
நிறுவனம்: ஐங்கரன் இன்டர்நேஷனல் பிலிம் பி லிட்
தயாரிப்பு: கே.கருணாமூர்த்தி சி.அருண்பாண்டியன்
தயாரிப்பு: கே.கருணாமூர்த்தி சி.அருண்பாண்டியன்
நடிப்பு: விஜய், நயன்தாரா, வடிவேலு, பிரகாஷ்ராஜ், தேவராஜ், ஆனந்தராஜ், ரஞ்சிதா, கீதா
இயக்கம்: பிரபுதேவா இசை: தேவிஸ்ரீபிரசாத்ஒளிப்பதிவு: ரவிவர்மன் நிர்வாக தயாரிப்பு: கே. விஜயகுமார் பி.ஆர்.ஓ: டைமண்ட்பாபு, பி.டி.செல்வகுமார்
தந்தையை கொன்றவர்களை பழிவாங்கும் ஒரு மகனின் கதை.இதில் தந்தை, மகனாக விஜய் நடித்திருக்கிறார். ராணுவ வீரரான தந்தை, ஆயுதங்களை வெளிநாட்டிற்கு விற்கும் பிரகாஷ்ராஜ் குருப்பை வேட்டையாட முயல்கிறார். இதில் அவர்கள் இவரை தாக்கி பழியை அவர் மீது சுமத்தி தேச துரோகியாக்கின்றனர். அந்த துரோகிகள் கூட்டத்தை அழித்து, துரோக பழியை துடைப்பது தான் மகனின் செயல். அது தான் படம்.ஸ்டைலான, அழகான விஜய். போட்டியும், சாவலுமாக பட்டையை கிளப்புகிறார். முன்னை விட நடிப்பில் பலே. அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன் பாடலில் உலக தமிழ் மக்களின் நெஞ்சில் நிற்கிறார்.ரசிகர்களுக்கு அதிர்ச்சியும், ஆனந்தமும் ஏற்படுத்தும் நயன்தாரா. அதிர்ச்சின்னு சொல்வது அவரது உடை அவிழ்ந்து விழுமோ என்பது தான். அந்தளவுக்கு படு கிளமராக நடித்திருக்கிறார் நயன்தாரா. இனி கிளமர் என்றால் நயன்தாரா.முதல் பாதியை கலகலவென்று கொண்டு போகிறார் வடிவேலு. இரண்டாம் பகுதியில் வெளிநாட்டு மாட்டிடம் அடிவாங்குவது எரிச்சல். பிரகாஷ்ராஜ், ஆனந்தராஜ், தேவராஜ் என ஏகப்பட்ட வில்லன்கள். தேவிஸ்ரீபிரசாத் இசையில் பாடலும் இசையும் படு சூப்பர். தியேட்டரில் ஆட்டமும் பாட்மும் அதற்கு சாட்சி. உலகத்தை சுற்றி வந்திருக்கிறது ரவிவர்மாவின் கேமிரா. பூமியிலும், வானத்திலும் சண்டை போட்டிருப்பதை படம் பிடித்திருப்பதை பார்க்கும் போது வியக்க வைக்கிறது.தந்தை மாதிரி இருக்கானே மகன் என கொஞ்சம் கூட வில்லன்கள் பார்க்காதது பெரிய லாஜிக் மிஸ்டேக். இதே போல பல இடங்களில் லாஜிக் மிஸ்டேக் இருந்தாலும், நல்ல திறமையான இயக்குனர் என்பதை காட்சி அமைப்புகளால் புருவம் உயர்த்த வைக்கிறார் இயக்குனர் பிரபுதேவா.ரசிகர்கள் எதிர்பார்த்த அம்சங்களை கொடுத்தவர் எதிர்பார்க்காத திரைக்கதையை கொடுத்திருந்தால் இன்னும் பெரிய வெற்றியை பெற்றிருக்கலாம். வில்லு வேகமான பாய்ச்சல்.
No comments:
Post a Comment