இயக்கம்: ஷக்திசிதம்பரம் இசை: கருணாஸ்
நடிப்பு: லாரன்ஸ் மீனாட்சி, ஸ்னிக்தா, மும்தாஜ், காம்னா, கருணாஸ், பரவை முணியம்மா, நீலிமா ராணி, ஆரியன்,போஸ் வெங்கட், யுகேந்திரன், பிரேம் சாய், மயில்சாமி, பாவா லட்சுமணன்,
பாடல்கள்: பேரரசு சண்டைப்பயிற்சி: கனல்கண்ணன்
கலை: விஜய்முருகன் ஒளிப்பதிவு: சுரேஷ்தேவன்
படத்தொகுப்பு: ஜெய்சங்கர் தயாரிப்பு நிர்வாகம்: பாபுஜி
மக்கள்தொடர்பு: மெளனம் ரவி
குடிபோதையில் டாக்டர் செய்த சிகிச்சையால் ஒரு கையை இழக்கும் தொழிலாளி, அதை எதிர்த்து கேட்டதுக்காக போலீசை வைத்து அடித்து சித்திரைவதை செய்து கொலைகின்றனர். சாகும் தருவாயில் தனது கடைசி மகனிடம் நீ பழிக்கு பழி வாங்குவதை விட உன் மூன்று சகோதரர்களையும் டாக்டராகவும், வழக்கறிஞராகவும், போலீசாகவும் உரவாக்கி அவர்களை பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற வேண்டுகோள் வைத்து இறக்கிறார்.
அதே போல அவர்களை உருவாக்குகிறான். ஆனால் அவர்கள் அப்படி இல்லாமல் மக்களக்கு எதிராக இருக்கிறார்கள். அவர்களை எப்படி அடையாளம் கண்டு அழித்தொழிக்கிறார் என்பது படம். அதை ஆக்ஷன், காமெடி, கவர்ச்சி தோரணம் காட்டி பரபரப்பு படமாக தந்திருக்கிறார் இயக்குநர்.
ராகவா லாரன்ஸ் ஆக்ஷன் வேடம் எற்றிருக்கும் படம். எனக்கு நடனம் மட்டுமல்ல நல்லா பைட் பண்ணவும் தெரியும் என இந்தப் படம் மூலம் நிருபித்திருக்கிறார். பயம், கோபம், வெகுளி, ஜாலி, பஞ்ச் டயலாக் என அதிரடி நாயகனாக வலம் வருகிறார். பல இடங்களில் ரஜினி ஸ்டைலை ஞாபகப்படுத்துகிறார். அதில் அவர்தான் தெரிகிறார். சுவராஸ்யம் போய்விடுகிறது.
மீனாட்சி அடேங்கப்பா என்கிற அளவுக்கு கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்திருக்கிறார். இரண்டு பாடலில் கவர்ச்சி விருந்து படைக்கிறார். நர்சாக வரும் காம்னாஜெத்மாலினி, மும்தாஜ் தங்கையாக வரும் ஸ்னிக்தா இருவரும் தலா ஒரு பாடலுக்கு வருகின்றனர்.
கக்கூஸ்ல கஞ்சா வித்து லோக்கல் எம்.எல். ஏ.வாக வலம் வரும் சைதை சைலஜாவாக மும்தாஜ். வில்லியாக வந்து செம மிரட்டல். அவருக்கு இது புதுசு. கருணாஸ் காமெடி கலகல.
சகோதர்கள், பாட்டி, தங்கை என படத்தில் நிறைய நட்சத்திரங்கள். ஒவ்வொரு காட்சியையும் கலர்புல்லாவகவும், பிரமாண்டமாகவும், பிரமிப்பாகவும் காட்டியிருக்கிறது சுரேஷ்தேவன் கேமிரா. கருணாஸ் இசையில் பேரரசு எழுதிய கத்தரிக்கா பாடல் கலைகட்டுகிறது. ஆக்ஷன் படத்துக்கான பின்னணி இசையை அதே மிரட்டலோடு தந்திருக்கிறார். பழி வாங்கும் கதையை ஆக்ஷன் கலந்த அதிரடி படமாக தந்திருக்கிறார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம்.
No comments:
Post a Comment