காதலர்களுக்கு உதவும் நண்பர்களின் கதை. அதே போல காதல் துரோகிகளுக்கும் பாடம் சொல்கின்றனர்.
சசிக்குமார் படித்துவிட்டு அரசு வேலைக்கு நேர்மையுடன் முயற்சி செய்யும் இளைஞர். அவரது நண்பரான விஜய் கம்பியூட்டர் கம்பெனி வைக்க கடன் கேட்டு போராடிக்கொண்டிருக்கிறார். இன்னொரு நண்பனான பரணி வெளிநாடு செல்ல முயற்சி செய்து வருபவன்.
இவர்கள் மூவரும் ஒன்றாக சுற்றுபவர்கள். குடி கூத்து கும்மாளம் மொட்டை மாடி படுக்கை என ஜாரியாக வாழ்கின்றனர். இதில் சசிக்குமாரின் மாமன் மகள் அனன்யா சசிக்குமாரை காதலிக்கிறார். திருமணம் செய்துக்கொள்ள ஆசைப்படுகிறார். அதே போல சசிக்குமாரின் தங்கையை விஜய் சைட் அடித்து காதலித்து வருகிறார்.
இந்த நிலையில் சசிக்குமாரின் கல்லூரி தோழன் ரங்கா அந்த ஊருக்கு வருகிறான். இரண்டு நாள் தங்கியவன் திடீரெண கிணற்றில் விழுந்து தற்கொரலை செய்துகொள்ள முயல அவனை காப்பாற்றுகின்றனர். தனது காதல் தோல்வியானதால் தற்கொலை செய்துகொண்டதாக கூறுகிறான் ரங்கா.
ரங்காவின் காதலியை அவனோடு சேர்த்து வைக்க நண்பர்கள் மூவரும் நாமக்கல் செல்கின்றனர். அங்கு இரண்டு குடும்பத்தினரின் தேடல்களுக்கு நடுவே ரங்காவையும் அவனது காதலியையும் கடத்தி வெளியூருக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால் சசிக்குமாருக்கு கண்ணுக்கு அருகில் ஒரு பெரும் காயம் ஏற்படுகிறது. விஜய் ஒரு காலையும், பரணி ஒரு காதையும் இழக்கின்றனர். இந்தப் பிரச்சனையால் மூன்று குடும்பத்தினரும் சித்திரவதைக்கு ஆளாவதோடு சசிக்குமார் பாட்டியும் அதில் இறக்கிறார்.
இரு பெரும் பணக்காரர்கள் தங்களது செல்வாக்கை அவர்களிடமிருந்து காதலர்கள் எங்கு தலைமறைவாக இருக்கிறார்கள் என்கிற விபரத்தை வரவழைக்க முயற்சி செய்கின்றனர். கடைசி வரை காட்டிக்கொடுக்காமல் கொடுமைகளை அனுபவித்து சிறைக்கு செல்கின்றனர்.
சிறையிலிருந்து திரும்பி வந்து காயம் ஆறுவதற்குள் மனக்காயத்துக்கு ஆளாகிறார் சசிக்குமார். அவரது காதலியை அரசு வேலையில் இருக்கும் ஒரு இளைஞனுக்கு திருமணம் செய்து வைக்கிறார் அவரது மாமன். இதனால் உடைந்து போகிறார் சசிக்குமார். அதிலிருந்து விடுபடுவதற்குள், அவர்கள் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த இந்த காதல் ஜோடி இருவரும் ஈகோ பிரச்சனையால் சண்டைப்போட்டுக்கொண்டு பிரிந்து தங்களது வீட்டுக்கே சென்றுவிட்டனர் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர்.
இந்த காதல் ஜோடிகளை சேர்த்து வைக்க அவர்கள் செய்த தியாகம் அத்தனையும் வீணாகிவிட்டதை எண்ணி துடிக்கின்றனர். இதனால் அந்த காதல் ஜோடிகளை தேடிச்சென்று நியாயம் கேட்கும் போது அவர்களுக்கு அவமானமும் வேதனையும்தான் மிஞ்சுகிறது. இதனால் ஆத்திரப்படும் அவர்கள் அவர்களை கடத்திச் சென்று தண்டனை கொடுக்க முயற்சிக்கின்றனர். அவர்கள்து தண்டனை எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பது பரபரப்பான கிளைமாக்ஸ்.
காதல் ஜோடிகளை சேர்த்து வைக்கும் முன்பு ஒவ்வொரு நண்பர்களும் காதல் ஜோடியைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் படம். அதை ஜாலியான விறுவிறுப்பான திரைக்கதையில் அழுத்தத்துடன் செல்லியிருக்கிறார் இயக்குநர்.
போலீஸ் வேலைக்கு வரிசையில் நிற்கும் போது தன்னைவிட குள்ள மானவர்களை பின்னால் நின்று தனது உயரத்தை சரி செய்யும் ஆரம்ப காட்சியிலேயே கைதட்டல் வாங்கிவிடுகிறார் கதாநாயகன் சசிக்குமார். தங்கையை நண்பன் விஜய் காதலிப்பதை கண்டும் காணாதது போல இருக்கும் காட்சியில் அடுத்த கைதட்டலி உயர்கிறார். இப்படி றைப்பெண்ணை கேலி, கிண்டல் செய்த விளையாடும் போதும் மாமாவிடம் உங்க நேர்மை பிடிச்சிருக்கு என்று அடிக்கடி சொல்லி சிரிக்க வைக்கும், நண்பனின் காதலை சேர்த்துவைக்க படாத பாடுபடும் போதும், அவர்களை பஸ்ஸில் எற்றிவிட்டு நகை பணம் எல்லாத்தையும் எடுத்து எடுத்து கொடுக்கும் போதும், கால் இழந்த விஜையை பார்த்து கதறும் போதும், காது செவிடான நண்பர்களை கண்டு துடிக்கும் போதும் , பாட்டியை நினைத்து பதறும் போதும், திருமணமான மாமன் மகளை நினைத்து நொறுங்கும் போதும் காதலர்களுக்கு தங்களது உள்ளகொதிப்பை கொட்டி திட்டும் போதும் என படம் முழுக்க அவரது அபார நடிப்பு கைதட்டல்களையும் கண்ணீர் பாராட்டுகளையும் அள்ளுகிறது.
உரிமையோடு அத்தை மகன் சசிக்குமாரை காதலிக்கும் போதும், தங்தையினுடைய செண்டிமெண்ட் மிரட்டலுக்கு பணிந்து அடிவயிற்றிலிருந்து அழும் போதும் அனன்யா தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி அடடா போட வைக்கிறார்.
காதல் கடிதத்தை ரோட்டில் வீசி காதலி பதிலுக்கு நிற்பதும் காதலி திரும்பார்த்த பிறகு கையை விட்டுவிட்டு சைக்கிளில் பறந்து போகும் காட்சியில் கைதட்டலை பெறுகிறார் விஜய். நண்பனுக்காக காலை இழக்கிற காட்சியில் பதறவைக்கிறார் விஜய். அவரது தந்தையாக நடித்திருப்பவர் காதலுக்கு கொடுக்கும் ஐடியா தியேட்டரில் சிரிப்பலை. கால் இழந்த மகனை பார்த்து கலங்கும் காட்சியில் சூப்பர் நடிப்பு.
படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை பல இடங்களில் சிரிக்க வைக்கிறார் பரணி. அவர் காதலர்களை போ;டு குத்தும் காட்சி இப்போது நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கிறது. கஞ்சா கருப்பு தனது பாணியில் இவர்களிடம் மாட்டிக்கொண்டு சிரிக்க வைக்கிறார். கண் இமைக்கும் நேரத்தில் கட்டவுட் வைக்கும் சின்னமணி காமெடியும் கலகலப்பூட்டுகிறது.
சசிக்குமார் தந்தையாக நித்திருக்கும் ராஜா செண்டிமெண்டால் இந்த கால தந்தையை ஞாபகப்படுத்துகிறார். காரில் வரும் போது மகனின் கையை அழுந்த பிடிக்கிற ஒரு காட்சியே அதற்கு போதும். அதே போல தனது மகன் எடுக்கும் முடிவு சரியாக இருக்கும் என்று துணை நிற்பது பல தந்தை மகன்களை நெகிழ்ச்சியடை வைக்கும் டச்சிங் சீன். தங்கையாக வரும் அபிநயா அடடா போட வைக்கிறார். பரணி பார்க்கும் போது முத்தம் கொடுத்து ஷாக் கொடுப்பது குபீர் காமெடி
காதலிக்கு தந்தையாக வரும் ஜெயப்பிரகாஷ், காதலனுக்கு தாயாக வரும் அரசியல்வாதி பெண்மணி இருவரின் பாய்ச்சல், சமையல் காண்ட்ராக்டர், தாய்மாமன், பரணியின் தந்தை என படத்தில் வரும் அத்தனை பாத்திரங்களையும் மெருகேற்றியவர்கள் அனைவருமே பாராட்டுக்கு உட்பட்டவர்கள்.
சேசிங் காட்சியில் மிரளவைக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் ராஜசேகர். அதற்கு துணைபுரிந்திருக்கிறது ஏ.எல்.ரமேஷ் படத்தொகுப்பு. ராஜபாலையம், நாமக்கல் என்று பாய்ந்து ஓடிவிளையாண்டிருக்கிறது எஸ்.ஆர்.கதிர் கேமிரா. அவருடைய திறமையை எத்தனை முறை பாராட்டினாலும் தகும். அதே போல இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபு இசையில் பாடல்களும் பின்னனி இசையும் படு அமர்க்களம். சம்போ சிவ சம்போ என்று பின்னனி இசையில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.
படத்தின் டைட்டில் கார்டில் ஆரம்பித்து என்ட் கார்ட் முடியும் வரை குனியாமல், நெளியாமல், பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசாமல் பரபரப்போடும் விறுவிறுப்போடும் சீட்டின் நுனியில் அமர்ந்து படம் பார்க்க வைத்துவிடுகிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. உண்மையான காதலர்களுக்கு மட்டுமே உதவ வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்வதோடு அதற்கான இழப்புகளையும் கோடிட்டு காட்டுகிறார். இந்த கால இளைஞர்களுக்கு தேவையான ஒரு பாடம் இந்த படம்.
No comments:
Post a Comment