Tuesday, September 1, 2009

மஞ்‌சள்‌ வெ‌யி‌ல்‌


நி‌றுவனம்‌‌: ஹா‌சி‌னி‌ சி‌னி‌மா‌ஸ்‌ தயா‌ரி‌ப்‌பு‌: எச்‌. சை‌யத்‌ இப்‌ரரா‌கிம்‌
இயக்‌கம்‌: டி‌. வசீ‌கரன்‌ இசை‌: பரத்‌வா‌ஜ்‌‌
நடி‌கர்‌கள்‌: பி‌ரசன்‌னா‌, பா‌லா‌, சந்‌தி‌யா‌, ஆர்‌.கே‌, எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கர்‌, தா‌ரி‌கா‌‌
பா‌டல்கள்‌: பா‌.வி‌ஜய்‌, ஸ்‌டண்‌ட்: தளபதி‌ தி‌னே‌ஷ்‌.
ஒளி‌ப்‌பதி‌வு‌: கவி‌யரசு‌, படத்‌தொ‌குப்‌பு‌: உதயசங்‌கர்‌
கலை‌:ஜனா‌‌, தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கம்‌: டி‌.வி‌.சசி‌
நடனம்:‌ தி‌னே‌ஷ்‌, லக்‌ஷண்‌யா‌, வி‌ஷ்‌ணுதே‌வா‌
மக்‌கள்‌ தொ‌டர்‌பு‌: ஏ.ஜா‌ன்‌ ‌

நி‌ழல்‌கள்‌ ரவி‌யி‌ன்‌ மகள்‌ தா‌ரி‌கா‌. அவருக்‌கும்‌ ஆர்‌.கே.‌வு‌க்‌கும்‌ தி‌ருமண நி‌ச்‌சயம்‌ நடக்‌கி‌றது. அப்‌போ‌து தா‌ரி‌கா‌வி‌ன்‌ தங்‌கை‌ சந்‌தி‌யா‌வை‌ பா‌ர்‌க்‌கும்‌ ஆர்‌.கே‌. அவரது அழகி‌ல்‌ மயங்‌குவதோ‌டு, அவரை‌யே‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ள்‌வே‌ன்‌ என நண்‌பர்‌களி‌டம்‌ சபதம்‌ போ‌டுகி‌றா‌ர்‌. அதற்‌கா‌க தா‌ரி‌கா‌வை‌ பல வி‌தங்‌களி‌ல்‌ அவருக்‌கே‌ தெ‌ரி‌யா‌மல்‌ டா‌ர்‌ச்‌சர்‌ கொ‌டுக்‌கி‌றா‌ர்‌.

தி‌ருமணத்‌தி‌ன்‌ முதல் ‌நா‌ள்‌ ஆர்‌.கே‌ செ‌ய்‌த சதி‌யா‌ல்‌ தா‌ரி‌கா‌ மயங்‌கி‌ வி‌ழ அவள்‌ ஒரு நோ‌யா‌ளி‌ பெ‌ண்‌ என்‌று ஆர்‌.கே‌ குடும்‌பத்‌தி‌னர்‌ முத்‌தி‌ரை‌ குத்‌த‌ பெ‌ரி‌யவளுக்‌கு பதி‌ல்‌ சி‌ன்‌னவள்‌ என்‌று சந்‌தி‌யா‌வி‌ன்‌ வி‌ருப்‌பத்‌தை‌ கே‌ட்‌கமா‌லே‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌டுக்‌க சம்‌மதி‌க்‌கிறா‌ர்‌ நி‌ழல்‌கள்‌ரவி‌‌.

பெ‌ற்‌றோ‌ர்‌கள்‌ எடுத்‌த இந்‌த தி‌டீ‌ர்‌ முடி‌வா‌ல்‌ அதி‌ர்‌ந்‌து போ‌ன சந்தி‌யா‌ யா‌ருக்‌கும்‌ தெ‌ரி‌யா‌மல்‌ இரவோ‌டு இரவா‌க பி‌ரசன்‌னா‌வு‌டன்‌ எஸ்‌கே‌ப்‌ ஆகி‌றா‌ர்‌. வி‌ஷயம்‌ அறி‌ந்‌து நி‌ழல்‌கள்‌ ரவி‌ மகளை‌ தலை‌முழ்‌கி‌வி‌ட்‌டதா‌க சொ‌ல்‌ல, அதி‌ல்‌ ஆடி‌ப்‌போ‌கும்‌ ஆர்‌.கே‌. அதை‌ கெ‌ளரவ பி‌ரச்‌சனை‌யா‌க எடுத்‌துக்‌ கொ‌ண்‌டு ரவு‌டி‌களை‌ வை‌த்‌துக்‌ கொ‌ண்‌டு இவர்‌களை‌ தே‌டுகி‌றா‌ர்‌.

எத்‌தனை‌ நா‌ளை‌க்‌கு தா‌ன்‌ தலை‌மறை‌வா‌க ஓடுவீ‌ர்‌கள்‌. கட்‌டுங்‌கள்‌ தா‌லி‌ என்‌று கோ‌யி‌லி‌ல்‌ வை‌த்‌து தா‌லி‌ எடுத்‌து கொ‌டுக்‌கி‌றா‌ர்‌ எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கர்‌. அப்‌போ‌து அவர்‌கள்‌ இருவரும்‌ நா‌ங்‌கள்‌ இருவரும்‌ நண்‌பர்‌கள்‌, கா‌தலர்‌கள்‌ இல்‌லை‌ என்‌று சொ‌ல்‌வதே‌டு, பா‌லா‌ - சந்‌தி‌யா‌ கா‌தலி‌த்‌த சம்‌பவத்‌தை‌ கூறுகி‌ன்‌றனர்‌.

பி‌றகு ஒரு பக்‌கம்‌ ஆர்‌.கே‌.வி‌ன்‌ துரத்‌தலை‌ சமா‌ளி‌ப்‌பது,‌‌ இன்‌னொ‌ரு பு‌றம்‌ பா‌லா‌வை‌ தே‌டல்‌‌ என வை‌த்‌துக்‌ கொ‌ண்‌டு அலை‌கி‌றா‌ர்‌ பி‌ரசன்‌னா‌. கடை‌சி‌யி‌ல்‌ பா‌லா‌வை‌ சந்‌தி‌த்‌து சே‌ர்‌த்‌து வை‌க்‌கி‌ற போ‌து ஆர்‌.கே‌.வி‌ன்‌ ஆட்‌களா‌ல்‌ அடி‌ப்‌பட்‌டு கோ‌மா‌ ஸ்‌டெ‌ஜ்‌க்‌கு ஆளா‌கி‌றா‌ர்‌ பி‌ரசன்‌னா‌.

தோ‌ழன்‌ இந்‌த நி‌லை‌யி‌ல்‌ இருக்‌க நமக்‌கு கா‌தல்‌ முக்‌கி‌மல்‌ல என முடி‌வெ‌டுக்‌கி‌றா‌ர்‌ சந்‌தி‌யா.‌ இதற்‌கு கா‌லம்‌ என்‌ன பதி‌ல்‌ சொ‌ல்‌கி‌றது என்‌பது க்‌ளை‌மா‌க்‌ஸ்‌.

நட்‌பை‌யு‌ம்‌, கா‌தலை‌யு‌ம்‌ கலந்‌து சொ‌ல்‌லும்‌ கதை‌. அதி‌ல்‌ தி‌யா‌கம்‌ மே‌லோ‌ங்‌கி‌ நி‌ற்‌கி‌றது.

பி‌ரசன்‌னா‌வு‌ம்‌, சந்தி‌யா‌வு‌ம்‌ கா‌தலர்‌கள்‌ என்‌று நி‌னை‌த்‌து கொ‌ண்‌டி‌ருக்‌கும்‌ போ‌து தி‌டீ‌ர்‌ என்‌று பா‌லா‌வி‌ன்‌ கா‌தல்‌ வருவது கதை‌யி‌ல்‌ தி‌டீ‌ர்‌ தி‌ருப்‌பம்‌. பு‌தி‌ய இயக்‌குனர்‌ வசீ‌‌கரன்‌ தனது தி‌றமை‌யை‌ அழுத்‌தமா‌க பதி‌த்‌து இருக்‌கி‌றா‌ர்‌.

நடி‌ப்‌பி‌லும்‌ சரி‌ சண்‌டை‌க்‌கா‌ட்‌சி‌யி‌லும்‌ சரி‌ அசத்‌தி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ பி‌ரசன்‌னா.‌ கா‌தல்‌ கா‌ட்‌சி‌களி‌ல்‌ சந்‌தி‌யா‌ எதா‌ர்‌த்‌தமா‌க நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. ஒவி‌யரா‌க வந்‌து கா‌தல்‌ வயப்‌பட்‌டு சி‌றை‌க்‌கு செ‌ன்‌று பி‌றகு கா‌தலி‌க்‌கா‌க போ‌ரா‌டும்‌ கா‌ட்‌சி‌களி‌ல்‌ தனது இயல்‌பா‌ன நடி‌ப்‌பா‌ல்‌ பா‌த்‌தி‌ரத்‌துக்‌கு கச்‌சி‌தமா‌க பொ‌ருந்‌தி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ பா‌லா‌. ஆர்‌.கே‌.வி‌ன்‌ அதி‌ரடி‌ மி‌ரட்‌டல்‌, எம்‌.எஸ்‌.பா‌ஸ்கரி‌ன்‌ கலகல கா‌மெ‌டி‌ படத்‌துக்‌கு பலம்‌.

பரத்‌வா‌ஜ்‌ இசை‌யி‌ல்‌ பா‌டல்‌கள்‌ இனி‌மை‌ ரகம்‌. கா‌தலுக்‌கா‌க உயி‌ர்‌வி‌டும்‌ நண்‌பனி‌ன்‌ கதை‌யை‌ அதன்‌ போ‌க்‌கி‌ல்‌ போ‌கவி‌ட்‌டு படமா‌க்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ வசீ‌‌கரன்‌.

No comments:

Post a Comment