Wednesday, August 12, 2009

குடி‌யரசு


தயாரிப்பு: திருச்செந்தூர் முருகன் புரடக்ஷன்ஸ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : H.M.சபீர் ஹீசைன்
இசை: கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு: கவிதாலயா 'பாபு'
சண்டைப்பயிற்சி: தவசிராஜ் மக்‌கள்‌ தொ‌டர்‌பு‌: மெளனம் ரவி
நடிகர்கள்: விக்னேஷ்வரன், சுகுணா, நீபா, சுரேஷ் கண்ணன், நிழல்கள் ரவி, சேது விநாயகம்


இந்த சமுதாயத்தை தூக்கி நிறுத்தும் தூண்களில் பத்திரிக்கையும் ஒன்று. அந்த பத்திரிக்கை நிருபர் கண்டு பிடிக்கும் ஊழல் பற்றிய கதை குடியரசு. விஷுவல் கம்யூனிகேஷன் மாணவன் கண்ணன் (விக்னேஸ்வரன்) கல்லூரி ஆண்டு விழாவில் பத்திரிக்கை தர்மம் பற்றி பேசுகிறார். அவரது பேச்சு அவருக்கு குடியரசு பத்திரிக்கையில் நிருபர் வேலையை வாங்கித்தருகிறது அதை வைத்து அமைச்சர் அம்பலவாணன் (சேது விநாயகம்) நடத்தி வரும் நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபடுகிறது இதனை கண்டுபிடித்து அமைச்சர் அம்பலவாணன் பதவியைபறித்து மக்கள் மேடையில் தண்டனை வாங்கி தருகிறார். இடையிடையே தன் காதலி ராதா (சுகுணா) வுடன் காதலிலும் ஈடுபடுகிறார் விக்னேஷ்வரன்.


துடிப்பான பத்திரிக்கை நிருபராக விக்னேஷ்வரன் பரபரப்பாக இயங்கி மந்திரி பற்றிய ஆதாரத்தை திரட்டுகிறார்.அதனால் வரும் பகையை பத்திசாலிதனமாக எதிர் கொள்கிறார்.கூடவே சுகுணாவின் காதல் தோல்வியால் துவள்கிறார்.


இதுவரை மெயின் வில்லனாக வராத சேது விநாயகம் இப்படத்தில் வில்லனாக வந்து அசத்துகிறார். இரண்டாவது நாயகன் சுரேஷ் கண்ணன் படு சாமர்த்தியமாக சுகுணா வீட்டிற்குள் நுழைந்து காதலையும் கலைகிறார். சுரேஷ் கண்ணன், போலீஸ் அதிகாரி சபீர் உசேன், ரவுடிகளின் தலைவர் சத்யநாராயணா, ஆகிய மூவரும் கராத்தே பிளாக் பெல்ட் பெற்றவர்கள். சண்டையில் அசத்துகின்றனர்.

விக்னேஷ்வரனை காதலில் விழவைத்து, பிறகு விலகிச் செல்லும் சுகுணா, சுரேஷ் கண்ணனால் ஏமாற்றப்பட்டு காதல் தோல்வியில் வாடும் நீபா இருவரும் அழகு.


சுகுணாவின் அப்பா நிழல்கள் ரவி, நேர்மையான முதலமைச்சர் ஜான் அமிர்தராஜ் - பத்திரிக்கை ஆசிரியர், ஸ்ரீகாந்த், ஆடிட்டராக வரும் V.S.ராகவன் ஆகியோர் தங்களது பக்குவப்பட்ட நடிப்பால் கேரடருக்கு உயிரூட்டுகிறார்கள்.


கார்த்திக்ராஜாவின் இசை கவிதாலயா பாபுவின் கேமரா படத்திற்கு பலம் சேர்க்கிறது.இருப்பினும் காட்சிக்கு காட்சி ஒட்டாமல் ஏதோ ஒரு குறையோடு முடிகிறது படம்.

No comments:

Post a Comment