
தயாரிப்பு: பி. வெங்கட்ராமரெட்டி, பி.பாரதிரெட்டி
நடிப்பு: தனுஷ், தமன்னா, விவேக், அதுல்குல்கர்னி, சாயாஜி ஷிண்டே, சுமன், பிரதாப், மீராகிருஷ்ணன், சேத்தன், தேவதர்ஷினி, டாக்டர் சர்மிளா, மயில்சாமி, மாஸ்டர் கணேஷ், சுமன்ஷெட்டி
இயக்கம்: சுராஜ் இசை: மணிசர்மா
ஒளிப்பதிவு: எ.வெங்கடேஷ் படத்தொகுப்பு: மனோஜ்
கலை: பாபு நடனம்: தினேஷ், ஷோபி, பாஸ்கர்
பாடல்கள்: பா.விஜய், சினேகன், தபு சங்கர்
பாடல்கள்: பா.விஜய், சினேகன், தபு சங்கர்
பத்தாவது படித்த வாலிபன் டிகிரி படித்த பெண்ணை மணந்து தனது மைனஸை பிளஸ் ஆக்க நினைக்கிறான். படித்த பெண்ணுக்கு ரூட் விடுகிறான். அதில் அழகான பெண் ஒருத்தி சிக்குகிறாள். அவளை காதலிக்க வைப்பதற்கு பல முயற்சிகளை கையாள்கிறான். அவளும் நெருங்கி வரும் போது பெத்தவன் வந்து அழைத்துக்கொண்டு செல்கிறான். காட்டுக்கு சென்று சிங்கத்தின் பல்லை பிடுங்கி வந்து காட்டு பெண்ணை தருகிறேன் என்பது போல இரண்டு பெரும் ரவுடி கும்பலை அடக்கி தனது வீரத்தை நிருபித்து அழகியை திருமணம் செய்துகொள்கிறான் நாயகன்.தலைநகரம், மருதமலை படங்களை தந்த சுராஜ் இயக்கியுள்ள படம் இது. திருநெல்வேலியில் ஆரம்பித்து திருப்பதி தாண்டி முடிகிற கதை. அதனால் நீண்டபயணமாக படம்.முதல் பாதியில் காமெடியும் இரண்டாவது பாதியில் அதிரடியுமாக தனுஷ். பாடல் காட்சியில் படு ஸ்டைலாக ஆட்டம் போட்டிருக்கிறார். அது சரி எத்தனை நாளைக்கு தலைவா பில்டப் தாங்கும். தமன்னா பாடல் காட்சிக்கு வந்து போகிறார். இரண்டாவது பாதியில் வடிவேலு பாணியில் சிரிக்க வைக்கிறார் விவேக். சுமனிடம் பேச பயந்து அழுவது, உச்சா போவது செம காமெடி. மயில்சாமி குரூப் காமெடியும், பிரதாப்போத்தன் குரூப் காமெடியும் கிச்சுகிச்சு மூட்டுகிறது. அதுல்குல்கர்னி, சாயாஜி ஷிண்டே, சுமன் என ஏகப்பட்ட வில்லன்கள். எல்லோரும் பயம் காட்டுவதற்கு பதில் சிரிக்க வைக்கின்றனர்.மணிசர்மாவின் இசையில் பாடல்கள் பரவா இல்லை ரகம்.ஆந்திராவும் அடிதடியும் பார்க்கும் போது டப்பிங் படம் போல இருக்கிறது படிக்காதவன்.
No comments:
Post a Comment