
நிறுவனம்: பிக் பிக்சர்ஸ் , வொய்டாங்கில் கிரியேஷன்ஸ்
தயாரிப்பு: சுரேஷ்பாலாஜி, ஜார்ஜ் பயஸ்
இயக்கம்: விக்ரம் கே.குமார் இசை: சங்கர் எஸ்ஹான் லாய்
நடிப்பு: மாதவன், நீது சந்திரா, சரண்யா, ஹரி நாயர், அமிதா, மதுரா, அபிஜித், சுப்ரியா, சச்சின் கேதிகர், ரவிபாபு,
தயாரிப்பு: சுரேஷ்பாலாஜி, ஜார்ஜ் பயஸ்
இயக்கம்: விக்ரம் கே.குமார் இசை: சங்கர் எஸ்ஹான் லாய்
நடிப்பு: மாதவன், நீது சந்திரா, சரண்யா, ஹரி நாயர், அமிதா, மதுரா, அபிஜித், சுப்ரியா, சச்சின் கேதிகர், ரவிபாபு,
பாடல்கள்: தாமரை வசனம்: நீலு ஐயப்பன்
சண்டைப்பயிற்சி: பிரபு, ஒளிப்பதிவு: பி.சி. ஸ்ரீராம்
கலை: சேட்டன் பட்டக் படத்தொகுப்பு: ஸ்ரீகர்பிரசாத்
ஸ்டில்ஸ்: டி.லெட்சுமிகாந்தன் மக்கள்தொடர்பு: ஜான்சன்
ஸ்டில்ஸ்: டி.லெட்சுமிகாந்தன் மக்கள்தொடர்பு: ஜான்சன்
புது பிளாட்டில் குடியேறும் மாதவன், அந்த வீட்டில் குடும்பமே விரும்பி பார்க்கும் யாவரும் நலம் என்ற தொடர் ஒன்றில் நடப்பது போல தன் வீட்டிலும் விபரீத நிகழ்வுகள் நடப்பதை அறிகிறார். அடுத்துத்து நடக்கும் சம்பவங்களை பார்த்து அதிர்ச்சி அடையும் மாதவன் தனது போலீஸ் நண்பர் மூலம் குற்றவாளியை கண்டு பிடிக்க போராடி கடைசியில் குற்றவாளியை கண்டுபிடித்து போட்டு தள்ளுகிறார்.
குடும்பத்துக்கு தெரியாமலயே குடும்பத்தை காப்பாற்றும் அவரது தடாலடி நடவடிக்கைகளே படம். அதை திகிலாகவும், த்ரில்லாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
அமானுஷ்ய சக்தியை அறிந்து கொள்ளும் ஹீரோவாக மாதவன் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஒரே சமயத்தில் பலவிதமான உணர்ச்சிகளை முகத்தில் காட்டி, காண்போரை தனது நடிப்பால் கவர்ந்து இழுக்கிறார்.
அவரது மனைவியாக வரும் நீது சந்திரா யதார்த்தமான நடிப்பால் மனதை தொடுகிறார். அவர் குக் புக் படிக்கிற காட்சிகள் கவிதையானது. தாயார் சரண்யா, அண்ணன் ஹரி நாயர், அண்ணன் மனைவி அமீதா, தங்கை மதுரா, அவர்கள் வீட்டு சிறுவர்கள், டாக்டர் சச்சின் கடேகர், பார்வையற்ற பெரியவர் சாட்டர்ஜி, எஸ்.ஐ., ரவிபாபு, வக்கீலாக வரும் சம்பத், என எல்லோரும் தங்கள் நடிப்பை சரியாக வெளிப்படுத்தி சபாஷ் பெறகிறார்கள்.
படம் பார்க்கும் ரசிகர்களை ஒவ்வொரு பிரேமிலும் மிரட்ட வேண்டும் என திட்டமிட்டு ஒரு திகில் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்ரம் கே.குமார். அவருக்கு பக்க பலமாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், பின்னணி இசையமைப்பாளர் டுப்பி பாரிக், படத்தொகுப்பாளர் ஸ்ரீதர் பிரசாந்த், வசனகர்த்தா அய்யப்பன் ஆகியோர் இருந்திருக்கின்றனர். அவர்களது திறமை படத்துக்கு பெரிய பிளஸ்.
யாவரும் நலம் அடுத்த என்ன காட்சி என எதர்பார்க்க வைக்கும் திகில் படம்.
No comments:
Post a Comment