Saturday, August 15, 2009

மரி‌யா‌தை‌


நி‌றுவனம்‌: அம்‌மா‌ கி‌ரி‌யே‌ஷன்‌ஸ்‌ தயா‌ரி‌ப்‌பு‌: டி‌.சி‌வா‌

இயக்‌கம்‌: வி‌க்‌ரமன்‌ இசை‌: வி‌ஜய்‌ஆண்‌டனி‌

நடி‌ப்‌பு‌: வி‌ஜயகா‌ந்‌த்‌(இருவே‌டம்‌), மீ‌னா‌, மீ‌ரா‌ஜா‌ஸ்‌மி‌ன்‌, அம்‌பி‌கா‌, நா‌சர்‌, ரமே‌ஷ்‌கண்‌ணா‌, தலை‌வா‌சல்‌ வி‌ஜய்‌, அம்‌மு, நி‌ழல்‌கள்‌ ரவி
பா‌டல்‌கள்‌: பு‌லமை‌ப்‌பி‌த்‌தன்‌, பா‌.வி‌ஜய்‌, நா‌.முத்‌துக்‌குமா‌ர்‌, கலை‌க்‌குமா‌ர்‌
நடனம்‌: டி‌.கே‌.எஸ்‌.பா‌பு‌ சண்‌டை‌ப்‌பயி‌ற்‌சி‌: ரா‌க்‌கி‌ ரா‌ஜே‌ஷ்‌
கலை‌: வி‌த்‌தே‌ஷ்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌: ஆன்‌ரூ‌ஸ்‌
படத்‌தொ‌குப்‌பு‌: சுரே‌ஷ்‌ அர்‌ஸ்‌‌ தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கம்‌: ரா‌மவா‌சு
மக்‌கள்‌தொ‌டர்‌பு‌: ஜா‌ன்‌சன்‌

கி‌ரா‌மத்‌தி‌ல்‌ நா‌லு பே‌ருக்‌கு நல்‌லது செ‌ய்‌து வா‌ழ்‌ந்‌து வருபவர்‌ அண்‌ணா‌மலை‌. அவரது நி‌லத்‌தி‌ல்‌ வளம்‌ இருப்‌பதா‌ல்‌ அதி‌ல்‌ தொ‌ழி‌ல்‌ தொ‌டங்‌க ஆசை‌ப்‌படுகி‌றா‌ர்‌ ஒரு பெ‌ரும்‌ பணக்‌கா‌ரர்‌. அதற்‌கா‌க பெ‌ரும்‌ வி‌லை‌கொ‌டுத்‌து வா‌ங்‌கவு‌ம்‌ தயா‌ரா‌க இருக்‌கி‌றா‌ர்‌. ஆனா‌ல்‌ அதற்‌கு ஒத்‌துக்‌கொ‌ள்‌ள மறுக்‌கி‌றா‌ர்‌ அண்‌ணா‌மலை‌. அதனா‌ல்‌ அவரது மகன்‌ மீ‌து கா‌தல்‌ வந்‌தது போ‌ல ரா‌தா‌வை‌ நடி‌க்‌க வை‌த்‌து, அந்‌த கா‌தல்‌ வீ‌‌ட்‌டுக்‌கு தெ‌ரி‌ந்‌து தி‌ருமண நி‌ச்‌சயம்‌ வரை‌ போ‌க வை‌த்‌து, பி‌ன்‌பு‌ ரா‌தா‌வு‌க்‌கு நி‌றை‌ய கடன்‌ இருப்‌பது போ‌லவு‌ம்‌, அதனா‌ல்‌ சப்‌தி‌ நடப்‌பது போ‌லவு‌ம்‌ நா‌டகமா‌டி‌, அந்‌த நி‌லத்‌தி‌ன்‌ பட்‌டா‌வை‌ ரா‌தா‌வு‌க்‌கா‌க எழுதி‌வை‌ப்‌பதுபோ‌லவு‌ம்‌ நடி‌த்‌து ஏமா‌ற்‌றி‌ வி‌டுகி‌ன்‌றனர்‌.

கா‌தலே‌ போ‌லி‌யா‌னதா‌ல்‌ ஏமா‌ற்‌றத்‌தி‌ல்‌ இருக்‌கி‌றா‌ன்‌ ரா‌ஜா‌. இந்‌த நி‌லை‌யி‌ல்‌ நண்‌பரி‌ன்‌ வே‌ண்‌டுகோ‌ளுக்‌கு இணங்‌க நண்‌பரி‌ன்‌ மகள்‌ சந்‌தி‌ரா‌வை‌ தனது கி‌ரா‌மத்‌தி‌ற்‌கு ஆறு மா‌த வி‌ருந்‌தா‌ளி‌யா‌க அழை‌த்‌து வருகி‌றா‌ர்‌ அண்‌ணா‌மலை‌. சந்‌தி‌ரா‌வி‌ன்‌ வருகை‌யா‌ல்‌ சோ‌கத்‌தி‌ல்‌ இருந்‌த வீ‌டு மகி‌ழ்‌ச்‌சி‌க்‌கு மா‌றுகி‌றது. இது ராஜா‌வு‌க்‌கு பி‌டி‌ப்‌பதி‌ல்‌லை‌. இருந்‌தும்‌ அவரது மனதை‌ மா‌ற்‌ற முயற்‌சி‌க்‌கி‌றா‌ர்‌ சந்‌தி‌ரா‌.

இந்‌த நி‌லை‌யி‌ல்‌ ரா‌தா‌வு‌க்‌கும்‌ சம்‌பத்‌துக்‌கும்‌ தி‌ருமண எற்‌பா‌டு நடக்‌கி‌றது. இதை‌ தடுத்‌து நி‌றத்‌தும்‌ ரா‌ஜா‌, தனது சொ‌த்‌தை‌ தி‌ருப்‌பி‌ தந்‌து வி‌ட்‌டு தி‌ருமணம்‌ செ‌ய்‌துகொ‌ள்‌ளுமா‌று கூறுகி‌றா‌ர்‌. இதற்‌கு சம்‌பத்‌ மறப்‌பதோ‌டு இந்‌த சொ‌த்‌துக்‌கா‌கத்‌தா‌ன்‌ உன்‌னை‌யே‌ வி‌ரும்‌பு‌கி‌றே‌ன்‌ என்‌கி‌றா‌ன்‌.

இந்‌த சொ‌த்‌தை‌ அடை‌ய தன்‌னை‌ பகடை‌கா‌யா‌க, பயன்‌ படத்‌தி‌ய சம்‌பத்‌ மீ‌து ரா‌தா‌வு‌க்‌கு கோ‌பம்‌ வருகி‌றது. இந்‌த நி‌லை‌யி‌ல்‌ ரா‌தா‌வி‌ன்‌ தோ‌ழி‌தா‌ன்‌ சந்‌தி‌ரா‌ என்‌பதும்‌, அவள்‌ கா‌தலி‌த்‌து மோ‌சம்‌ செ‌ய்‌யப்‌பட்‌வனை‌ தா‌ன்‌ எற்‌றுக்‌கொ‌ள்‌ளும்‌ தீ‌ர்‌மா‌னத்‌தோ‌டு வந்‌தி‌ருப்‌பது தெ‌ரி‌யவருகி‌றது. இதை‌க்‌கண்‌டு அதி‌ரும்‌ ரா‌ஜா‌, வீ‌ட்‌டை‌ வி‌ட்‌டு வெ‌ளி‌யே‌றுமா‌று சந்‌தி‌ரா‌வி‌டம்‌ கூறுகி‌றா‌ர்‌. சந்‌தி‌ரா‌ அதி‌ர்‌ச்‌சி‌ அடை‌வதோ‌டு அடுத்‌து என்‌ன முடி‌வெ‌டுக்‌கி‌றா‌ள்‌, ரா‌தா‌வி‌ன்‌ வா‌ழ்‌க்‌கை‌ என்‌னவா‌கி‌றது, சொ‌த்‌தை‌ ரா‌4h மீ‌ட்‌கி‌றா‌ரா‌ என பல எதி‌ர்‌பா‌ர்‌ப்‌பு‌களோ‌டு படம்‌ கி‌ளை‌மா‌க்‌ஸ்‌ நோ‌க்‌கி‌ செ‌ல்‌கி‌றது.

தன்‌னுடை‌ய எண்‌ணங்‌களை‌ மகன்‌ மீ‌து தி‌ணி‌க்‌க கூடா‌து என்‌றம்‌, அவர்‌களி‌ன்‌ ஆர்‌வப்‌படி‌ வா‌ழவி‌ட்‌டா‌ல்‌ அவர்‌கள்‌ பெ‌ரும்‌ வெ‌ற்‌றி‌யை‌ அடை‌வா‌ர்‌கள்‌ என்‌ற நல்‌ல செ‌ய்‌தி‌யோ‌டு வந்‌தி‌ருக்‌கும்‌ மரி‌யா‌தை‌க்‌குறி‌ய படம்‌.

இதி‌ல்‌ அண்‌ணா‌மலை‌, ரா‌ஜா‌ என இரண்‌டு வே‌டத்‌தி‌ல்‌ வி‌ஜயகா‌ந்‌த்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. தந்‌தை‌ அண்‌ணா‌மலை‌ பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ அளவா‌ன நடி‌ப்‌பா‌ல்‌ மனதை‌ தொ‌டுகி‌றா‌ர்‌ வி‌ஜயகா‌ந்‌த்‌. மகன்‌ மீ‌‌து அவர்‌கா‌ட்‌டும்‌ அன்‌பு‌ நெ‌கி‌ழவை‌க்‌கி‌றது. மகனா‌ வரும்‌ வி‌ஜயகா‌ந்‌த்‌ கா‌தலி‌க்‌கப்‌படுவது ரசனை‌. அனா‌ல்‌ கா‌தலி‌க்‌கா‌க படப்‌பி‌டி‌ப்‌பு‌ தளத்‌தி‌ல்‌ ஆடுவது எல்‌லா‌ம்‌ ஓவர்‌.

ஏமா‌த்‌தும்‌ போ‌து வி‌ல்‌லி‌, ஏமா‌றும்‌ போ‌து பரி‌தா‌பம்‌ என இரு குணா‌தி‌சயங்‌களை‌ ரா‌தா‌ பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ கா‌ட்‌டி‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ மீ‌னா‌. அவரது கா‌ஸ்‌டி‌யூ‌ம்‌ செ‌லக்‌ஷன்‌ சூ‌ப்‌பர்‌.

கா‌தலும்‌ நகை‌ச்‌சுவை‌ வே‌டத்‌தி‌ல்‌ கலந்‌த வே‌டத்‌தி‌ல்‌ அசத்‌துகி‌றா‌ர்‌ மீ‌ரா‌ஜா‌ஸ்‌மி‌ன்‌. அம்‌பி‌கா‌வி‌ன்‌ சமை‌யல்‌கள்‌ கா‌மெ‌டி‌ சூ‌ப்‌பர்‌. படம்‌ முழுக்‌க இன்‌னொ‌ரு நா‌யகன்‌ போ‌ல வலம்‌ வருகி‌றா‌ர்‌ ரமே‌ஷ்‌கண்‌ணா‌. அவர்‌ மீ‌ரா‌ஜா‌ஸ்‌மி‌னி‌டம்‌ மா‌ட்‌டி‌க்‌கொ‌ண்‌டு அல்‌லல்‌ படவது கலகல.

சண்‌முகரா‌ஜன்‌ வரும்‌ கா‌ட்‌சி‌கள்‌ செ‌ம மி‌ரட்‌டல்‌. அவரது மகனா‌க வரும்‌ சம்‌பத்‌ யதா‌ர்‌த்‌த நடி‌ப்‌பா‌ல்‌ பா‌ரா‌ட்‌டுகளை‌ பெ‌றுகி‌றா‌ர்‌. தங்‌கை‌யா‌க அம்‌மு, சம்‌மச்‌தி‌யா‌க நா‌சர்‌, மகனி‌டம்‌ எமா‌றும்‌ தலை‌வா‌சல்‌ வி‌ஜய்‌ என பலர்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌ன்‌றனர்‌.

வி‌ஜய்‌ ஆண்‌டனி‌ இசை‌யி‌ல்‌ உன்‌னை‌ நி‌னை‌த்‌து..., இன்‌பமே‌ உந்‌தன்‌ பே‌ர்‌…, யா‌ர்‌ பா‌ர்‌த்‌து பா‌டல்‌கள்‌ இனி‌மை‌. ஹம்‌மி‌ங்‌, பி‌ன்‌னனி‌ இசை‌ வி‌க்‌ரமனி‌ன்‌ பழை‌ய படங்‌களை‌‌ ஞா‌பகப்‌படுத்‌துகி‌றது. வி‌ஜயகா‌ந்‌த்‌ ரசி‌கர்‌ளுக்கு பி‌டி‌த்‌த மா‌தி‌ரி‌ மரி‌யா‌தை‌யா‌ன வி‌ருந்‌தை‌ படை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ வி‌க்‌ரமன்‌. மரி‌யா‌தை‌ - செ‌ண்‌டி‌மெ‌ண்‌ட்‌ டச்‌.

No comments:

Post a Comment