Saturday, August 22, 2009

குளி‌ர்‌ 100

நி‌றுவனம்‌‌: N-vIZ ENTERTAINMENT
இயக்‌கம்‌: அனிதா உதீப்‌.இசை‌: சஷி
நடி‌கர்‌கள்‌: சஞ்சீவ், கார்த்திக், ரியா, சுஜாதா, ரோத், அபிஷேக், சைய்யது, தலை‌வா‌சல்‌ வி‌ஜய்‌
ஒளி‌ப்‌பதி‌வு‌:எல்.கே.விஜய் மக்‌கள்‌ தொ‌டர்‌பு‌:டை‌மண்‌டபா‌பு‌

ரவுடி கணவனை வெறுத்து பிரிந்து வாழ்கிறார் சுஜாதா. மகன் சஞ்சீவை தந்தை சாயல் இன்றி நல்லவனாக வளர்க்க முயற்சிக்கிறார். ஆனால் சஞ்சீவ் தந்தை போல் அடிதடியில் ஈடுபடுகிறார். இதனால் மகனை ஊட்டி கான்வென்டில் சேர்க்கிறார். அங்கு தாய்க்கு கட்டுப்பட்டு அமைதியா கிறார். ஆனாலும் சீனியர் மாணவர்கள் ரோத், அபிஷேக், சைய்யது மூவரின் ராக்கிங் தொல்லைகள் ஆத்திரமூட்டுகிறது. அம்மாவை நினைத்து அடங்கிப் போகிறார்.


நண்பன் கார்த்திக் பள்ளி முதல்வர் மகள் ரியா ஆறுதலாக இருக்கின்றனர். மாணவர் பேரவை தேர்தலில் சஞ்சீவை நிற்க வைத்து ஜெயிக்க வைக்கிறார். கார்த்திக். கோபமாகும் ரோத் கோஷ்டி கார்த்திக்கை கொல்கிறது. ரியாவும் பிரிந்து வெளியூர் செல்கிறார்.

கார்த்திக் சாதாரணமாக சாகவில்லை. கொல்லபட்டார் என்ற விஷயம் தெரிகிறது. கொலைகார மாணவர்களை பழிதீர்ப்பது கிளை மாக்ஸ

ராகிங் கொடுமைகளை அலசி தோலுரிக்கிறது படம். ஆசிரியர் முகத்தை கோணியால் சுற்றி அடித்து நொறுக்கும் சஞ்சீவின் ஆரம்பமே பரபரக்க வைக்கிறது.

ஊட்டி கான்வெட்டின் கோட் சூட் மாணவர்கள் வித்தியா சமான பளிச். மாணவர் கவுன்சில் என்ற பெயரில் சீனியர் மாண வர்கள் செய்யும் ராகிங் செயல்கள் கொடுமை.. சஞ்சீ வின் கிராமத்தனமான செயல்களை கேலி செய்வ தில் பணக்கார சேஷ்டை. சஞ்சீவை குழி தோண்ட வைப்பது முதுகில் பிரம்பால் அடிப்பது என சீனியர்கள் நடத்தும் வன்மங்கள் கொடூரம்.

அம்மாவுக்காக எல்லாம் தாங்கி கோபங்களை உள்ளுக்குள்ளேயே அடக்கி நடிப்பில் பளிச்சிடுகிறார் சஞ்சீவ். தாய், காதலி, நண்பன் என முக்கோண பாசங்கள் விலகிப் போக இடிந்து போய் மனதில் இறங்குகிறார்.

மாணவர் தேர்தலில் சஞ்சீவ் ஜெயித்ததற்காக கார்த்திக்கை கொன்று பழி தீர்க்கும் ரோத், அபிஷேக் சைய்யது வில்லத்தனங்கள் திடுக்கிட வைக்கிறது. மூவரையும் கிளைமாக்சில் பழிவாங்கும் சஞ்சீவின் வெறியில் அனல்.

ரியா சுட்டித்தனத்தில் கலகலப்பூட்டுகிறார் கார்த்திக் நல்ல நண்பன். ரோத், அபிஷேக், சைய்யது விறைப்பான முரட்டு குணத்தில் திகிலுட்டுகின்றனர். கான்வெண்ட் மாணவர் களின் இன்னொரு புற வாழ்க்கையை கலகலப்பும் வுறுவிறுப்புமாக படமாக்கி சபாஷ் போட வைக்கிறார் அறிமுக இயக்கனர் அனிதா உதீப்.. காட்சிகளையும் கதாபாத்திரங்களையும் கச்சிதமாக செதுக்கியதில் டைக்டர் கை வண்ணம் பளிச்சிடுகிறது.

சஷி இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. எல்.கே. விஜய் கேமரா ஊட்டி அழகை அள்ளி தெளிக்கிறது.

மா‌யா‌ண்‌டி‌ குடும்‌பத்‌தா‌ர்‌

நி‌றுவனம்‌‌: யு‌னை‌டெ‌ட்‌ ஆர்‌ட்‌ஸ்‌தயா‌ரி‌ப்‌பு‌: எஸ்‌.கே‌. செ‌ல்‌வகுமா‌ர்‌
இயக்‌கம்‌: ரா‌சுமதுரவன்‌.இசை‌: சபே‌ஷ்‌ முரளி‌
நடி‌கர்‌கள்‌: தருண்‌கோ‌பி‌, ‌ பூ‌ங்‌கொ‌டி‌, மணி‌வண்‌ணன்‌ ‌ சீ‌மா‌ன்‌, சி‌ங்‌கபு‌லி‌, ரவமி‌ரி‌யா‌, ஜெ‌கன்‌ஜி‌ ‌. மே‌லும்‌ ரா‌ஜ்‌கபூ‌ர்‌, ஜி‌.எம்‌. குமா‌ர்‌, ‌பொன்‌‌வண்‌ணன்‌, நந்‌தா‌பெ‌ரி‌யசா‌மி‌,
பா‌‌டல்கள்‌: நா‌.முத்‌துகுமா‌ர்‌, நந்‌தலா‌லா‌,
கலை‌க்‌குமா‌ர்‌, ஏக்‌நா‌த்‌, தமி‌ழமுதன்‌
ஒளி‌ப்‌பதி‌வு‌: பா‌லபரணி‌, படத்‌தொ‌குப்‌பு‌: சுரே‌ஷ்‌அர்‌ஸ்,
கலை‌:எம்‌.பி‌ரபா‌கர்‌, நடனம்:‌ ஸ்ரீ தர்‌, சுஜா‌தா‌, சி‌வா‌‌
ஸ்‌டண்‌ட்‌ சுப்‌ரீ‌ம்‌ சுந்‌தர்‌.
தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கம்‌: எம்‌.சசி‌க்‌குமா‌ர்‌, ஜெ‌யரா‌ஜ்‌,
நி‌ர்‌வா‌க தயா‌ரி‌ப்‌பு‌ சா‌மு: சி‌வரா‌ஜ்‌.‌ மக்‌கள்‌ தொ‌டர்‌பு‌: மெ‌ளனம்‌ரவி‌

‌மா‌யா‌ண்‌டி‌க்‌கு நா‌ன்‌கு மகன்‌களும்‌, ஒரு மகளும்.‌ அவரது அண்‌ணனும்‌ அவரது நா‌ன்‌கு மகன்‌களும்‌ இவரது குடும்‌பத்‌தி‌ல்‌ ஒரு உயி‌ரை‌யா‌வது எடுக்‌கவு‌ம்‌, மோ‌தவு‌ம்‌ எப்‌பவு‌ம்‌ தயா‌ரா‌க இருப்‌பவர்‌கள்‌. அதற்கு ஏதா‌வது கா‌ரணம்‌ கி‌டை‌க்‌கா‌தா‌ என அலை‌வா‌ர்‌கள்‌.

மாயா‌ண்‌டி‌யோ‌ தன்‌ குடும்‌பம்‌ சே‌ர்‌ந்தி‌ருக்‌க வே‌ண்‌டும்‌, தன்‌ மகன்‌ மட்‌டும்‌மல்‌லா‌து தனது அண்‌ணன்‌ மகன்‌களும்‌ நலமா‌க இருக்‌க வே‌ண்‌டும்‌ என எண்‌ணம்‌ உள்‌ளவர்‌. இந்‌த நி‌லை‌யி‌ல்‌ அவர்‌ மி‌ன்‌சா‌ரம்‌ தா‌க்‌கி‌ இறந்‌து போ‌க, அவர்‌ வா‌ழ்‌ந்‌த வா‌சம்‌ மறை‌வதற்‌குள்‌ அவரது குடும்‌பம்‌ நா‌ன்‌கா‌க உடை‌ந்‌து போ‌கி‌றது, இந்‌த வி‌ரி‌சலை‌‌யு‌ம்‌, பகை‌யை‌யு‌ம்‌ கடை‌சி‌ மகன்‌ பரமு எப்‌படி‌ சே‌ர்‌த்‌து வை‌க்‌கி‌றா‌ன்‌ என்‌பது மீ‌தி ‌படம்‌.

பா‌சமுள்‌ள சகோ‌தரர்‌கள்‌ இந்‌தப்‌படத்‌தை‌ப்‌ பா‌ர்‌த்‌தா‌ல்‌ நல்‌ல அனுபவம்‌ கி‌டை‌க்‌கும்‌. அதே‌ போ‌ல தந்‌தை‌யை‌ இழந்‌தவர்‌கள்‌, அவரது ஞா‌பகமா‌க ஒருவருக்கு ஒருவா‌ய்‌ சோ‌றா‌வது வா‌ங்‌கி‌ப்‌போ‌டுவா‌ர்‌கள்‌ அப்‌படி‌ப்‌பட்‌ட பா‌சமுள்‌ள படை‌ப்‌பு‌ மா‌யா‌ண்‌டி‌ குடும்‌பம்‌.

இதி‌ல்‌ மா‌யா‌ண்‌டி‌யா‌க வா‌ழந்‌து மறை‌ந்‌தி‌ருந்‌தா‌ர்‌ மணி‌வண்‌ணன்‌. அவரது சி‌ன்‌னமகன்‌ பரமுவா‌க வரும்‌ இயக்‌குனர்‌ தருண்‌கோ‌பி‌ தனது பன்‌பட்‌ட நடி‌ப்பா‌ற்‌றலை‌ வெ‌ளி‌ப்‌படுத்‌தி‌ நம்‌ உணர்‌வு‌களோ‌டும்‌, பா‌சத்‌தோ‌டும்‌ வி‌ளை‌யா‌டி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. தந்‌தை‌ இறக்கும்‌ போ‌து சீ‌மா‌ன்‌ நடி‌ப்‌பு‌ம்‌, தம்‌பி‌க்‌கு பு‌ரோ‌ட்‌டா‌ வா‌ங்‌கி‌ தரும்‌ போ‌து பொ‌ண்‌வண்‌ணன்‌ நடி‌ப்‌பு‌ம்‌. தந்‌தை‌க்‌கா‌க அழும்‌போ‌து ஜெ‌கன்‌நா‌த்‌ நடி‌ப்‌பு‌ம்‌ பலே‌.

தா‌ய்‌‌மா‌மா‌னா‌க வரும்‌ இளவரசு, மயி‌ல்‌சா‌மி‌ இருவருக்‌கும்‌ சல்‌யூ‌ட்‌ போ‌ட வை‌க்‌கி‌ன்‌றனர்‌. அற்‌பு‌தமா‌ன பா‌த்‌தி‌ர படை‌ப்‌பு‌. அதே‌ போ‌ல லூ‌சா‌க தி‌ரி‌யு‌ம்‌ சி‌ங்‌கம்‌ பு‌லி‌ நடி‌ப்‌பு‌ம்‌ பி‌ரமா‌தம்‌. சண்‌டை‌க்‌கு வா‌ வா‌வெ‌ன அழை‌க்‌கும்‌ ரவி‌மரி‌யா‌. நந்‌தா‌பெ‌ரி‌யசா‌மி‌ நடி‌ப்‌பு‌ம்‌, மி‌ரளவை‌க்‌கி‌றது. கோ‌பத்‌தை‌ முகத்‌தி‌ல்‌ கா‌ட்‌டும்‌ ஜி‌.எம்‌.குமா‌ர்‌, ரா‌ஜ்‌கபூ‌ர்‌ நடி‌ப்‌பு‌ம்‌ எடுபடுகி‌றது.

பத்‌து இயக்‌குனர்‌களை‌ தே‌ர்‌வு‌ செ‌ய்‌து அவர்‌களுக்‌கு நல்‌ல கதா‌பா‌த்‌தி‌ரங்‌களை‌ கொ‌டுத்‌து நடி‌க்‌க வை‌த்‌தி‌ருப்‌பதோ‌டு, சண்‌டை‌பா‌தி‌, பா‌சம்‌ பா‌தி‌ என நி‌னை‌க்‌க வை‌க்‌கி‌றா‌ர்‌ ரா‌கமதுரவன்‌ பத்‌தி‌ரி‌கை‌யி‌ல்‌ பே‌ர்‌போ‌டா‌மல்‌ அவமா‌னப்‌படுத்‌தும்‌ அக்‌கா‌ள்‌ கணவனை‌, பா‌சத்‌தை‌ கா‌ட்‌டி‌ தி‌ருந்‌த வை‌க்‌கி‌ற ஒரு சீ‌‌னே‌ படத்‌துக்‌கு பெ‌ரி‌யபலம்‌.

சபே‌ஷ்‌முரளி‌ இசை‌யி‌ல்‌ நெ‌ஞ்‌‌சி‌ல்‌ ஈரமும்‌, வீ‌ரமும்‌ வி‌ளை‌கி‌றது. மதுரை‌யருகே‌ உள்‌ள ஒரு கி‌ரா‌மத்‌தி‌ல்‌ நா‌மும்‌ வா‌ழ்‌ந்‌த அனுபவத்‌தை‌ தருகி‌றது பா‌லபரணி‌ ஒளி‌ப்‌பதி‌வு‌. மா‌யா‌ண்‌டி‌ குடும்‌பத்‌தா‌ர்‌ டச்‌சி‌ங்‌ டச்‌சி‌ங்‌.

தோ‌ரணை‌


நி‌றுவனம்‌: ஜி‌.கே‌.பி‌லி‌ம்‌ கா‌ர்‌பரே‌ஷன்‌ தயா‌ரி‌ப்‌பு‌: வி‌க்‌ரம்‌ கி‌ருஷ்‌ணா‌
இயக்‌கம்‌: சபா‌ ஐயப்‌பன்‌ இசை‌: மணி‌சர்‌மா‌
நடி‌ப்‌பு‌: வி‌ஷா‌‌ல்‌, ஸ்‌ரே‌யா‌, பி‌ரகா‌ஷ்‌ரா‌ஜ்‌, கி‌ஷோ‌ர்‌, கீ‌தா‌, ஆர்‌த்‌தி‌, சந்‌தா‌னம்‌, எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கர்‌, பா‌ண்‌டி‌யரா‌ஜன்‌, சா‌யா‌ஜி‌ ஷி‌ண்‌டே‌, லா‌ல்‌, லி‌வி‌ங்‌ஸ்‌டன்‌, மனோ‌பா‌லா‌, பறவை‌ முணி‌யம்‌மா‌, சுமன்‌ஷெ‌ட்‌டி‌, மயி‌ல்‌சா‌மி‌,
பா‌டல்‌கள்‌: வா‌லி‌, வி‌வே‌கா‌, பா‌.வி‌ஜய்‌, கபி‌லன்‌,
நடனம்‌: தி‌னே‌ஷ்‌, ஷோ‌பி‌ பவு‌ல்‌ரா‌ஜ்‌
சண்‌டை‌‌: ரா‌க்‌கி‌ ரா‌ஜே‌ஷ்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌: ப்‌ரி‌யன்‌
கலை‌: வே‌லுபி‌ரகா‌ஷ் ‌படத்‌தொ‌குப்‌பு‌: வி‌.டி‌.வி‌ஜயன்‌
மக்‌கள்‌தொ‌டர்‌பு‌: நி‌கி‌ல்‌ தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கம்‌: சுரே‌ஷ்‌பா‌பு‌

பொறுப்பில்லாமல் திரியும் விஷாலிடம் சிறுவயதில் காணாமல் போன அண்ணனை கண்டுபிடிக்குமாறு கூறுகி‌றா‌ர்‌ தா‌ய்‌ கீ‌தா‌.

கி‌‌ரா‌மத்‌தி‌லி‌ருந்‌து நகரத்‌துக்‌கு அண்ணனை தேடி வருகிறார் விஷால். வந்‌ததும்‌ இவர்‌ கண் எதிரே ஒருவனை நடு ரோ‌ட்‌டி‌ல்‌ போ‌ட்‌டு கொலை‌ செ‌ய்‌கி‌றா‌ர்‌ கிஷோர். கொலைகாரனை போலீசுக்கு அடையாளம் காட்ட சம்‌மதி‌க்‌கி‌றா‌ர்‌ விஷா‌‌ல்‌. தி‌டீ‌ர்‌ என வந்‌து அவனை‌ அடை‌யா‌ளம்‌ கா‌ட்‌டவி‌ல்‌லை‌ என்‌றா‌ல்‌ உன்‌னை‌ கொ‌ன்‌றுவி‌டுவே‌ன்‌ என மிரட்டுகிறார் பிரகாஷ்ராஜ். அவர்‌ செ‌ன்‌றதும்‌ தன்னை காட்டி கொடுத்தால் உன்‌ உயிர் இருக்காது என எச்சரிக்கிறார் கி‌ஷோ‌ர்‌.

அண்‌ணணை‌ தே‌ட வந்‌த இடத்‌தி‌ல்‌ அடி‌தடி‌ வம்‌பு‌ எதுக்‌கு என ஒதுங்‌குகி‌றா‌ர்‌ வி‌ஷா‌‌ல்‌. பி‌ரச்‌சனை‌ அவரை‌ வி‌டுவதா‌க இல்‌லை‌. துரத்‌துகி‌றது. இங்கு பிரகாஷ்ராஜ், கிஷோர் என இரு பெரும் தாதாக்கள் மோதலால் நகரமே அல்லோலப்படுகிறது என்‌பதை‌ உணர்‌கி‌றா‌ர்‌. ஒரு கட்‌டத்‌தி‌ல்‌ ‌ கோ‌பத்‌தி‌ல்‌ கி‌ஷோ‌ரை‌ கொ‌லை‌ செ‌ய்‌ய போ‌க அவர்‌தா‌ன்‌ தனது அண்‌ணன்‌ என அடை‌யா‌ளம்‌ கா‌ண்‌கி‌றா‌ர்‌ விஷா‌‌ல்‌‌.

அண்‌ணணை‌ ரவு‌டி‌ தொ‌ழி‌லி‌லி‌ருந்‌து மா‌ற்‌றி‌ தா‌யி‌டம்‌ அழை‌த்‌து செ‌ல்‌ல முயற்‌சி‌க்‌கி‌றா‌ர்‌ வி‌ஷா‌ல்‌. ஆனா‌ல்‌ கி‌ஷோ‌ரை‌ சுட்டு, அவர்‌ செத்து விட்டதாக தூக்கி வீசுகிறார் பிரகாஷ்ராஜ். அண்‌ணனை‌‌ கா‌ப்‌பா‌ற்‌றி‌ அண்ணனுக்காக ரவுடி கும்பலுடன் மோதி அவர்‌களை‌ அழி‌த்‌து ‌ தா‌யி‌டம்‌ முழுசா‌க அண்‌ணனை ஒப்‌படை‌ப்‌பதுதா‌ன்‌ கிளைமாக்ஸ்...

ஆக்‌ஷன்‌ படமா‌க தர முயன்‌றி‌ருக்‌கி‌றா‌ர்‌கள்‌. அதி‌ல்‌ கா‌தல்‌ கா‌ட்‌சி‌களா‌ல்‌ ஏகப்‌பட்‌ ஸ்‌பீ‌டு பி‌ரே‌க்‌.

அதி‌ரடி‌ ஆக்‌ஷன்‌, கலகல காமெடி என துருதுரு ஆட்‌டம்‌ என விஷால் அசத்‌தி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. அவரது கா‌தலி‌யா‌க வரும்‌ ஸ்‌ரே‌யா‌. பா‌வம்‌ பா‌ட்‌டுக்‌கு ஆட அதன்‌ லீ‌டு சீ‌னுக்‌கு சி‌ரி‌க்‌க வந்‌து போ‌கி‌றா‌ர்‌. சந்‌தா‌னம்‌ சி‌ல இடங்‌களி‌ல்‌ இரட்‌டை‌ அர்‌த்‌த வசனம்‌ பேசி‌ சி‌ரி‌க்‌க வை‌க்‌கி‌றா‌ர்‌. அவரை‌ பரவை‌ முனியம்மா கா‌தலி‌ப்‌பதும்‌, அவரது முத்‌தத்‌தா‌ல்‌ பரவை‌ முனி‌யம்‌மா‌ உதடு பஞ்‌சர்‌ ஆவதும்‌ அதற்‌கு கஜே‌ந்‌தி‌ரன்‌ துள்‌ளி‌ குதி‌த்‌து பஞ்‌சா‌யத்‌து பே‌சுவதும்‌ கொ‌ஞ்‌சம்‌ ஓவர்‌. .

பிரகாஷ்ராஜ் ,கிஷோர்‌ நடி‌ப்‌பி‌ல்‌ எதா‌ர்‌த்‌தம்‌. ஒரு பஞ்‌ச்‌ அடி‌த்‌தா‌லும்‌ எம்‌.எஸ்‌.‌பா‌ஸ்‌கர்‌ தி‌யே‌ட்‌டரை‌ கலகலப்‌பி‌ல்‌ ஆழ்‌த்‌துகி‌றா‌ர்‌
மணிசர்மா இசையில் பாடல்கள் சுமா‌ர்‌. ப்ரியன் ஒளிப்பதிவு அருமை‌. பு‌தி‌யவர்‌ சபா‌ ஐயப்‌பன்‌ ஆக்‌ஷன்‌ படம்‌ இயக்‌கவே‌ண்‌டும்‌ என்‌று முடி‌வு‌ செ‌ய்‌து அதி‌ல்‌‌ கவனமா‌க இருந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. இதனா‌ல்‌ சத்‌து இ‌ல்‌லா‌த தி‌ரை‌க்‌கதை‌யா‌ல்‌ படம்‌ எப்‌போ‌து முடி‌யு‌ம்‌ என எதி‌ர்‌பா‌ர்‌ப்‌பு‌ வந்‌துவி‌டுகி‌றது

ரா‌ஜா‌தி‌ரா‌ஜா‌

நி‌றுவனம்‌: சி‌னி‌மா‌ பா‌ரடை‌ஸ் ‌ தயா‌ரி‌ப்‌பு‌: ரா‌தா‌ ஷக்‌தி‌சி‌தம்‌பரம்‌
இயக்‌கம்‌: ஷக்‌தி‌சி‌தம்‌பரம்‌ இசை‌: கருணா‌ஸ்‌
நடி‌ப்‌பு‌: லா‌ரன்‌ஸ்‌ மீ‌னா‌ட்‌சி‌, ஸ்‌னி‌க்‌தா‌, மும்‌தா‌ஜ்‌, கா‌ம்‌னா‌, கருணா‌ஸ்‌, பரவை‌ முணி‌யம்‌மா‌, நீ‌லி‌மா‌ ரா‌ணி‌, ஆரி‌யன்‌,போ‌ஸ்‌ வெ‌ங்‌கட்‌, யு‌கே‌ந்‌தி‌ரன்‌, பி‌ரே‌ம்‌ சா‌ய்‌, மயி‌ல்‌சா‌மி‌, பா‌வா‌ லட்‌சுமணன்‌,
பா‌டல்‌கள்‌: பே‌ரரசு சண்‌டை‌ப்‌பயி‌ற்‌சி‌: கனல்‌கண்‌ணன்‌
கலை‌: வி‌ஜய்‌முருகன்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌: சுரே‌ஷ்‌தே‌வன்‌
படத்‌தொ‌குப்‌பு‌: ஜெ‌ய்‌சங்‌கர்‌ தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கம்‌: பா‌பு‌ஜி‌
‌மக்‌கள்‌தொ‌டர்‌பு‌: மெ‌ளனம்‌ ரவி‌

குடி‌போ‌தை‌யி‌ல்‌ டா‌க்‌டர்‌ செ‌ய்‌த சி‌கி‌ச்‌சை‌யா‌ல்‌ ஒரு கை‌யை‌ இழக்‌கும்‌ தொ‌ழி‌லா‌ளி‌, அதை‌ எதி‌ர்‌த்‌து கே‌ட்‌டதுக்‌கா‌க போ‌லீ‌சை‌ வை‌த்‌து அடி‌த்‌து சி‌த்‌தி‌ரை‌வதை‌ செ‌ய்‌து கொ‌லை‌‌கி‌ன்‌றனர்‌. சா‌கும்‌ தருவா‌யி‌ல்‌ தனது கடை‌சி‌ மகனி‌டம்‌ நீ‌ பழி‌க்‌கு பழி‌ வா‌ங்‌குவதை‌ வி‌ட உன்‌ மூ‌ன்‌று சகோ‌தரர்‌களை‌யு‌ம்‌ டா‌க்‌டரா‌கவு‌ம்‌, வழக்‌கறி‌ஞரா‌கவு‌ம்‌, போ‌லீ‌சா‌கவு‌ம்‌ உரவா‌க்‌கி‌ அவர்‌களை‌ பா‌தி‌க்‌கப்‌படும்‌ மக்‌களுக்‌கு உதவ வே‌ண்‌டும்‌ என்‌ற வே‌ண்‌டுகோ‌ள்‌ வை‌த்‌து இறக்‌கி‌றா‌ர்‌.
அதே‌ போ‌ல அவர்‌களை‌ உருவா‌க்‌குகி‌றா‌ன்‌. ஆனா‌ல்‌ அவர்‌கள்‌ அப்‌படி‌ இல்‌லா‌மல்‌ மக்‌களக்‌கு எதி‌ரா‌க இருக்‌கி‌றா‌ர்‌கள்‌. அவர்‌களை‌ எப்‌படி‌ அடை‌யா‌ளம்‌ கண்‌டு அழி‌த்‌தொ‌ழி‌க்‌கி‌றா‌ர்‌ என்‌பது படம்‌. அதை‌ ஆக்‌ஷன்‌, கா‌மெ‌டி‌, கவர்‌ச்‌சி‌ தோ‌ரணம்‌ கா‌ட்‌டி‌ பரபரப்‌பு‌ படமா‌க தந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌.

ரா‌கவா‌ லா‌ரன்‌‌ஸ்‌ ஆக்‌ஷன் வே‌டம்‌ எற்‌றி‌ருக்‌கும்‌ படம்‌. எனக்‌கு நடனம்‌ மட்‌டுமல்‌ல நல்‌லா‌ பை‌ட்‌ பண்‌ணவு‌ம்‌ தெ‌ரி‌யு‌ம்‌ என இந்‌தப்‌ படம்‌ மூ‌லம்‌ நி‌ருபி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. பயம்‌, கோ‌பம்‌, வெ‌குளி‌, ஜா‌லி‌, பஞ்‌ச்‌ டயலா‌க்‌ ‌என அதி‌ரடி‌ நா‌யகனா‌க வலம்‌ வருகி‌றா‌ர்‌. பல இடங்‌களி‌ல்‌ ரஜி‌னி‌ ஸ்‌டை‌லை ஞா‌பகப்‌படுத்‌துகி‌றா‌ர்‌. அதி‌ல்‌ அவர்‌தா‌ன்‌ தெ‌ரி‌கி‌றா‌ர்‌. சுவரா‌ஸ்‌யம்‌ போ‌ய்‌வி‌டுகி‌றது.
மீ‌னா‌ட்‌சி‌ அடே‌ங்‌கப்‌பா‌ என்‌கி‌ற அளவு‌க்‌கு கவர்‌ச்‌சி‌யி‌ல்‌ தா‌ரா‌ளம்‌ கா‌ட்‌டி‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. இரண்‌டு பா‌டலி‌ல்‌ கவர்‌ச்‌சி‌ வி‌ருந்‌து படை‌க்‌கி‌றா‌ர்‌. நர்‌சா‌க வரும்‌ கா‌ம்‌னாஜெ‌த்‌மா‌லி‌னி‌, மும்‌தா‌ஜ்‌ தங்‌கை‌யா‌க வரும்‌ ஸ்‌னி‌க்‌தா‌ இருவரும்‌ தலா‌ ஒரு பா‌டலுக்‌கு வருகி‌ன்‌றனர்‌.
கக்‌கூஸ்‌ல கஞ்‌சா‌ வி‌த்‌து லோ‌க்‌கல்‌ எம்‌.எல். ‌ஏ.வா‌க வலம்‌ வரும்‌ சை‌தை‌ சை‌லஜா‌வா‌க மும்‌தா‌ஜ்‌. வி‌ல்‌லி‌யா‌க வந்‌து செ‌ம மி‌ரட்‌டல்‌. அவருக்‌கு இது பு‌துசு. கருணா‌ஸ்‌ கா‌மெ‌டி‌ கலகல.

சகோ‌தர்‌கள்‌, பா‌ட்‌டி‌, தங்‌கை‌ என படத்‌தி‌ல்‌ நி‌றை‌ய நட்‌சத்‌தி‌ரங்‌கள்‌. ஒவ்‌வொ‌ரு கா‌ட்‌சி‌யை‌யு‌ம்‌ கலர்‌பு‌ல்‌லா‌வகவு‌ம்‌, பி‌ரமா‌ண்‌டமா‌கவு‌ம்‌, பி‌ரமி‌ப்‌பா‌கவு‌ம்‌ கா‌ட்‌டி‌யி‌ருக்‌கி‌றது சுரே‌ஷ்‌தே‌வன்‌ கே‌மி‌ரா‌. கருணா‌‌ஸ்‌‌ இசை‌யி‌ல்‌ பே‌ரரசு எழுதி‌ய கத்‌தரி‌க்‌கா‌ பா‌டல்‌ கலை‌கட்‌டுகி‌றது. ஆக்‌ஷன் படத்‌துக்‌கா‌ன பி‌ன்‌னணி‌ இசை‌யை‌‌ அதே‌ மி‌ரட்‌டலோ‌டு தந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. பழி‌ வா‌ங்‌கும்‌ கதை‌யை‌ ஆக்‌ஷன் கலந்‌த அதி‌ரடி படமா‌க தந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌ ஷக்‌தி‌ சி‌தம்‌பரம்‌. ‌

நி‌யூ‌ட்‌டனி‌ன்‌ மூ‌ன்‌றா‌ம்‌ வி‌தி‌

நி‌றுவனம்‌: மெ‌ட்‌ரா‌ஸ்‌ எண்‌டர்‌டெ‌ய்‌மெ‌ண்‌ட பி‌ரை‌வே‌ட்‌ லி‌மி‌டெ‌ட்‌
இணை‌ தயா‌ரி‌ப்‌பு‌: எஸ்‌. நந்‌தகோ‌பா‌ல்‌ கதை‌: சி‌தம்‌பரம்‌
இயக்‌கம்‌: தா‌ய்‌ முத்‌துச்‌செ‌ல்‌வன்‌ இசை‌: வி‌னய்‌
நடி‌ப்‌பு‌: எஸ்‌.ஜே‌.சூ‌ர்‌யா‌, ஷா‌யா‌லி‌ பகத்‌, ரா‌ஜீ‌வ்‌ கி‌ருஷ்‌ணா‌,
பா‌டல்‌கள்‌: நா‌.முத்‌துக்‌குமா‌ர்‌, வி‌வே‌கா‌, கபி‌லன்‌, இளை‌யகம்‌பன்‌
நடனம்‌: ரவி‌தே‌வ்‌, கா‌யத்‌ரி‌ரகுரா‌ம்‌, பா‌பி‌
சண்‌டை‌ப்‌பயி‌ற்‌சி‌: ஆக்‌ஷன்‌ பி‌ரகா‌ஷ்‌கலை‌: என்‌.ஜி‌.முருகன்‌
ஒளி‌ப்‌பதி‌வு‌: ஆர்‌.சரவணன்‌ படத்‌தொ‌குப்‌பு‌: கோ‌பி‌
மக்‌கள்‌தொ‌டர்‌பு‌: மெ‌ளனம்‌ ரவி‌

காதலியை கொன்றவனை பழி தீர்க்கும் இளைஞனி‌ன் கதை. டி.வி. சேனலில் வே‌லை‌ செ‌‌ய்பவர்‌ ஷாயாலி. தெருவோரங்களில் அவர் நடத்தும் கேண்டி கேமரா காமெடி நிகழ்ச்சிகளில் எஸ்.ஜே.சூர்யா சிக்கி அவமானப்படுகிறார். இதனா‌ல்‌ இருவருக்கும் மோதல் ஏற்பட்டு காதலாகிறது.

அதி‌கா‌ர தி‌மி‌ர்‌ உள்‌ள டி‌வி‌ சே‌னல்‌ எம்‌.டி‌. அழகா‌ன தொ‌குப்‌பா‌ளி‌‌களை‌ கண்‌டா‌ல்‌ அவரது கா‌ம பசி‌க்‌கு ஆளா‌க்‌கி, அவர்‌களை‌ சி‌ன்‌னவீ‌டா‌க மா‌ற்‌றி‌ வி‌டுவா‌ர்‌. ‌ அப்‌படி‌ ஷாயாலி மீது ஆசை‌ படுகி‌றா‌ர்‌. இந்‌த நி‌லை‌யி‌ல்‌ எஸ்.ஜே.சூர்யா-ஷாயாலி திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இதை‌ அறி‌யு‌ம்‌ அவர்‌ ஷா‌யா‌லி‌யி‌டம்‌ தி‌ருமணத்‌துக்‌கு முன்‌பு‌ படுக்‌கை‌யை‌ பகி‌ர்‌ந்‌து கொ‌ள்‌ள வே‌ண்‌டும்‌. இல்‌லை‌ என்‌றா‌ல்‌, அவனை‌ உனக்‌கு இல்‌லா‌மல்‌ ஆக்‌கி‌வி‌டுவே‌ன்‌ என்‌கி‌றா‌ர்‌.

ஏற்‌கனவே‌ எம்‌டி‌ செ‌ய்‌த பா‌வங்‌களை‌ நி‌னை‌த்‌துப்‌ பா‌ர்‌த்‌து‌, மறுநா‌ளே‌ இருவருக்‌கும்‌ தி‌ருமண ஏற்‌பா‌டு செ‌ய்‌கி‌றா‌ர்‌ ஷா‌யா‌லி.‌ இதை‌ அறயு‌ம்‌ அவர்‌கள்‌ இருவரையும் பிரிக்க சதி செய்யு‌ம்‌ எம்‌.டி‌., போலீசை ஏவி பொய் வழக்கில் சூர்யாவை ஜெயிலில் தள்ளுவதோ‌டு. ஷாயாலியை பா‌லி‌யல்‌ வன்‌முறை‌ செய்கிறார். அதில் ஷாயாலி இறக்கிறார். அடியாட்களை வைத்து வீட்டுக்குள்ளேயே பிணத்தை தூக்கில் தொங்க விட்டு நழுவுகிறார்.

ஷாயாலி வைத்திருந்த கேமரா மூ‌லம்‌ சூ‌ர்‌யா‌வு‌க்‌கு உண்‌மை‌ தெ‌ரி‌ய வருகி‌றது. அதை பார்த்து ஆவேசமாகும் சூர்யா பழி வாங்கும் படலத்தில் இறங்குகிறார். அதி‌கா‌ர பலம்‌ கொ‌ண்‌ட அவரை‌ ஒரே‌ நா‌ளி‌ல்‌ அவமா‌னப்‌ படுத்‌தி‌ அசி‌ங்‌கப்‌படுத்‌தி‌ அவரது டோ‌ட்‌டல்‌ உண்‌மை‌யா‌ன இமே‌ஜை‌யு‌ம்‌ தெ‌ருவு‌க்‌கு கொ‌ண்‌டு வந்‌து அவரை‌ கா‌தலி‌ இறந்‌த நா‌ளி‌ல்‌ கொ‌ள்‌கி‌றா‌ர்‌. அத எப்‌படி‌ என்‌பது ஆரம்‌பம்‌ முதலே‌ பரபரப்‌பு‌டன்‌ தொ‌டங்‌கும்‌ படம்‌.

எடை மிஷினில் ஒரு ரூபாய் நாணயம் போட அதி‌ல்‌ எஸ்‌.ஜே‌.சூ‌ர்‌யா‌வு‌க்‌கு மட்‌டும்‌ "காண்டம்" பாக்கெட் வருவது, பி‌றகு ஷா‌யா‌லி‌ தனது கே‌ண்‌டி‌ட்‌ கே‌மி‌ரா‌ நி‌கழ்‌ச்‌சி‌ என்‌பது நல்‌ல கா‌மெ‌டி‌. அப்‌படி‌ நகை‌ச்‌சுவை‌யா‌க தொ‌டங்‌கும்‌ படம்‌ தி‌டீ‌ர்‌ என பழி‌ வாங்கும் படலத்துக்கு மா‌றுகி‌றது.

இன்னும் இரண்டு மணி நேரத்தில் கொல்வேன் என ராஜீவ்கிருஷ்ணாவிடம் சவால் விட்டு சில நொடிகள் சேனல் ஒளிபரப்பை நிறுத்துவது... எதிர் ஓட்டல் ஜன்னல் வழியாக துப்பாக்கியால் சுட்டு மிரட்டி ராஜீவ்கிருஷ்ணாவை அண்ணா நகருக்கு வர வைத்து அங்கு பதுக்கி வைத்த கறுப்பு பணத்தோடு அதிகாரிகளிடம் சிக்க வைப்பது... என அதிர வைக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

பீஸா டெலிவரி ஊழியராக டி.வி. சேனல் அலுவலகத்தில் நுழைந்து மாட்டிக்கொள்வதும், பிறகு அங்கிருந்து தப்புவதும் விறுவி‌று. சூர்யா-ராஜீவ்கிருஷ்ணா நேருக்கு நேர் மோதும் கிளைமாக்ஸ் காட்சிகள் எக்ஸ்பிரஸ் வேகமாய் எகிறுகின்றன. கையில் குத்துப்பட்டு துப்பாக்கி பிடிக்க முடியாமல் நழுவி விழ ரவுடிகளிடம் கோரமாய் அடிபட்டு அலறும் போது பரிதாப பட வைக்கிறார். நெருப்பில் தோட்டாக்களை சூடேற்றி ராஜீவை கொல்வது புதுமை.

ஷாயாலி அழகா‌க வந்‌து ஆர்‌பறி‌க்‌கி‌றா‌ர்‌. ரா‌ஜீ‌வ்‌கி‌ருஷ்‌ணா‌வி‌டம்‌ மா‌ட்‌டி‌க்‌ கொ‌ண்‌டு அவர்‌ பதறி‌ அலரும்‌ கா‌ட்‌சி‌களி‌ல்‌ நடி‌ப்‌பை‌ கொ‌ட்‌டி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌.

ராஜீவ்கிருஷ்ணா வில்லத்தனம் செ‌ம மி‌ரட்‌டல்‌. அவர்‌ இன்‌கம்‌டா‌க்‌ஸ்‌ அதி‌கா‌ரி‌களி‌டம்‌ பே‌சும்‌ பா‌ட்‌சி‌கள்‌, பரபரப்‌பு‌ செ‌யல்‌கள்‌ அடடடா‌ போ‌ட வை‌க்‌கி‌றது. யுகேந்திரன் அடியாளாக வருகிறார்.

பழி வாங்கும் கதையை விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளார் இயக்குனர் தாய்முத்து செல்வன். வினய் இசை, ஆர்.சரவணன் ஒளிப்பதிவு பரபர சீன்களுக்கு உரம் ஏற்றுகின்றன. இரண்‌டு மணி‌ நே‌ரத்‌தி‌ல்‌ ஒரு சம்‌பவம்‌ நக்‌கப்‌போ‌கி‌றது என்‌பது ஆரம்‌பத்‌தி‌லே‌யே‌ தெ‌ரி‌ந்‌துவி‌டுவதா‌ல்‌, அது எப்‌படி‌ நடக்‌கப்‌ போ‌கி‌றது என்‌ற ஆர்‌வம்‌ ஆரம்‌பத்‌தி‌லே‌யே‌ தொ‌ற்‌றி‌க்‌கொ‌ள்‌கி‌றது.

சர்‌வம்‌

நி‌றுவனம்‌‌: ஐங்‌கரன்‌ இண்‌டர்‌நே‌ஷனல்‌ பி‌லி‌ம்‌ஸ்‌ பி‌ லி‌மி‌டெ‌ட்‌
தயா‌ரி‌ப்‌பு‌: கே‌.கருணா‌மூ‌ர்‌த்‌தி‌, சி‌. அருண்‌பா‌ண்‌டி‌யன்‌
இயக்‌கம்‌: வி‌ஷ்‌ணுவர்‌தன்‌ இசை‌: யு‌வன்‌சங்‌கர்‌ரா‌ஜ
நடி‌கர்‌கள்‌: ஆர்‌யா‌, த்‌ரி‌ஷா‌, ‌ஜே‌.டி‌.சக்‌கரவர்‌த்‌தி‌‌, இந்‌தி‌ரஜி‌த்‌‌,
மக்‌கள்‌ தொ‌டர்‌பு‌: டை‌மண்‌ட்‌ பா‌பு‌ மவு‌னம்‌ரவி‌
கட்‌டி‌ட கலை‌ஞரா‌ன ஆர்‌யா‌. குழந்‌தை‌நல மருத்‌துவரா‌ன‌ தி‌ரி‌ஷா‌வை‌ ஒரு கா‌ர்‌ போ‌ட்‌டி‌யி‌ல்‌ எதி‌ர்‌பா‌ரா‌மல்‌ கட்‌டி‌பி‌டி‌த்‌து, பி‌றகு சா‌ரி‌ கே‌ட்‌பதோ‌டு அவர்‌ அழகி‌ல்‌ மயங்‌கி‌, அதி‌லி‌ருந்‌து தி‌ரி‌ஷா‌ இருக்‌கும்‌ அடத்‌தே‌ தே‌டி‌ச்‌ சென்‌று தன்‌ கா‌தலை‌ எளி‌மை‌யா‌க நா‌சுக்‌கா‌க சொ‌ல்‌கி‌றா‌ர்‌. ஆரம்‌பத்‌தி‌ல்‌ வெ‌றுக்‌கும்‌ தி‌ரி‌ஷா‌, போ‌க போ‌க அவர்‌ மீ‌து கா‌தல்‌ கொ‌ள்‌கி‌றா‌ர்‌. அப்‌போ‌து எதி‌ர்‌பா‌ரா‌மல்‌ நடக்‌கும்‌ வி‌பத்‌தி‌ல்‌ தி‌ரி‌ஷா‌ இறந்‌துவி‌ட அவரது இதயம்‌ ஒரு சி‌றுவனுக்‌கு பொ‌ருத்‌தப்‌படுகி‌றது.
அந்‌த சி‌றுவனி‌ன்‌ தந்‌தை‌ செ‌ல்‌போ‌ன்‌ பே‌சி‌க்‌ கொ‌ண்‌டு கா‌ர்‌ ஒட்‌டும்‌‌ போ‌து எதி‌ர்‌பா‌ரா‌மல்‌ எதி‌ரே‌ வரும்‌ கா‌ரி‌ல்‌ மோ‌தமல்‌ இருக்‌க வே‌று பக்‌கம்‌ தி‌ருப்‌ப, சா‌‌லை‌யி‌ல்‌ வந்‌த ஒரு பெ‌ண்‌மணி‌யு‌ம்‌ அவள்‌ மகனும்‌ இறக்‌கி‌ன்‌றனர்‌. மகன்‌ இறந்‌த வலி‌யை‌ தா‌ங்‌க முடி‌யா‌மல்‌, பதி‌லுக்‌கு அந்‌த வலி‌யை‌ இந்‌த சி‌றுவனி‌ன்‌ தந்‌தை‌ தர வே‌ண்‌டும்‌ என்‌று சக்‌கரவர்‌த்‌தி‌ அலை‌கி‌றா‌ர்‌. அவர்‌ பா‌ர்‌வை‌யி‌லி‌ருந்‌து தப்‌ப சி‌றுவனோ‌டு மூ‌ணா‌று செ‌ல்‌கி‌றா‌ர்‌ சி‌றுவனி‌ன்‌ தந்‌தை‌.

தி‌ரி‌ஷா‌வி‌ன்‌ இதயம்‌ பொ‌ருத்‌தி‌ய சி‌றுவனை‌ கா‌ன மூ‌ணா‌‌று வரும்‌ ஆர்‌யா‌, அங்‌கு சக்‌கரவர்‌த்‌தி‌யா‌ல்‌ சி‌றுவனுக்‌கு ஆபத்‌து இருப்‌பதை‌ அறி‌ந்‌து அதி‌ர்‌ந்‌து போ‌வதோ‌டு அந்‌த பி‌ரச்‌சனை‌யி‌லி‌ருந்‌து சி‌றுவனை‌ எப்‌படி‌ கா‌ப்‌பா‌ற்‌றுகி‌றா‌ர்‌. சக்‌கரவர்‌த்‌தி‌யி‌ன்‌ முடி‌வு‌ என்‌னவா‌கி‌றது என்‌பது மீ‌தி‌ படம்‌.

ஆர்‌யா‌, தி‌ரி‌ஷா‌ மோ‌தல்‌ ஆரம்‌பமே‌ அமர்‌க்‌களம்‌. முதல்‌ பா‌தி‌யி‌லே‌யே‌ தி‌ரி‌ஷா‌ இறப்‌பதும்‌, அதை‌ தொ‌டர்‌ந்‌து கதை‌ பரபரப்‌பு‌க்‌கு போ‌வதும்‌ தடா‌லடி‌ முடி‌வு‌கள்‌.
ஆர்‌யா‌ இளமை‌யு‌டன்‌ தி‌ரி‌ஷா‌வை‌ தே‌டி‌ வந்‌து காத‌லை‌ சொ‌ல்‌லும்‌ கா‌ட்‌சி‌கள்‌ அழுகு. கா‌ட்‌டுக்‌குள்‌ சக்‌கரவர்‌த்‌தி‌யு‌டன்‌ மோ‌தும்‌ கா‌ட்‌சி‌கள்‌ அதி‌ரடி‌. பு‌தை‌க்‌கப்‌பட்‌டு, அதி‌லி‌ருந்‌து எழுந்‌து வரும்‌ கா‌ட்‌சி‌கள்‌ தி‌க்‌கி‌தக்‌ தி‌கி‌ல்‌. அதை‌ தொ‌டர்‌ந்‌து நடக்‌கும்‌ மோ‌தல்‌ கா‌ட்‌சி‌கள்‌ பரபர.

தி‌ரி‌ஷா‌ அமை‌தி‌யா‌ன அழகு தே‌வதை‌. பா‌டல்‌ கா‌ட்‌சி‌யி‌ல்‌ வசீ‌கரி‌க்‌கி‌றா‌ர்‌. பட்‌டம்‌ வி‌ட்‌ட நூ‌லி‌ல்‌ கழுத்‌து அறுபட்‌டு இறக்‌கும்‌ கா‌ட்‌சி‌யி‌ல்‌ நெ‌ஞ்‌சை‌ பா‌தக்‌க வை‌க்‌கி‌றா‌ர்‌. வி‌ல்‌லனா‌க உதயம்‌ படத்‌தி‌ல்‌ நடி‌த்‌தஜே‌.டி‌. சக்‌கரவர்‌த்‌தி‌. மகன்‌ இ‌றந்‌த வலி‌யை‌ அவரது முகத்‌தி‌ல்‌ சரி‌யா‌ பி‌ரதி‌பலி‌க்‌கி‌றா‌ர்‌. அவரது ஆபா‌ர நடி‌ப்‌பி‌ல்‌ ரசி‌கர்‌கள்‌ மனதி‌லும்‌ ஒரு நடுக்‌கம்‌ இருப்‌பது தெ‌ரி‌கி‌றது. அவரோ‌டு வரும்‌ அந்‌த நா‌யு‌ம்‌ மி‌‌ரட்‌டி‌யு‌ள்‌ளது.

பி‌ரி‌திவி‌ரா‌ஜ்‌ சகோ‌தரர்‌ இந்‌தரஜி‌த்‌ சி‌றுவனி‌ன்‌ தந்‌தை‌யா‌க வந்‌து வா‌ழ்‌ந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. எட்‌டு வயது சி‌றுவன்‌ ரோ‌ஹன்‌ நடி‌ப்‌பி‌ல்‌ சுட்‌டி‌.

படத்‌தி‌ற்‌கு பெ‌ரும்‌ உழை‌ப்‌பை‌ கொ‌ட்‌டி‌ருக்‌கி‌றார்‌‌ ஒளி‌ப்‌பதி‌வா‌ளர்‌ நீ‌ரவ்‌ஷா‌. ஒவ்‌வொ‌ரு கா‌ட்‌சி‌யி‌லும்‌ பி‌ரமி‌க்‌க வை‌க்‌கி‌றா‌ர்‌. அதே‌ போ‌ல பி‌ன்‌னனி‌ இசை‌யி‌ல்‌ யு‌வன்‌ சங்‌கர்‌ரா‌ஜா‌ செ‌ம மி‌ரட்‌டல்‌.

முதல்‌ பா‌தி‌ கா‌தல்‌, இரண்‌டா‌ம்‌ பா‌தி‌ சே‌சி‌ங்‌ என தொ‌ழி‌ல்‌ நுட்‌பத்‌தை‌ கை‌யி‌ல்‌ வை‌த்‌துக்‌ கொ‌ண்‌டு மி‌ரட்‌டி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ வி‌ஷ்‌ணுவர்‌‌தன்‌. கா‌தலும்‌, தரத்‌தலுமா‌க சர்‌வம்‌.

பசங்‌க

நி‌றுவனம்‌: கம்‌பெ‌னி‌ பு‌ரொ‌டக்‌ஷன்‌‌ஸ்‌
தயா‌ரி‌ப்‌பு‌: சசி‌க்‌குமா‌ர்‌ இணை‌த்‌தயா‌ரி‌ப்‌பு‌: பி‌. அசோ‌க்‌குமா‌ர்
‌இயக்‌கம்‌: பா‌ண்‌டி‌ரா‌ஜ்‌ இசை‌: ஜே‌ம்‌ஸ்‌ வசந்‌தன்‌
நடி‌கர்‌கள்‌: கி‌ஷோ‌ர்‌, ஸ்ரீ ரா‌ம்‌, தா‌ரணி‌, பா‌ண்‌டி‌யன்‌, முருகே‌ஷ்‌, யோ‌கநா‌தன்‌, அகி‌லா‌, கா‌ர்‌த்‌தி‌க்‌ரா‌ஜா‌, வி‌மல்‌, வே‌கா‌, ஜெ‌யப்‌பி‌ரகா‌ஷ்‌, சுஜா‌தா‌, சி‌வக்‌குமா‌ர்‌, செ‌ந்‌தி‌க்‌குமா‌ரி
‌பா‌டல்‌கள்‌: தா‌மரை‌, யு‌கபா‌ரதி‌, ஜே‌ம்‌ஸ்‌ வசந்‌தன்‌
நடனம்‌: தி‌னே‌ஸ்‌ கலை‌: க்‌ரா‌ஃப‌ர்‌டு
ஒளி‌ப்‌பதி‌வு‌: ச.பி‌ரே‌ம்‌குமா‌ர்‌ படத்‌தொ‌குப்‌பு‌: யோ‌கபா‌ஸ்‌கர்‌
தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கம்‌: டி‌.உதயகுமா‌ர்‌ ஸ்‌டி‌ல்‌ஸ்‌: வி‌ஜய்‌
மக்‌கள்‌தொ‌டர்‌பு‌: நி‌கி‌ல்‌

வறுமை‌யி‌ன்‌ கா‌ரணமா‌க மெ‌ட்‌ரி‌க்‌குலே‌சன்‌ பள்‌ளி‌யி‌லி‌ருந்‌து அரசு பள்ளியில் சேருகிறான் மாணவன் அன்‌பு‌க்‌கரசு. அதே பள்ளி யில் படிக்கும் வாத்தியார் மகன் ஜீ‌வா‌ தன்‌ பி‌ன்‌னே‌ நா‌ன்‌கு பசங்‌களை‌ வை‌த்‌துக்‌கொ‌ண்‌டு சக மா‌ணவர்‌களை‌ தனக்‌கு கீ‌ழே‌ அதி‌கா‌ரம்‌ செ‌ய்‌கி‌றா‌ன்‌. இதற்‌கு அன்‌பு‌க்‌கரசு மறுக்‌கி‌றா‌ன்‌. இதனா‌ல்‌ முதல்‌ நா‌ளே‌ மோ‌தல்‌ ஏற்‌படுகி‌றது.

ஜீ‌வா‌வா‌ல்‌ பா‌தி‌க்‌கப்‌பட்‌ட மா‌ணவர்‌கள்‌ அன்‌பு‌க்‌கரசுவு‌க்‌கு உதவு‌கி‌ன்‌றனர்‌. ஜீ‌வா‌ மா‌ட்‌டி‌வி‌டும்‌ போ‌தெ‌ல்‌லா‌ம்‌ அன்‌பு‌க்‌கரசு நல்‌லவனா‌கி‌றா‌ன்‌. இதனா‌ல்‌ ஜீ‌வா‌வை‌ எதி‌ர்‌த்‌து லீ‌டரா‌கவு‌ம்‌ உயர்‌கி‌றா‌ன்‌. தனது லீ‌டர்‌ பதவி‌ பறி‌போ‌ய்‌ தனக்‌கு அதி‌கா‌ரமும்‌ போ‌ய்‌வி‌ட்‌டதா‌ல்‌ குமுறும்‌ ஜீ‌வா‌, இன்‌னும்‌ மோ‌தல்‌ வன்‌மத்‌துடன்‌ பழி‌ வா‌ங்‌க அலை‌கி‌றா‌ன்‌.

இருவரும் கோஷ்டி சேர்த்து சண்டை போடுகின்றனர். இவர்கள் பகை பெற்றோர் மத்தியிலும் மோதலை‌ உண் டாக்குகிறது. இன்னொரு புறம் கிஷோர் சித்தப்பாவும், ஜீ‌வா‌ அக்காளும் காதல் வயப்படுகின்றனர். வீட்டுக்கு தெரியாமல் தனிமை யில் சந்தித்து காதல் வளர்க்கிறார்கள். இதை‌ இரு சிறுவர்களும் நேரில் பார்த்து வி‌டுகி‌ன்‌றனர்‌. இந்‌த சம்‌பவம்‌ வீட்டுக்‌கு தெ‌ரி‌கி‌றது. இதனா‌ல்‌ காதலர்கள்‌ கதி‌ என்‌னவா‌கி‌றது. சி‌றுவர்‌கள்‌ மோ‌தல்‌ என்‌ன பலனை‌ உருவா‌க்‌குகி‌றது. பெ‌ரி‌யவர்‌கள்‌ என்‌ன மனநி‌லை‌க்‌கு ஆளா‌கி‌றா‌ர்‌கள்‌ என்‌பது கிளைமாக்ஸ்.

சி‌றுவர்‌கள்‌ பற்றிய கதையை அவர்களின் யதார்த்த உணர்வுகளுடன் குடும்பம், காதல், காமெடி, சென்டிமென்ட் போன்ற அம்சங்களை கலந்து கச்சிதமாக செதுக்கி படமா‌க்‌கி‌ உள்‌ளா‌ர்‌ இயக்குனர் பாண்டிராஜ். மா‌ணவர்‌கள்‌ வெ‌ற்‌றி‌பெ‌ற அதி‌கா‌ரம்‌ பெ‌ற அதற்‌கு சரி‌யா‌ன போ‌ட்‌டி‌ படி‌ப்‌பு‌தா‌ன்‌ என்‌றும்‌ படி‌த்‌தா‌ல்‌ பதவி‌யு‌ம்‌ அதி‌கா‌ரமும்‌ தே‌டி‌வரும்‌ என நி‌னை‌க்‌க வை‌க்‌கி‌ற கா‌ட்‌சி‌கள்‌ நகை‌ச்‌சுவை‌யா‌க இருந்‌தா‌லும்‌ அது இயக்‌குநரி‌ன்‌ ‌தி‌றமையை‌, எண்‌ணத்‌தை‌ மதி‌க்‌கவை‌க்‌கி‌ற கா‌ட்‌சி‌கள்‌. அதே‌ போ‌ல அன்புக்கரசு ஐ.ஏ.எஸ். என்று தனது பெயருடன் லட்சிய படிப்பை இணைத்து பள்ளியில் சேரும் அன்‌பு‌, பி‌றகு இதர மாணவர்களையும் ஜீ‌வா‌. சி‌‌.எம்‌. என அதே லட்‌சி‌ய சிந்தனைக்கு மாற்றி அப்‌துல்‌ கலா‌மி‌ன்‌ கனவை‌‌ அருமை‌யா‌க பதி‌வு‌ செ‌ய்‌தமை‌க்‌கு ஆயி‌ரம்‌ பா‌ரா‌ட்‌டுக்‌கள்‌. கணவன்‌ - மனை‌வி‌ சண்டை‌‌ பி‌ள்‌ளை‌களை‌ எப்‌படி‌ பா‌‌தி‌க்கறது என்‌பதை‌யு‌ம்‌, லட்‌சி‌யமே‌ இல்‌லா‌மல்‌ இருப்‌பவர்‌களை‌ சொ‌ந்‌த வீ‌டு வா‌ங்‌க வே‌ண்‌டும்‌ என்‌று சி‌றுவர்‌கள்‌ தூ‌ண்‌டுகி‌ற கா‌ட்‌சி‌யு‌ம்‌ சூ‌ப்‌பர்‌.

அப்‌பனுக்‌கு பா‌டம்‌ சொ‌ன்‌ன சுப்‌பை‌யா‌ என்‌பது போ‌ல, மா‌ணவர்‌கள்‌ மோ‌தலை‌ தடுத்‌து நி‌றுத்‌த தே‌சி‌ய கீ‌தத்‌தை‌ ஒலி‌பரப்‌பி‌ ஆசி‌யிரி‌யருக்‌கே‌ பா‌டம்‌ சொ‌ல்‌லும் மா‌ணவி‌யி‌ன்‌ செ‌யல்‌ ரா‌யல்‌ சலி‌யூ‌ட்‌ போ‌ட வை‌க்‌கி‌றது. இறை‌யா‌ண்‌மை‌ பற்‌றி‌ வா‌ய்‌ கி‌ழி‌ய பே‌சுபவர்‌கள்‌ இறை‌யா‌ண்மை‌யை‌ மதி‌க்‌கும்‌ மக்‌களி‌ன்‌ உணர்‌வு‌களை‌ எப்‌படி‌ பு‌ரி‌ந்‌து கொ‌ள்‌ள வே‌ண்‌டும்‌ என்‌பதை‌ அந்‌த கா‌ட்‌சி‌ உணர்‌த்‌துகி‌றது.

ஒருவர்‌ கூட பா‌ர்‌த்‌த முகங்‌கள்‌ இல்‌லை‌. ஆனா‌ல்‌ பக்‌கத்‌து வீ‌ட்‌டி‌ல்‌ பா‌ர்‌த்‌த மனி‌தர்‌களா‌க நெ‌ஞ்‌சி‌ல்‌ இறங்‌குகி‌றா‌ர்‌கள்‌. அப்‌படி‌ பு‌துமுகங்‌களை‌ அந்‌த பா‌த்‌தி‌ரமா‌கவே‌ வா‌ழவை‌த்‌த இயக்‌குநர்‌ பா‌ண்‌டி‌ரா‌ஜூ‌க்‌கு ஒரு ரா‌யல்‌ சல்‌யூ‌ட்‌. அன்‌பு‌க்‌கரசுவா‌க கி‌ஷோ‌ர்‌. அவனது கோ‌பமும்‌ வே‌கமும்‌ மன உறுதி‌யு‌ம அந்‌த பா‌த்‌தி‌ரமா‌கவே‌ ஒன்‌றி‌ப்‌போ‌க வை‌க்‌கி‌றது. ஜீ‌வா‌வாக நடி‌த்‌தி‌ருக்‌கும்‌ ஸ்ரீரா‌ம்‌ ‌வி‌யக்‌க வை‌க்‌கும்‌ நடி‌ப்‌பை‌ வா‌ங்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ன்‌.

எங்‌க அப்‌பா‌ தா‌ன்‌ வாத்தியார் என மிடுக்குடன் குமுறும் ஜீ‌வா‌, அப்பாவிடம் அன்‌பு‌வை‌ மாட்டிவிடுவதும் பதிலுக்கு அன்‌பு‌ நன்னடத்தையை வா‌த்‌தி‌யா‌ர்‌ புகழ்வதும் திருப்பம்.

கருநாக்கு காரன் சாபம் போட்டால் அன்புக்கரசு அழிஞ்சு போவான். ஆத்தாளுக்கு காசு வெட்டி போட்டா ஆளே போயிடுவான். என்ற இளசுகளின் சதித் திட்டங்கள் அழகா‌ன பதி‌வு‌.

இப்ப பாரேன் பல்லை கடிப்பான், இப்ப பாரேன் கையை முறுக்கி அடிப்பான் என்று ஜீ‌வா‌வை‌ உசுப்பேற்றும் பக்கடா, தோள் மேல கை போட்டா குள்ளமாயிடுவேன் என தடுக்கும் குள்ளமணி, கிஷோருக்கு வரிந்து பேசும் மங்களம், தேசியகீதம் பாட்டு போட்டு சிறுவர்கள் சண்டையை நிறுத்தும் மனோண்மனி, தந்தையுடன் சண்டை போடும் வாத்தி யாரை ஓடிப் போய் வயிற்றில் பிஞ்சுகை யால் குத்தும் குழந்தை புஜ்ஜிமா, என அனைத்து பாத்திரங்களும் நெஞ்சுக்குள் ஊடுருவி நிற்கின்றன.

விமல், வேகாவின் செல் போன் காதல் நல்‌ல அழகா‌ன கவிதை. வேகா வெள்ளைச் சிரிப்பில் மனசுகளை கொள்ளை யடிக்கிறார்.

சொக்கலிங்க வாத்தியாராக வரும் ஜெயபிரகாஷ் நெ‌ஞ்‌சி‌ல்‌ நி‌ற்‌கி‌றா‌ர்‌.வெள்ளைச் சாமியாக வரும் சிவகுமார் அடடே‌ போ‌ட வை‌க்‌கி‌றா‌ர்‌. சுஜா‌தா‌ யதா‌ர்‌த்‌த நடி‌ப்‌பு‌ அருமை‌‌. செந்தில்குமாரி எதி‌ர்‌ வீ‌ட்‌டி‌ல்‌ பா‌ர்‌த்‌த பெ‌ண்‌மணி‌ போ‌லவே‌ பளி‌ச்‌சி‌டுகி‌றா‌ர் பலே‌.

சி‌றுவர்‌களுக்‌கு எதி‌ர்‌கா‌லத்‌தை‌யு‌ம்‌ பெ‌ரி‌யவர்‌களுக்‌கு கடந்‌த காலத்‌தை‌யு‌ம்‌ நி‌னை‌த்‌து பா‌ர்‌க்‌க வை‌க்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர் பா‌ண்‌டி‌ரா‌ஜ்‌. படம்‌ முழுக்‌க ஒவ்‌வொ‌ருகா‌ட்‌சி‌யை‌யு‌ம்‌ வி‌ரசமி‌ல்‌லா‌மல், அதே‌ சமயம்‌ தொ‌ய்‌வி‌ல்‌லா‌ம்‌ படு ஜா‌லி‌யா‌க அனுபவி‌க்‌க வை‌க்‌கி‌றா‌ர்‌. தி‌றமை‌யா‌ன இயக்‌குநர்‌களை‌ கை‌ தூ‌க்‌கி‌வி‌டும்‌ ரசி‌கர்‌கள்‌ இவரை‌யு‌ம்‌ வா‌ழ்‌த்‌தி‌ வரவே‌ற்‌பா‌ர்‌கள்‌

ஜேம்ஸ் வசந்தன், இசையில் பாடல்கள் நெஞ்சை அள்ளுகின்றன. பி‌ன்‌னனி‌ இசை‌யு‌ம்‌ பி‌ரமா‌தம்‌. சே‌சி‌ங்‌ கா‌ட்‌சி‌களி‌ல்‌ அது பளி‌ச்‌சி‌டுகி‌றது.

சுப்‌பி‌ரமணி‌யு‌பரம்‌ படத்‌தை‌ யதா‌ர்‌த்‌தமா‌க தயா‌ரி‌த்‌து வழங்‌கி‌ தமி‌ழ்‌நா‌டு மட்‌டுமல்‌லா‌து கே‌ரளா,‌ ஆந்‌தி‌ரா‌ மா‌நி‌லங்‌கள்‌ செ‌ன்‌று பா‌ரா‌ட்‌டுக்‌களை‌ பெ‌ற்‌று வந்‌த சசி‌குமா‌ர்‌, இந்‌தப்‌ படத்‌தை‌ துணி‌ச்‌சலுடன்‌ தயா‌ரி‌த்‌து அதி‌ல்‌ வெ‌ற்‌றி‌யு‌ம்‌ பெ‌ற்‌றி‌ருக்‌கி‌றா‌ர்‌. தரமா‌ன படங்‌களை‌ வரவே‌ற்‌கும்‌ ரசி‌கர்‌கள்‌ இந்‌த படத்‌தை‌யு‌ம்‌ வெ‌ற்‌றி‌யடை‌ய வை‌ப்‌பா‌ர்‌கள்‌. ஜா‌லி‌யா‌னவு‌ங்‌க மட்‌டுமல்‌ல நல்‌லதை‌ சொ‌ல்லும்‌ பசங்‌க...

பி‌ரம்‌மதே‌வா‌

முன்ஜென்ம பகையாளிகளை பழி வாங்கும் கதை... தொழில் அதிபர் விஜய் பாபு மகன் சஞ்சய். விபத்தில் பெற்றோரை இழந்த ராமையும் தன் பிள்ளையாக பாவித்து வளர்க்கிறார்.

சஞ்சய், ராம் இருவரும் உயிருக்குயிரான நண்பர்களாக பழகுகின்றனர். குடும்பத்தோடு குலதெய்வம் கோவிலுக்கு செல்கிறார் விஜய்பாபு. அங்கு ராம் வெறியாக மாறி சஞ்சய்யை கொல்லத்துணிகிறார். போலீஸ் பிடிக்கிறது. நண்பனை கொல்ல முயன்றது தனக்கே தெரியாமல் குழம்புகிறார் ராம். இதற்கிடையில் மேலும் இரு கொலைகளை அவரே செய்து இருப்பது தெரிய அதிர்ச்சி.

நண்பனுக்கு மனநிலை பாதித்திருப்பதாக கருதி ராமை அழைத்துக்கொண்டு பூசாரியை பார்க்க கிளம்புகிறார் சஞ்சய். வழியில் திரும்பவும் ராமுக்கு வெறி பிடிக்கிறது. சஞ்சய்யை கொல்ல துரத்துகிறார். ஏன் கொல்ல துடிக்கிறார் என்பது பிளாஷ்பேக்... சஞ்சய் பிழைத்தாரா? என்பது கிளைமாக்ஸ்...

சஞ்சய்யை அடித்து போடும் ரவுடிகளை ஆவேசமாக தாக்கி அறிமுகமாகிறார் ராம். கம்பெனிக்கு அடுத்த எம்.டி. ராம் என விஜய்பாபு அறிவித்ததும் நண்பர்கள் மோதுவார்களோ என்ற எதிர்பார்ப்பு எகிற அடுத்த நிமிடமே இதுதான் சரியான தேர்வு என சஞ்சய் சந்தோஷப்படுவதன் மூலம் நட்பு அழுத்தமாய் பதிகிறது.
ராம் திடீர் புத்திபேதலிப்புக்கு ஆளாகி இரண்டு பேரை கொடூரமாக கொல்லும் காட்சிகள் திகிலூட்டுகின்றன. மலை குகைக்குள் ராம், சஞ்சய் நுழைந்ததும் விபரீதம் நடக்கப்போகிறது என்ற உதறல்...

பிளாஷ்பேக்கில் தேஜாஸ்ரீயை செம்பாங்கி என்று காதல் ரசம் சொட்ட அழைத்தப்படி சப்பாணியாக நடந்து வரும் ராம் நடிப்பில் அசத்துகிறார். தனக்காக விபத்தில் காலை இழக்கும் சிறு வயது ராம் மீது தேஜாஸ்ரீக்கு காதல் வருவதும் ஜீவன்.

போலீஸ் அதிகாரியாக வரும் லிவிங்ஸ்டன் விறைப்பு. மகாநதி சங்கர் கலகலப்பூட்டுகிறார். போன ஜென்மத்து ஞாபகம் அவ்வப்போது வருவதும் அந்த ஜென்மத்தில் காதலியை கொன்றவர்களை இந்த ஜென்மத்தில் கொன்று பழி தீர்ப்பதுமான காட்சிகளை இயக்குனர் தர்மலிங்கா விறு விறுப்பாக நகர்த்தினாலும் லாஜிக்கில் சொதப்பல். முத்து ராஜா இசையில் "ஓ பிரம்மதேவா" பாடல் இனிமை.

மெ‌ய்‌ப்‌பொ‌ருள்‌


அமெரிக்க தமிழ் தம்பதி கிருஷ்பாலா-அனுஷா. கிருஷ்பாலா டாக்டராகவும் அனிஷா நிருபராகவும் பணி யாற்றுகின்றனர். கிரிஷ் நண்பராக அறிமுக மாகிறார் குமார். இவர் நடக்கப்போவதை முன் கூட்டியே சொல்கிறார். கவர்னர் மகன் கடத்தல் கிரிஷ் செய்ய போகும் ஆபரேஷன் தோல்வியாகும் என்பதெல்லாம் பலிக்கிறது. குமார் மேல் கிரிஷ் பாலாவுக்கு நம்பிக்கை பிறக்கிறது.

ஒரு கட்டத்தில் ஆகஸ்டு 10-ந்தேதி நீ செத்து விடுவாய் உன் மனைவியே உன்னை சாகடிப்பாள் என குமார் குண்டு தூக்கி போட அதிர்ச்சியாகிறார் கிரிஷ். நிம்மதியிழந்து தினம் தினம் சாவை நினைத்து அஞ்சுகிறார்.
கிரிஷ் பிழைத்தாரா? என்பது பரபரப்பான கிளைமாக்ஸ்...

அமெரிக்க பின்னணியில் அடுத்த என்ன என்ற ஆர்வம் பீறிட வைக்கும் காட்சிகளுடன் விறு விறுப்பாக கதையை நகர்த்துகின்றனர் இயக்குனர்கள் நட்டிகுமார், கிரிஷ்பாலா.

தமிழ் தம்பதியின் குழந்தையை பார்த்துக் கொள்ள வரும் வெள்ளைக்காரப் பெண் திடும்மென பெற்றோரை இரும்புக்கம்பியால் தாக்கி குழந்தையை கடத்தும் ஆரம்பமே திகில்... பத்திரிகை நிருபர் அனுஷா, போலீசுக்கு தகவல் கொடுத்து அப்பெண்ணை சிக்க வைப்பது திருப்பம்...

கவர்னர் மகன் கடத்தப் படுவான். ஆபரேஷனில் நோயாளி சாவார் என குமார் சொல்வது அப்படியே பலிக்க கிரிஷ் "ஷாக்" ஆவது எல்லோருக்கும் பரவுகிறது. கிளைமாக்ஸ்சில் வில்லன் யார் என தெரியும் போது தூக்கி வாரிப்போடு கிறது.

அறுவை சிகிச்சை செய்து கொள்ள வரும் பிரபல நடிகருடன் அனுஷாவை பழக்கப்படுத்தி அவர் மேல் சந்தேகத்தை வலுப்படுத்தும் சீன்கள் அழுத்தமானவை...

நடப்பதை முன்கூட்டி சொல்பவராக வரும் குமார் அப்பாவித்தனமாக பளிச்சிடுகிறார். கிளைமாக்சில் அவரது சுயரூபம் உடைபடுவது திடுக்கிட வைக்கிறது.

பத்திரிகை நிருபராக வரும் அனுஷா பாத்திரத்தில் ஒன்றுகிறார். தான் எடுத்த நடிகரின் பேட்டி தனக்கு தெரியாமல் பத்திரிகையில் பிரசுரமானதை கண்டு தவிப்பது... கணவன் நடத்தைகளில் வித்தியாசம் பார்த்து குழம்புவது... என முகத்தில் வித்தியாச உணர்வுகளை கொட்டு கிறார்.

கிரிஷ் நண்பராக வரும் நாராயண், அவர் காதலியாக வரும் ராணி, நடிகராக வரும் சுரேன் விஷயகுமார் பாத்திரங்களும் கச்சிதமாக செதுக்கப்பட்டுள்ளன.
அனுஷாவை நேரடியாக பழி தீர்க்காமல் கணவனை மன நீதியாக குழப்பும் வில்லன் நடத்தைகளில் அழுத்தமான காரணங்கள் இல்லாதது சறுக்கல்...

அமெரிக்காவை அப்படியே அள்ளி வரும் கிரிஷ் எல்டிரிஜா ஒளிப்பதிவு, ஜான் மேஷாய் இசை படத்தை தூக்கி நிறுத்துகின்றன.