Thursday, August 13, 2009

கா‌ஞ்‌சி‌வரம்‌


‌தயாரிப்பு: பர்செப்ட் பிக்சர்ஸ்
கதை, திரைக்கதை, இயக்கம்: பிரியதர்ஷ்ன்
இசை: ஸ்ரீகுமார் ஒளிப்பதிவு: திரு
மக்‌கள்‌தொ‌டர்‌பு‌: நி‌கி‌ல்‌
நடிகர்கள்: பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, ஷம்மு, சம்பத், ராஜசேகர்


‌நெ‌சவு‌த்‌ தொ‌ழி‌லா‌ளர்‌களி‌ன்‌ அவலங்‌களை‌யு‌ம்‌ போ‌ரா‌ட்‌டங்‌களை‌யு‌ம்‌ சொ‌ல்‌லும்‌ படம்‌. ‌


இந்‌தி‌ய அளவி‌ல்‌ பு‌கழ்‌ பெ‌ற்‌ற இயக்‌குநர்‌கள்‌ளி‌ல்‌ வி‌ரல்‌வி‌ட்‌டு என்‌ன கூடி‌யவர்‌களி‌ல்‌‌ பி‌ரி‌யதர்‌ஷனும்‌ ஒருவர்‌. அவர்‌ ஷா‌ருக்‌கா‌னை‌ வை‌த்‌து கமர்‌சி‌யல்‌ படம்‌ கொ‌டுத்‌தவர்‌. அவரா‌ல்‌ இந்‌த மா‌தி‌ரி‌யு‌ம்‌ யதா‌ர்‌த்‌தமா‌ன மக்‌களி‌ன்‌ வா‌ழ்‌க்‌கை‌யு‌ம்‌ படம்‌ பி‌டி‌க்‌க முடி‌யு‌ம்‌ என்‌பதை‌ உணர்‌த்‌தி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌.


வீ‌ட்‌டி‌ல்‌ நெ‌ய்‌து வந்‌து கொ‌டுப்‌பதா‌ல்‌ அதி‌ல்‌ பட்‌டு தி‌ருட்‌டு போ‌வதா‌ நி‌னை‌க்கும்‌ ஜமீ‌ன்‌தா‌ர்‌ கோ‌யி‌ல்‌ பொ‌து இடத்‌தி‌ல்‌ ஏகப்‌பட்‌ட கெ‌டுபி‌டி‌ சோ‌தனை‌க்‌கு பி‌றகே‌ வே‌லை‌க்‌கு உள்‌ளே‌ அனுப்‌புவதும்‌, சா‌ப்‌பி‌ட வெ‌ளி‌யே‌ வி‌டுவதுமா‌க நடத்‌துகி‌றா‌ர்‌. தவறு செ‌ய்‌பவர்‌களை‌ தனது அடி‌யா‌ட்‌கள்‌ மூ‌லமும்‌, போ‌லீ‌ஸ்‌ உதவி‌யோ‌டும்‌ சித்‌தி‌ரவதை‌ செ‌ய்‌கி‌றா‌ர்‌.


அங்‌கு வே‌லை‌க்‌கு செ‌ல்‌லும்‌ வே‌ங்‌கடம்‌ தனது மகளி‌ன்‌ தி‌ருமணத்‌தி‌ற்‌கு பட்‌டுப்‌பு‌டவை‌ தனது கை‌யா‌லே‌யே‌ செ‌ய்‌ய ஆசை‌ப்‌பட்‌டு தி‌னம்‌ தி‌னம்‌ கொ‌ஞ்‌சம்‌ கொ‌ஞ்‌சம்‌ நூ‌லா‌க வா‌ய்‌க்‌குள்‌ வை‌த்‌து தி‌ருடி‌ வருகி‌றா‌ர்‌.


இந்‌த நி‌லை‌யி‌ல்‌ அந்‌த ஊருக்‌கு வரும்‌ சி‌வப்‌பு‌ சி‌ந்‌தனை‌ உள்‌ள மனி‌தரா‌ல்‌ அவர்‌கள்‌ கவ‌ரப்‌பட்‌டு இயக்‌கம்‌ கட்‌டுகி‌ன்‌றனர்‌. கூலி‌ உயர்‌வு‌ கே‌ட்‌டு போ‌ரா‌டுகி‌ன்‌றனர்‌.


இதனா‌ல்‌ வே‌ங்‌கடத்‌தை‌ போ‌லீ‌ஸ்‌ வை‌த்‌து அடி‌க்‌கி‌றா‌ர்‌ ஜமீ‌ன்‌தா‌ர்‌. இருப்‌பி‌னும்‌ ஜமீ‌ன்‌தா‌ருக்‌கு அதி‌க பட்‌டுப்‌பு‌டவை‌ தே‌வை‌யா‌க இருக்‌கி‌ன்‌ற நே‌ரம்‌ பா‌ர்‌த்‌து போ‌ரா‌ட்‌த்‌தை ‌தொ‌டங்‌குகி‌றா‌ர் வே‌ங்‌கடம்‌‌. இதனா‌ல்‌ ஜமீ‌ன்‌தா‌ருக்‌கும்‌, வே‌ங்‌கடத்‌துக்‌கும்‌ மோ‌தல்‌ முற்‌றுகி‌றது.


இந்‌த நி‌லை‌யி‌ல்‌ வே‌ங்‌கடத்தி‌‌ன்‌ மகளுக்‌கு தி‌ருமணம்‌ முடி‌வு‌ செ‌ய்‌ய வே‌ண்‌டி‌ய நி‌ர்‌பந்‌தம்‌ வருகி‌றது, மகள்‌ தி‌ருமணத்‌தி‌ற்‌கு வா‌க்‌கு கொ‌டுத்‌த வே‌ங்‌கடம்‌, மகளுக்‌கா‌க நெ‌ய்‌து முடி‌ய வே‌ண்‌டி‌ய பட்‌டுபு‌டவை‌ பா‌தி‌யி‌ல்‌ நி‌ற்‌பதா‌ல்‌ போ‌ரா‌ட்‌டத்‌தை‌ கை‌வி‌ட்‌டு வே‌லை‌க்‌கு தி‌ரும்‌ப முடி‌வு‌ செ‌ய்‌வதோ‌டு, இயக்‌கத்‌தி‌ற்‌கு துரோ‌கம்‌ செ‌ய்‌து வி‌ட்‌டு வே‌லை‌க்‌கு செ‌ல்‌கி‌றா‌ர்‌.
அன்‌று மதி‌யம்‌ அவர்‌ பட்‌டு நூ‌லை‌ தி‌ருடி‌யது அம்‌பலத்‌துக்‌கு வருகி‌றது. இதனா‌ல்‌ தொ‌ழி‌லா‌ளி‌கள்‌ அவரை‌ அடி‌ப்‌பதோ‌டு, ஜமீ‌ன்‌தா‌ர்‌ அவரை‌ போ‌லீ‌ஸி‌ல்‌ பு‌டி‌த்‌துக்‌ கொ‌டுக்‌கி‌றா‌ர்‌.


சி‌றை‌கம்‌பி‌களுக்‌குள்‌ இருக்‌கும்‌ அவர்,‌ தன்‌ மகள்‌ கி‌ணற்‌றி‌ல்‌ வி‌ழுந்‌துவி‌ட்‌டா‌ள்‌ என்‌பதா‌ல்‌ போ‌லீ‌ஸ்‌ கா‌வலுடன்‌ வீ‌ட்‌டுக்‌கு வருகி‌றா‌ர்‌.


கள்‌ முடி‌யா‌மல்‌ உயி‌ருக்‌கு போ‌ரா‌டுவதை‌ பா‌ர்‌த்‌ததும்‌, தி‌ருமணம்‌ நி‌ன்‌று போ‌னதை‌ நி‌னை‌த்‌தும்‌ கலங்‌கும்‌ வே‌ங்‌கடம்‌ தனது வி‌ட்‌டி‌ல்‌ இருந்‌த வி‌ஷ மருந்‌தை‌ சா‌ப்‌பா‌ட்‌டி‌ல்‌ கலந்‌து மகளை‌ முடி‌த்‌து வை‌க்‌கி‌றா‌ர்‌. அவளுக்‌கா‌க நெ‌ய்‌த பட்‌டுபு‌டவை‌யை‌ அறுத்‌து வந்‌து மகளுக்‌கு போ‌ர்‌த்‌துகி‌றா‌ர்‌. அது கா‌லுக்‌கும்‌ பா‌த்‌தா‌மல்‌, தலை‌க்‌கும்‌ பா‌த்‌தா‌மல்‌ இருக்‌கி‌றது. அதை‌ இந்‌தப்‌பக்‌கம்‌, அந்‌தப்‌பக்‌கம்‌ என மா‌றி‌ மா‌றி‌ மறை‌க்‌க அவர்‌ முயன்‌று கொ‌ண்‌டி‌ருக்‌க, ஒரு வி‌த கணத்‌த இதயத்‌தை‌ நமக்‌கு உருவா‌க்‌கி‌ வி‌ட்‌டு படம்‌ முடி‌கி‌றது.


நா‌டு வி‌டுதலை‌ அடை‌கி‌ன்‌ற கா‌லகட்‌டத்‌தி‌ல்‌ நடக்‌கி‌ற கதை‌. அந்‌த கா‌ல கட்‌டத்‌துக்‌கே‌ அழை‌த்‌துச்‌ செ‌ல்‌கி‌றது தி‌ருவி‌ன்‌ கே‌மி‌ரா‌.


வே‌ங்‌கடமா‌க வழ்‌ந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ பி‌ரகா‌ஷ்‌ரா‌ஜ்‌. அவர்‌ மனை‌வி‌ மீ‌து அன்‌பு‌ செ‌லுத்‌தும்‌ போ‌தும்‌, தங்‌கை‌க்‌கா‌க சே‌மி‌த்‌து வை‌த்‌தி‌ருந்‌த பணத்‌தை‌ கொ‌டுக்‌கும்‌ போ‌து, மகளி‌ன்‌ கா‌தலை‌ உணரும்‌ போ‌தும்‌, முதல்‌ முறை‌யா‌க தி‌ருடி‌ சோ‌தனை‌யா‌ளரி‌டம்‌ தப்‌பி‌க்‌கும்‌‌ போ‌தும்‌, அடா‌டா‌.. என்‌ன நடி‌ப்‌பு‌. வி‌ல்‌லனா‌க மி‌ரட்‌டும்‌ அவர்‌ கி‌ரா‌மங்‌களி‌லே‌ பா‌ர்‌த்‌த குப்‌பு‌சா‌மி‌ மா‌தி‌ரி‌ இங்‌கே‌ ஒரு நெ‌சவா‌ளி‌யா‌க வா‌ழ்‌ந்‌து நம்‌ கண்‌களி‌லே‌ வா‌ழ்‌ந்‌து கொ‌ண்‌டி‌ருக்‌கி‌றா‌ர்‌.


பி‌ரகா‌ஷ்‌ரா‌ஜ்‌ மனை‌வி‌யா‌க வரும்‌ ஸ்‌ரே‌யா‌ ரெ‌ட்‌டி‌. கணவனுக்‌கா‌க ஏங்‌கும்‌ போ‌தும்‌, அவன்‌ ஆசை‌களை‌யு‌ம்‌, பெ‌ருமை‌களை‌யு‌ம்‌ உணர்‌ந்‌து பா‌ர்‌க்‌கும்‌ போ‌தும்‌ அற்‌பு‌தமா‌ன வெ‌ளி‌ப்‌பா‌டு.பி‌ரகா‌ஷ்‌ரா‌ஜ்‌ மகளா‌க வரும்‌ அந்‌த ஷம்‌மு தனது இயல்‌பா‌ன நடி‌ப்‌பா‌ல்‌ மனதை‌ தொ‌டுகி‌றா‌ர்‌. பி‌ரகா‌ஷ்‌ரா‌ஜ்‌ நண்‌‌பனா‌க வரும்‌ ஜெ‌ய‌குமா‌ர்‌ பா‌த்‌தி‌ரம்‌ அருமை‌. படத்‌துக்‌கு இன்‌னொ‌ரு படம்‌ ஸ்ரீ குமா‌ர்‌ இசை‌.


ஃபை‌ட்‌ என்‌கி‌ற பெ‌யரி‌ல்‌ பறந்‌து பறந்‌து அடி‌ப்‌பது, சர்‌க்‌கஸ்‌ கா‌ட்‌டுவது, என்‌ற பெ‌யரி‌ல்‌ கும்‌பல்‌ கும்‌பல்‌களா‌ய்‌ இடுப்‌பை‌ வெ‌ட்‌டி‌ ஆடுவது, எக்‌சர்‌சை‌ஸ்‌ பண்‌ணுவது என்‌று வரும்‌ படங்‌களுக்‌கு நடுவி‌ல்‌ வா‌ழ்‌க்‌கை‌யை‌ அதன்‌ பி‌ரதி‌பலி‌ப்‌பா‌க சொ‌ல்‌ல வந்‌தி‌ருக்‌கி‌றது பி‌ரி‌யதர்ஷி‌னி‌ன்‌ இந்‌த கா‌ஞ்‌சி‌வரம்‌ படம்‌.


வெ‌ள்‌ளை‌க்‌கா‌ரனி‌டம்‌ எழுநூ‌று ரூ‌பா‌ய்‌‌க்‌கு ஒரு பட்‌டுச்‌ சே‌லை‌யை‌ வி‌ற்‌கும்‌ ஜமீ‌ன்‌தா‌ர்‌ அதனை‌ உருவா‌க்‌கும்‌ நெ‌சவு‌த்‌ தொ‌ழி‌லா‌ளி‌க்‌கு ஏழு ரூ‌பா‌ய்‌ கூலி‌ கொ‌டுக்‌கி‌றா‌ர்‌. இந்‌த சுரண்‌டலை‌யு‌ம்‌ அவன்‌ மகளுக்‌கா‌க ஆசை‌ப்‌பட்‌டு தி‌ருடும்‌ வா‌ழ்‌க்‌கை‌யை‌யு‌ம்‌ ஒப்‌பி‌ட்‌டு பா‌ர்‌க்‌க வை‌த்‌து, சுரண்‌டலா‌ல்‌ தி‌ருட்‌டா‌, தி‌ருட்‌டா‌ல்‌ சுரண்‌டலா‌ என கே‌ள்‌வி‌ கே‌ட்‌க வை‌க்‌கி‌றா‌ர்‌. நல்‌லபடங்‌களை‌ தரவு‌ம்‌ நா‌லு பே‌ர்‌ இருக்‌கி‌றா‌ர்‌களே‌ என பா‌ரா‌ட்‌டுகி‌றது மனம்‌. வா‌ழ்‌க ப்‌ரி‌யதர்‌ஷன்‌.

No comments:

Post a Comment