Saturday, August 8, 2009

கா‌தல்னா சும்மா இல்ல


நி‌றுவனம்‌: ரா‌ஜ்‌ டெ‌லி‌வி‌ஷன்‌ நெ‌ட்‌ ஒர்‌க்‌ லி‌மி‌டெ‌ட்‌ வழங்‌கும்‌ ரா‌ஜ்‌ கோ‌தயா‌ரி‌ப்‌பு‌: எம்‌. இரா‌ஜே‌ந்‌தி‌ரன்‌, ‌எம்‌. இரா‌ஜரெ‌த்‌தி‌னம்‌, எம்.இரவீ‌ந்‌தி‌ரன்‌, எம். இரகுநா‌தன்
‌நடி‌ப்‌பு‌: சர்‌வா‌னந்‌த்‌, ரவி‌கி‌ருஷ்‌ணா‌, கமா‌லி‌னி‌முகர்‌ஜி‌, தே‌ஜா‌ஸ்ரீ, நா‌சர்‌, இளவரசு, எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கர்‌.
இயக்‌கம்‌: இளங்‌கண்‌ணன் ‌ பா‌டல்‌கள்‌: ‌பா‌.வி‌ஜய்‌, முத்‌துகுமா‌
இசை‌: ‌வி‌த்‌யா‌சா‌கர்‌, மணி‌சர்‌மா‌, இ.எஸ்‌. மூ‌ர்‌த்‌தி‌
ஒளி‌ப்‌பதி‌வு‌: எஸ்‌. ஏ. வி‌ன்‌செ‌ன்‌ட்‌ படத்‌தொ‌குப்‌பு‌: ‌ வி‌.டி‌.வி‌ஜயன்‌
கலை‌: ஜி‌.கே‌.‌‌ ‌‌ பி‌.ஆர்‌.ஓ. ஏ.ஜா‌ன்‌

தமிழில் சர்வத் எனும் பெயரில் இப்படத்தில் அறிமுகமாகியிருக்கும் சர்வானந்த் பெரிய தொழிலதிபர் நாசரின் ஒரே வாரிசு. அப்பா நாசர் மகன் சர்வத், தன்னை மாதிரியே தொழிலில் சிறந்து விளங்குவான் என அவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு வெளிநாட்டு சுற்றுலா செல்கிறார். ஆனால் சர்வத்தோ... தந்தை நாசர் விட்டுச் சென்ற தொழிலை கவனிக்காமல் பலவித சமூக சேவைகள் செய்யும் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட் கமாலினி முகர்ஜி மீது காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் கமாலினியும், சர்வத் மீது காதல் கொள்ள... காதல் கசிந்து உருகுகிறது. ஆனால் வெகுசில நாட்களி‌லேயே சர்வத்தின் பணக்காரத்தனம் கமாலினியை வெறுப்பு கொள்ள வைக்கிறது. சொல்லாமல் கொள்ளாமல் கமாலினி கழண்டு கொள்ள... அவரைத் தேடி தன் ஸ்டேட்டஸ், எஸ்டேட்ஸ் எல்லாவற்றையும் விட்டு விட்டு, காஸ்ட்லி பைக்கில் கிளம்புகிறார் சர்வத். அவரது பைக்கை எப்படியும் லபக்கி விட ‌வேண்டும் என்று சர்வத்துக்கு வழி காட்டுகிறேன் பேர்வழி என அவர் பின் சுற்றும் மற்றொரு ஹீரோ ரவிகிருஷ்ணா ஒரு கட்டத்தில் அவருக்கு உற்றத் தோழனாகிவிட... அதன் பின் காடு, மலை, நக்சலைட் இத்யாதி இத்யாதிகளை எல்லாம் சுற்றும் நட்பு வட்டாரம், காதலியை கண்டு பிடித்ததா, இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
தெலுங்கில் வெற்றி பெற்ற ஒரு படத்தின் ரீமேக் என்றாலும் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து சுவாரஸ்யமாக சொல்லியிருப்பதற்காக இயக்குனர் இளங்கண்ணனை பாராட்ட வேண்டும். சர்வத், ரவி கிருஷ்ணா இருவருமே நடிப்பில் பின்னி பெ‌டலெடுத்திருக்கிறார்கள். அதுவும் ரவி... சிலபல காட்சிகளில் சர்வத்தை தூக்கி சாப்பிட்டு விடுகிறார். அதற்கு காரணம் அவருக்கு படத்தில் காதலியோ, நாயகியோ இல்லை என்பதால் தரப்பட்டிருக்கும் இயல்பான வசனக்காட்சிகள். உதாரணத்திற்கு கோயிலுக்கு வரும் ஒரு பெண்‌ணைப் பார்த்து, ஆமாம்... இவங்க பெரிய மணிரத்னம் பட நாயகி. அளந்துதான் பேசுவாங்க... என டயலாக் அடிப்பதில் ஆரம்பித்து, அவரது இறுதிக்காட்சி வரை வரும் வசனங்கள் நறுக்!
வேட்டையாடு விளையாடு கமாலினியா இது? என்று ‌கேட்கும் அளவுக்கு நடித்திருக்கிறார் கமாலினி. உருவத்தில் இளைத்து, நடிப்பில் மென்மேலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். சபாஷ்! தேஜாஸ்ரீயின் குத்தாட்டம் ரசிக்க வைக்கிறது. இயக்குனர் இளங்கண்ணனின் தேஜாஸ்ரீ செண்டிமென்ட் இந்த படத்திலும் ஒர்‌க் அவுட் ஆகியிருக்கிறது.
நாசர், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, சிட்டி பாபு எல்லோரும் பாத்திரத்துக்கேற்ற தேர்வு. வித்யாசாகர், இ.எஸ்.மூர்த்தி, மணிசர்மா என மூன்று இசையமைப்பாளர்களும், விண்சென்ட்டின் ஒளிப்பதிவும் ஒற்றன் இளங்கண்ணனுக்கு ரொம்பவே ஒத்தாசை செய்துள்ளனர்‌.

No comments:

Post a Comment