
தயாரிப்பு: சுப்ரீம் பிலிம் ஒர்க்ஸ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: G.N. தினேஷ்குமார்
இசை: வித்யாசாகர் PRO : சிங்காரவேலு
நடிகர்கள்: சரத்குமார், பர்ஸானா, நமீதா, ஜெயசுதா, விவேக், ராதாரவி, ராஜ்கோட்டி, ரோஷித் விஜெயகுமார் மற்றும் பலர்.
1977ல் தன் தந்தைக்கு ஏற்பட்ட அவப்பெயருக்குக் காரணமானவர்களை முப்பது ஆண்டுகள் கழித்து மகன் பழி வாங்குவதுதான்கதை. திருச்செந்தூர் பக்கத்தில் வசிக்கும் ஒரு நல்ல மனிதர் ராசையா. அவரது மகன் வெற்றிவேல் முதல்நிலை விஞ்ஞானி. ஜனாதிபதியிடம் விருது வாங்குகிறார். அந்த விழாவைப் பார்க்க செல்லாத ராசையா, திடீரென ஒரு செய்தியில் அதிர்ச்சியாகி இறக்கிறார்.
தந்தையின் திடீர் மரணம் வெற்றிவேலை யோசிக்க வைக்கிறது. இதனால் தந்தை வாழ்ந்த மலேசியாவுக்கு சென்று ஆராயும் அவர் அங்கு தனக்கொரு தாய் இருப்பதை அறிவதோடு,தன் தந்தை சாவிற்கு காரணமாண ஒரு பெரியவரை கண்டு பிடித்து பழி தீர்க்கிறார். அதை பரபரப்பான ஆக்ஷன் படமாகதந்திருக்கிறார்இயக்குநர்.சரத்குமார் தந்தை மகன் என இரண்டு வேடத்தில் நடித்த படங்கள் பெரும் வெற்றியடைந்திருக்கிறது. அதே போல இந்தப்படத்தில் தந்தை ராசய்யாவாக நடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்கின்றன. கவர்ச்சியில் நமிதாவின் இடத்தை பிடிக்க முயன்றிருக்கிறார் பர்ஸானா. இருந்தாலும் நமிதாவின் கவர்ச்சிக்கு முன் அவர் சின்ன குழந்தைதான் என்பதை நமிதா நிருப்பித்து விடுகிறார்.
விவேக் நகைச்சுவையில் கலகலப்பூட்டுகிறார் வித்யாசாகரின் இசையில் பாடல்கள் பரவா இல்லை ரகம். மலேசியாவை அழகாக அள்ளி வந்திருக்கிறது பூபதி கேமிரா. 1977ல் என்ன நடந்தது என்று பரபரப்பை ஏற்படுத்தும் காட்சிகளோடு படத்தை தந்திருக்கிறார் இயக்குநர் தினேஷ்குமார்.
No comments:
Post a Comment