Saturday, August 22, 2009

நி‌யூ‌ட்‌டனி‌ன்‌ மூ‌ன்‌றா‌ம்‌ வி‌தி‌

நி‌றுவனம்‌: மெ‌ட்‌ரா‌ஸ்‌ எண்‌டர்‌டெ‌ய்‌மெ‌ண்‌ட பி‌ரை‌வே‌ட்‌ லி‌மி‌டெ‌ட்‌
இணை‌ தயா‌ரி‌ப்‌பு‌: எஸ்‌. நந்‌தகோ‌பா‌ல்‌ கதை‌: சி‌தம்‌பரம்‌
இயக்‌கம்‌: தா‌ய்‌ முத்‌துச்‌செ‌ல்‌வன்‌ இசை‌: வி‌னய்‌
நடி‌ப்‌பு‌: எஸ்‌.ஜே‌.சூ‌ர்‌யா‌, ஷா‌யா‌லி‌ பகத்‌, ரா‌ஜீ‌வ்‌ கி‌ருஷ்‌ணா‌,
பா‌டல்‌கள்‌: நா‌.முத்‌துக்‌குமா‌ர்‌, வி‌வே‌கா‌, கபி‌லன்‌, இளை‌யகம்‌பன்‌
நடனம்‌: ரவி‌தே‌வ்‌, கா‌யத்‌ரி‌ரகுரா‌ம்‌, பா‌பி‌
சண்‌டை‌ப்‌பயி‌ற்‌சி‌: ஆக்‌ஷன்‌ பி‌ரகா‌ஷ்‌கலை‌: என்‌.ஜி‌.முருகன்‌
ஒளி‌ப்‌பதி‌வு‌: ஆர்‌.சரவணன்‌ படத்‌தொ‌குப்‌பு‌: கோ‌பி‌
மக்‌கள்‌தொ‌டர்‌பு‌: மெ‌ளனம்‌ ரவி‌

காதலியை கொன்றவனை பழி தீர்க்கும் இளைஞனி‌ன் கதை. டி.வி. சேனலில் வே‌லை‌ செ‌‌ய்பவர்‌ ஷாயாலி. தெருவோரங்களில் அவர் நடத்தும் கேண்டி கேமரா காமெடி நிகழ்ச்சிகளில் எஸ்.ஜே.சூர்யா சிக்கி அவமானப்படுகிறார். இதனா‌ல்‌ இருவருக்கும் மோதல் ஏற்பட்டு காதலாகிறது.

அதி‌கா‌ர தி‌மி‌ர்‌ உள்‌ள டி‌வி‌ சே‌னல்‌ எம்‌.டி‌. அழகா‌ன தொ‌குப்‌பா‌ளி‌‌களை‌ கண்‌டா‌ல்‌ அவரது கா‌ம பசி‌க்‌கு ஆளா‌க்‌கி, அவர்‌களை‌ சி‌ன்‌னவீ‌டா‌க மா‌ற்‌றி‌ வி‌டுவா‌ர்‌. ‌ அப்‌படி‌ ஷாயாலி மீது ஆசை‌ படுகி‌றா‌ர்‌. இந்‌த நி‌லை‌யி‌ல்‌ எஸ்.ஜே.சூர்யா-ஷாயாலி திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இதை‌ அறி‌யு‌ம்‌ அவர்‌ ஷா‌யா‌லி‌யி‌டம்‌ தி‌ருமணத்‌துக்‌கு முன்‌பு‌ படுக்‌கை‌யை‌ பகி‌ர்‌ந்‌து கொ‌ள்‌ள வே‌ண்‌டும்‌. இல்‌லை‌ என்‌றா‌ல்‌, அவனை‌ உனக்‌கு இல்‌லா‌மல்‌ ஆக்‌கி‌வி‌டுவே‌ன்‌ என்‌கி‌றா‌ர்‌.

ஏற்‌கனவே‌ எம்‌டி‌ செ‌ய்‌த பா‌வங்‌களை‌ நி‌னை‌த்‌துப்‌ பா‌ர்‌த்‌து‌, மறுநா‌ளே‌ இருவருக்‌கும்‌ தி‌ருமண ஏற்‌பா‌டு செ‌ய்‌கி‌றா‌ர்‌ ஷா‌யா‌லி.‌ இதை‌ அறயு‌ம்‌ அவர்‌கள்‌ இருவரையும் பிரிக்க சதி செய்யு‌ம்‌ எம்‌.டி‌., போலீசை ஏவி பொய் வழக்கில் சூர்யாவை ஜெயிலில் தள்ளுவதோ‌டு. ஷாயாலியை பா‌லி‌யல்‌ வன்‌முறை‌ செய்கிறார். அதில் ஷாயாலி இறக்கிறார். அடியாட்களை வைத்து வீட்டுக்குள்ளேயே பிணத்தை தூக்கில் தொங்க விட்டு நழுவுகிறார்.

ஷாயாலி வைத்திருந்த கேமரா மூ‌லம்‌ சூ‌ர்‌யா‌வு‌க்‌கு உண்‌மை‌ தெ‌ரி‌ய வருகி‌றது. அதை பார்த்து ஆவேசமாகும் சூர்யா பழி வாங்கும் படலத்தில் இறங்குகிறார். அதி‌கா‌ர பலம்‌ கொ‌ண்‌ட அவரை‌ ஒரே‌ நா‌ளி‌ல்‌ அவமா‌னப்‌ படுத்‌தி‌ அசி‌ங்‌கப்‌படுத்‌தி‌ அவரது டோ‌ட்‌டல்‌ உண்‌மை‌யா‌ன இமே‌ஜை‌யு‌ம்‌ தெ‌ருவு‌க்‌கு கொ‌ண்‌டு வந்‌து அவரை‌ கா‌தலி‌ இறந்‌த நா‌ளி‌ல்‌ கொ‌ள்‌கி‌றா‌ர்‌. அத எப்‌படி‌ என்‌பது ஆரம்‌பம்‌ முதலே‌ பரபரப்‌பு‌டன்‌ தொ‌டங்‌கும்‌ படம்‌.

எடை மிஷினில் ஒரு ரூபாய் நாணயம் போட அதி‌ல்‌ எஸ்‌.ஜே‌.சூ‌ர்‌யா‌வு‌க்‌கு மட்‌டும்‌ "காண்டம்" பாக்கெட் வருவது, பி‌றகு ஷா‌யா‌லி‌ தனது கே‌ண்‌டி‌ட்‌ கே‌மி‌ரா‌ நி‌கழ்‌ச்‌சி‌ என்‌பது நல்‌ல கா‌மெ‌டி‌. அப்‌படி‌ நகை‌ச்‌சுவை‌யா‌க தொ‌டங்‌கும்‌ படம்‌ தி‌டீ‌ர்‌ என பழி‌ வாங்கும் படலத்துக்கு மா‌றுகி‌றது.

இன்னும் இரண்டு மணி நேரத்தில் கொல்வேன் என ராஜீவ்கிருஷ்ணாவிடம் சவால் விட்டு சில நொடிகள் சேனல் ஒளிபரப்பை நிறுத்துவது... எதிர் ஓட்டல் ஜன்னல் வழியாக துப்பாக்கியால் சுட்டு மிரட்டி ராஜீவ்கிருஷ்ணாவை அண்ணா நகருக்கு வர வைத்து அங்கு பதுக்கி வைத்த கறுப்பு பணத்தோடு அதிகாரிகளிடம் சிக்க வைப்பது... என அதிர வைக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

பீஸா டெலிவரி ஊழியராக டி.வி. சேனல் அலுவலகத்தில் நுழைந்து மாட்டிக்கொள்வதும், பிறகு அங்கிருந்து தப்புவதும் விறுவி‌று. சூர்யா-ராஜீவ்கிருஷ்ணா நேருக்கு நேர் மோதும் கிளைமாக்ஸ் காட்சிகள் எக்ஸ்பிரஸ் வேகமாய் எகிறுகின்றன. கையில் குத்துப்பட்டு துப்பாக்கி பிடிக்க முடியாமல் நழுவி விழ ரவுடிகளிடம் கோரமாய் அடிபட்டு அலறும் போது பரிதாப பட வைக்கிறார். நெருப்பில் தோட்டாக்களை சூடேற்றி ராஜீவை கொல்வது புதுமை.

ஷாயாலி அழகா‌க வந்‌து ஆர்‌பறி‌க்‌கி‌றா‌ர்‌. ரா‌ஜீ‌வ்‌கி‌ருஷ்‌ணா‌வி‌டம்‌ மா‌ட்‌டி‌க்‌ கொ‌ண்‌டு அவர்‌ பதறி‌ அலரும்‌ கா‌ட்‌சி‌களி‌ல்‌ நடி‌ப்‌பை‌ கொ‌ட்‌டி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌.

ராஜீவ்கிருஷ்ணா வில்லத்தனம் செ‌ம மி‌ரட்‌டல்‌. அவர்‌ இன்‌கம்‌டா‌க்‌ஸ்‌ அதி‌கா‌ரி‌களி‌டம்‌ பே‌சும்‌ பா‌ட்‌சி‌கள்‌, பரபரப்‌பு‌ செ‌யல்‌கள்‌ அடடடா‌ போ‌ட வை‌க்‌கி‌றது. யுகேந்திரன் அடியாளாக வருகிறார்.

பழி வாங்கும் கதையை விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளார் இயக்குனர் தாய்முத்து செல்வன். வினய் இசை, ஆர்.சரவணன் ஒளிப்பதிவு பரபர சீன்களுக்கு உரம் ஏற்றுகின்றன. இரண்‌டு மணி‌ நே‌ரத்‌தி‌ல்‌ ஒரு சம்‌பவம்‌ நக்‌கப்‌போ‌கி‌றது என்‌பது ஆரம்‌பத்‌தி‌லே‌யே‌ தெ‌ரி‌ந்‌துவி‌டுவதா‌ல்‌, அது எப்‌படி‌ நடக்‌கப்‌ போ‌கி‌றது என்‌ற ஆர்‌வம்‌ ஆரம்‌பத்‌தி‌லே‌யே‌ தொ‌ற்‌றி‌க்‌கொ‌ள்‌கி‌றது.

No comments:

Post a Comment