
பெற்றோரை இழந்து சிறுவயது முதல் தம்பியை கண்ணுக்கு கண்ணாக பார்த்து வளர்க்கிறார் அக்காள் ஜெனி. இந்த நிலையில் அவரை விரட்டி விரட்டி காதலிக்கிறார் ரிஷி. காதலை மறுத்து வந்த ஜெனி ஒரு கட்டத்தில் தன் தம்பியும் நம்மோடு இருந்தால் தான் உங்களை நான் திருமணம் செய்துகொள்வேன் என்கிறார். சரி என்று கூறி திருமணம் செய்து கொள்கிறார் ரிஷி. ஆனால் ரிஷியின் அம்மாவும் அப்பாவும் மறுத்து விடுகின்றனர்.
அக்காள் இல்லாததால் வீடு வெறுச்சோடி கிடக்க மனமும் வேதனை அடைகிறது. அதனால் அக்காவின் நினைவுகளிலேயே இருக்கும் தம்பி காலேஜ் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறார் அங்கு தேராத நட்போடு சேர்ந்து போதைக்கு அடிமையாகிறான். பிறகு அவன் எடுக்கும் முடிவு விபரீதம் ஆகிறது. அது என்ன என்பது கிளைமாக்ஸ்.
அக்காள் தம்பி பாசத்தையும், போதைக்கு பாதை போனால் வாழ்க்கை என்னவாகும் என்பதையும் செல்லும் படம்.
அக்காளாக மீராஜாஸ்மின் அக்காள் ஜெனிஜாஸ்மின் நடித்திருக்கிறார். அவரது தம்பியாக ரவிகணேஷ் நடித்திருக்கிறார். அவரிடம் பாசம் காட்டும் பெண்ணாக பாரதி நடித்திருக்கிறார்.கிடைத்த வாய்ப்பில் அந்த பாத்திரங்களாகவே மாறியிருக்கின்றனர்.
போலீஸ் அதிகாரியாக மன்சூர் அலிகான், டிராபிக் கான்ஸ்டபிளாக சிசர்மனோகர் சிரிக்க வைக்கின்றனர். ஸ்ரீநாத்தின் லொள்ளு தாங்கவில்லை.மஹிநடேஷின் ஒளிப்பதிவு பரவாயில்லை ஏ.ஆர்.ரெஹானா இசையில் பாடல்கள் பரவா இல்லை ரகம். செண்டிமெண்ட், மெசேஜ் என படத்தில் நல்ல கதையை சொல்ல வந்த இயக்குநர் அதை சொன்ன விதத்தில் தடுமாறியிருக்கிறார்.
No comments:
Post a Comment