Saturday, August 15, 2009

ஏன்‌ இந்‌த மவு‌னம்‌


வேலைக்காரி அதே வீட்டில் மருமகளாகும் கதை...
கிராமத்தில் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் சினேகா. ஒரு விபத்தில் அப்பா, அம்மாவை இழந்து அனாதையாகிறார். அவரை சரத்பாபு நகரத்துக்கு அழைத்து வந்து தனது வீட்டில் வேலைக்காரியாக வைத்துக் கொள்கிறார்.

சினேகாவில் நல்ல குணம் அக்குடும்பத்தில் எல்லோருக்கும் பிடிக்கிறது. வெளிநாட்டில் படிப்பை முடித்து திரும்பும் சரத்பாபு மகன் விக்ரமாதித்யா சினேகாவை அடைய துடிக்கிறார். அவரை சினேகா காதலித்தாலும் ஆசைக்கு இணங்க மறுக்கிறார். ஒரு கட்டத்தில் விக்ரமாதித்யாவின் தாய் இருவரின் நடத்தையை நேரில் பார்த்து விடுகிறார். சினேகாவை கண்டித்து ஊருக்கு அனுப்ப தயாராகிறார். அவர் காதல் ஜெயித்ததா இல்லையா என்பது கிளைமாக்ஸ:...

வேலைக்காரி பாத்திரத்தில் நிதானம் புத்திசாலித்தனம். காட்டி பளிச்சிடுகிறார் சினேகா வீட்டில் எல்லோரும் சினேகாவை விரட்ட விக்ரமாதித்யா குறுக்கிட்டு தவறை ஒப்புக் கொள்வது இதமான திருப்பம்.

சினேகாவுக்கு மாப்பிள்ளை தேடுவது விக்ரமாதித்யாவுக்கு பெண் தேடுவதுமாக நகரும் பின் பகுதி கதை விறுவிறுப்பு தாலி கட்டும் நேரத்தில் சினேகா திருமணத்தை நிறுத்துவது எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. நிறைய பார்த்த கதை என்பதால் நெருட வைக்கிறது கிளைமாக்ஸ் ஜீவன்.

No comments:

Post a Comment