Tuesday, September 1, 2009

சி‌ரி‌த்‌தா‌ல்‌ ரசி‌ப்‌பே‌ன்‌


பண்ணையார் மகளை காதலித்து மணக்க போராடும் இளைஞன் கதை... பண்ணை குடும்பத்து பெரியவர் எம்.எஸ். பாஸ்கர். தங்கையை மந்திரவாதி தியாகு காதலித்து கடத்தி போய் மணந்ததால் காதலையே வெறுக்கிறார்.
எம்.எஸ். பாஸ்கர் மகள் சுனுலட்சுமிக்கு தனது மகன் சத்யனை மணமுடித்து சொத்தை அபகரிக்க திட்டமிடுகிறார் தியாகு. ஆனால் சுனுலட்சுமிக்கு வீட்டு மானேஜர் மனோபாலா மகன் சத்யா மேல் காதல். ராத்திரிகளில் சந்தித்து ரகசியமாக காதலை வளர்க்கின்றனர்.ஒரு கட்டத்தில் காதல் விவகாரம் எம்.எஸ். பாஸ்கருக்கு தெரிய ஆவேசம். சத்யாவை விரட்டியடிக்கின்றனர். சுனுலட்சுமிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடு நடக்கிறது.
திருமணத்தை தடுத்து தன் மகனுடன் சுனுவை சேர்க்க தியாகு அடியாட்களுடன் வருகிறார். சத்யாவும் அனுவை கடத்தி போய் திருமணம் செய்ய வியூகம் வகிக்கிறார். அனுவை யார் மணந்தார் என்பது கிளைமாக்ஸ்...
முழுநீள காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படம். பெரிய காமெடி பட்டாளமே களம் இறங்கி சிரிப்பு தோரணம் கட்டுகின்றனர். இறுக்கத்துடன் துப்பாக்கியும் கையுமாய் திரியும் எம்.எஸ். பாஸ்கர்... மகாநதி சங்கரின் அடிதடி கோஷ்டி செய்யும் கோமளித்தன கலாட்டாக்கள்,
தியாகு, ஊர்வசி, சத்யன் கூட்டணியின் மந்திர, தந்திர ரவுசுகள் என காமெடி தர்பாரே நடத்துகின்றனர். சத்யா காதல் காட்சிகளில் பளிச்சிடுகிறார். சுனுலட்சுமி அகலமான கண்கள், வசீகர புன்னகையில் கவர்கிறார். சண்முகராஜன், மனோபாலா, கல்பனா, மயில்சாமி, சிங்கமுத்து ஆகியோரும் உள்ளனர். தியாகுவின் நிர்வாண வசிய யோசனையும் அதை கேட்டு சத்யன் செய்யும் கூத்தும் முகம் சுளிக்க வைக்கின்றனர்.
இயனியனின் இசையில் பாடல்கள் இனிமை. ரமேஷ் அழகிரியின் ஒளிப்பதிவும் அருமை. காமெடி பட இயக்குனர் வரிசையில் அழுத்தமாக தன்னை பதிவு செய்துள்ளார் வி. சந்திரசேகரன்.

No comments:

Post a Comment