
அந்த சிடியை பெறுவதற்கு போலீஸ் தரப்பிலிருந்தும், ரவுடிகள் தரப்பி லிருந்தும் துரத்தல் நடக்கிறது. இருவரும் தங்களது காதலிகளுடன் தலை மறைவாகின்றனர். அந்த ஆதாரத்தை பொண்வண்ணனிடம் பணம் கரக்க முயல்கின்றனர். இதில் சின்ன திருடர்களா அல்லது பெரிய திருடர்களா யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது பரபரப்பான காட்சிகள்.
படத்தின் ஆரம்பம் முதலிலிருந்தே நகைச்சுவையும் அடுத்து நடக்கப் போகிறதோ என்ற டென்ஷணும் தொற்றிக்கொள்கிறது. காதல் மோதல் போன்ற சுவராஸ்யங்களும் துரத்தல்அடித்தல் போன்ற அதிரடி மிரட்டல்களும் படத்தில் அடுத்தடுத்து வந்து ரசனைக்கு படைக்கிறது.
இது வரை வில்லனாக நடித்து வந்த டேனியல் பாலாஜி கதாநாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார். அவரது ஸ்டைல் மேனரிசம் பார்வை என அனைத்தும் ரவுடியின் செயல்களை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. மழையில் நடக்கும் அதிரடி காட்சிகளில் மிரள வைக்கிறார். லட்சுமிராயுடன் பாடல் காட்சிகளில் பரவசப்படுத்துகிறார்.
படத்தில் இன்னொரு கதாநாயகனாக நிதின் சத்யா. பட்டையை கிளப்புகிறார். அவர் மஞ்சரியிடம் பொய் காதலிப்பதும் சுவையான சம்பவங்கள் பாடல் காட்சியில் மட்டுமல்லாது சண்டைக் காட்சியிலும் பிரமாதப்படுத்துகிறார்.
கவர்ச்சியில் லட்சுமிராய் வந்தாலும் அப்பாவியாக திருமணத்தின் போது அழுகிற காட்சியிலும், டேனியல் பாலாஜியை கண்டு கோபப்படும் காட்சியிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கதாபாத்திரத்தில் கட்டழகி மஞ்சரி. கல்லூரி மாணவியாக வந்து எமாந்து நிற்கிற காட்சியில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பொன்வண்ணன் வில்லனாக, அவரது எதிரிகளாக ஆனந்த், சேத்தன் இருவரும் நடித்துள்ளனர். கமிஷனராக வரும் கிஷோர், கமெண்டோவாக வரும் ரியாஷ்கான் என பலர் நடித்துள்ளனர்.
திருடன் போலீஸ் கதையை கையில் எடுத்து அதில் நிறைய முடிச்சுகளையும் எதிர்பாராத திருப்பங்களையும் கொண்ட திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் அனீஷ் தன்வீர். பின்னனி இசையில் பயமுறத்தும் யுவன்சங்கர் ராஜா பாடல்களிலோ பரவசப்படுத்துகிறார். ஜீவாவின் சிஷ்யர் என்பதை நிருபித்திருக்கிறது சலீம் ஒளியோவியம்.
அனைத்து பதார்த்தங்களடன் ஒரு புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்பித்திதயை படத்தில் தந்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீநாத். காமெடி நடிகன் என்பதை மறக்க வைத்து அதிரடி ஆக்ஷன் இயக்குநர் என்பதை முத்தரை பதிக்கிறார். பொழுது போக்க படு எண்டர்டெய்மெண்டான படம் இந்த முத்திரை.
No comments:
Post a Comment