
நிறுவனம்: ஏவி.எம்.புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பு: எம்.சரவணன், எம்.எஸ்.குகன், அருணா குகன், அபர்ணா குகன் நடிப்பு: சூர்யா, தமன்னா. பிரபு, கருணாஸ், பொன்வண்ணன், ஜெகன், ரேணுகா இவர்களுடன் வில்லனாக இந்தி நடிகர் ஆகாஷ் தீப்சைகல் இயக்கம்: கே.வி. ஆனந்த் வசனம்: சுபா இசை: ஹாரிஸ்ஜெயராஜ்,பாடல்கள்: வைரமுத்து, பா.விஜய், நா.முத்தக்குமார்
தயாரிப்பு: எம்.சரவணன், எம்.எஸ்.குகன், அருணா குகன், அபர்ணா குகன் நடிப்பு: சூர்யா, தமன்னா. பிரபு, கருணாஸ், பொன்வண்ணன், ஜெகன், ரேணுகா இவர்களுடன் வில்லனாக இந்தி நடிகர் ஆகாஷ் தீப்சைகல் இயக்கம்: கே.வி. ஆனந்த் வசனம்: சுபா இசை: ஹாரிஸ்ஜெயராஜ்,பாடல்கள்: வைரமுத்து, பா.விஜய், நா.முத்தக்குமார்
தினம் தினம் பத்திரிகைகளில் படிக்கிற செய்தியை படமாக்கியிருக்கிறார் இயக்குநர். வெளிநாட்டிலிருந்து புதுப்பட சிடி கடத்தி வந்து பிரபுவிடம் கொடுப்பார் சூர்யா. அது பல காப்பிகளாக போடப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வந்து காத்துக்கிடக்கும் விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு வாங்கிச்செல்வார்கள். அப்படி திருட்டு விசிடி தயாரிப்பது முதல் வைரம் கடத்துவதுவரை கடத்தல் வேலைகளை தில்லா லங்கடியாக பிரபுவுக்கு துணையாக செய்கிறார் சூர்யா.
இவர்களின் லாபத்தை கண்டு கொதிக்கிறார் ஆகாஷ் தீப் சைகல். அதனால் இவர்களின் வியாபாரத்தை போலீசுக்கு போட்டுக்கொடுத்து மாட்ட வைப்பதோடு தனது திருட்டு விசிடி தயாரிப்பது கடத்தலை பெருக்குகிறார். இருந்தாலும் இவர்களின் தங்க வேட்டையை அடைய பல இன்னல்களை கொடுக்கிறார். அதெல்லாம் தவிடுபொடியாவதால் கோபத்தில் இருவரையும் தீர்த்துக்கட்டமுயல்கிறார்.
இதில் பிரபு பலியாகிறார். இதனால் கோபப்படும் சூர்யா ஆகாஷ் தீப் சைகல் கடத்தல் வியாபாரத்தை தொடர்ச்சியாக கண்காணித்து போலிசுக்கு போட்டுக்கொடுத்து கெடுப்பதோடு ஒவ்வொரு முறையும் அவனது கோபத்துக்கும் ஆளாகிறார். அதனால் என்னெவெல்லாம் நிழ்கிறது முடிவில் யார் ஜெயிக்கிறார்கள், யார் அழிகிறார்கள் என்பது படம்.
திருட்டு விசிடி தொழில் இப்படித்தான் ரிஸ்கோடு நடப்பது என்பதும் அங்கும் போட்டியும் மோதல்களம் இருக்கிறெதென்பதை காட்டுகிறது படம். போதை மருந்தை வயிற்றில் இப்படித்தான் கடத்துகிறார்கள். இப்படித்தான் வயிற்றை கிழித்து எடுக்கிறார்கள். இறந்தவனை இப்படித்தான் எரிக்கிறார்கள் என்று நிழல் உலக கடத்தல் கும்பலின் செயல்பாடுகளை விலாவாரியாக புட்டு வைக்கிறது படம்.
நினைத்தவள் கிடைத்த மாதிரி சூர்யா கேரக்டர். உற்சாகத்தில் கீழே குதிக்கிறார். மேலே பறக்கிறார். தரையில் தண்ணீராய் ஓடுகிறார். தகர கூரையில் ஓடி தாண்டி குதிக்கிறார். ஆடியாட்களிடம் சதுராட்டம் போடுகிறார். இப்படி ஒரு உற்சாகமான பாத்திரம். அதை அனுபவித்து செய்திருக்கிறார். கோட் சூட் போட்டு விமானத்தில் ஏறினால் ஆங்கிலேயன் பேச்சு. ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தால் சிலம்ப் ஏரியா பேச்சு. சண்டைக்காட்சிகளில் பொளந்து கட்டுகிறார். காதல் காட்சிகளில் இளமைக் கொண்டாட்டம். இப்படி படம் முழுக்க அதிரடி திகிலடி கொண்டாடியிருக்கிறார் சூர்யா.
காதலிக்கவும் காதலனை கொலைகாரணாக சந்தேகப்படவும் பிறகு நல்லவனாக தெரிந்ததும் வருத்தப்பட்டு பிறகு பாட்டு பாடவும் வந்து போகிறார் தமன்னா.
அந்த கேரக்டராகவே வந்து போகிறார் பிரபு. எளிமையான நடிப்பின் மூலம் மனதை தொடுகிறார். சென்னை வட்டார மொழி பேசி சிரிக்கவும் வைக்கிறார் ரேணுகா. சிட்டியாக வந்து சுட்டியாக பேசி நெஞ்சை பதற வைத்து விடைபெற்று செல்கிறார் ஜெகன். ஒரு சில காட்சிகள் வந்தாலும் கருணாஸ் நடிப்பு சூப்பர். அந்த ஆபிசராகவே மாறிவிட்டார் பொன்வண்ணன். அதிரடி வில்லனாக ஆகாஷ் தீப்சைகல் அசத்தியிருக்கிறார். அவரது பழிவாங்கும் மீரட்டல் காட்சிகள் பரபர .
உலகம் சுற்றி பார்க்க வைக்கிறது எம்.எஸ்.பிரபுவின் கேமிரா அதே போல ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் நா.முத்துகுமாரின் பளபளக்கிற பகலா நீ.., விழி மூடி யோசித்தால் பாடல்கள் இனிமை வைரமுத்து எழுதிய நெஞ்சே நெஞ்சே பாடல் சுகம். பா.விஜய் எழுதிய ஹேய் ஹனி ஜாலி.
ஏர்போர்ட் கடத்தல் காட்சிகள், வெளிநாட்டு காட்சிகள் சேஸிங் காட்சிகள் செம மிரட்டல் தமன்னா வீட்டில் நடக்கும் தடதட காட்சிகள், செல் போன் வாங்கும் காட்சிகள் கலகல. கருப்பாக அண்ணன் சிவப்பாக தங்கை என்பதற்றகாக கதை சொல்வது தேவையில்லாதது. அதே போல அண்ணன் தங்கையை பார்த்து பிகர் என்பதெல்லாம் தேவையில்லாதது. இப்படி பல எபிசோடுகளாக படம் இருந்தாலும் அதை நேர்த்தியுடனும், விறுவிறுப்பாகவும், ஜாலியாகவும் கொடுத்திருக்கிறார் கே.வி.ஆனந்த். டைட்டில் காட்சிகள் முதல் கடைசி காட்சிகள் வரை அங்கு அங்கு ரசிக்க வைத்திருக்கிறார். இது அவரின் வெற்றி.
No comments:
Post a Comment