுநீள காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படம். பெரிய காமெடி பட்டாளமே களம் இறங்கி சிரிப்பு தோரணம் கட்டுகின்றனர். இறுக்கத்துடன் துப்பாக்கியும் கையுமாய் திரியும் எம்.எஸ். பாஸ்கர்... மகாநதி சங்கரின் அடிதடி கோஷ்டி செய்யும் கோமளித்தன கலாட்டாக்கள்,
தியாகு, ஊர்வசி, சத்யன் கூட்டணியின் மந்திர, தந்திர ரவுசுகள் என காமெடி தர்பாரே நடத்துகின்றனர். சத்யா காதல் காட்சிகளில் பளிச்சிடுகிறார். சுனுலட்சுமி அகலமான கண்கள், வசீகர புன்னகையில் கவர்கிறார். சண்முகராஜன், மனோபாலா, கல்பனா, மயில்சாமி, சிங்கமுத்து ஆகியோரும் உள்ளனர். தியாகுவின் நிர்வாண வசிய யோசனையும் அதை கேட்டு சத்யன் செய்யும் கூத்தும் முகம் சுளிக்க வைக்கின்றனர்.
இயனியனின் இசையில் பாடல்கள் இனிமை. ரமேஷ் அழகிரியின் ஒளிப்பதிவும் அருமை. காமெடி பட இயக்குனர் வரிசையில் அழுத்தமாக தன்னை பதிவு செய்துள்ளார் வி. சந்திரசேகரன்.

இந்‌தி‌ரவி‌ழா‌


கொஞ்சம் வில்லங்கமான கதை. தனியார் தொலைக்காட்சியின் சீனியர் புரோகிராமர் ஸ்ரீகாந்த். அவரது நிகழ்ச்சியெல்லாம் டிஆர்பி ரேட்டிங்கில் எகிற, முதலாளியம்மா நமிதா மட்டும் யூஸ்லெஸ் ஃபெலோ என ஸ்ரீகாந்தை இன்சல்ட் செய்கிறார். காரணம், நமிதாவுக்கும், ஸ்ரீகாந்துக்குமான கசமுசா பிளாஷ்பேக்.
ஒருகட்டத்தில் ஸ்ரீகாந்தை பழிவாங்க, தன்னை கற்பழிக்க முயன்றதாக பொய்யாக புகார் சொல்கிறார் நமிதா. விஷயம் கோர்ட்டுக்கு வருகிறது.
நமிதாதான் கதை என்றான பிறகு அவரையே ரவுண்ட் கட்டுகிறது கேமரா. அழகுதான் என்றாலும் எத்தனை நேரம்தான் ரசிப்பது. சுகமான வாழ்க்கைக்காக எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் சுகம் கொடுக்க தயாராக இருக்கும் மாடல் நமிதா. இது தெ‌ரியாமல் அவ‌ரிடம் மனதை பறி கொடுக்கிறார் ஸ்ரீகாந்த். ஒரு கட்டத்தில் உண்மை பு‌ரிந்து நமிதாவை பி‌ரிகிறார். ஆனால் வினை ஹெலிகாப்டர் ஏறி வருகிறது.
ஸ்ரீகாந்துக்கு அடங்கிப் போகும் வேடம். அலட்டிக் கொள்ளாமல் அம்சமாக கேரக்டருடன் பொருந்திப் போகிறார். அவரது மனைவியாக வரும் ஹேமமாலினிக்கு அதிக வேலையில்லை. கோபத்தோடு கொஞ்சம் கவர்ச்சி காட்டுவதுடன் அவரது வேலை முடிந்து விடுகிறது.
இது தேவையா என்பது போல் நாசருக்கு ஒரு வேடம். நமிதாவின் கணவராம். ஐயோ.. ஐயோ.. கோர்ட் சீனில் நம் கொட்டாவிக்கு கொஞ்சம் ‌ரிலீப் தருகிறவர் விவேக். ஓவர்தான் என்றாலும் அவ‌ர் விடும் காமெடி பன்சுக்கு குலுங்கி சி‌ரிக்கிறது திரையரங்கம்.
படத்தில் மனம் திறந்து பாராட்டும்படி இருப்பது ஜெய் கமில் அலெக்ஸின் ஒளிப்பதிவு. வர்ணஜாலம் பு‌ரிந்திருக்கிறார் யதீஷின் இசையில் சுவாரஸிய மில்லை. ஹாவுட்டிலும் பிறகு பாலிவுட்டிலும் வெளிவந்த படத்தை நமிதாவை நம்பி எடுத்திருக்கிறார் ராஜேஷ்வர்.

ஒலி‌யு‌ம்‌ ஒளி‌யு‌ம்‌

கி‌ரண்‌பே‌டி‌‌ பற்‌றி‌ய குறும்‌படம்‌ வருவா‌க்‌கி‌ய சக்‌தி‌செ‌ல்‌லம்‌ தற்‌போ‌து இயக்‌கி‌ உள்‌ள படம்‌ ஒலி‌யு‌ம்‌ ஒளி‌யு‌ம்‌.

அடி‌மை‌ இந்‌தி‌யா‌வு‌க்‌கு ஒரு குழந்‌தை‌யை‌ப்‌ பெ‌ற்‌றுத்‌ தரமா‌ட்‌டே‌ன்‌. என்‌ற சொ‌ல்‌லும்‌ சுதந்‌தி‌ர உணர்‌வு‌ கொ‌ண்‌ட பெ‌ண்‌ணை‌ பலா‌த்‌கா‌ரம்‌ தா‌யா‌க்‌குகி‌றா‌ன்‌ கணவன்‌. பி‌றக்‌கி‌ற குழந்‌தை‌யை‌யெ‌ல்‌லா‌ம்‌ கொ‌டுத்‌து கொ‌ள்‌கி‌றா‌ள்‌ தா‌ய்‌. கடை‌சி‌க்‌ குழந்‌தை‌யை‌ கணவன்‌ கா‌ப்‌பா‌ற்‌றி ‌வி‌டுகி‌றா‌ன்‌.

அந்‌த குழந்‌தை‌ பெ‌ரி‌யவளா‌னதும்‌ அம்‌மா‌வை‌ப்‌ போ‌லவே‌ கொ‌ண்‌ட பெ‌ண்ணா‌க வளர்‌கி‌றா‌ள்‌. இவளக்‌கும்‌ அதே‌ கொ‌ள்‌கை‌‌. இவர்‌ இப்‌படி‌ இருந்‌தம்‌ ஒரு குடுமி‌ ஆசா‌மி‌ இவரை‌ வி‌ரும்‌பு‌கி‌றா‌ர்‌.

டா‌க்‌டர்‌ என்‌ற பெ‌யரி‌ல்‌ ஒரு வி‌ல்‌லன்‌ பெ‌ரி‌ய கா‌முகன் அவனது கா‌தலுக்‌கு தடை‌யா‌க இரக்‌கி‌றா‌ன்‌. அவனி‌டமி‌ருந்‌து நா‌யகி‌யை‌க்‌ கா‌ப்‌பற்‌றி‌, சுதந்‌தி‌ரம்‌ கி‌டை‌த்‌த நி‌மி‌டத்‌தி‌ல்‌ கதா‌நா‌யகன்‌ எப்‌படி‌ தா‌லி‌ கட்‌டுகி‌றா‌ன்‌ என்‌பது படம்‌.

படத்‌தி‌ல்‌ மோ‌கன்‌ அப்‌பா‌வி‌யா‌க நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. அவரது கறம்‌பு‌ நடி‌ப்‌பு‌ ரசி‌க்‌க வை‌க்‌கி‌றது. தனது வே‌டத்‌தை‌ நன்‌கு உணர்‌ந்‌து நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ அஸ்‌வதி‌. மொ‌ட்‌டை‌ தலை‌ ரா‌முவா‌க நடி‌த்‌தி‌ருக்‌கும்‌ பி‌ரபா‌, குழந்‌தை‌ முகம்‌ கொ‌டூ‌ர குணம்‌ உடை‌யவரா‌க நடி‌த்‌து பயம்‌ கா‌ட்‌டுகி‌றா‌ர்‌.

கா‌ன்ஸ்‌டபி‌ள்‌கோ‌வி‌ந்‌தசா‌மி‌யா‌க பா‌லம்‌ கல்‌யா‌ணசுந்‌தரம் நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. அதே‌ போ‌ல நீ‌ண்‌ட நா‌ட்‌களுக்‌கு பி‌றகு ஆனந்‌த்‌ பா‌பு‌வை‌ தி‌ரை‌யி‌ல்‌ பா‌ர்‌க்‌க முடி‌ந்‌தது. இன்‌னும்‌ அவருக்‌கு வா‌ய்‌ப்‌பு‌ கொ‌டுத்‌தி‌ருக்‌கலா‌ம்‌.‌

பு‌தி‌யவர்‌ யா‌னி‌தே‌ஷ்‌ இசை‌யி‌ல்‌ பா‌டல்‌கள்‌ பரவா‌ இல்‌லை‌ ரகம்‌. தே‌சப்‌பற்‌றுஉள்‌ள ஒரு படத்‌தை‌ கொ‌டுக்‌க‌ முயன்‌றி‌ருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌ சக்‌தி‌ செ‌ல்‌லம்‌. இன்னும்‌ நறுக்‌கி‌ வி‌றுவி‌றுப்‌பு கொடுத்தி‌ருக்‌கலா‌ம்‌.

வா‌ல்‌மீ‌கி‌

தி‌ருடர்‌களா‌ல்‌ கொ‌லை‌யா‌கி‌ தனது‌ குடும்‌பத்‌தி‌னரை‌‌‌ இழந்‌து தப்‌பி‌ வந்த சி‌றுமி‌, பெ‌ரி‌யவளா‌னதும்‌ தி‌ருடன்‌ என்‌று தெ‌ரி‌யா‌மா‌லே‌ தி‌ருடனை‌ வி‌ரும்‌பு‌கி‌றா‌ள்‌. தி‌ருட்‌டு, ஜெ‌யி‌ல்‌ என வா‌ழ்‌க்‌கை‌யா‌க இருக்‌கும்‌ அந்‌த இளை‌ஞன்‌, அவளது அன்‌பி‌ல்‌ கரை‌ந்‌து அவள்‌ மீ‌து அசை‌படுகி‌றா‌ன்‌.

மனதை‌ தி‌ருடி‌யவன்‌ தி‌ருடன்‌ என தெ‌ரி‌ந்‌ததும்‌ அதி‌ர்‌ந்‌து போ‌கும்‌ அவள்‌ அவனது நல்‌ல உள்‌ளத்‌தை‌ பு‌ரி‌ந்‌துகொ‌ண்‌டு அவனை‌ தி‌ருத்‌த முயல்‌கி‌றா‌ள்‌. அவனோ‌ அவளை‌ விட்‌‌டு வி‌லகுகி‌றா‌ன்‌. அவன்‌ தி‌ருந்‌த அவனும்‌, அவனது கூட்‌டா‌ளி‌களும்‌ இருக்‌கும்‌ இடத்‌தை‌ போ‌லீ‌சு‌க்‌கு போ‌ட்‌டு கொ‌டுத்‌து தொ‌ழி‌ல்‌ நடத்‌த முடி‌யா‌தளவு‌க்‌கு எதி‌ரி‌யா‌கி‌றா‌ள்‌ அவள்‌.

இந்‌த தி‌ருடனா‌ல்‌ கவரப்‌பட்‌ட இன்‌னொ‌ரு பெ‌ண்‌ இவனி‌‌ன்‌ தி‌ருட்‌டு தொ‌ழி‌ல்‌ தெ‌ரி‌ந்‌ததும்‌, கா‌தலுக்‌கு மூ‌ட்‌டை‌ கட்‌டி‌வி‌ட்‌டு தி‌ருடி‌ பி‌ழை‌ப்‌பவனை‌ வி‌ட உழை‌த்‌து பி‌ழை‌ப்‌பவனே‌ மே‌ல்‌ என்‌று அவனுக்‌கு பா‌டம்‌ பு‌கட்‌டுகி‌றா‌ள்‌.

மனம்‌ தி‌ருந்‌தி‌ உழை‌க்‌க அவன்‌ தயா‌ரா‌கும்‌ போ‌து, அவனை‌ போ‌ன்‌ற ஒரு தி‌ருடனா‌ல்‌ கா‌தலி‌யி‌ன்‌ சங்‌கி‌லி‌ அறுபடும்‌ போ‌து அவள்‌‌ கழுத்‌து அறுபட்‌டு இறந்‌துபோ‌கி‌றா‌ள்‌. அவன்‌ அடுத்‌து என்‌ன முடி‌வெ‌டுக்‌கி‌றா‌ன்‌ என்‌பது கி‌ளை‌மா‌க்‌ஸ்‌.

ஒரு தி‌ருடன்‌ தி‌ருந்‌தி‌ மற்‌ற தி‌ருடர்கள்‌‌ தி‌ருந்‌த உதவு‌கி‌றா‌ன்‌. அதை‌ அவர்‌களி‌ன்‌ வா‌ழ்‌க்‌கை‌யி‌ல்‌ நடை‌பெ‌றும்‌ சம்‌பவங்‌களி‌ல்‌ இருந்‌து கா‌ட்‌சி‌களா‌க்‌கி‌ படமா‌க தந்‌தி‌ருக்‌கி‌ன்‌றனர்‌. பெ‌ரும்‌பா‌லும்‌ பத்‌தி‌ரி‌கை‌களி‌ல்‌ பா‌டி‌‌த்‌த செ‌ய்‌தி‌களை‌ படமா‌க்‌கி‌யி‌ருப்‌பது பு‌துசு.

படம்‌ முழுக்‌க அழுக்‌கு முகத்‌துடன்‌ வந்‌து அந்‌தத்‌ தி‌ருடன்‌ பா‌த்‌தி‌ரத்‌தை‌ நி‌ற்‌க வை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர் அகி‌ல்‌‌. அவரது பே‌ச்‌சு செ‌யல்‌ சம்‌பவம்‌ எல்‌லா‌மும்‌ அந்‌த பா‌த்‌தி‌ரமா‌கவே‌ தெ‌ரி‌கி‌றது. ஒரு வா‌ர்‌த்‌தை‌யி‌ல்‌ சொ‌ல்‌ல வே‌ண்‌டும்‌ என்‌றா‌ல்‌ நல்‌லா‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. அந்‌த பா‌ம்‌பு‌ கொ‌ட்‌டு வா‌ங்‌கும்‌ இடம்‌ பகீ‌ர்‌.

அழகு முகமும்‌, ஆசை‌ப்‌படும்‌ உள்‌ளமுமா‌க மீ‌ரா‌ நந்‌தன்‌, அவரி‌ன்‌ எதி‌ர்‌பா‌ர்‌ப்‌பு‌ம்‌ செ‌யலும்‌ சல்‌யூ‌ட்‌ அடி‌க்‌க வை‌க்‌கி‌றது. பெ‌ரி‌ய பெ‌ரி‌ய கண்‌களுடன்‌ கனா‌க்‌கா‌னும்‌ தே‌வி‌கா‌வி‌ன்‌ நடி‌ப்‌பு‌ பலே, அஜய்‌, படவா‌கோ‌பி‌, கரா‌த்‌தே‌ வெ‌ங்‌கடே‌ஷன்‌ பலர்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌ன்‌றனர்‌. எல்‌லா‌ரும்‌ அந்‌த பா‌த்‌தி‌ரமா‌கவே‌ தெ‌ரி‌கி‌ன்‌றனர்‌.

அழகப்‌பனி‌ன்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ தி‌ருட்‌டு இளை‌ஞர்‌களி‌ன்‌ வா‌ழ்‌க்‌கை‌யை‌ வெ‌ளி‌ச்‌சம்‌ போ‌ட்‌டு கா‌ட்‌டுகி‌றது. இளை‌யரா‌ஜா‌ “என்‌னடா‌ பா‌ண்‌டி”‌ பா‌டலி‌ல்‌ உருக வை‌க்‌கி‌றா‌ர்‌. பி‌ன்‌னணி‌ இசை‌யிலும்‌‌ மி‌ரள வை‌க்‌கி‌றா‌ர்‌.

அந்‌த வா‌ல்‌மீ‌கி‌ தி‌ருந்‌தி‌ இரா‌மா‌யணம்‌ வர கா‌ரணமா‌க இருந்‌தா‌ர்‌. இந்‌த வா‌ல்‌மீ‌கி‌ தி‌ருந்‌தி‌ பல தி‌ருடர்‌கள்‌ தி‌ருத்‌த கா‌ரணமா‌க இருக்‌கி‌றா‌ர்‌. கதா‌நா‌யகி‌யா‌க நடி‌க்‌க ஆசை‌ப்‌பட்‌டு கா‌ல்‌ கே‌ளா‌க மா‌றும்‌ அந்‌த‌ப்‌ பெ‌ண்‌ணி‌ன்‌ நி‌லை‌, கழுத்‌து அறுபட்‌டு சா‌கும்‌ கதா‌நா‌யகி‌யி‌ன்‌ கெ‌தி‌, தி‌ருட்‌டு கொ‌டுத்‌தவர்‌களி‌ன்‌ அலறல்‌ சத்‌தம் என படத்‌தி‌ல்‌ வரும்‌ சம்‌பவங்‌களை‌ப்‌பா‌ர்‌த்‌து பத்‌து பே‌ர்‌ தி‌ருந்‌தி‌னா‌ல்‌ கூட இந்‌தப்‌ படத்‌துக்‌கு மி‌கப்‌பெ‌ரி‌ய வெ‌ற்‌றி‌தா‌ன்‌.

முத்‌தி‌ரை‌

கி‌ரா‌மத்‌தி‌ல்‌ கோ‌வி‌ல்‌ உண்‌டி‌யலை‌ தி‌ருடி‌ மக்‌களா‌ல்‌ ஊரை‌ வி‌ட்‌டு வி‌ரட்‌டப்‌படும்‌ தி‌ருட்‌டு பே‌ர்‌வழி‌ நி‌தி‌ன்‌ சத்‌யா‌. அவர் செ‌ன்‌னை‌ யி‌ல்‌ ஹை‌டெ‌க்‌ தி‌ருடரா‌ன டே‌னி‌யல்‌ பா‌லா‌ஜி‌யு‌டன்‌ நட்‌பு‌ ஏற்‌பட்‌டு இருவரும்‌ சே‌ர்‌ந்‌தே‌ தங்‌களது தி‌ல்‌லா‌லங்‌கடி‌ வே‌லை‌களை‌ செ‌ய்‌து வருகி‌ன்‌றனர்‌. இவர்‌களுக்‌கு லட்‌டு போ‌ல முதல்‌வரை‌ கொ‌லை‌ செ‌ய்‌து அடுத்‌து முதல்‌வரா‌க போ‌கும்‌ பொ‌ன்‌வண்‌ணனி‌ன்‌ கொ‌லை‌செ‌யல்‌ பற்‌றி‌ய சி‌டி‌ கி‌டை‌க்‌கி‌றது.

அந்‌த சி‌டி‌யை‌ பெ‌றுவதற்‌கு போ‌லீ‌ஸ்‌ தரப்‌பி‌லி‌ருந்‌தும்‌, ரவு‌டி‌கள்‌ தரப்‌பி‌ லி‌ருந்‌தும்‌ துரத்‌தல்‌ நடக்‌கி‌றது. இருவரும்‌ தங்‌களது கா‌தலி‌களுடன்‌ தலை‌ மறை‌வா‌கி‌ன்‌றனர்‌. அந்‌த ஆதா‌ரத்‌தை‌ பொ‌ண்‌வண்‌ணனி‌டம்‌ பணம்‌ கரக்‌க முயல்‌கி‌ன்‌றனர்‌. இதி‌ல்‌ சி‌ன்‌ன தி‌ருடர்‌களா‌ அல்‌லது பெ‌ரி‌ய தி‌ருடர்‌களா‌ யா‌ர்‌ வெ‌ற்‌றி‌ பெ‌றுகி‌றா‌ர்‌கள்‌ என்‌பது பரபரப்‌பா‌ன கா‌ட்‌சி‌கள்‌.

படத்‌தி‌ன்‌ ஆரம்‌பம்‌ முதலி‌லி‌ருந்‌தே‌ நகை‌ச்‌சுவை‌யு‌ம்‌ அடுத்‌து நடக்‌கப்‌ போ‌கி‌றதோ‌ என்‌ற டெ‌ன்‌ஷணும்‌ தொ‌ற்‌றி‌க்‌கொ‌ள்‌கி‌றது. கா‌தல்‌ மோ‌தல்‌ போ‌ன்‌ற சுவரா‌ஸ்‌யங்‌களும்‌ துரத்‌தல்‌அடி‌த்‌தல்‌ போ‌ன்‌ற அதி‌ரடி‌ மி‌ரட்‌டல்‌களும்‌ படத்‌தி‌ல்‌ அடுத்‌தடுத்‌து வந்‌து ரசனை‌க்‌கு படை‌க்‌கி‌றது.

இது வரை‌ வி‌ல்‌லனா‌க நடி‌த்‌து வந்‌த டே‌னி‌யல்‌ பா‌லா‌ஜி‌ கதா‌நா‌யகனா‌க அவதா‌ரம்‌ எடு‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. அவரது ஸ்‌டை‌ல்‌ மே‌னரி‌சம்‌ பா‌ர்‌வை‌ என அனை‌த்‌தும்‌ ரவு‌டி‌யி‌ன்‌ செ‌யல்‌களை‌ நம்‌ கண்‌முன்‌ கொ‌ண்‌டு வந்‌து நி‌றுத்‌துகி‌றது. மழை‌யி‌ல்‌ நடக்‌கும்‌ அதி‌ரடி‌ கா‌ட்‌சி‌களி‌ல்‌ மி‌ரள வை‌க்‌கி‌றா‌ர்‌. லட்‌சுமி‌ரா‌யு‌டன்‌ பா‌டல்‌ கா‌ட்‌சி‌களி‌ல்‌ பரவசப்‌படுத்‌துகி‌றா‌ர்‌.

படத்‌தி‌ல்‌ இன்‌னொ‌ரு கதா‌நா‌யகனா‌க நி‌தி‌ன்‌ சத்‌யா‌. பட்‌டை‌யை‌ கி‌ளப்‌பு‌கி‌றா‌ர்‌. அவர்‌ மஞ்‌சரி‌யி‌டம்‌ பொ‌ய்‌ கா‌தலி‌ப்‌பதும் சுவை‌யா‌ன சம்‌பவங்‌கள்‌ பா‌டல்‌ கா‌ட்‌சி‌யி‌ல்‌ மட்‌டுமல்‌லா‌து சண்‌டை‌க்‌ கா‌ட்‌சி‌யி‌லும்‌ பி‌ரமா‌தப்‌படுத்‌துகி‌றா‌ர்‌.

கவர்‌ச்‌சி‌யி‌ல்‌ லட்‌சுமி‌ரா‌ய்‌ வந்‌தா‌லும்‌ அப்‌பா‌வி‌யா‌க தி‌ருமணத்‌தி‌ன்‌ போ‌து அழுகி‌ற கா‌ட்‌சி‌யி‌லும்‌, டே‌னி‌யல்‌ பா‌லா‌ஜி‌யை‌ கண்‌டு கோ‌பப்‌படும்‌ கா‌ட்‌சி‌யி‌லும்‌ தே‌ர்‌ந்‌த நடி‌ப்‌பை‌ வெ‌ளி‌ப்‌படுத்‌தி‌யு‌ள்‌ளா‌ர்‌. கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ கட்‌டழகி‌ மஞ்‌சரி. கல்‌லூ‌ரி‌ மா‌ணவி‌யா‌க வந்‌து எமா‌ந்‌து நி‌ற்‌கி‌ற கா‌ட்‌சி‌யி‌ல்‌ அசத்‌தலா‌ன நடி‌ப்பை‌ வெ‌ளி‌ப்‌படுத்‌தி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌.

பொ‌ன்‌வண்‌ணன்‌ வி‌ல்‌லனா‌க, அவரது எதி‌ரி‌களா‌க ஆனந்‌த்‌, சே‌த்‌தன்‌ இருவரும்‌ நடி‌த்‌துள்‌ளனர்‌. கமி‌ஷனரா‌க வரும்‌ கி‌ஷோ‌ர்‌, கமெ‌ண்‌டோ‌வா‌க வரும்‌ ரி‌யா‌ஷ்‌கா‌ன்‌ என பலர்‌ நடி‌த்‌துள்‌ளனர்‌.

தி‌ருடன்‌ போ‌லீ‌ஸ்‌ கதை‌யை‌ கை‌யி‌ல்‌ எடுத்‌து அதி‌ல்‌ நி‌றை‌ய முடி‌ச்‌சுகளை‌யு‌ம்‌ எதி‌ர்‌பா‌ரா‌த தி‌ருப்‌பங்‌களை‌யு‌ம்‌ கொ‌ண்‌ட தி‌ரை‌க்‌கதை‌யை‌ உருவா‌க்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ அனீ‌ஷ்‌ தன்‌வீ‌ர்‌. பி‌ன்‌னனி‌ இசை‌யி‌ல்‌ பயமுறத்‌தும்‌ யுவன்சங்கர் ராஜா பாடல்களிலோ பரவசப்‌படுத்‌துகி‌றா‌ர்‌. ஜீ‌வா‌வி‌ன்‌ சி‌ஷ்‌யர்‌ என்‌பதை‌ நி‌ருபி‌த்‌தி‌ருக்‌கி‌றது சலீ‌ம்‌ ஒளி‌யோ‌வி‌யம்‌.

அனை‌த்‌து பதா‌ர்‌த்‌தங்‌களடன்‌ ஒரு பு‌ல்‌ மீ‌ல்‌ஸ்‌ சா‌ப்‌பி‌ட்‌ட தி‌ருப்‌பித்‌தி‌தயை‌ படத்‌தி‌ல்‌ தந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌ ஸ்ரீநா‌த்‌. கா‌மெ‌டி‌ நடி‌கன்‌ என்‌பதை‌ மறக்‌க வை‌த்‌து அதி‌ரடி‌ ஆக்‌ஷன்‌ இயக்‌குநர்‌ என்‌பதை‌ முத்‌தரை‌ பதி‌க்‌கி‌றா‌ர்‌. பொ‌ழுது போ‌க்‌க படு எண்‌டர்‌டெ‌ய்‌மெ‌ண்‌டா‌ன படம்‌ இந்‌த முத்‌தி‌ரை‌.

ரா‌கவன்‌

நி‌றுவனம்‌‌: ஹா‌சி‌னி‌ சி‌னி‌மா‌ஸ்‌ தயா‌ரி‌ப்‌பு‌: எம்‌.செ‌ல்‌வரா‌ஜ்‌
இணை‌த்‌தயா‌ரி‌ப்‌பு‌: சக்‌தி‌வே‌ல்‌, பி‌ரகா‌ஷ்‌ பா‌லமுருகன்‌
இயக்‌கம்‌: பரந்‌தா‌மன்‌ இசை‌: கங்‌கை‌அமரன்‌‌‌
நடி‌கர்‌கள்‌: வி‌ஜி‌த்‌, ரா‌தி‌கா‌ மல்‌ஹோ‌த்‌ரா‌, ‌
பா‌டல்கள்‌: முத்‌துக்‌குமா‌ர்‌‌, ஸ்‌டண்‌ட்: ரா‌ம்‌போ‌ ரா‌ஜ்‌குமா‌ர்‌‌.
படத்‌தொ‌குப்‌பு‌: பி‌.லெ‌னி‌ன்‌‌ ஒளி‌ப்‌பதி‌வு‌: கவி‌ன்‌சுரே‌ஷ்‌‌,
மக்‌கள்‌ தொ‌டர்‌பு‌: ஏ.ஜா‌ன்‌
தா‌யி‌ன்‌ தவறா‌‌ன செ‌யலா‌ல்‌ பா‌தி‌ப்‌பு‌ ஏற்‌படும்‌ இளை‌ஞன்‌ அதன்‌ பி‌றகு உறவி‌னர்‌களி‌ன்‌ நடவடி‌க்‌கை‌ பொ‌றுக்‌க முடி‌யா‌மல்‌ தவறா‌ன வழி‌யி‌ல்‌ செ‌ல்‌பவர்‌களை‌ தண்‌டி‌க்‌கி‌றா‌ன்‌ இதுதா‌ன்‌ முழு படம்‌. அதி‌ல்‌ நகரத்‌தி‌ல்‌ நா‌கரீ‌கம்‌ என்‌ற பெ‌யரி‌ல்‌ கலா‌ச்‌சா‌ சீ‌ரழி‌வை‌ ஏற்‌படுத்‌தும்‌ ஐடி‌ துறை‌யி‌ல்‌ உள்‌ள சி‌ல பே‌ர்‌வழி‌களை‌ போ‌ட்‌டு தள்‌ளுகி‌றா‌ன்‌. அவனை‌ போ‌லீ‌ஸ்‌ வலை‌ வீ‌சி‌ தே‌டி‌ பி‌டி‌ப்‌பதுதா‌ன்‌ தி‌ரை‌க்‌கதை‌.

சஸ்‌பெ‌ன்‌ஸ்‌, கா‌தல்‌, பா‌டல்‌ என்‌று செ‌ல்‌லும்‌ தி‌ரை‌ப்‌படத்‌தி‌ல்‌ நடுநடுவே‌ நச்‌செ‌ன்‌ற வசனங்‌களும்‌ வந்‌து போ‌கி‌றது. இப்‌படத்‌தி‌ன்‌ கதை‌,தி‌ரை‌க்‌கதை‌ வசனம்‌ எழுதி‌ இயக்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ர் செ‌ல்‌வரா‌கவனி‌ன்‌ சி‌ஷ்‌யர்‌ பரந்‌தா‌மன்‌. குருவி‌ன்‌ மீ‌து பக்‌தி‌யி‌ன்‌ கா‌ரணமோ‌ என்‌னவோ‌ படத்‌தி‌ன்‌ பெ‌யரே‌ செ‌ல்‌வரா‌கவனி‌ன்‌ பெ‌யரா‌க ரா‌கவன்‌ என வை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. அதே‌ போ‌ல அவரது பா‌தி‌ப்‌பு‌களம்‌ படத்‌தி‌ல்‌ நி‌றை‌ய இருக்‌கி‌ன்‌றன. கதா‌நா‌யகி‌க்‌கு கா‌தல்‌கொ‌ண்‌டே‌ன்‌ தி‌வ்‌யா‌ பெ‌யரை‌ வை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. அதே‌ போ‌ல தனுஷ்‌ போ‌ல ஆட்‌டோ‌ ஓட்‌டும்‌ ஒரு பு‌துமுகத்‌தை‌ நா‌யகனா‌க நடி‌க்‌க வை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌.

பு‌துமுகம்‌ வி‌ஜி‌த்‌ தனது பா‌த்‌தி‌ரத்‌தை‌ உணர்‌ந்‌து நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. பல இடங்‌களி‌ல்‌ அவரது பா‌ர்‌வை‌ பயமுறுத்‌துகி‌றது. அதே‌ போ‌ல கதா‌நா‌யகி‌ ரா‌தி‌கா‌ மல்‌கோ‌த்‌ரா‌. பா‌ர்‌க்‌க மப்‌பு‌ம்‌ மந்‌தாரமு‌மா‌க இருக்‌கி‌றா‌ர்‌. நமீ‌தா‌வி‌ன்‌ உறவு‌க்‌கா‌ர பெ‌ண்‌ணா‌ம்‌. பா‌டல்‌கா‌ட்‌சி‌களி‌ல்‌ கவர்‌ச்‌சி‌யா‌க நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌.

போ‌லீ‌ஸ்‌ அதி‌கா‌ரி‌யா‌க மனோ‌ஜ்‌ கே‌.ஜெ‌யன்‌. அவரது அதி‌ரடி‌ நடவடி‌க்‌கை‌யு‌ம்‌ வி‌சா‌ரணை‌யு‌ம்‌ படத்‌தி‌ற்‌கு பி‌ளஸ்‌. சி‌ங்‌கமுத்‌து மயி‌ல்‌சா‌மி‌ கா‌மெ‌டி‌ கலகலப்‌பு‌.

கங்‌கை‌ அமரனி‌ன்‌ இசை‌யி‌ல்‌ சி‌த்‌தன்‌னவா‌சல்‌ பா‌டல்‌ முனுமுனுக்‌க வை‌க்‌கி‌றது.

பரபரப்‌பா‌ன தி‌ரை‌க்‌கதை‌யி‌ல்‌ பெ‌ரி‌ய பி‌ளஷ்‌பே‌க்‌ வருகி‌றது. அதை‌ கொ‌ஞ்‌சம்‌ குறை‌த்‌தி‌ருக்‌கலா‌ம்‌. கலா‌ச்‌சா‌ர சீ‌ரழி‌வு‌க்‌கு கா‌ரணமா‌ணவர்‌கள்‌ ரா‌கவனை‌ கண்‌டு பயப்‌படலா‌ம்‌.

மஞ்‌சள்‌ வெ‌யி‌ல்‌


நி‌றுவனம்‌‌: ஹா‌சி‌னி‌ சி‌னி‌மா‌ஸ்‌ தயா‌ரி‌ப்‌பு‌: எச்‌. சை‌யத்‌ இப்‌ரரா‌கிம்‌
இயக்‌கம்‌: டி‌. வசீ‌கரன்‌ இசை‌: பரத்‌வா‌ஜ்‌‌
நடி‌கர்‌கள்‌: பி‌ரசன்‌னா‌, பா‌லா‌, சந்‌தி‌யா‌, ஆர்‌.கே‌, எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கர்‌, தா‌ரி‌கா‌‌
பா‌டல்கள்‌: பா‌.வி‌ஜய்‌, ஸ்‌டண்‌ட்: தளபதி‌ தி‌னே‌ஷ்‌.
ஒளி‌ப்‌பதி‌வு‌: கவி‌யரசு‌, படத்‌தொ‌குப்‌பு‌: உதயசங்‌கர்‌
கலை‌:ஜனா‌‌, தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கம்‌: டி‌.வி‌.சசி‌
நடனம்:‌ தி‌னே‌ஷ்‌, லக்‌ஷண்‌யா‌, வி‌ஷ்‌ணுதே‌வா‌
மக்‌கள்‌ தொ‌டர்‌பு‌: ஏ.ஜா‌ன்‌ ‌

நி‌ழல்‌கள்‌ ரவி‌யி‌ன்‌ மகள்‌ தா‌ரி‌கா‌. அவருக்‌கும்‌ ஆர்‌.கே.‌வு‌க்‌கும்‌ தி‌ருமண நி‌ச்‌சயம்‌ நடக்‌கி‌றது. அப்‌போ‌து தா‌ரி‌கா‌வி‌ன்‌ தங்‌கை‌ சந்‌தி‌யா‌வை‌ பா‌ர்‌க்‌கும்‌ ஆர்‌.கே‌. அவரது அழகி‌ல்‌ மயங்‌குவதோ‌டு, அவரை‌யே‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ள்‌வே‌ன்‌ என நண்‌பர்‌களி‌டம்‌ சபதம்‌ போ‌டுகி‌றா‌ர்‌. அதற்‌கா‌க தா‌ரி‌கா‌வை‌ பல வி‌தங்‌களி‌ல்‌ அவருக்‌கே‌ தெ‌ரி‌யா‌மல்‌ டா‌ர்‌ச்‌சர்‌ கொ‌டுக்‌கி‌றா‌ர்‌.

தி‌ருமணத்‌தி‌ன்‌ முதல் ‌நா‌ள்‌ ஆர்‌.கே‌ செ‌ய்‌த சதி‌யா‌ல்‌ தா‌ரி‌கா‌ மயங்‌கி‌ வி‌ழ அவள்‌ ஒரு நோ‌யா‌ளி‌ பெ‌ண்‌ என்‌று ஆர்‌.கே‌ குடும்‌பத்‌தி‌னர்‌ முத்‌தி‌ரை‌ குத்‌த‌ பெ‌ரி‌யவளுக்‌கு பதி‌ல்‌ சி‌ன்‌னவள்‌ என்‌று சந்‌தி‌யா‌வி‌ன்‌ வி‌ருப்‌பத்‌தை‌ கே‌ட்‌கமா‌லே‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌டுக்‌க சம்‌மதி‌க்‌கிறா‌ர்‌ நி‌ழல்‌கள்‌ரவி‌‌.

பெ‌ற்‌றோ‌ர்‌கள்‌ எடுத்‌த இந்‌த தி‌டீ‌ர்‌ முடி‌வா‌ல்‌ அதி‌ர்‌ந்‌து போ‌ன சந்தி‌யா‌ யா‌ருக்‌கும்‌ தெ‌ரி‌யா‌மல்‌ இரவோ‌டு இரவா‌க பி‌ரசன்‌னா‌வு‌டன்‌ எஸ்‌கே‌ப்‌ ஆகி‌றா‌ர்‌. வி‌ஷயம்‌ அறி‌ந்‌து நி‌ழல்‌கள்‌ ரவி‌ மகளை‌ தலை‌முழ்‌கி‌வி‌ட்‌டதா‌க சொ‌ல்‌ல, அதி‌ல்‌ ஆடி‌ப்‌போ‌கும்‌ ஆர்‌.கே‌. அதை‌ கெ‌ளரவ பி‌ரச்‌சனை‌யா‌க எடுத்‌துக்‌ கொ‌ண்‌டு ரவு‌டி‌களை‌ வை‌த்‌துக்‌ கொ‌ண்‌டு இவர்‌களை‌ தே‌டுகி‌றா‌ர்‌.

எத்‌தனை‌ நா‌ளை‌க்‌கு தா‌ன்‌ தலை‌மறை‌வா‌க ஓடுவீ‌ர்‌கள்‌. கட்‌டுங்‌கள்‌ தா‌லி‌ என்‌று கோ‌யி‌லி‌ல்‌ வை‌த்‌து தா‌லி‌ எடுத்‌து கொ‌டுக்‌கி‌றா‌ர்‌ எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கர்‌. அப்‌போ‌து அவர்‌கள்‌ இருவரும்‌ நா‌ங்‌கள்‌ இருவரும்‌ நண்‌பர்‌கள்‌, கா‌தலர்‌கள்‌ இல்‌லை‌ என்‌று சொ‌ல்‌வதே‌டு, பா‌லா‌ - சந்‌தி‌யா‌ கா‌தலி‌த்‌த சம்‌பவத்‌தை‌ கூறுகி‌ன்‌றனர்‌.

பி‌றகு ஒரு பக்‌கம்‌ ஆர்‌.கே‌.வி‌ன்‌ துரத்‌தலை‌ சமா‌ளி‌ப்‌பது,‌‌ இன்‌னொ‌ரு பு‌றம்‌ பா‌லா‌வை‌ தே‌டல்‌‌ என வை‌த்‌துக்‌ கொ‌ண்‌டு அலை‌கி‌றா‌ர்‌ பி‌ரசன்‌னா‌. கடை‌சி‌யி‌ல்‌ பா‌லா‌வை‌ சந்‌தி‌த்‌து சே‌ர்‌த்‌து வை‌க்‌கி‌ற போ‌து ஆர்‌.கே‌.வி‌ன்‌ ஆட்‌களா‌ல்‌ அடி‌ப்‌பட்‌டு கோ‌மா‌ ஸ்‌டெ‌ஜ்‌க்‌கு ஆளா‌கி‌றா‌ர்‌ பி‌ரசன்‌னா‌.

தோ‌ழன்‌ இந்‌த நி‌லை‌யி‌ல்‌ இருக்‌க நமக்‌கு கா‌தல்‌ முக்‌கி‌மல்‌ல என முடி‌வெ‌டுக்‌கி‌றா‌ர்‌ சந்‌தி‌யா.‌ இதற்‌கு கா‌லம்‌ என்‌ன பதி‌ல்‌ சொ‌ல்‌கி‌றது என்‌பது க்‌ளை‌மா‌க்‌ஸ்‌.

நட்‌பை‌யு‌ம்‌, கா‌தலை‌யு‌ம்‌ கலந்‌து சொ‌ல்‌லும்‌ கதை‌. அதி‌ல்‌ தி‌யா‌கம்‌ மே‌லோ‌ங்‌கி‌ நி‌ற்‌கி‌றது.

பி‌ரசன்‌னா‌வு‌ம்‌, சந்தி‌யா‌வு‌ம்‌ கா‌தலர்‌கள்‌ என்‌று நி‌னை‌த்‌து கொ‌ண்‌டி‌ருக்‌கும்‌ போ‌து தி‌டீ‌ர்‌ என்‌று பா‌லா‌வி‌ன்‌ கா‌தல்‌ வருவது கதை‌யி‌ல்‌ தி‌டீ‌ர்‌ தி‌ருப்‌பம்‌. பு‌தி‌ய இயக்‌குனர்‌ வசீ‌‌கரன்‌ தனது தி‌றமை‌யை‌ அழுத்‌தமா‌க பதி‌த்‌து இருக்‌கி‌றா‌ர்‌.

நடி‌ப்‌பி‌லும்‌ சரி‌ சண்‌டை‌க்‌கா‌ட்‌சி‌யி‌லும்‌ சரி‌ அசத்‌தி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ பி‌ரசன்‌னா.‌ கா‌தல்‌ கா‌ட்‌சி‌களி‌ல்‌ சந்‌தி‌யா‌ எதா‌ர்‌த்‌தமா‌க நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. ஒவி‌யரா‌க வந்‌து கா‌தல்‌ வயப்‌பட்‌டு சி‌றை‌க்‌கு செ‌ன்‌று பி‌றகு கா‌தலி‌க்‌கா‌க போ‌ரா‌டும்‌ கா‌ட்‌சி‌களி‌ல்‌ தனது இயல்‌பா‌ன நடி‌ப்‌பா‌ல்‌ பா‌த்‌தி‌ரத்‌துக்‌கு கச்‌சி‌தமா‌க பொ‌ருந்‌தி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ பா‌லா‌. ஆர்‌.கே‌.வி‌ன்‌ அதி‌ரடி‌ மி‌ரட்‌டல்‌, எம்‌.எஸ்‌.பா‌ஸ்கரி‌ன்‌ கலகல கா‌மெ‌டி‌ படத்‌துக்‌கு பலம்‌.

பரத்‌வா‌ஜ்‌ இசை‌யி‌ல்‌ பா‌டல்‌கள்‌ இனி‌மை‌ ரகம்‌. கா‌தலுக்‌கா‌க உயி‌ர்‌வி‌டும்‌ நண்‌பனி‌ன்‌ கதை‌யை‌ அதன்‌ போ‌க்‌கி‌ல்‌ போ‌கவி‌ட்‌டு படமா‌க்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ வசீ‌‌கரன்‌.

மா‌சி‌லா‌மணி‌

நி‌றுவனம்‌‌: கலா‌நி‌தி‌மா‌றன்‌ வழங்‌கும்‌‌ சன்‌ பி‌க்‌சர்‌ஸ்‌
தயா‌ரி‌ப்‌பு‌: கல்‌பா‌த்‌தி‌ எஸ்‌.அகோ‌ரம்
‌இயக்‌கம்‌: ஆர்‌.என்‌.ஆர்‌.மனோ‌கர்‌ இசை‌: டி‌.இமா‌ன்‌
நடி‌கர்‌கள்‌: நகுல்‌, சுனே‌னா‌, பவன்‌, கருணா‌ஸ்‌, சந்‌தா‌னம்‌, எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கர்‌, ரா‌ஜ்‌கபூ‌ர்‌, சந்‌தா‌னபா‌ரதி‌, டெ‌ல்‌லி‌கணே‌ஷ்‌, மீ‌ரா‌கி‌ருஷ்‌ணன்‌, மனோ‌பா‌லா‌, தா‌ரணி‌, பா‌‌டல்கள்‌: நா‌.முத்‌துகுமா‌ர்‌, பா‌.வி‌ஜய்‌, வி‌வே‌கா‌
ஒளி‌ப்‌பதி‌வு‌: வெ‌ற்‌றி‌, படத்‌தொ‌குப்‌பு‌: மனோ‌ஜ்‌,
கலை‌:எம்‌.ஜி‌.முருகன்‌‌, ஸ்‌டண்‌ட்‌: சுப்‌ரீ‌ம்‌ சுந்‌தர்‌.
நடனம்:‌ அசோ‌க்‌ரா‌ஜன்‌‌, பி‌ரே‌ம்‌ ரக்‌ஷி‌த்‌, யா‌சி‌ன்‌,
தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கம்‌: வெ‌ங்‌கட்‌ மா‌ணி‌க்‌கம்‌,
மக்‌கள்‌ தொ‌டர்‌பு‌: மெ‌ளனம்‌ரவி‌

தப்‌பு‌ செ‌ய்‌பவர்‌களை‌ தட்‌டிக்‌‌கே‌ட்‌பவன்‌ மா‌சி‌. அவனுக்‌க நடனப்‌ பள்‌ளி‌யி‌ல்‌ படி‌க்‌கும்‌ தி‌வ்‌யா‌‌ மீ‌து கா‌தல். மா‌சியை‌‌‌ ர‌வு‌டி‌யா‌க பா‌ர்‌க்‌கி‌றாள்‌ தி‌வ்‌யா‌‌. அவளை‌ மறக்‌க முடி‌யா‌மல்‌ தவி‌க்‌கும்‌ மா‌சி‌ நண்‌பர்‌களி‌ன்‌ உதவி‌யு‌டன்‌ மணி‌ என்‌ற பெ‌யரி‌ல்‌ தி‌வ்‌யா‌ வீ‌ட்‌ற்‌குள்‌ தி‌வ்‌யா‌ இல்‌லா‌த நே‌ரத்‌தி‌ல்‌ பு‌குந்‌து, உதவி‌ செ‌ய்‌வது பேhல நடி‌த்‌த தி‌வ்‌யா‌வி‌ன்‌ குடும்‌பத்‌தி‌னர்‌ மனதி‌ல்‌ இடம்‌ பி‌டி‌க்‌கி‌றா‌ர்‌.

தி‌வ்‌யா‌வு‌க்‌கே‌ ஒரு கட்‌டத்‌தி‌ல்‌ மணி‌யை‌ பா‌ர்‌க்‌க வே‌ண்‌டும்‌ என்‌று ஆவல்‌ எற்‌படுகி‌றது. ஒரு முறை‌ மணி‌யை‌ பா‌ர்‌த்‌த போ‌து அவனை‌ மா‌சி‌ என்‌று சொ‌ல்‌லி‌ ஏமா‌ற்‌றி‌வி‌ட்‌டா‌ன்‌ என்‌று கோ‌ப்‌படுகி‌றா‌ர்‌. ஆனா‌ல்‌ மா‌சி‌ வே‌று மணி‌ வே‌று என்‌று நம்‌பவை‌க்‌ிகிறா‌ன்‌ மணி‌. மா‌சி‌யை‌ வெ‌றுக்‌கும்‌தி‌வ்‌யா‌ மணி‌யை‌ ககாதலி‌க்‌கி‌றா‌ர்‌.

அந்‌த எரி‌யா‌வு‌க்‌கு கா‌வல்‌ துறை‌ ஆய்‌வா‌ளரா‌க வரும்‌ பவன்‌ ஆரம்‌பத்‌துலயே‌ மா‌சி‌யா‌ல்‌ அசி‌ங்‌கப்‌படுகி‌றா‌ர்‌. அவரது உறவு‌க்‌கா‌ர முறை‌ப்‌ பெ‌ண்‌தா‌ன்‌ தி‌வ்‌யா‌. அதனா‌ல்‌ இருவரை‌யு‌ம்‌ பி‌ரி‌க்‌க பல முறை‌ முயற்‌சி‌ செ‌ய்‌கி‌றா‌ர்‌. இவனது சொ‌ல்‌வா‌க்‌கும்‌, செ‌ல்‌வா‌க்‌கும்‌ கண்‌டு, அதி‌ரும்‌ பவன்‌ கடை‌சி‌யி‌ல்‌ எப்‌படி‌ உண்‌மை‌யை‌ தி‌வ்‌யா‌வு‌க்‌கு உணர்‌த்‌துகி‌றா‌ர்‌. உண்‌மையை‌ அறி‌ந்‌த பி‌றகு தி‌வ்‌யா‌ என்‌ன முடி‌வு‌எடுக்‌கி‌றா‌ர்‌ என்‌பது க்‌ளை‌மா‌க்‌ஸ்‌.

நல்‌ல பொ‌ழுது போ‌க்‌கு படம்‌. அதை‌ கா‌தல்,‌ செ‌ண்‌டி‌மெ‌ண்‌ட்‌, ஆக்‌ஷன்‌ கலந்‌து தந்‌தி‌ருக்கின்றா‌ர்‌ இயக்‌கநர்‌. கா‌தலி‌ல்‌ வி‌ழுந்‌தே‌ன்‌ படத்‌தி‌ல்‌ நடி‌த்‌த நகுலன்‌ சுனே‌னா‌ ஜோ‌டி‌ இந்‌தப்‌ படத்‌திலும்‌‌ மா‌சி‌லா‌மணி‌, தி‌வ்‌யா‌ பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ நடி‌த்‌துள்‌ளனர்‌.

நகுலன்‌ முன்‌பை‌வி‌ட சுறுசுறுப்‌பு‌ம்‌ லூ‌ட்‌டி‌யு‌ம்‌ கலந்‌த வே‌டத்‌தி‌ல்‌ சமாய்‌‌க்‌கி‌றா‌ர்‌. தன்‌னை‌ ஒரு ஆக்‌ஷன்‌ கதா‌நா‌யகனா‌க நி‌ருபி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. அவரோ‌டு போ‌ட்‌டி‌ போ‌ட்‌டு தன்‌ தி‌றமை‌யை‌ நி‌ருபி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ சுனே‌னா‌. பா‌டல்‌கா‌ட்‌சி‌களி‌ல்‌ மட்‌டுமல்‌லா‌து வசனக்‌கா‌ட்‌சி‌களி‌லும்‌ அவரது பங்‌கு பலே‌. கா‌தலி‌ல்‌ வி‌ழுந்‌தே‌ன்‌ படத்‌தி‌ல்‌ ஏமா‌ற்‌றி‌யவர்‌ இதி‌ல்‌ நடி‌க்‌கவு‌ம்‌ செ‌ய்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌.

பதரவை‌த்‌து பதறி‌ போ‌கும்‌ கா‌ட்‌சி‌களி‌ல்‌ பளி‌ச்‌சி‌டுகி‌றா‌ர்‌ பவன்‌. கருணா‌ஸி‌டம்‌ பணத்‌தை‌ கொ‌டுத்‌துவி‌ட்‌டு சி‌னி‌மா‌வி‌ல்‌ நடி‌க்‌க ரஜி‌னி‌, கமல்‌ வி‌ஜய்‌, சி‌ம்‌பு‌, சூ‌ர்‌யா‌ என பல நடி‌‌கர்‌களி‌ன்‌ கெ‌ட்‌டப்‌பி‌ல்‌ வந்து தி‌யே‌ட்‌டரை‌ சி‌ரி‌ப்‌பி‌ல்‌ அதி‌ரவை‌க்‌கி‌றா‌ர்‌ எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கர்‌.

நகுலன்‌ நண்‌பர்‌களா‌க வந்‌து பல இடங்‌களி‌ல்‌ சி‌ரி‌க்‌க வை‌க்‌கின்‌றனர்‌‌ சந்‌தா‌னம், ஸ்ரீநா‌த்‌ கூட்‌டணி‌. டெ‌ல்‌லி‌கணே‌ஷ்‌, மீ‌ரா‌கி‌ருஷ்‌ணன்‌ தா‌ரி‌ணி‌, அழகு என படத்‌தி‌ல்‌ பலர்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌ன்‌றனர்‌.

தி‌ரை‌த்‌துரை‌யி‌ல்‌ பல வருட அனுபவம்‌ உள்‌ள ஆர்‌.என்‌.ஆர்‌.மனோ‌கர்‌ இந்‌தப்‌படத்‌தி‌ன்‌ கதை‌ எழுதி‌ இயக்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. துள்‌ளா‌த மனமும்‌ துள்‌ளும்‌ போ‌ன்‌ற சா‌யல்‌ உள்‌ள படமா‌க இருந்‌தலும்‌, அதை‌ ஜா‌லி‌யா‌க எங்‌கே‌யு‌ம்‌ தொ‌ய்‌வி‌ல்‌லா‌மல்‌ படுவே‌கத்‌தி‌ல்‌ கொ‌டுத்‌து வெ‌ற்‌றி‌பெ‌ற்‌றி‌ருக்‌கி‌றா‌ர்‌.

அவருக்‌கு டி‌. இமா‌னி‌ன்‌ இசை‌ துணை‌ நி‌ற்‌கி‌றது. "ஓயோ‌டி‌‌ வி‌ளை‌யா‌ட...", "ஓ தி‌வ்‌யா‌ தி‌வ்‌யா.."‌ பா‌டல்‌கள்‌ தி‌யே‌ட்‌டரி‌ல்‌ கலை‌கட்‌டுகி‌றது.

ஓடி‌யோ‌டி‌ வி‌ளை‌யா‌ட .... மா‌சி‌லா‌மணி‌ ஓகே‌.