சாதி கெளரவம் பார்க்கும் முன்னாள் எம்.எல்.ஏ. தனது ஆசைக்கு மட்டும் சாதி கெளரவம் பார்ப்பதில்லை. தன்னிடம் நன்றியோடு வேலைபார்க்கும் தொழிலாளியின் மனைவியோடு கள்ள காதலில் ஈடுபடுகிறார். அதை நேரில் பார்த்து கண்டிக்கும் அந்த தொழிலாளியை கொலை செய்கிறார். அவரது மகன் கீழ் சாதி பெண்ணுக்கு உதவுவதோடு அவளை காதலிக்கவும் செய்கிறான். இது தெரிந்ததும் அவர்களது காதலுக்கு சமாதி கட்டுவதோடு அந்த பெண்ணையும் கொள்கிறார் தந்தை.
அதே கிராமத்தில் பள்ளி பருவத்திலேயே ஒரு மாணவனால் காதல் மயக்கத்தில் கர்ப்பமாகி கைகுழந்தையுடன் வாழாவெட்டியாகும் தங்கம், திரும்பவும் பள்ளி ஆசிரியரிடம் ஏமாந்து நிற்கிறாள். இவளையும் அனுபவிக்க நினைக்கிறார் அந்த முன்னாள் எம்.எல்.ஏ.
அந்த கிராமத்துக்கு படப்பிடிப்புக்காக செல்லும் இயக்குநர் வேலுபிரபாகரன் இந்த மூன்று சம்பவங்களையும் அறிகிறார். இந்த மூன்று சம்பவத்திற்கும் அடிப்படை காரணம் காமம்தான் என்பதை உணரும் அவர் அதை பத்திரிகை நிருபருக்கு தனது பேட்டியாக தெரிவிக்கிறார். அதில் தனது காதலையும், வாழ்க்கை அனுபவங்களையும் சொல்வதோடு பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்முறை அதிகரிக்க காரணம் நமது மூடும் நம்பிக்கைகளே என்று முடிவு சொல்வதோடு அதை களைந்தால் மூட நம்பிக்கை களைந்து நம்முடைய சக்தி ஆக்க பூர்வமாக பயன் படுத்த முடியும் என முடிவு சொல்கிறார்.
காமத்தை திறந்த புத்தகமாக்க வேண்டும் என படம் சொல்கிறது. அதை காதலும், மோதலும், காமம் நிறைவேறும் சம்பவங்களோடும் படமாக தந்திருக்கிறார் இயக்குநர் வேலுராஜா.
ஏழை கணவனை ஏமாற்றி, பணக்காரரின் ஆசை நாயகியாக வாழ்ந்து, கணவனை கொலை செய்ய உடந்தையாகும் பாபிலோனா. பாலியல் கவர்ச்சியை காதலாக நினைத்து, உயர் ஜாதி இளைஞனை காதலித்து கொலையாகி சாகும் ஷெர்லிதாஸ், முதலில் சகமாணவனாலும், பிறகு ஆசிரியராலும் ஏமாறும் தங்கம் பாத்திரத்தில் பிரீத்தி ரங்கயானி ஆகியோர் தாராளமாக நடித்திருக்கின்றனர்.
வேலுபிரபாகரன் இயக்குநராக, தயாரிப்பாளராக நடித்திருக்கிறார். சரத்செந்தில், ரத்தன், ஜெய், அதிரூபன், சம்பத் ஆகியோரின் நடிப்பும் பலே.
பரபரப்பான மோதலும், கிளுகிளப்பான காட்சிகளும் படத்தில் இறைந்து கிடக்கின்றன. அதில் இளையராஜாவின் இசையும், வேலுபிரபாகரனின் வசனமும் பலம் சேர்க்கிறது.
No comments:
Post a Comment