
நிறுவனம்: ஜனசேவா பிலிம்ஸ் தயாரிப்பு: ஜாஸ்மா வேலி
இயக்கம்: வினயன் இசை: பரத்வாஜ்
நடிப்பு: பிரதீப், தனிஷா, கிரண், கார்த்திகா, மணிவண்ணன், ராஜன்.பி.தேவ், ஆசிஷ் வித்யார்தி, சார்லி, எம்.எஸ்.பாஸ்கர்,
பாடல்கள்: பழனிபாரதி நடனம்: தினேஷ்
சண்டைப்பயிற்சி: மாபியா சசி கலை: விஜயமுருகன்
ஒளிப்பதிவு: ராஜரத்னம் படத்தொகுப்பு: முகேஷ்
தயாரிப்பு நிர்வாகம்: பாலகோபி, மணிகண்டன்
மக்கள்தொடர்பு: மெளனம் ரவி
கோடீஸ்வரர் ஆசிஷ் ஏழை மக்களுக்காக ஆயிரத்து இரு நூறு கோடி எழுதி வைக்கிறார். அந்த பணத்தை கலெக்டர் மூலம் மக்களுக்கு முறையாக செலவு செய்ய பிளாட்பாரத்தில் வசிக்கும் மணிவண்ணன் மற்றும் பிரதீப் இருவருக்கும் அதிகாரம் வழங்குகிறார். அந்த பணத்து மீது கண் வைக்கும் போலீஸ் மந்திரி ராஜன் பிதேவ், அவர்கள் இருவரையும் மிரட்டி அந்த பணத்தை தன் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொள்ள முயற்சிக்கிறார். அவரது பாய்ச்சல் அவர்களிடம் பலிக்காததால் அவர்களையும் அவரது குப்பத்து ஜனங்களையும் தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறார்.
இதை அறியும் மணிவண்ணன் கோஷ்ட்டி ராஜன் பி.தேவை கடத்தி வந்து வைப்பதோடு, ஏற்கனவே பாடம் நடத்தி பணம் பெற்ற ஆசிஷ் கதையைச் சொல்லி அவருக்கு கொடுத்த தண்டனையையும் சொல்லி பீதி அடைய வைக்கின்றனர். அதே போல அவர் கொள்ளையடித்த மொத்த பணத்தையும் தந்தால் உயிரோடு விடுவதாகவும் இல்லை என்றால் அவருக்கு கொடுத்த தண்டனை போல இவருக்கும் வழங்குவதாக எச்சரிக்கிறார்கள்.
இங்கிருந்து தப்பிக்கும் ராஜன் பி.தேவ் இவர்களை தனது அரசியல் பலத்தாலும் அதிகார பலத்தாலும் என்ன நடவடிக்கை எடுக்கிறார். அதனை இவர்கள் எப்படி முறியடிக்கிறார்கள் என்பது படம்.
திருடி கொழுத்த அரசியல்வாதிகளை கட்திச்சென்று அந்த பணத்தை மக்களுக்கே பெற்று தரும் புரட்சி கரமான கதை. அதை அப்படி இப்படி சுத்தி அதில் காதலும், மோதலும், கடத்தலும், கெடுத்தலும் என படத்தை பரபரப்பாக கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர்.
ஆக்ஷன் நாயகனாக பிரதீப் தூள் கிளப்புகிறார். இன்னொரு நாயகன் போல படம் முழுக்க மணிவண்ணன். அவரது பாத்திரத்தை அலட்டல் இல்லாமல்ஆரம்பத்தில் நகைச்சுவையோடும் பிறகு சீரியசாகவும் செய்திருக்கிறார். அழகு மலராக தனுஷா. ஆரம்பத்தில் மகன் கெடுக்க ஆசைப்பட்டு துரத்துகிறார். கடைசியில் தந்தை கெடுக்கிறார். அப்படி கெடுப்பதற்க்காகவே படைக்கப்பட்ட பாத்திரத்தில் நடித்து மனதை கரைக்கிறார் தனுஷா.
சர்வானந்த் காதலிக்கவும், கிரண் சண்டையிடவும் வருகின்றனர். எம்.எஸ்.பாஸ்கர், சார்லி காமெடி கலகலப்பு. பரத்வாஜ் இசையில் பாடல்கள் சுமார் ரகம். ஊனமுற்றவர்களின் கதைகளை சொல்லி வெற்றிகளை அள்ளியிருக்கும் வினயன் இந்த படத்திலும் ஊனம், இல்லாமை என ஏகப்பட்ட விஷயங்களை தொட்டிருக்கிறார்
No comments:
Post a Comment