கிரண்பேடி பற்றிய குறும்படம் வருவாக்கிய சக்திசெல்லம் தற்போது இயக்கி உள்ள படம் ஒலியும் ஒளியும்.
அடிமை இந்தியாவுக்கு ஒரு குழந்தையைப் பெற்றுத் தரமாட்டேன். என்ற சொல்லும் சுதந்திர உணர்வு கொண்ட பெண்ணை பலாத்காரம் தாயாக்குகிறான் கணவன். பிறக்கிற குழந்தையையெல்லாம் கொடுத்து கொள்கிறாள் தாய். கடைசிக் குழந்தையை கணவன் காப்பாற்றி விடுகிறான்.
அந்த குழந்தை பெரியவளானதும் அம்மாவைப் போலவே கொண்ட பெண்ணாக வளர்கிறாள். இவளக்கும் அதே கொள்கை. இவர் இப்படி இருந்தம் ஒரு குடுமி ஆசாமி இவரை விரும்புகிறார்.
டாக்டர் என்ற பெயரில் ஒரு வில்லன் பெரிய காமுகன் அவனது காதலுக்கு தடையாக இரக்கிறான். அவனிடமிருந்து நாயகியைக் காப்பற்றி, சுதந்திரம் கிடைத்த நிமிடத்தில் கதாநாயகன் எப்படி தாலி கட்டுகிறான் என்பது படம்.
படத்தில் மோகன் அப்பாவியாக நடித்திருக்கிறார். அவரது கறம்பு நடிப்பு ரசிக்க வைக்கிறது. தனது வேடத்தை நன்கு உணர்ந்து நடித்திருக்கிறார் அஸ்வதி. மொட்டை தலை ராமுவாக நடித்திருக்கும் பிரபா, குழந்தை முகம் கொடூர குணம் உடையவராக நடித்து பயம் காட்டுகிறார்.
கான்ஸ்டபிள்கோவிந்தசாமியாக பாலம் கல்யாணசுந்தரம் நடித்திருக்கிறார். அதே போல நீண்ட நாட்களுக்கு பிறகு ஆனந்த் பாபுவை திரையில் பார்க்க முடிந்தது. இன்னும் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.
புதியவர் யானிதேஷ் இசையில் பாடல்கள் பரவா இல்லை ரகம். தேசப்பற்றுஉள்ள ஒரு படத்தை கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் சக்தி செல்லம். இன்னும் நறுக்கி விறுவிறுப்பு கொடுத்திருக்கலாம்.
Tuesday, September 1, 2009
ஒலியும் ஒளியும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment