தயாரிப்பு: கே.கருணாமூர்த்தி, சி. அருண்பாண்டியன்
இயக்கம்: விஷ்ணுவர்தன் இசை: யுவன்சங்கர்ராஜ
நடிகர்கள்: ஆர்யா, த்ரிஷா, ஜே.டி.சக்கரவர்த்தி, இந்திரஜித்,
மக்கள் தொடர்பு: டைமண்ட் பாபு மவுனம்ரவி
கட்டிட கலைஞரான ஆர்யா. குழந்தைநல மருத்துவரான திரிஷாவை ஒரு கார் போட்டியில் எதிர்பாராமல் கட்டிபிடித்து, பிறகு சாரி கேட்பதோடு அவர் அழகில் மயங்கி, அதிலிருந்து திரிஷா இருக்கும் அடத்தே தேடிச் சென்று தன் காதலை எளிமையாக நாசுக்காக சொல்கிறார். ஆரம்பத்தில் வெறுக்கும் திரிஷா, போக போக அவர் மீது காதல் கொள்கிறார். அப்போது எதிர்பாராமல் நடக்கும் விபத்தில் திரிஷா இறந்துவிட அவரது இதயம் ஒரு சிறுவனுக்கு பொருத்தப்படுகிறது.
அந்த சிறுவனின் தந்தை செல்போன் பேசிக் கொண்டு கார் ஒட்டும் போது எதிர்பாராமல் எதிரே வரும் காரில் மோதமல் இருக்க வேறு பக்கம் திருப்ப, சாலையில் வந்த ஒரு பெண்மணியும் அவள் மகனும் இறக்கின்றனர். மகன் இறந்த வலியை தாங்க முடியாமல், பதிலுக்கு அந்த வலியை இந்த சிறுவனின் தந்தை தர வேண்டும் என்று சக்கரவர்த்தி அலைகிறார். அவர் பார்வையிலிருந்து தப்ப சிறுவனோடு மூணாறு செல்கிறார் சிறுவனின் தந்தை.
திரிஷாவின் இதயம் பொருத்திய சிறுவனை கான மூணாறு வரும் ஆர்யா, அங்கு சக்கரவர்த்தியால் சிறுவனுக்கு ஆபத்து இருப்பதை அறிந்து அதிர்ந்து போவதோடு அந்த பிரச்சனையிலிருந்து சிறுவனை எப்படி காப்பாற்றுகிறார். சக்கரவர்த்தியின் முடிவு என்னவாகிறது என்பது மீதி படம்.
ஆர்யா, திரிஷா மோதல் ஆரம்பமே அமர்க்களம். முதல் பாதியிலேயே திரிஷா இறப்பதும், அதை தொடர்ந்து கதை பரபரப்புக்கு போவதும் தடாலடி முடிவுகள்.
ஆர்யா இளமையுடன் திரிஷாவை தேடி வந்து காதலை சொல்லும் காட்சிகள் அழுகு. காட்டுக்குள் சக்கரவர்த்தியுடன் மோதும் காட்சிகள் அதிரடி. புதைக்கப்பட்டு, அதிலிருந்து எழுந்து வரும் காட்சிகள் திக்கிதக் திகில். அதை தொடர்ந்து நடக்கும் மோதல் காட்சிகள் பரபர.
திரிஷா அமைதியான அழகு தேவதை. பாடல் காட்சியில் வசீகரிக்கிறார். பட்டம் விட்ட நூலில் கழுத்து அறுபட்டு இறக்கும் காட்சியில் நெஞ்சை பாதக்க வைக்கிறார். வில்லனாக உதயம் படத்தில் நடித்தஜே.டி. சக்கரவர்த்தி. மகன் இறந்த வலியை அவரது முகத்தில் சரியா பிரதிபலிக்கிறார். அவரது ஆபார நடிப்பில் ரசிகர்கள் மனதிலும் ஒரு நடுக்கம் இருப்பது தெரிகிறது. அவரோடு வரும் அந்த நாயும் மிரட்டியுள்ளது.
பிரிதிவிராஜ் சகோதரர் இந்தரஜித் சிறுவனின் தந்தையாக வந்து வாழ்ந்திருக்கிறார். எட்டு வயது சிறுவன் ரோஹன் நடிப்பில் சுட்டி.
படத்திற்கு பெரும் உழைப்பை கொட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா. ஒவ்வொரு காட்சியிலும் பிரமிக்க வைக்கிறார். அதே போல பின்னனி இசையில் யுவன் சங்கர்ராஜா செம மிரட்டல்.
முதல் பாதி காதல், இரண்டாம் பாதி சேசிங் என தொழில் நுட்பத்தை கையில் வைத்துக் கொண்டு மிரட்டியிருக்கிறார் விஷ்ணுவர்தன். காதலும், தரத்தலுமாக சர்வம்.
No comments:
Post a Comment