Wednesday, August 12, 2009

லா‌டம்‌


தயாரிப்பு: காஸ்மோஸ் எண்டர்டெயின் மென்ட்ஸ்
கதை, திரைக்கதை, இயக்கம்: பிரபுசாலமன
இசை: தரண்‌ ஒளிப்பதிவு: சுகுமார்
நடிகர்கள் : அரவிந்த், சார்மி, தீரஜ்கேர், ஜெயப்பிரகாஷ், கோட்டாசீனிவாசராவ்

இரண்டு ரவுடிகும்பலிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் அப்பாவி ஒருவனின் 16 நாள் வாழ்க்கை லாடம். வீட்டை விட்டு வெளியே வந்தாலே தன் உயிருக்கு ஆபத்து என்று வீட்டில் இருந்த படியே ஏரியாவையே கலக்கிக் கொண்டிருக்கும் ரவுடிகள் கோட்டா சீனிவாசராவும், ஜெய பிரகாஷூம்.

இந்நிலையில் கோட்டாவின் மகனை ஜெய பிரகாஷ் ஆட்கள் சுட்டுக் கொல்ல நினைக்கின்றனர் தன் மகனின் 16ம் நாள் காரியம் முடிவதற்குள். ஜெயபிரகாசின் மகனை கொல்கிறேன் என்று சபதம் எடுக்கிறார் அதற்காக தன் ஆட்களை அனுப்புகிறார். ஆனால் போன அனைவரும் பிணமாக திரும்புகின்றனர்.

இந்நிலையில் வேலை தேடி சென்னைக்கு வருகிறார் அரவிந்த். வந்தவர் தன் நண்பணின் அறையில் தங்குகிறார். அவரது நண்பரின் வாங்கிய கடனை கேட்டு அவரது வீட்டுக்கு கோட்டாவின் ஆட்கள் வருகின்றனர் . தவறுதலாக அரவிந்தைப் பிடித்து செல்கின்றனர். அங்கு இவரது துடுக்கான பேச்சு ஆபத்தை அழைக்கிறது. கோட்டாவிடம் அண்ணே உங்க ஆளுங்களுக்கு அறிவு இல்லை. ஒரு யானையை அழிக்க இன்னொரு யானை தேவையில்லை சிறு எறும்பு போதும் என்று கூற அந்த வேலையை நீயே செய் அதுவும் 16 நாளில் செய்ய வேண்டும் இல்லை என்றால் 17ம் நாள் உனக்கு காரியம் என்று மிரட்டுகிறார்.

பிறகென்ன ஜெயபிரகாஷிடம் மாட்டி என் மகனை கொல்ல நீ தான் யோசனை சொல்கின்றாயா என்று அவரும் இவனை கொல்ல வர.... தப்பித்து வருபவர் சார்மியை சந்திக்கிறார்.... பிறகு ஜெயபிரகாஷின் மகன் தீரஜ் கோரிடம் மாட்டிக் கொண்டு படும் அவஸ்தைகள் ....

அறிமுக நாயகன் அரவிந்த் இந்த வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். அப்பாவியாகவும். தீரஜ் கோரிடம் மாட்டிக்கொண்டு அழும் காட்சிகள் பிறகு உயிருக்கு பயந்து ஓடும் காட்சிகள் நான் உங்களுக்கு நாயாக இருப்பேன் என்னும் போது ஏய் இவன் நாயண்டா இல்லை காக்ரோச் என்கிறபோது தொடங்கி அசத்திவிட்டார் அரவிந்த்.

நீண்ட இடைவெளிக்குபின் சார்மி கவர்ச்சிக்காக பயன் படுத்தியிருக்கிறார்கள். கோட்டா சீனிவாசராவ், ஜெயபிரகாஷ் இருவரும் அமர்க்களமான ரவுடிகள். சுகுமாரின் ஒளிப்பதிவு, தரணின் இசை அருமை. மீண்டும் ஒரு ஆக்ஷன் விறுவிறுப்பு திரில்லர் படம் தந்துள்ளார் பிரபு சாலமன்

No comments:

Post a Comment