Friday, November 13, 2009

மோ‌தி‌ வி‌ளை‌யா‌டு


கோடீஸ்வரர் கலாபவன் மணியின் ஒரே மகன் வினய். வளர்ப்பு மகன் யுவா. இருவரும் பண செழிப்பில் ஹைடெக் செக்யூரிட்டிகள் பாதுகாப்புடன் பார்ட்டி கொண்டாட்டம் என திரிகின்றனர்.
கல்லூரி மாணவி காஜல் அகர்வாலால் வினய் சொகுசு கார் விபத்தாகிறது. காருக்கு ஏற்பட்ட ரூ.3 லட்சம் இழப்பை சரிகட்ட காஜலை சில நாட்கள் தன் வீட்டில் வேலை செய்ய வைக்கிறார். அப்போது இருவரும் காதல் வயப்படுகின்றனர். யுவாவும் காஜலை விரும்புகிறார்.
கலாபவன் மணியின் தொழில் எதிரிகள் வினய்யை தீர்த்துக்கட்ட ரவுடிகளை ஏவுகின்றனர். அவர்கள் சுடும்போது குண்டு தவறி யுவா மேல் பாய்ந்து பலியாகிறார்.
வினய்யை கொல்ல ரவுடிகள் துரத்துகின்றனர். அப்போது வினய் வசதி வாய்ப்புகள் திடீரென்று பிடுங்கப்படுகிறது.
அதிர்ச்சியாகும் வினய் தந்தையிடம் காரணம் கேட்க அவர் யுவா தான் என் மகன் எதிரிகளை ஏமாற்ற அனாதை விடுதியில் இருந்து உன்னை எடுத்து மகனாக வளர்த்து நாடகம் நடத்தினேன் என்கிறார். நீ சாகும் நாள் தான் எனக்கு சந்தோஷம் என வெறுப்பு கொட்டுகிறார்.
நிர்க்கதியாகும் வினய்க்கு காதலி காஜல் ஆதரவாகிறார். அவர் யோசனைப்படி தந்தையுடனும் கொலைகார கும்பலிடமும் மோதுவது கிளைமாக்ஸ்...
பணக்கார இளைஞன் கேரக்டரில் கச்சிதமாய் பொருந்துகிறார் வினய்...காஜல் அகர்வாலை எடுபிடி வேலை செய்ய வைத்து ரசிப்பது ரசனை. வினய்யை கொல்ல கொலைகாரன் வரவழைக்கப்பட்டதும் விறுவிறுப்பு. தன்னை அனாதை என்று தந்தை சொல்வது அதிர்ச்சி திருப்பம். ஒரே நாளில் ஆடம்பர வாழ்க்கையை இழந்து தெருவுக்கு வந்து பரிதாபப்பட வைக்கிறார்.
காஜல் அகர்வால் துறுதுறுவென அழகாய் பளிச்சிடுகிறார். கோடீஸ்வரர் மகனாக இருந்தும் அந்தஸ்தை அனுபவிக்காமல் சாகும் யுவா பாவம்.
சந்தானம், வி.எம்.சி. ஹனீபா, மயில்சாமி சிரிக்க வைக்கின்றனர்.
காட்சிகளில் ஸ்டைலும் விறுவிறுப்பும் ஏற்றி கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர் சரண். பாதிக்கு பின் ஆக்ஷன் ரூட்டுக்கு மாறிய கதையை தந்தை மகன் மோதலுக்கு உள்ளேயே சுழற்றி இருப்பது வேகத்தடை... ஹரிகரன்-லெஸ்லி இசையில் வித்தியாசம். கருண் ஒளிப்பதிவு பிரமாண்ட படுத்துகிறது.

ஐந்‌தா‌ம்‌படை‌


நாசருக்கு நான்கு தம்பிகள். ஒரு தம்பி சுந்தர்.சி. தியேட்டர் நடத்துகிறார். நாசர் சகோதரர்களுக்கும் எதிர்தரப்பில் உள்ள சம்பத், ராஜ்கபூர் கோஷ்டிக்கும் தீராத பகை. அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள். எதிர் கோஷ்டியின் உறவு பெண் சிம்ரனுக்கும் சுந்தர்.சிக்கும் தகராறு முற்றுகிறது. ஒரு கட்டத்தில் சுந்தர்.சியை ஒருதலையாய் காதலிக்கிறார் சிம்ரன். ஆனால் சிம்ரனை சுந்தர்.சியின் அண்ணன் முகேஷ்சுக்கு நிச்சயம் செய்து திருமணத்தை முடித்து விடுகிறார்கள்.
காதல் தோல்வியால் சுந்தர்.சி மேல் வெறுப்பாகிறார் சிம்ரன். எதிராளிகளுடன் சேர்ந்து சுந்தர்.சியை வீட்டை விட்டு துரத்தி நாசர் குடும்பத்தை பிரிக்க சதி செய்கிறார். அண்ணியின் சதி திட்டங்களை முறியடித்து குடும்பத்தை சுந்தர்.சி எப்படி ஒன்று சேர்க்கிறார் என்பது கிளைமாக்ஸ்.
பாசக்கார தம்பி வேடத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் சுந்தர்.சி. கடைசி தம்பியை கடத்தியவர்களை துவம்சம் செய்யும் போதும் அண்ணனை அடித்தவன் வீட்டில் புகுந்து ரவுடிகளை நொறுக்கும் போதும் ஆவேசம் காட்டுகிறார்.
சிம்ரன் நாட்டிய பள்ளியை சிதைத்து நாசர் கண்டிப்புக்கு கட்டுப்பட்டு மீண்டும் அதை சீரமைத்து கொடுப்பது.... தன்னால் நடனம் ஆடுவதை விட்ட சிம்ரனை அவர் குருவை வரவழைத்து மீண்டும் ஆட வைப்பது கலகலப்பானவை. காதலியை எதிரிக்கு மனைவியாக்க சிம்ரன் போடும் திட்டத்தை மந்திரியை கைப்பாவையாக வைத்து மணமேடையில் தடுத்து நிறுத்தும் சீன்கள் தமாஷானவை.
சிம்ரனுக்கு அழுத்தமான வேடம். சரியாக செய்து இருக்கிறார். மணமேடையில் மாப்பிள்ளை மாறியதை பார்த்து திருமணத்தை நிறுத்த தவிப்பது.... சுந்தர்.சி கிடைக்காத ஆத்திரத்தில் எதிராளிகளுடன் சேர்ந்து வில்லத்தனம் செய்வது என விறுவிறுப்பு ஏற்றுகிறார். நாயகி அதிதி காதலும் கண்ணீரமாய் வந்து போகிறார்.
நெல்லை தமிழ் பேசி விவேக் காமெடி தர்பார் நடத்துகிறார்.
பங்காளி சண்டையை மையப்படுத்தி காதல், மோதல், காமெடி, சென்டிமென்ட் அம்சங்களுடன் கலகலப்பும் விறுவிறுப்பாய் கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர் பத்ரி. மனநிலை பாதித்த தேவயானியின் பிளாஷ்பேக் கதையில் ஜீவன் இல்லை. இமான் இசையில் பாடல்கள் ரசனை.

வை‌கை‌


பஞ்சாயத்து தலைவர் சாய்குமார் மகன்பாலாவுக்கும் போஸ்ட்மேன் தலைவாசல் விஜய் மகள் விசாகாவுக்கும் காதல். ஜாதி, அந்தஸ்தை காட்டி எதிர்க்கிறார் சாய்குமார். காதல் ஜோடியை பிரிக்க ரவுடிகள் விரட்டுகின்றனர். ரெயில்வே ஸ்டேஷனில் இருவரும் விஷம் குடிக்கின்றனர். ஒருவர் சாவதை மற்றவர் பார்க்க விரும்பாமல் எதிரெதிர் திசையில் செல்லும் ரெயில்களில் ஏறி விடுகின்றனர்.
பாலாவை மீட்டு காப்பாற்றுகிறார் தந்தை. விசாகாவை சென்னையில் டாக்டர் ஒருவர் காப்பாற்றுகிறார். இருவருமே மற்றவர் இறந்து விட்டதாக நினைத்து சோகத்தில் காலம் தள்ளுகின்றனர்.
ஒரு கட்டத்தில் பாலாவை அவர் அத்தை மகளும் விசாகாவை அவரை காப்பாற்றிய டாக்டரும் திருமணம் செய்து கொள்ள முடிவாகிறது. அப்போது பாலா உயிருடன் இருப்பது விசாகாவுக்கு தெரியவர ஊருக்கு ஓடோடி வருகிறார். அதன் பிறகு நடப்பது இதயங்களை உறைய வைக்கும் கிளைமாக்ஸ்.
பாலா-விசாகாவின் காதலில் கிராமத்து மணம். பாலத்துக்கு அடியில் காதல் செய்யும் பாலாவும், விசாகாவும் அங்கு வரும் சாய்குமாரிடம் சிக்காமல் தப்பி ஓடும் சீன்கள் பரபர.... அடியாட்கள் துரத்தலில் காதல் ஜோடி உயிர கையில் பிடித்து ஓடுவது திக்... திக்... விஷம் குடிக்கும் போது நெகிழ வைக்கிறார்கள். ஒருவரையொருவர் உயிரோடு இருக்கிறார்களா? என்று விசாரித்து கொள்ளாதது யதார்த்த பிழை.
கஞ்சா கருப்பு சிரிக்க வைக்கிறார். சபேஷ்முரளி இசையில் பாடல்கள் தரம். லட்சுமிபதி ஒளிப்பதிவும் துணை நிற்கிறது.ஜீவனுள்ள காதல் கதையை அழுத்தமாக படமாக்கியுள்ளார் இயக்குனர் எல்.ஆர்.சுந்தரபாண்டி.

தலை‌எழுத்‌து


நடி‌கர்‌கள்‌:

ரி‌ச்‌சர்‌ட்‌ரா‌ஜ்‌, பா‌லா‌சி‌ங்‌, பா‌ஸ்‌கர்‌, பக்‌ரு, கண்‌ணன்‌, சி‌வ, ஜெ‌யப்‌பி‌ரகா‌ஷ்‌ ஆர்‌.ஆர்‌.ரெ‌ட்‌டி‌, எத்‌தி‌ரா‌ஜ்‌, பூ‌ஜா‌கா‌ந்‌தி, மீ‌ரா‌கி‌ருஷ்‌ணன், லட்‌சுமி‌

தொ‌ழி‌ல்‌நுட்‌ப கலை‌ஞர்‌கள்‌:

நி‌றுவனம்‌: ஜா‌க்‌ பி‌லி‌ம்‌ பு‌ரொ‌டக்‌ஷன்‌ஸ்‌

தயா‌ரி‌ப்‌பு‌, கதை‌: ரி‌ச்‌சர்‌ட்‌ரா‌ஜ்‌, தி‌ரை‌க்‌கதை‌, வசனம்‌, இயக்‌கம்‌: எத்‌தி‌ரா‌ஜ்‌

ஒளி‌ப்‌பதி‌வு‌: டோ‌ம்‌னி‌க்‌ சே‌வி‌யோ‌, இசை‌: கா‌ட்‌வி‌ன்‌, பா‌டல்‌கள்‌: ப்‌ரி‌யன்‌, ஜெ‌கன்‌

கலை‌: ரவீ‌‌ந்‌தி‌ரன்‌,படத்‌தொ‌குப்‌பு‌: ஹர்‌ஷா‌, நடனம்‌:கா‌தல்‌ கந்‌தா‌ஸ், வி‌ஜய்‌

பி‌ன்‌னனி‌ பா‌டி‌யவர்‌கள்‌: ஹரி‌கரன்‌, கா‌ர்‌த்‌தி‌க்‌, ரஞ்‌சி‌த்‌, லா‌வன்‌யா‌, ரம்‌யா‌

மக்‌கள்‌ தொ‌டர்‌பு‌: ஜி‌.பா‌லன்‌

இளம் விஞ்ஞானி ரிச்சர்ட் ராஜ். ஊனமுற்றோர் நலனில் அக்கறை உள்ளவர். அவர்கள் மனதில் இருப்பதை கண்டறியும் சாப்ட்வேர் ஒன்றை கண்டு பிடிக்க ஆராய்ச்சி செய்கிறார். அது வெளிவந்தால் தங்கள் ஊழல்கள் அம்பலமாகி விடும் என அரசியல்வாதிகள் அச்சப்படுகின்றனர். எனவே ஆராய்ச்சியை கைவிடுமாறு எச்சரிக்கின்றனர்.

மிரட்டலுக்கு பணியாமல் காதலி பூஜாவுடன் இணைந்து முயற்சியை தொடர்கிறார்.
ஒரு கட்டத்தில் வில்லன் கார் ஒன்று ரிச்சார்ட்டை பின் தொடர்ந்து விரட்டி அவரது காரை விபத்துக்குள்ளாக்கி மறைகிறது. இதில் ரிச்சார்ட் மூளை பாதித்து பேச முடியாதவராகிறார். காதலி பூஜாதான் ஆள் அனுப்பி கொலை செய்ய முயற்சித்தது தெரிய அதிர்ச்சி. ரிச்சர்ட் ராஜ் கண்டுபிடிப்பை அபகரித்து வேறு கம்பெனிக்கு விற்க கோடிக்கணக்கில் பேரம் பேசுகிறார். காதலி திட்டம் பலித்ததா? ரிச்சர்ட் ராஜ் நிலைமை என்ன ஆனது என்பது கிளைமாக்ஸ்...
விஞ்ஞான ரீதியிலான ஹைடெக் கருவை சமூக அவலங்களுடன் கோர்த்து படமாக்கிய இயக்குனர் எத்திராஜ் முயற்சி வித்தியாசம். இளம் விஞ்ஞானியாக மிடுக்கு காட்டும் ரிச்சர்ட் ராஜ் மூளை பாதித்து முடங்கியதும் நடிப்பில் பிரமாதபடுத்துகிறார். சைக்கோ காதலியிடம் சிக்கி அவஸ்தைபடும்போது பரிதாபப்பட வைக்கிறார்.
பூஜா வில்லியாவது எதிர்பாராதது. பக்ரு காமெடி கலகலப்பு.
“சீன்”களில் இன்னும் அழுத்தம் சேர்த்து இருக்கலாம். சாப்ட்வேர் கண்டுபிடிப்பு வில்லன் கூட்டத்தின் எதிர்ப்புக்களை பிரமாண்டபடுத்தாது குறை... டொமைக்சாபியோ, ஒளிப்பதிவு, காட்வின் இசை துணை நிற்கின்றன.

அச்‌சமுண்‌டு அச்‌சமுண்‌டு

அமெ‌ரி‌க்‌கா‌வி‌ல்‌ வசி‌க்‌கும்‌ சா‌ப்‌ட்‌வே‌ர்‌ எஞ்‌சி‌னி‌யர்‌ பி‌ரசன்‌னா‌. அவருக்‌கு அழகா‌ன மனை‌வி‌யா‌க சி‌னே‌கா‌, அன்‌பா‌ன மகள்‌ என மகி‌ச்‌சி‌யு‌டன்‌ வா‌ழ்‌கி‌றா‌ர்‌.

பி‌ரசன்‌னா‌ வே‌லை‌க்‌கு செ‌ன்‌ற பி‌றகு சி‌னே‌கா‌ மகளை‌ பள்‌ளி‌யி‌ல்‌ வி‌ட்‌டுவி‌ட்‌டு கம்‌பி‌யூ‌ட்‌டர்‌ கி‌ளா‌சுக்‌கு செ‌ல்‌கி‌றா‌ர்‌. அவர்‌களி‌ன்‌ மகி‌ழ்‌ச்‌சி‌யா‌ன வா‌ழ்‌க்‌கையி‌ன்‌ நடுவே‌ நல்‌லவனா‌க நுழை‌கி‌றா‌ர்‌ ஜா‌ன்‌ஷே‌. தோ‌ழி‌யி‌ன்‌ சி‌பா‌ரி‌சி‌ல்‌ அவர்‌கள்‌ வீ‌ட்‌டுக்‌கு பெ‌யி‌ண்‌ட்‌ அடி‌க்‌க வரும்‌ ஜா‌ன்‌ஷே‌, நல்‌லவன்‌ போ‌ல நடி‌த்‌து அந்‌த வீ‌ட்‌டை‌ நோ‌ட்‌டம்‌ வி‌ட்‌டு பி‌ரசன்‌னா‌வி‌ன்‌ மகளை‌ பா‌லி‌யல்‌ வன்‌முறை‌ நி‌கழ்‌த்‌த வழி‌ வகுக்‌கி‌றா‌ன்‌.

தி‌ருடன்‌ கை‌யி‌ல்‌ சா‌வி‌ கொ‌டுத்‌தது போ‌ல பி‌ரசன்‌னா‌ வெ‌ளி‌யூ‌ர்‌ செ‌ல்‌லும்‌ அன்‌று அவன்‌ தி‌ட்‌டத்‌தை‌ முடி‌க்‌க முயற்‌சி‌ செ‌ய்‌கி‌றா‌ன்‌. ஆனா‌ல்‌ பி‌ரசன்‌னா‌ மனம்‌ சரி‌யி‌ல்‌லா‌ததா‌ல்‌ பயணத்‌தை‌ கே‌ன்‌சல்‌ செ‌ய்‌தவி‌ட்‌டு வீ‌டு தி‌ரும்‌புகி‌றா‌ர்‌. அப்‌போ‌து வீ‌ட்‌டி‌ல்‌ எதி‌ர்‌பா‌ரத சம்‌பவம்‌ நி‌கழ்‌கி‌றது. அது என்‌ன என்‌பது பரபரப்‌பா‌ன கி‌ளை‌மா‌க்‌ஸ்‌.

சி‌று குழந்‌தை‌களை‌ கடத்‌தி‌ பா‌லி‌யல்‌ வன்‌முறை‌ செ‌ய்‌யு‌ம்‌ குற்‌றவா‌ளி‌யை‌ பற்‌றி‌ய கதை‌. அதை‌ குடும்‌ப வா‌ழ்‌க்‌கை‌, பா‌சம்,‌ பயம்‌ என பலசவை‌யா‌ன சம்‌பவங்‌களோ‌டு படத்‌தை‌ கொ‌டுத்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌.

அப்‌படி‌ ஒரு அந்‌நி‌யோ‌ன்‌யமா‌ன, பா‌சமா‌ன கணவன்‌ மனை‌‌வி‌யா‌க வா‌ழ்‌ந்‌தி‌ருக்‌கி‌ன்‌றனர்‌ பி‌ரசன்‌னா‌வு‌ம்‌, சி‌னே‌கா‌வு‌ம்‌. அவர்‌களுக்‌கி‌டை‌யி‌ல்‌ உருவா‌கும்‌ தொ‌ட்‌டுத்‌ தொ‌டரும்‌ ஊடல்‌களும்‌ பட்‌டுப்‌ படரும்‌ கூடல்‌களும்‌ சி‌ன்‌ன சி‌ன்‌ன கவி‌தை‌கள்‌ போ‌ல ரசி‌க்‌க வை‌க்‌கி‌றது. பி‌ரசன்‌னா‌வி‌ன்‌ வா‌ர்‌த்‌தை‌களி‌ல்‌ தெ‌றி‌க்‌கும்‌ குட்‌டி‌க்‌ குறும்‌பு‌கள்‌ ரசி‌த்‌து சி‌ரி‌க்‌க வை‌க்‌கி‌றது.

நல்‌லவனா‌க நடி‌க்‌கும்‌ போ‌து நல்‌லவனா‌கவு‌ம்,‌ கெ‌ட்‌டவனா‌க நடி‌க்‌கும்‌போ‌து கெ‌ட்‌டவனா‌கவு‌ம்‌ தெ‌ரி‌வது என நடி‌ப்‌பி‌ல்‌ ஜா‌ன்‌ ஷே‌ அசத்‌தி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. சோ‌கம்‌ கலந்‌த அந்‌த சி‌றுமி‌யி‌ன்‌ நடி‌ப்‌பு‌ம்‌ பலே‌.

முதல்‌ பா‌தி‌யி‌ல்‌ பா‌சமும்‌ ஆசை‌யமா‌க படத்‌தை‌ நகர்‌த்‌தும்‌ இயக்‌குநர்‌ வை‌த்‌தி‌யநா‌தன்‌, இரண்‌டா‌ம்‌பா‌தி‌யை‌ பயமும்‌ பதட்‌டமுமா‌க படத்‌தை‌ கொ‌ண்‌டு செ‌ன்‌று முடி‌க்‌கி‌றா‌ர்‌. கடை‌சி‌ இருப‌து நி‌மி‌ட பரபரப்‌பு‌ கா‌ட்‌சி‌களி‌ல்‌‌ சீ‌ட்‌டி‌ல்‌ கட்‌டி‌ப்‌ போ‌டுகி‌றா‌ர்‌. பி‌ரசன்‌னா‌, சி‌னே‌கா‌ இருவர்‌ தி‌றமை‌யை‌யு‌ம்‌ அவர்‌ வா‌ங்‌கி‌யிருப்‌பது அவரது தி‌றமை‌யை‌ கா‌ட்‌டுகி‌றது.‌

ரெ‌ட்‌ ஒன்‌ கே‌மி‌ரா‌ மூ‌லம்‌ படத்‌தை‌ எடுத்‌தி‌ருக்‌கி‌ன்‌றனர்‌. படம்‌ முழுவதும்‌ அமெ‌ரி‌க்‌கா‌வி‌ல்‌ எடுக்‌கப்‌பட்‌டுள்‌ளது. ஒவ்‌வொ‌ரு கா‌ட்‌சி‌யு‌ம்‌ கண்‌ணுக்‌குள்‌ ஒத்‌தி‌க்‌கொ‌ள்‌வது போ‌ல படமா‌க்‌கி‌யி‌ருக்‌கி‌ன்‌றனர்‌.‌ கார்‌த்‌தி‌க்‌ரா‌ஜா‌வி‌ன்‌ இசை‌யி‌ல்‌, "கண்‌ணி‌ல்‌ தா‌கம்‌" பா‌டல்‌ ரொ‌ம்‌பவே‌ மனதை‌ மயக்‌குகி‌றது.

பெ‌ற்‌றவர்‌கள்‌ பி‌ள்‌ளை‌கள்‌ மீ‌து பா‌சத்‌தை‌ மட்‌டுமல்‌ல பா‌துகா‌ப்‌பை‌யு‌ம்‌ தரவே‌ண்‌டும்‌ என்‌று சொ‌ல்‌கி‌றது அசச்‌சமுண்‌டு. பொ‌றுமை‌யோ‌டு பா‌ர்‌க்‌க வே‌ண்‌டி‌ய அழகா‌ன படம்‌. அட்‌வை‌ஸ்‌ உள்‌ள படம்‌.

கா‌தல்‌ கதை‌

சா‌தி‌ கெ‌ளரவம்‌ பா‌ர்‌க்‌கும்‌ முன்‌னா‌ள்‌‌ எம்‌.எல்‌.ஏ. தனது ஆசை‌க்‌கு மட்‌டும்‌ சா‌தி‌ கெ‌ளரவம்‌ பா‌ர்‌ப்‌பதி‌ல்‌லை‌. தன்‌னி‌டம்‌ நன்‌றி‌‌யோ‌டு வே‌லை‌பா‌ர்‌க்‌கும்‌ தொ‌ழி‌லா‌ளி‌யி‌ன்‌ மனை‌வி‌யோ‌டு கள்‌ள கா‌தலி‌ல்‌ ஈடுபடுகி‌றா‌ர்‌. அதை‌ நே‌ரி‌ல்‌ பா‌ர்‌த்‌து கண்‌டி‌க்‌கும்‌ அந்‌த தொ‌ழி‌லா‌‌ளி‌யை‌ கொ‌லை‌ செ‌ய்‌கி‌றா‌ர்‌. அவரது மகன்‌ கீழ்‌ சா‌தி‌ பெ‌ண்‌ணுக்‌கு உதவு‌வதோ‌டு அவளை‌ கா‌தலி‌க்‌கவு‌ம்‌ செ‌ய்‌கி‌றா‌ன்‌. இது தெ‌ரி‌ந்‌ததும்‌ அவர்‌களது கா‌தலுக்‌கு சமா‌தி‌ கட்‌டுவதோ‌டு அந்‌த பெ‌ண்‌ணையு‌ம்‌ கொ‌ள்‌கி‌றா‌ர்‌ ‌ தந்‌தை‌.

அதே‌ கி‌ரா‌மத்‌தி‌ல்‌ ‌ பள்ளி பருவத்திலேயே ஒரு மா‌ணவனா‌ல்‌ கா‌தல்‌ மயக்‌கத்‌தி‌ல்‌ கர்ப்பமாகி கைகுழந்தையுடன் வாழாவெட்டியாகும் தங்கம், திரும்பவும் பள்ளி ஆசிரியரிடம் ஏமாந்து நிற்கிறாள். இவளை‌யு‌ம்‌ அனுபவி‌க்‌க நி‌னை‌க்‌கி‌றா‌ர்‌ அந்‌த முன்‌னா‌ள்‌ எம்‌.எல்‌.ஏ.

அந்‌த கி‌ரா‌மத்‌துக்‌கு படப்‌பி‌டி‌ப்‌பு‌க்‌கா‌க செ‌ல்‌லும் இயக்‌குநர்‌ வே‌லுபி‌ரபா‌கரன்‌ ‌இந்‌த மூ‌ன்‌று சம்‌பவங்‌களை‌யு‌ம்‌ அறி‌கி‌றா‌ர்‌. இந்‌த மூ‌ன்‌று சம்‌பவத்‌தி‌ற்‌கும்‌ அடி‌ப்‌படை‌ கா‌ரணம்‌ காமம்தான் என்‌பதை‌ உணரும்‌ அவர்‌ அதை‌ பத்‌தி‌ரி‌கை‌ நி‌ருபருக்‌கு தனது பே‌ட்‌டி‌யா‌க தெ‌ரி‌வி‌க்‌கி‌றா‌ர்‌. அதி‌ல்‌ தனது கா‌தலை‌யு‌ம்‌, வா‌ழ்‌க்‌கை‌ அனுபவங்‌களை‌யு‌ம்‌ சொ‌ல்‌வதோ‌டு பா‌லி‌யல்‌ பலா‌த்‌கா‌ரம்‌ மற்‌றும்‌ பா‌லி‌யல்‌ வன்‌முறை‌ அதி‌கரி‌க்‌க கா‌ரணம்‌ நமது மூ‌டும்‌ நம்‌பி‌க்‌கை‌களே‌ என்‌று முடி‌வு‌ சொ‌ல்‌வதோ‌டு அதை‌ களை‌ந்‌தா‌ல்‌ மூ‌ட நம்‌பி‌க்‌கை‌ களை‌ந்‌து நம்‌முடை‌ய சக்‌தி‌ ஆக்‌க பூ‌ர்‌வமா‌க பயன்‌ படுத்‌த முடி‌யு‌ம்‌ என முடி‌வு‌ சொ‌ல்‌கி‌றா‌ர்‌.

கா‌மத்‌தை‌ தி‌றந்‌த பு‌த்‌தகமா‌க்‌க வே‌ண்‌டும்‌ என படம்‌ சொ‌ல்‌கி‌றது. அதை‌ கா‌தலும்‌, மோ‌தலும்‌, காமம் நிறைவே‌றும்‌ சம்‌பவங்‌களோ‌டும்‌ படமா‌க தந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌ வே‌லுரா‌ஜா‌.

ஏழை கணவனை ஏமாற்றி, பணக்காரரின் ஆசை நாயகியாக வாழ்ந்து, கணவனை கொலை செய்ய உடந்தையாகும் பாபிலோனா. பாலியல் கவர்ச்சியை காதலாக நினைத்து, உயர் ஜாதி இளைஞனை காதலித்து கொலையாகி சாகும் ஷெ‌ர்‌லி‌தா‌ஸ்‌, முதலி‌ல்‌ சகமா‌ணவனா‌லும்‌, பி‌றகு ஆசி‌ரி‌யரா‌லும்‌ ஏமா‌றும்‌ தங்‌கம்‌ பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ பிரீத்தி ரங்கயானி ஆகி‌யோர்‌ தா‌ரா‌ளமா‌க நடி‌த்‌தி‌ருக்‌கி‌ன்‌றனர்‌.

வே‌லுபி‌ரபா‌கரன்‌ இயக்‌குநரா‌க, தயா‌ரி‌ப்‌பா‌ளரா‌க நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. சரத்செந்தில், ரத்தன், ஜெய், அதிரூபன், சம்‌பத்‌ ஆகி‌யோ‌ரி‌ன்‌‌ நடி‌ப்‌பு‌ம்‌ பலே‌.

பரபரப்‌பா‌ன மோ‌தலும்‌, கி‌ளுகி‌ளப்‌பா‌ன கா‌ட்‌சி‌களும்‌ படத்‌தி‌ல்‌ இறை‌ந்‌து கி‌டக்‌கி‌ன்‌றன. அதி‌ல்‌ இளை‌யரா‌ஜா‌வி‌ன்‌ இசை‌யு‌ம்‌, வே‌லுபி‌ரபா‌கரனி‌ன்‌ வசனமும்‌ பலம்‌ சே‌ர்‌க்‌கி‌றது.

வெ‌டி‌குண்‌டு முருகே‌சன்‌

மி‌லி‌ட்‌டரி‌கா‌ரர்‌ மகன்‌ பசுபதி‌. கடைகளுக்கு வண்டியில் பேரல் வைத்து தண்ணீர் சப்ளை செய்பவர். அவர்‌ மனதுக்‌கு எது சரி‌ என்‌று தோ‌ன்‌றுகி‌றதோ‌ அது தவறா‌க இருந்‌தா‌லும்‌ அதை‌ தை‌ரி‌யமா‌க செ‌ய்‌வா‌ர்‌. இதனா‌ல்‌ போ‌லீ‌ஸ்‌, கோ‌ர்‌ட்‌ என்‌று செ‌ல்‌வதும்‌ வா‌டி‌க்‌கை‌. பசுபதி‌யி‌ன்‌ பள்‌ளி‌ தோ‌ழி‌ தீ‌பா‌ மனநி‌லை‌ பா‌தி‌க்‌கப்‌பட்‌டு வீ‌ட்‌டுக்‌கு பா‌ரமா‌க இருப்‌பதா‌ல்‌ அவரை‌ கொ‌ல்‌ல முயற்‌சி‌க்‌கி‌றா‌ர்‌ அவரது தந்‌தை‌‌. அதனா‌ல்‌ தீ‌பா‌வை‌‌ தன்‌னோ‌டு அழை‌த்‌து வந்‌து பா‌துகா‌க்‌கி‌றா‌ர் பசுபதி‌.

அந்‌த ஊரி‌ல்‌ தா‌தா‌வா‌க இருக்‌கும்‌ வீ‌ரா‌வி‌ன்‌ தம்‌பி‌ ரனி‌ஷ்‌, கோ‌ழி‌ குருடா‌க இருந்‌தா‌லும்‌ குழம்‌பு‌ ருசி‌யா‌க இருந்‌தா‌ல்‌ போ‌தும்‌ என்‌று கி‌டை‌க்‌கி‌ற பெ‌ண்‌களை‌யெ‌ல்‌லா‌ம்‌ தனது வக்‌கி‌ரங்‌களுக்‌கு பயன்‌ படுத்‌துவா‌ர்‌. அப்‌படி‌ ஒரு நா‌ள்‌ பசுபதி‌ அச‌ந்‌த நே‌ரம்‌ பா‌ர்‌த்‌து மனநோ‌யளி‌ தீ‌பா‌வை‌ தனது கா‌ம பசி‌க்‌கு இறை‌யா‌க்‌குகி‌றா‌ர் ரனி‌ஷ்‌‌. இதை அறி‌யு‌ம்‌ பசுபதி‌ ஆத்‌தி‌ரத்‌தி‌ல்‌ அவனை‌ அடி‌க்‌க அவன்‌ எதி‌ர்‌பா‌ரதவி‌தமா‌க செ‌த்‌துபோ‌கி‌றா‌ன்‌. இதனா‌ல்‌ கொ‌லை‌ பழி‌ பசுபதி‌ மீ‌து வி‌ழுகி‌றது. அந்‌த கொ‌லை‌ப்‌பழி‌யி‌லி‌ருந்‌தும்‌, தா‌தா‌வி‌ன்‌ கொ‌லை‌முயற்‌சி‌யி‌லி‌ருந்‌தும்‌ தப்‌பி‌ தனது தோ‌ழி‌யை‌ எப்‌படி‌ கா‌ப்‌பா‌ற்‌றுகி‌றா‌ர்‌, தனது கா‌தலி‌யை‌ எப்‌படி‌ கை‌ பி‌டி‌க்‌கி‌றா‌ர்‌ பசுபதி‌ என்‌பது மீ‌தி‌ படம்‌.

கருப்‌பசா‌மி‌ குத்‌தகை‌தா‌ரர்‌ படத்‌தை‌ நகை‌ச்‌சுவை‌யு‌டன்‌ வழங்‌கி‌ய மூ‌ர்‌த்‌தி‌ இந்‌தப்‌ படத்‌தை‌ கலகலப்‌பு‌டன்‌ கொ‌டுத்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. இதி‌ல்‌ கி‌ண்‌டலும்‌ கே‌லி‌யு‌ம்‌, சி‌ரி‌ப்‌பு‌ம்‌ கூத்‌தும்‌ சி‌தறி‌ கி‌டக்‌கி‌றது.

கரை‌ படி‌ந்‌த கை‌லி‌, .குறை‌யு‌ள்‌ள நடை‌ , குதற்‌கமா‌ன பே‌ச்‌சு என தோ‌ற்‌றத்‌தி‌லும்‌‌ நடி‌ப்‌பி‌லும்‌ வெ‌ளுத்‌து வா‌ங்‌குகி‌றா‌ர்‌ பசுபதி‌. தலை‌நகரம்‌ படத்‌தி‌ல்‌ வடி‌வே‌லுவை‌ பா‌ர்‌த்‌தது அடி‌க்‌கடி‌ மயக்‌கம்‌ போ‌ட்‌டுவி‌ழும்‌ ஜோ‌தி‌ர்‌மயி‌, இதி‌ல்‌ பெ‌ண் போ‌லீ‌சா‌க வந்‌து அழுது அழுத சி‌ரி‌க்‌க வை‌க்‌கி‌றா‌ர். பா‌டல் ‌கா‌ட்‌சி‌யி‌ல்‌ ஆட்‌டம்‌ சூ‌ப்‌பர்‌. மனநலம் பாதித்த பொன்னியாக நடித்திருக்கும் தீபா நடை‌யி‌லும்‌ பே‌ச்‌சி‌லும்‌ வி‌த்‌தி‌யா‌சத்‌த கா‌ட்‌டி‌ அந்‌த குறை‌யு‌ள்‌ள பெ‌ண்‌ணா‌கவே‌ பளி‌ச்‌சி‌டுகி‌றா‌ர்‌.

வடி‌வே‌லு வெ‌டி‌வே‌லுவா‌க தி‌யே‌ட்‌டரை‌ சி‌ரி‌ப்‌பொ‌லி‌யா‌ல்‌ அதி‌ரவை‌க்‌கி‌றா‌ர்‌. ஆழம்‌ தெ‌ரி‌யா‌மல்‌ கா‌லை‌ வி‌ட்டுவது போ‌ல போ‌லீ‌ஸ்‌கா‌ரரி‌ன்‌ பி‌ன்‌பா‌க்‌கெ‌ட்‌டி‌ல்‌ கை‌யை‌ வி‌ட்‌டு அவர்‌ படும்‌ பா‌டு தி‌யே‌ட்‌டரி‌ல்‌ அமர்‌க்‌களம்‌. ரொ‌ம்‌ப நா‌ளை‌க்‌கு பி‌றகு சி‌ரி‌க்‌க வை‌க்‌கி‌றா‌ர்‌ வடி‌வே‌லு. வீ‌ரா‌வி‌ன்‌ வி‌ல்‌லன்‌ பி‌ல்‌டப்‌ செ‌ம கா‌மெ‌டி‌. அதே‌ போ‌ல ஒரு கா‌ட்‌சி‌யி‌ல்‌ வந்‌தா‌லும்‌ ‌ பா‌வா‌லட்‌சுமணன்‌, முத்‌துக்‌கா‌ளை‌ வயி‌று குலுங்‌க சி‌ரி‌க்‌க வை‌க்‌கி‌ன்‌றனர்‌. நீ‌தி‌யதி‌யா‌க வரும்‌ நி‌ர்‌மலா‌ பெ‌ரி‌யசா‌மி‌, அவரது டவா‌ளி‌யா‌க வரும்‌ அந்‌த நடி‌கரும்‌ இயல்‌பா‌க நடி‌த்தி‌ருக்‌கி‌ன்‌றனர்‌.

ரா‌ஜபா‌ளை‌யம்‌ பகுதி‌யை‌ தனது கே‌மி‌ரா‌வி‌ல்‌ அள்‌ளி‌வந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ பாலபரணி. தினாவின் இசையில் யுகபாரதி, ஏக்நாத் எழுதி‌ய பா‌டல்‌கள்‌ இனி‌மை‌.

தி‌ருடன்‌ போ‌லீ‌ஸ்‌ வி‌ளை‌யா‌ட்‌டு. அதி‌ல்‌ மனி‌த நே‌யத்‌தை‌ நே‌சி‌க்‌கும்‌ கா‌தல்‌ என படம்‌ ஆரம்‌பத்‌தி‌ருந்‌து முடி‌வு‌ வரை‌ சீ‌ரி‌யசா‌ன வி‌ஷயத்‌தை‌யு‌ம்‌ சி‌ரி‌க்‌க வை‌த்‌து ரசி‌க்‌க வை‌தது லா‌ஜி‌க்‌ பா‌ர்‌க்‌கா‌மல்‌ மே‌ஜி‌க்‌ கா‌ட்‌டி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌ மூ‌ர்‌த்‌தி‌. பசுபதி பா‌த்‌தி‌ரத்‌தி‌ன்‌‌ மனி‌த நே‌யத்‌தி‌ற்‌கா‌க சி‌ன்‌ன தண்‌டனை‌யா‌க மரக்‌கன்‌று நட்‌டு அதி‌ல்‌ தண்‌ணீ‌ர்‌ ஊற்‌ற வை‌ப்‌பது சூ‌ப்‌பர்‌.

வெ‌டி‌குண்‌டு முருகே‌சன்‌ - சி‌ரி‌ப்‌பு‌வெ‌டி‌ முருகே‌சன்.

நா‌டோ‌டி‌கள்‌

காதலர்‌களுக்‌கு உதவு‌ம்‌ நண்‌பர்‌களி‌ன்‌ கதை‌. அதே‌ போ‌ல கா‌தல்‌ துரோ‌கி‌களுக்‌கும்‌ பா‌டம்‌ சொ‌ல்‌கி‌ன்‌றனர்‌.

சசி‌க்‌குமா‌ர்‌ படி‌த்‌துவி‌ட்‌டு அரசு வே‌லை‌க்‌கு நே‌ர்‌மை‌யு‌டன்‌ முயற்‌சி‌ செ‌ய்‌யு‌ம்‌ இளை‌ஞர்‌. அவரது நண்‌பரா‌ன வி‌ஜய்‌ கம்‌பி‌யூ‌ட்‌ட‌ர்‌ கம்‌பெ‌னி‌ வை‌க்‌க கடன்‌ கே‌ட்‌டு போ‌ரா‌டி‌க்‌கொ‌ண்‌டி‌ருக்‌கி‌றா‌ர்‌. இன்‌னொ‌ரு நண்‌பனா‌ன பரணி‌ வெ‌ளி‌நா‌டு செ‌ல்‌ல முயற்‌சி‌ செ‌ய்‌து வருபவன்‌.

இவர்‌கள் மூ‌வரும்‌ ஒன்‌றா‌க சுற்‌றுபவர்‌கள்‌. குடி‌ கூத்‌து கும்‌மா‌ளம்‌ மொ‌ட்‌டை‌ மா‌டி‌ படுக்‌கை‌ என ஜா‌ரி‌யா‌க வா‌ழ்‌கி‌ன்‌றனர்‌. இதி‌ல்‌ சசி‌க்‌குமா‌ரி‌ன்‌ மா‌மன்‌ மகள்‌ அனன்‌யா‌ சசி‌க்‌குமா‌ரை‌ கா‌தலி‌க்‌கி‌றா‌ர்‌. தி‌ருமணம்‌ செ‌ய்‌துக்‌கொ‌ள்‌ள ஆசை‌ப்‌ப‌டு‌கி‌றா‌ர்‌. அதே‌ போ‌ல சசி‌க்‌குமா‌ரி‌ன்‌ தங்‌கை‌யை‌ வி‌ஜய்‌ சை‌ட்‌ அடி‌த்‌து கா‌தலி‌த்‌து வருகி‌றா‌ர்‌.

இந்‌த நி‌லை‌யி‌ல்‌ சசிக்குமாரின் கல்‌லூ‌ரி‌ தோ‌ழன்‌ ரங்கா அந்‌த ஊருக்‌கு வருகி‌றா‌ன்‌. இரண்‌டு நா‌ள்‌ தங்‌கி‌யவன்‌ தி‌டீ‌ரெ‌ண கி‌ணற்‌றி‌ல்‌ வி‌ழுந்‌து தற்‌கொ‌ரலை‌ செ‌ய்‌துகொ‌ள்‌ள முயல அவனை‌ கா‌ப்‌பா‌ற்‌றுகி‌ன்‌றனர்‌. தனது கா‌தல்‌ தோ‌ல்‌வி‌யா‌னதா‌ல்‌ தற்‌கொ‌லை‌ செ‌ய்‌துகொ‌ண்‌டதா‌க கூறுகி‌றா‌ன்‌ ரங்‌கா‌.

ரங்‌கா‌வி‌ன்‌ கா‌தலி‌யை‌ அவனோ‌டு சே‌ர்‌த்‌து வை‌க்‌க நண்‌பர்‌கள்‌ மூ‌வரும்‌ நா‌மக்‌கல்‌ செ‌ல்‌கி‌ன்‌றனர்‌. அங்‌கு இரண்‌டு குடும்‌பத்‌தி‌னரி‌ன்‌ தே‌டல்‌களுக்‌கு நடுவே‌ ரங்‌கா‌வை‌யு‌ம்‌ அவனது கா‌தலி‌யை‌யு‌ம்‌ கடத்‌தி‌ வெ‌ளி‌யூ‌ருக்‌கு அனுப்‌பி‌ வை‌க்‌கி‌ன்‌றனர்‌. இதனா‌ல்‌ சசி‌க்‌குமா‌ருக்‌கு கண்‌ணுக்‌கு அருகி‌ல்‌ ஒரு பெ‌ரும்‌ கா‌யம்‌ ஏற்‌படுகி‌றது. வி‌ஜய்‌ ஒரு கா‌லை‌யு‌ம்‌, பரணி‌ ஒரு கா‌தை‌யு‌ம் இழக்‌கி‌ன்‌றனர்‌. இந்‌தப்‌ பி‌ரச்‌சனை‌யா‌ல்‌ மூ‌ன்‌று குடும்‌பத்‌தி‌னரும்‌ சி‌த்‌தி‌ரவதை‌க்‌கு ஆளா‌வதோ‌டு சசி‌க்‌குமா‌ர்‌ பா‌ட்‌டியு‌ம்‌ அதி‌ல்‌ இறக்‌கி‌றா‌ர்‌.

இரு பெ‌ரும்‌ பணக்‌கா‌ரர்‌கள்‌ தங்‌களது செ‌ல்‌வா‌க்‌கை‌ அவர்‌களி‌டமி‌ருந்‌து கா‌தலர்‌கள்‌ எங்‌கு தலை‌மறை‌வா‌க இருக்‌கி‌றா‌ர்‌கள்‌ என்‌கி‌ற வி‌பரத்‌தை‌ வரவழை‌க்‌க முயற்‌சி‌ செ‌ய்‌கி‌ன்‌றனர்‌. கடை‌சி‌ வரை‌ கா‌ட்‌டி‌க்‌கொ‌டுக்‌கா‌மல்‌ கொ‌டுமை‌களை‌ அனுபவி‌த்‌து சி‌றை‌க்‌கு செ‌ல்‌கி‌ன்‌றனர்‌.

சி‌றை‌யி‌லி‌ருந்‌து தி‌ரும்‌பி‌ வந்‌து கா‌யம்‌ ஆறுவதற்‌குள்‌ மனக்‌கா‌யத்‌துக்‌கு ஆளா‌கி‌றா‌ர்‌ சசி‌க்‌குமா‌ர்‌. அவரது கா‌தலி‌யை‌ அரசு வே‌லை‌யி‌ல்‌ இருக்‌கும்‌ ஒரு இளை‌ஞனுக்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌க்‌கி‌றா‌ர்‌ அவரது மா‌மன்‌. இதனா‌ல்‌ உடை‌ந்‌து போ‌கி‌றா‌ர்‌ சசி‌க்‌குமா‌ர்‌. அதி‌லி‌ருந்‌து வி‌டுபடுவதற்‌குள்‌, அவர்‌கள்‌ கஷ்‌டப்‌பட்‌டு சே‌ர்‌த்‌து வை‌த்‌த இந்‌த கா‌தல்‌ ஜோ‌டி‌ இருவரும்‌ ஈகோ‌ பி‌ரச்‌சனை‌யா‌ல்‌ சண்‌டை‌ப்‌போ‌ட்‌டுக்‌கொ‌ண்‌டு பி‌ரி‌ந்‌து தங்‌களது வீ‌ட்‌டுக்‌கே‌ செ‌ன்‌றுவி‌ட்‌டனர்‌ என்‌ற செ‌ய்‌தி‌ கே‌ட்‌டு அதி‌ர்‌ச்‌சி‌ அடை‌கி‌ன்‌றனர்‌.

இந்‌த கா‌தல்‌ ஜோ‌டி‌களை‌ சே‌ர்‌த்‌து வை‌க்‌க அவர்‌கள்‌ செ‌ய்‌த தி‌யா‌கம்‌ அத்‌தனை‌யு‌ம்‌ வீ‌ணா‌கி‌வி‌ட்‌டதை‌ எண்‌ணி‌ துடி‌க்‌கி‌ன்‌றனர்‌. இதனா‌ல்‌ அந்‌த கா‌தல்‌ ஜோ‌டி‌களை‌ தே‌டி‌ச்‌செ‌ன்‌று நி‌யா‌யம்‌ கே‌ட்‌கும்‌ போ‌து அவர்‌களுக்‌கு அவமா‌னமும்‌ வே‌தனை‌யு‌ம்‌தா‌ன்‌ மி‌ஞ்‌சுகி‌றது. இதனா‌ல்‌ ஆத்‌தி‌ரப்‌படும்‌ அவர்‌கள்‌ அவர்‌களை‌ கடத்‌தி‌ச்‌ செ‌ன்‌று தண்‌டனை‌ கொ‌டுக்‌க முயற்‌சி‌க்‌கி‌ன்‌றனர்‌. அவர்‌கள்‌து தண்‌டனை‌ எப்‌படி‌ப்‌பட்‌டதா‌க இருக்‌கி‌றது என்‌பது பரபரப்‌பா‌ன கி‌ளை‌மா‌க்‌ஸ்‌.

கா‌தல்‌ ஜோ‌டி‌களை‌ சே‌ர்‌த்‌து வை‌க்‌கும்‌ முன்‌பு‌ ஒவ்‌வொ‌ரு நண்‌பர்‌களும்‌ கா‌தல்‌ ஜோ‌டி‌யை‌‌ப்‌ பற்‌றி‌ முழுமை‌யா‌க தெ‌ரிந்‌துகொ‌ள்‌ள வே‌ண்‌டும்‌ என்‌பதை‌ உணர்‌த்‌தும்‌ படம்‌. அதை‌ ஜா‌லி‌யா‌ன வி‌றுவி‌றுப்‌பா‌ன தி‌ரை‌க்‌கதை‌யி‌ல்‌ அழுத்‌தத்‌துடன்‌ செ‌ல்‌லி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌.

போ‌லீ‌ஸ்‌ வே‌லை‌க்‌கு வரி‌சை‌யி‌ல்‌ நி‌ற்‌கும்‌ போ‌து தன்‌னை‌வி‌ட குள்‌ள மா‌னவர்‌களை‌ பி‌ன்‌னா‌ல்‌ நி‌ன்‌று தனது உயரத்‌தை‌ சரி‌ செ‌ய்‌யு‌ம்‌ ‌ஆரம்‌ப கா‌ட்‌சி‌யி‌லே‌யே‌ கை‌தட்‌டல்‌ வா‌ங்‌கி‌வி‌டுகி‌றா‌ர்‌ கதா‌நா‌யகன்‌ சசி‌க்‌குமா‌ர்‌. தங்‌கை‌யை‌ நண்‌பன்‌ வி‌ஜய்‌ கா‌தலி‌ப்‌பதை‌ கண்‌டும்‌ கா‌ணா‌தது போ‌ல இருக்‌கும்‌ கா‌ட்‌சி‌யி‌ல்‌ அடுத்‌த கை‌தட்‌டலி‌ உயர்‌கி‌றா‌ர்‌. இப்‌படி‌ றைப்பெண்ணை கே‌லி‌, கி‌ண்‌டல்‌ செ‌ய்‌த வி‌ளை‌யா‌டும்‌ போ‌தும்‌ மா‌மா‌வி‌டம்‌ உங்‌க நே‌ர்‌மை‌ பி‌டி‌ச்‌சி‌ருக்‌கு என்‌று அடி‌க்‌கடி‌ சொ‌ல்‌லி‌ சி‌ரி‌க்‌க வை‌க்‌கும்‌, நண்‌பனி‌ன்‌ கா‌தலை‌ சே‌ர்‌த்‌துவை‌க்‌க படா‌த பா‌டுபடும்‌ போ‌தும்‌, அவர்‌களை‌ பஸ்‌ஸி‌ல்‌ எற்‌றி‌வி‌ட்‌டு நகை‌ பணம்‌ எல்‌லா‌த்‌தை‌யு‌ம்‌ எடுத்‌து எடுத்‌து கொ‌டுக்‌கும்‌ போ‌தும்‌, கால் இழந்த வி‌ஜை‌யை‌ பா‌ர்‌த்‌து கதறும்‌ போ‌தும்‌, காது செவிடான நண்பர்களை கண்டு துடிக்கும் போ‌தும்‌ , பா‌ட்‌டி‌யை‌ நி‌னை‌த்‌து பதறும்‌ போ‌தும்‌, தி‌ருமணமா‌ன மா‌மன்‌ மகளை‌ நி‌னை‌த்‌து நொறுங்கும்‌ போ‌தும்‌ கா‌தலர்‌களுக்‌கு தங்‌களது உள்‌ளகொ‌தி‌ப்‌பை‌ கொ‌ட்‌டி‌ தி‌ட்‌டும்‌ போ‌தும்‌ என படம்‌ முழுக்‌க அவரது அபா‌ர நடி‌ப்‌பு‌ கை‌தட்‌டல்‌களை‌யு‌ம்‌ கண்‌ணீ‌ர்‌ பா‌ரா‌ட்‌டுகளை‌யு‌ம்‌ அள்‌ளுகி‌றது.

உரி‌மை‌யோ‌டு அத்‌தை‌ மகன்‌ சசி‌க்‌குமா‌ரை‌ கா‌தலி‌க்‌கும்‌ போ‌தும்‌, தங்‌தை‌யி‌னு‌டை‌ய செ‌ண்‌டி‌மெ‌ண்‌ட்‌ மி‌ரட்‌டலுக்‌கு பணி‌ந்‌து அடி‌வயி‌ற்‌றி‌லி‌ருந்‌து அழும்‌ போ‌தும்‌ அனன்‌யா‌ தனது அற்‌பு‌தமா‌ன நடி‌ப்‌பை‌ வெ‌ளி‌ப்‌படுத்‌தி‌ அடடா‌ போ‌ட வை‌க்‌‌கி‌றா‌ர்‌.

கா‌தல்‌ கடி‌தத்‌தை‌ ரோ‌ட்‌டி‌ல்‌ வீ‌சி‌ கா‌தலி‌ பதி‌லுக்‌கு நி‌ற்‌பதும்‌ கா‌தலி‌ தி‌ரும்‌பா‌ர்‌த்‌த பி‌றகு கை‌யை‌ வி‌ட்‌டுவி‌ட்‌டு சை‌க்‌கி‌ளி‌ல்‌ பறந்‌து போ‌கும்‌ கா‌ட்‌சி‌யி‌ல்‌ கை‌தட்‌டலை‌ பெ‌றுகி‌றா‌ர்‌ வி‌ஜய்‌. நண்‌பனுக்‌கா‌க காலை‌ இழக்‌கி‌ற கா‌ட்‌சி‌யி‌ல்‌ பதறவை‌க்‌கி‌றா‌ர்‌ வி‌ஜய்‌. அவரது தந்‌தை‌யா‌க நடி‌த்‌தி‌ருப்‌பவர்‌ கா‌தலுக்‌கு கொ‌டுக்‌கும்‌ ஐடி‌யா‌ தி‌யே‌ட்‌டரி‌ல்‌ சி‌ரி‌ப்‌பலை‌. கா‌ல்‌ இழந்‌த மகனை‌ பா‌ர்‌த்‌து கலங்‌கும்‌ கா‌ட்‌சி‌யி‌ல்‌ சூ‌ப்‌பர்‌ நடி‌ப்‌பு‌.

படம்‌ ஆரம்‌பி‌த்‌ததி‌லி‌ருந்து முடி‌யு‌ம்‌ வரை‌ பல இடங்களி‌ல்‌ சி‌ரி‌க்‌க வை‌க்‌கி‌றா‌ர்‌ பரணி‌. அவர்‌ கா‌தலர்‌களை‌ போ‌;டு குத்‌தும்‌ கா‌ட்‌சி‌ இப்‌போ‌து நி‌னை‌த்‌தா‌லும்‌ சி‌ரி‌ப்‌பை‌ வரவழை‌க்‌கி‌றது. கஞ்‌சா‌ கருப்‌பு‌ தனது பா‌ணி‌யி‌ல்‌ இவர்‌களி‌டம்‌ மா‌ட்‌டி‌க்‌கொ‌ண்‌டு சி‌ரி‌க்‌க வை‌க்‌கி‌றா‌ர்‌. கண்‌ இமை‌க்‌கும்‌ நே‌ரத்‌தி‌ல்‌ கட்‌டவு‌ட்‌ வை‌க்‌கும்‌ சி‌ன்‌னமணி‌ கா‌மெ‌டி‌யு‌ம்‌ கலகலப்‌பூ‌ட்‌டுகி‌றது.

சசி‌க்‌குமா‌ர்‌ தந்‌தை‌யா‌க நித்‌தி‌ருக்‌கும்‌ ரா‌ஜா‌ செ‌ண்‌டி‌மெ‌ண்‌டா‌ல்‌ இந்‌த கா‌ல தந்‌தை‌யை‌ ஞா‌பகப்‌படுத்‌துகி‌றா‌ர்‌. கா‌ரி‌ல்‌ வரும்‌ போ‌து மகனி‌ன்‌ கை‌யை‌ அழுந்‌த பி‌டி‌க்‌கி‌ற ஒரு கா‌ட்‌சி‌யே‌ அதற்‌கு போ‌தும்‌. அதே‌ போ‌ல தனது மகன்‌ எடுக்‌கும்‌ முடி‌வு‌ சரி‌யா‌க இருக்‌கும்‌ என்‌று துணை‌ நி‌ற்‌பது பல தந்‌தை‌ மகன்‌களை‌ நெ‌கி‌ழ்‌ச்‌சி‌யடை‌ வை‌க்‌கும்‌ டச்‌சி‌ங்‌ சீ‌ன்‌. தங்‌கை‌யா‌க வரும்‌ அபி‌‌நயா‌ அடடா‌ போ‌ட வை‌க்‌கி‌றா‌ர்‌. பரணி‌ பா‌ர்‌க்‌கும்‌ போ‌து முத்‌தம்‌ கொ‌டுத்‌து ஷா‌க்‌ கொ‌டுப்‌பது குபீ‌ர்‌ கா‌மெ‌டி‌

கா‌தலி‌க்‌கு தந்‌தை‌யா‌க வரும்‌ ஜெ‌யப்‌பி‌ரகா‌ஷ்‌, கா‌தலனுக்‌கு தா‌யா‌க வரும்‌ அரசி‌யல்‌வா‌தி‌ பெ‌ண்‌மணி‌ இருவரி‌ன்‌ பா‌ய்‌ச்‌சல்‌, சமை‌யல்‌ கா‌ண்‌ட்‌ரா‌க்‌டர்‌, தா‌ய்‌மா‌மன்‌, பரணி‌யி‌ன்‌ தந்‌தை‌ என படத்‌தி‌ல்‌ வரும்‌ அத்‌தனை‌ பா‌த்‌தி‌ரங்‌களை‌யு‌ம்‌ மெ‌ருகே‌ற்‌றி‌யவர்‌கள்‌ அனை‌வருமே‌ பா‌ரா‌ட்‌டுக்‌கு உட்‌பட்‌டவர்‌கள்‌.

சே‌சி‌ங்‌ கா‌ட்‌சி‌யி‌ல்‌ மி‌ரளவை‌க்‌கி‌றா‌ர்‌ ஸ்‌டண்‌ட்‌ மா‌ஸ்‌டர்‌ ரா‌ஜசே‌கர்‌. அதற்‌கு துணை‌பு‌ரி‌ந்‌தி‌ருக்‌கி‌றது ஏ.எல்‌.ரமே‌ஷ்‌ படத்‌தொ‌குப்‌பு‌. ‌ரா‌ஜபா‌லை‌யம்‌, நா‌மக்‌கல்‌ என்‌று பா‌ய்‌ந்‌து ஓடி‌வி‌ளை‌யா‌ண்‌டி‌ருக்‌கி‌றது எஸ்‌.ஆர்‌.கதி‌ர்‌ கே‌மி‌ரா‌. அவருடை‌ய தி‌றமை‌யை‌ எத்‌தனை‌ முறை‌ பா‌ரா‌ட்‌டி‌னா‌லும்‌ தகும்‌. அதே‌ போ‌ல இசை‌யமை‌ப்‌பா‌ளர்‌ சுந்‌தர்‌.சி‌.பா‌பு‌ இசை‌யி‌ல்‌ பா‌டல்‌களும்‌ பி‌ன்‌னனி‌ இசை‌யு‌ம்‌ படு அமர்‌க்‌களம்‌. சம்‌போ‌ சி‌வ சம்‌போ‌ என்‌று பி‌ன்‌னனி‌ இசை‌யி‌ல்‌ பட்‌டை‌யை‌க்‌ கி‌ளப்‌பி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌.

படத்‌தி‌ன்‌ டை‌ட்‌டி‌ல்‌ கா‌ர்‌டி‌ல்‌ ஆரம்‌பி‌த்‌து என்‌ட்‌ கா‌ர்‌ட்‌ முடி‌யு‌ம்‌ வரை‌ குனி‌யா‌மல்‌‌, நெ‌ளி‌‌யா‌மல்‌, பக்‌கத்‌தி‌ல்‌ உள்‌ளவர்‌களி‌டம்‌ பே‌சா‌மல்‌ பரபரப்‌போ‌டும்‌ வி‌றுவி‌றுப்‌போ‌டும்‌ சீ‌ட்‌டி‌ன்‌‌ நுனி‌யி‌ல்‌ அமர்‌ந்‌து படம்‌ பா‌ர்‌க்‌க வை‌த்‌துவி‌டுகி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌ சமுத்‌தி‌ரக்‌கனி‌. உண்‌மை‌‌யா‌ன கா‌தலர்‌களுக்‌கு மட்‌டுமே‌ உதவ வே‌ண்‌டும்‌ என்‌ற கருத்‌தை‌ அழுத்‌தமா‌க பதி‌வு‌ செ‌ய்‌வதோ‌டு அதற்‌கா‌ன இழப்‌பு‌களை‌யு‌ம்‌ கோ‌டி‌ட்‌டு கா‌ட்‌டுகி‌றா‌ர்‌. இந்‌த கா‌ல இளை‌ஞர்‌களுக்‌கு தே‌வை‌யா‌ன ஒரு பா‌டம்‌ இந்‌த படம்‌.

ஞா‌பகங்‌கள்‌

காதலி ஞாபகங்களில் வாழ்வை முடிக்கும் ஒரு கவிஞன் கதை....

பாடலாசிரியர் பா. விஜய் கதாநாயக அவதார மெடுத்துள்ளார். நண்பனின் நிஜக்கதை என்ற டைட்டிலுடன் படம் துவங்குகிறது. சினிமாவில் பாட்டு எழுதும் லட்சிய வேட்கையுடன் சென்னை வருகிறார் பா. விஜய். வடநாட்டை சேர்ந்த ஸ்ரீதேவிகா வீட்டின் மாடியில் வாடகைக்கு தங்குகிறார். இருவரின் சந்திப்புகள் காதலை விதைக்கிறது.

ஒரு கட்டத்தில் பிரிவினைவாத கும்பலுடன் பா. விஜய்க்கு தொடர்பு இருப்பதாக கருதி போலீஸ் பிடித்து சென்று ஜெயிலில் போடுகிறது. பிறகு அவர் நிரபராதி என அறியப்பட்டு விடுவிக்கப்படுகிறார்.

அதற்குள் ஸ்ரீதேவிகாவுக்கும் டார்ஜிலிங்கில் வசிக்கும் வைர வியாபாரிக்கும் கட்டாயபடுத்தி திருமணம் நிச்சயம் செய்து விடுகின்றனர். புகழ் பெற்ற சினிமா பாடலாசிரியர் ஆகனும் நிறைய விருதுகள் குவிக்கனும் அதுதான் என் ஆசை என்று கண்ணீரோடு சொல்லிவிட்டு கணவனுடன் பறக்கிறார் ஸ்ரீதேவிகா. காதலி பிரிவில் நொறுங்கும் பா.விஜய் அவர் ஆசைப்படி படிப்படியாக உயர்ந்து முன்னணி கவிஞராகிறார். ஒரு பாடலுக்கு தேசிய விருதும் பெறுகிறார்.

டெல்லி போய் விருதை பெறும் அவர் பழைய காதலியை பார்த்து விட்டு வர டார்ஜிலிங் செல்கிறார். தொழில் நஷ்டத்தில் கணவன் தூக்கில் தொங்கி சாக சொத்துக்களை இழந்து வறுமை பிடியில் காதலி தவிப்பதை ஒருவர் சொல்ல உடைகிறார்.

ஸ்ரீதேவிகாவோ கணவர் வெளியூர் போய் இருப்பதாக பொய் சொல்லி வீட்டுக்கு வந்த பா.விஜயை உபசரிக்கிறார். அதன் பிறகு நடப்பவை மனதை உருக்கவும் பிழியவும் செய்கின்றன.

லட்சிய வெறி... காதல் வலி பாத்திரத்தில் நடிகராக நிலை நிறுத்திக் கொண்டுள்ளார் பா. விஜய். ஸ்ரீதேவிகா அழகை கவிதையில் வர்ணித்து காதல் வயப்படும் அவர் இன்னொருத்தனுக்கு அவளை நிச்சயம் செய்ததும் அழுது துடித்து பரிதாபபடவைக்கிறார்.

கணவனை இழந்து வீடும் ஜப்தியாகி சிதிலடைந்த அறையில் சாப்பாட்டுக்கே வழி இன்றி கஷ்டப்படும் காதலி நிலை கண்டு இடிந்து போகும் சீன்கள் அழுத்தமானவை... காதலி பிடி கொடுக்காமல் பேசியதால் அவர் விருப்பப்படி பெரிய கவிஞனானதை சொல்லாமல் வெளியேறுவது... டெல்லியில் தமிழ் சங்கத்தினர் நடத்தும் பாராட்டு விழாவில் காதலிக்காக எழுதிய ஞாபகம் இல்லையோ என் தோழி என்ற பாடலை பாடுவது... அந்த வழியே செல்லும் ஸ்ரீதேவிகா விழாவை ஏதேச்சையாக பார்த்து நிலை குலைவது... வீட்டுக்கு ஓடோடி வந்து பீரோவை திறக்க பா. விஜய் சொல்லாமல் வைத்து விட்டு போன விருது சான்றிதழ், செக் போன்றவைகளை பார்த்து தவிப்பது... கண்கணீல் நீர் கசிய வைக்கும் ஜீவனுள்ள பதிவுகள்...

ஸ்ரீதேவிகா அழகிலும், நடிப்பிலும் பளிச்சிடுகிறார். திருமணத்துக்கு முந்திய நாள் காதலனிடம் போய் விடிவதற்குள் என்னை முழுசாக அனுபவித்துக்கோ என்று அழுது புலம்புவது... விதவை கோலம், வறுமை வேதனைகளை மறைத்து காதலனிடம் சரளமாக பேசுவது... புகழ் பெற்ற கவிஞனான பிறகும் இன்னும் தன் ஞாபகத்திலேயே இருக்கிறான் என்ற உண்மைகளை அவன் பாடலிலும் வீட்டில் வைத்து போன விருது வகைகளிலும் கண்டு அழுது உடைவது... என நடிப்பின் உச்சம் தொட்டுள்ளார். ஆத்மார்த்தமான காதலை உயிரோட்டமான காட்சியமைப்புகளுடன் தொகுத்துள்ளார். இயக்குனர் ஜீவன். பிளாஷ்பேக்கை துண்டு துண்டாக காட்டியதால் மனதில் ஒட்டாமல் செல்கின்றன.பா.விஜய், ஸ்ரீதேவிகா இடையே காதல் மலரும் காட்சிகளையும் இன்னும் அழுத்தமாக்கி இருக்கலாம். பா. விஜய் உதவியாளராக வரும் சந்துரு, தமிழ்ச்சங்க பிரதிநிதியாக வரும் இயக்குனர் ஜீவன் பாத்திரங்களும் கச்சிதம். ஜேம்ஸ் விக் பின்னணி இசை பலமாக கை கொடுக்கிறது.

காவிய காதல்...