இணைத்தயாரிப்பு: சக்திவேல், பிரகாஷ் பாலமுருகன்
இயக்கம்: பரந்தாமன் இசை: கங்கைஅமரன்
நடிகர்கள்: விஜித், ராதிகா மல்ஹோத்ரா,
பாடல்கள்: முத்துக்குமார், ஸ்டண்ட்: ராம்போ ராஜ்குமார்.
படத்தொகுப்பு: பி.லெனின் ஒளிப்பதிவு: கவின்சுரேஷ்,
மக்கள் தொடர்பு: ஏ.ஜான்
தாயின் தவறான செயலால் பாதிப்பு ஏற்படும் இளைஞன் அதன் பிறகு உறவினர்களின் நடவடிக்கை பொறுக்க முடியாமல் தவறான வழியில் செல்பவர்களை தண்டிக்கிறான் இதுதான் முழு படம். அதில் நகரத்தில் நாகரீகம் என்ற பெயரில் கலாச்சா சீரழிவை ஏற்படுத்தும் ஐடி துறையில் உள்ள சில பேர்வழிகளை போட்டு தள்ளுகிறான். அவனை போலீஸ் வலை வீசி தேடி பிடிப்பதுதான் திரைக்கதை.
சஸ்பென்ஸ், காதல், பாடல் என்று செல்லும் திரைப்படத்தில் நடுநடுவே நச்சென்ற வசனங்களும் வந்து போகிறது. இப்படத்தின் கதை,திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் செல்வராகவனின் சிஷ்யர் பரந்தாமன். குருவின் மீது பக்தியின் காரணமோ என்னவோ படத்தின் பெயரே செல்வராகவனின் பெயராக ராகவன் என வைத்திருக்கிறார். அதே போல அவரது பாதிப்புகளம் படத்தில் நிறைய இருக்கின்றன. கதாநாயகிக்கு காதல்கொண்டேன் திவ்யா பெயரை வைத்திருக்கிறார். அதே போல தனுஷ் போல ஆட்டோ ஓட்டும் ஒரு புதுமுகத்தை நாயகனாக நடிக்க வைத்திருக்கிறார்.
புதுமுகம் விஜித் தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். பல இடங்களில் அவரது பார்வை பயமுறுத்துகிறது. அதே போல கதாநாயகி ராதிகா மல்கோத்ரா. பார்க்க மப்பும் மந்தாரமுமாக இருக்கிறார். நமீதாவின் உறவுக்கார பெண்ணாம். பாடல்காட்சிகளில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக மனோஜ் கே.ஜெயன். அவரது அதிரடி நடவடிக்கையும் விசாரணையும் படத்திற்கு பிளஸ். சிங்கமுத்து மயில்சாமி காமெடி கலகலப்பு.
கங்கை அமரனின் இசையில் சித்தன்னவாசல் பாடல் முனுமுனுக்க வைக்கிறது.
சஸ்பென்ஸ், காதல், பாடல் என்று செல்லும் திரைப்படத்தில் நடுநடுவே நச்சென்ற வசனங்களும் வந்து போகிறது. இப்படத்தின் கதை,திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் செல்வராகவனின் சிஷ்யர் பரந்தாமன். குருவின் மீது பக்தியின் காரணமோ என்னவோ படத்தின் பெயரே செல்வராகவனின் பெயராக ராகவன் என வைத்திருக்கிறார். அதே போல அவரது பாதிப்புகளம் படத்தில் நிறைய இருக்கின்றன. கதாநாயகிக்கு காதல்கொண்டேன் திவ்யா பெயரை வைத்திருக்கிறார். அதே போல தனுஷ் போல ஆட்டோ ஓட்டும் ஒரு புதுமுகத்தை நாயகனாக நடிக்க வைத்திருக்கிறார்.
புதுமுகம் விஜித் தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். பல இடங்களில் அவரது பார்வை பயமுறுத்துகிறது. அதே போல கதாநாயகி ராதிகா மல்கோத்ரா. பார்க்க மப்பும் மந்தாரமுமாக இருக்கிறார். நமீதாவின் உறவுக்கார பெண்ணாம். பாடல்காட்சிகளில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக மனோஜ் கே.ஜெயன். அவரது அதிரடி நடவடிக்கையும் விசாரணையும் படத்திற்கு பிளஸ். சிங்கமுத்து மயில்சாமி காமெடி கலகலப்பு.
கங்கை அமரனின் இசையில் சித்தன்னவாசல் பாடல் முனுமுனுக்க வைக்கிறது.
பரபரப்பான திரைக்கதையில் பெரிய பிளஷ்பேக் வருகிறது. அதை கொஞ்சம் குறைத்திருக்கலாம். கலாச்சார சீரழிவுக்கு காரணமாணவர்கள் ராகவனை கண்டு பயப்படலாம்.
No comments:
Post a Comment