
நிறுவனம்: அலிபிரி மூவிஸ்
தயாரிப்பு: திருப்பூர் கருணாம்பிகா கெளரி ராமசாமி
இயக்கம்: டி.எம்.ஜெயமுருகன் இசை:டி.எம்.ஜெயமுருகன்- தாமஸ்
நடிப்பு: ஆகாஷ்ஜெய், நிக்கோல், கருணாஸ், ரகுவரன், சரத்பாபு, ஆசிஷ் வித்யார்த்தி, ஐஸ்வர்யா, ரேகா, பாபு ஆன்டனி, சிட்டிபாபு, ஆர்த்தி, சத்யபிரகாஷ், மனோகர், மகாதேவன்
பாடல்கள்: டி.எம்.ஜெயமுருகன்
நடனம்: கூல் ஜெயந்த், அஜய்குமார்,காதல் கந்தாஸ், ரேவதி
சண்டைப்பயிற்சி: பவர் பாஸ்ட் ஒளிப்பதிவு: கிச்சாஸ்
கலை: ஆர்.கமல் படத்தொகுப்பு: சுராஜ் கவி
மக்கள்தொடர்பு: மெளனம் ரவி
அன்னை அஞ்சுகம் மருத்துவ கல்லூரியில் படிக்கும் ஜெய் ஆகாஷ் இசையில் வல்லவர். அதே கல்லூரியில் படிக்கும் மாணவி நிக்கோல் இசை ரசிகை. இருவரும் சந்தித்து பழகி காதல் கொள்கின்றனர். கடைசிநாள் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இருவருமே கோல்டு மெடல் பரிசு பெறுகின்றனர்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஆசிஷ் வித்யார்த்தியின் மகள் நிக்கோல். அவரை பணிய வைக்க தீவிரவாதிகள் நிக்கோலை கடத்துகின்றனர். அவர்களிடமிருந்து தப்பும் நிக்கோல் ஒரு மலையிலிருந்து தவறி கீழே விழுகிறார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்ப படுகிறார்.
அவரை உயிர் பிழைக்க வைக்கும் டாக்டர் சரத்பாபு, அவர் யாரைக் கண்டாலும் பயந்து கதறும் வியாதியை குணப்படுத்த போராடுகிறார். தந்தை சரத்பாபுவின் வைத்தியத்தை புரிந்துகொள்ளும் ஜெய்ஆகாஷ், நிக்கோல் விரும்பும் ஒரு பாடலை பாடி அவள் மனம் மாறுவதற்கு துணை புரிகிறார். மகளை காப்பாற்றிய மருத்துவரிடம் உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள் என்று செய்கிறேன். உனக்காக எப்போது வேண்டுமானாலும் என் வீட்டு வாசற்படி திறந்தே இருக்கும் என்கிறார் அமைச்சர் ஆசிஷ்.
சதா நிக்கோல் ஞாபகமாகவே இருக்கும் மகன் ஜெய்ஆகாஷை கவனிக்கும் தந்தை சரத்பாபு, அமைச்சர் வீட்டுக்கு சென்று, மருமகளாக நிக்கோலை கேட்கிறார். இதனால் ஆத்திரமடையும் அமைச்சர் அவர்களை கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வெளியே அனுப்புகிறார். பாதுகாப்பு அமைச்சரின் பலத்த பாதுகாப்பில் இருக்கும் காதலியை ஜெய்ஆகாஷ் எப்படி போராடி அடைகிறார் என்பது மீதி படம்.
இசையும் இளமையும் கவிதையும் இணைந்த காதல் கதை. மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஜெய் ஆகாஷ்க்கும் நிக்கோலுக்கும் இடையே காதல் மலர்வது அழகு.
இருவரின் குடும்பமும் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பரஸ்பரம் பழகி நட்பு பாராட்டுவது கவிதை. இருவரும் ஒரே நினைப்பாக இருவர் வீட்டிலும் இருப்பது அழகோ அழகு. இப்படி படம் முழுக்க காதல் கவிதையாக காட்சிகளை செதுக்கியிருக்கிறார் இயக்குநர் ஜெயமுருகன்.
ஜெய்ஆகாஷ் காதல் காட்சிகளிலும் பாடல் காட்சிகளிலும் ஒன்றிப்போய் நடித்திருக்கிறார். அவருக்கு ஈடுகொடுத்து அடடா என்ன அழகு என பிரமாதப்படுத்தியிருக்கிறார் நிக்கோல். பாடல்காட்சிகளில் அற்புதமான நடனம், ஏங்க வைக்கும் பார்வை என பார்வையாளர்களின் மனதை தொடுகிறார். அவர் மருத்துவமனையில் பயந்து அலரும் காட்சிகள் மிரட்டல். அவர் வார்த்தைக்கு வார்த்தைக்கு வார்த்தை கும்கும் என்று சொல்வது அழகு. இவர்களின் காதல் காட்சிகள் இளசுகளுக்கு கொண்டாட்டம்.
அதிரடி அரசியல்வாதியாக ஆசிஷ்வித்யார்தி, அவரது பயந்த மனைவியாக ஐஸ்வர்யா நடித்திருக்கிறார். அதே போல பாசமுள்ள தந்தையாக சரத்பாபு, அவரது அன்பு மனைவியாக ரேகா நடித்திருக்கின்றனர். கருணாஸ் காமெடியில் பட்டையை கிளப்பியிருக்கிறார்.
இயற்கையின் அழகை இன்னும் அழகுபடுத்தியிருக்கிறது கிச்சாஸ் கேமிரா. ஜீவன்தாமஸ்வுடன் இனைந்து இசையமைத்திருப்பதோடு பாடல்களையும் எழுதியிருக்கிறார் இயக்குநர் டி.எம்.ஜெயமுருகன். பாடல்கள் மனசு மயங்கும் கவிதையாக வந்திருப்பது அழகு. அதை கிராண்டியராக படமாக்கியிருக்கிறார் தயாரிப்பாளர் திருப்பூர் ராமசாமி.காதலை அனுஅனுவாக ரசித்து அதை இசையும் இளமையுமா தந்திருக்கிறார் இயக்குநர் ஜெயமுருகன். காதலையும் இசையையும் நேசிப்பவர்களுக்கு அடடா என்ன அழகு, அழகோ அழகு.
No comments:
Post a Comment