
நிறுவனம்: சன் பிக்சர்ஸ தயாரிப்பு: கலாநிதிமாறன்
இயக்கம்: ஜி.கிச்சா இசை: ஸ்ரீகாந்த்தேவா
நடிப்பு: சுந்தர்.சி, நமிதா, ராகினி, விவேக், ஜி.எம்.குமார், விச்சு, மனோஜ் கே. ஜெயன், கெளதம், விகாஷ், ஐஸ்வர்யா, சாயாஜி ஷிண்டே, தலைவாசல் விஜய்
பாடல்கள்: யுகபாரதி நடனம்: தினேஷ்
சண்டைப்பயிற்சி: தளபதிதினேஷ் கலை: மனோராஜ்
ஒளிப்பதிவு: டி.சங்கர் படத்தொகுப்பு: பி.எஸ்.வாசு-சலீம்
தயாரிப்பு நிர்வாகம்: டி.பி.வெங்கடேஷ் மக்கள்தொடர்பு: மெளனம் ரவி
நல்ல போலீசாக இருந்து பாதிக்கப்பட்டு கெட்ட அரசியல்வாதியாக மாறி போலீசின் பவரை புரிய வைக்கும் ஒரு போலீஸ்காரரின் அதிரடி கதை.
நேர்மையான போலீஸ் அதிகாரி சாரதி. அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல்வாதிகளுக்கு பெரிய இடியாக இருக்கிறது. அவரது உயர் அதிகாரிகள் அவரிடம் மோதினால் கூட, அவர் மீது நடவடிக்கை எடுப்பார். அப்படிப்பட்டவர் அரசியல்வாதி ஜி.எம். குமாரை கைது செய்கிறார். அதனால் அவருக்கும் இவருக்கும் மோதல் வெடிக்கிறது. இதனால் அவரது இரண்டு குழந்தைகள் கொல்லப்படுகின்றனர். அவரது மனைவியும் தாக்கப்பட்டு கோமாவுக்கு போகிறார். அவரும் தாக்கப்பட்டு சகதியில் வீசப்படுகிறார்.
பிறகு உயிர் பிழைக்கும் அவர் வேறொரு கெட்டப்பில் சாமி என்ற முரடனாக அரசியல்வாதி சாயாஜி ஷிண்டேவுக்கு உதவி செய்து எம்.எல்.ஏ. ஆகிறார். அவரது கெட்ட நடவடிக்கைகள் போலீசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மோதலை ஏற்படுத்துகிறது. இதனால் போலீஸ் அனைவரும் ராஜினாமா செய்கின்றனர். ரவுடிகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். முதல்வர் தலையிட்டு ராஜினாமா செய்த போலீசிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்கிறார். இதனால் தங்களது முடிவை மாத்திக்கொள்ளும் போலீஸ் மறுபடியும் தனது குண்டாந்தடியை தூக்கிக்கொண்டு நாட்டை வன்முறையாளர்களிடமிருந்து காப்பாற்றுகிறது.
ஆரம்ப காட்சிலேயே நடு ரோட்டில் அம்மனமாக வருகிறார் சுந்தர் சி. அதை கண்டு கோபமுறும் டிராபிக் போலீஸ் தலைவாசல் விஜய் ரோட்டில் தொங்கும் அரசியல் பேனர் ஒன்றை கிழித்து அவருக்கு கொடுக்க அதை கட்டிக்கொண்டு நேராக அரசியல்வாதி சாயாஜி ஷிண்டே வீட்டுக்கு செல்கிறார். சாயாஜி ஷிண்டேவிடம் இடைத்தேர்தலில் நிற்க சீடடு கேட்டு மிரட்டும் ஜி.எம். குமாரின் எடுபிடியின் கையை வெட்டி அவருடைய நம்பிக்கை பாத்திரமாகிறார். இதனால் நாய் மாதிரி இருக்கும் அவருக்கு எம்.எல்.ஏ. பதவி கிடைக்கிறது.
பதவி கிடைத்த அடுத்த நொடியில் சீட்டுக்கொடுத்த சாயாஜி ஷிண்டேவுக்கு வேட்டு வைக்கிறார். அவர் இந்த நிலமைக்கு வர மட்டுமல்ல கொலை செய்வதற்கும் காரணம் சாயாஜி ஷிண்டே என்பது பரபரப்பான அதிரடியான பிளாஷ் பேக் காட்சிகளாக விரிகிறது. அதன் பிற நல்ல போலீஸ் அதிகாரியாக இருந்து எடுத்த அதிரடி நடவடிக்கைகள் பாதிப்புகள் கெட்ட அரசியல்வாதி ஆனப்பிறகு எடுக்கும் மோசமான நடவடிக்கைகள் என படம் பாய்ந்து பறக்கிறது. ஏகப்பட்ட பில்டப். காட்சிகளில் செம டெம்போ.
போலீஸ் பாத்திரத்தில் வெளுத்து கட்டியிருக்கிறார் சுந்தர்.சி. அவர் மீசையை முறுக்கிக்கொண்டு எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் தியேட்டரில் சில் பறக்கிறது. சாமியாக வரும் போது குள்ள நரித்தனம் தெரிகிறது. அராஜக அரசியல் வாதி, வில்லன்கள், வக்கீல், ஓட்டுப் போட நோட்டு கேட்கும் பொது மக்கள் என அனைவரையுக் சகட்டு மேனிக்கு தாக்குவது சதிராட்டம். நமீதாவுக்கு 'ஆயில் மசாஜ்' செய்கிற காட்சியில் கிளுகிளுப் பூட்டுகிறார்.குடும்பத்தலைவியாக ஒரு சில காட்சிகளில் வருகிறார் ராகிணி. நமீதாவுக்கும் எப்படி பவர் இருக்கிறது என்று சொல்லவில்லை. ஆனாலும் தனது பங்கிற்கு ரசிகர்களை கவர்கிறார் நமீ. நல்ல போலீசாக வரும் மனோஜ் கே.ஜெயன், கெட்ட அரசியல்வாதியாக வரும் சாயாஜிஷிண்டே, ஜி. எம்.குமார் நடிப்பு பலே. அநியாயத்துக்கு பஸ்க்கு காசு கேட்பார் போல முதல்வர். ஒரு பாட்டுக்கு வந்தாலும் நெஞ்சை காட்டி ரசிகர்களை விசிலடிக்க வைக்கிறார் முமைத்கான்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் நீ இல்லாம நான் இங்கேது, காலை நேரதென்றல் பாடல்கள் காதுகளுக்கு இனிமை. என்ன இல்லை இந்தப் படத்தில் என்கிற ரேஞ்சுக்கு எல்லாத்தையும் அளவுக்கு அதிகமாக கொடுத்து படத்தை பரபரப்பாக்கியிருக்கிறார் இயக்குறர் கிச்சா. வக்கீல்கள் - போலீஸ் மோதல் நேரத்தில் போலீசுக்கு ஆதரவு திரட்டுவது போல வந்திருக்கிறது தீ
No comments:
Post a Comment