
நிறுவனம்: ஜி.கே.பிலிம் கார்பரேஷன் தயாரிப்பு: விக்ரம் கிருஷ்ணா
இயக்கம்: சபா ஐயப்பன் இசை: மணிசர்மா
நடிப்பு: விஷால், ஸ்ரேயா, பிரகாஷ்ராஜ், கிஷோர், கீதா, ஆர்த்தி, சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், பாண்டியராஜன், சாயாஜி ஷிண்டே, லால், லிவிங்ஸ்டன், மனோபாலா, பறவை முணியம்மா, சுமன்ஷெட்டி, மயில்சாமி,
பாடல்கள்: வாலி, விவேகா, பா.விஜய், கபிலன்,
நடனம்: தினேஷ், ஷோபி பவுல்ராஜ்
சண்டை: ராக்கி ராஜேஷ் ஒளிப்பதிவு: ப்ரியன்
கலை: வேலுபிரகாஷ் படத்தொகுப்பு: வி.டி.விஜயன்
மக்கள்தொடர்பு: நிகில் தயாரிப்பு நிர்வாகம்: சுரேஷ்பாபு
பொறுப்பில்லாமல் திரியும் விஷாலிடம் சிறுவயதில் காணாமல் போன அண்ணனை கண்டுபிடிக்குமாறு கூறுகிறார் தாய் கீதா.
கிராமத்திலிருந்து நகரத்துக்கு அண்ணனை தேடி வருகிறார் விஷால். வந்ததும் இவர் கண் எதிரே ஒருவனை நடு ரோட்டில் போட்டு கொலை செய்கிறார் கிஷோர். கொலைகாரனை போலீசுக்கு அடையாளம் காட்ட சம்மதிக்கிறார் விஷால். திடீர் என வந்து அவனை அடையாளம் காட்டவில்லை என்றால் உன்னை கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறார் பிரகாஷ்ராஜ். அவர் சென்றதும் தன்னை காட்டி கொடுத்தால் உன் உயிர் இருக்காது என எச்சரிக்கிறார் கிஷோர்.
அண்ணணை தேட வந்த இடத்தில் அடிதடி வம்பு எதுக்கு என ஒதுங்குகிறார் விஷால். பிரச்சனை அவரை விடுவதாக இல்லை. துரத்துகிறது. இங்கு பிரகாஷ்ராஜ், கிஷோர் என இரு பெரும் தாதாக்கள் மோதலால் நகரமே அல்லோலப்படுகிறது என்பதை உணர்கிறார். ஒரு கட்டத்தில் கோபத்தில் கிஷோரை கொலை செய்ய போக அவர்தான் தனது அண்ணன் என அடையாளம் காண்கிறார் விஷால்.
அண்ணணை ரவுடி தொழிலிலிருந்து மாற்றி தாயிடம் அழைத்து செல்ல முயற்சிக்கிறார் விஷால். ஆனால் கிஷோரை சுட்டு, அவர் செத்து விட்டதாக தூக்கி வீசுகிறார் பிரகாஷ்ராஜ். அண்ணனை காப்பாற்றி அண்ணனுக்காக ரவுடி கும்பலுடன் மோதி அவர்களை அழித்து தாயிடம் முழுசாக அண்ணனை ஒப்படைப்பதுதான் கிளைமாக்ஸ்...
ஆக்ஷன் படமாக தர முயன்றிருக்கிறார்கள். அதில் காதல் காட்சிகளால் ஏகப்பட் ஸ்பீடு பிரேக்.
அதிரடி ஆக்ஷன், கலகல காமெடி என துருதுரு ஆட்டம் என விஷால் அசத்தியிருக்கிறார். அவரது காதலியாக வரும் ஸ்ரேயா. பாவம் பாட்டுக்கு ஆட அதன் லீடு சீனுக்கு சிரிக்க வந்து போகிறார். சந்தானம் சில இடங்களில் இரட்டை அர்த்த வசனம் பேசி சிரிக்க வைக்கிறார். அவரை பரவை முனியம்மா காதலிப்பதும், அவரது முத்தத்தால் பரவை முனியம்மா உதடு பஞ்சர் ஆவதும் அதற்கு கஜேந்திரன் துள்ளி குதித்து பஞ்சாயத்து பேசுவதும் கொஞ்சம் ஓவர். .
பிரகாஷ்ராஜ் ,கிஷோர் நடிப்பில் எதார்த்தம். ஒரு பஞ்ச் அடித்தாலும் எம்.எஸ்.பாஸ்கர் தியேட்டரை கலகலப்பில் ஆழ்த்துகிறார்
மணிசர்மா இசையில் பாடல்கள் சுமார். ப்ரியன் ஒளிப்பதிவு அருமை. புதியவர் சபா ஐயப்பன் ஆக்ஷன் படம் இயக்கவேண்டும் என்று முடிவு செய்து அதில் கவனமாக இருந்திருக்கிறார். இதனால் சத்து இல்லாத திரைக்கதையால் படம் எப்போது முடியும் என எதிர்பார்ப்பு வந்துவிடுகிறது
No comments:
Post a Comment