
நிறுவனம்: சிருஷ்டி பிக்சர்ஸ்
நடிப்பு: சுந்தர்.C, மீனாட்சி, நமீதா, விவேக், கோட்டா சீனிவாசராவ்
இயக்கம்: வின்சென்ட் செல்வா இசை:ஸ்ரீகாந்த்தேவா
பாடல்கள்: நா.முத்துகுமார் ஒளிப்பதிவு: N.பானு முருகன்
கலை: ஜி.கே சண்டைப்பயிற்சி: சூப்பர் சுப்ராயன்
மக்கள் தொடர்பு: நிகில்
போலி மருந்தால் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்ற ஒரு டாக்டரின் உதவியுடன் அந்த போலி மருத்துவ தொழிற்சாலையை அழித்து மக்களை காப்பாற்றும் படம். ஆந்திராவில் அமைச்சராக இருக்கும் கோட்டா சீனிவாசராவ் போலி மருந்து தயாரித்து அதை அரசு மருத்துவ மனைகளுக்கு அனுப்பி அங்கு சிகிச்சைக்கு வரும் அப்பாவி ஏழைகளின் உயிர்களை பறிக்கிறார்.
இதை கண்டு பிடித்த டாக்டர் மீனாட்சியை கோட்டா சீனிவாசனின் ஆட்கள் கொலை செய்ய வருகின்றனர். அவர் தப்பித்து சுந்தர்.C யிடம் அடைக்கலம் ஆகிறார். அப்போது கோட்டாசீனிவாசனின் மகனை அடித்து அவனுக்கு மரண பயத்தை ஏற்படுத்துகிறார். இந்நிலையில் சுந்தர்.C யையும், மீனாட்சியையும் தேடி கோட்டா சீனிவாசராவ் சென்னை வருகிறார். பிறகென்ன சுந்தர்.C கோட்டாவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி கோர்ட் படியேறுகிறார். சுந்தர்.C தண்டனை வாங்கித் தருகிறார்.
பைனான்சில் கார் வாங்கி தவணை ஒழுங்காக செலுத்தா ஆட்களை தேடி கார்களை பறிமுதல் செய்யும் பெருமாளாக சுந்தர்.C அவரை அடைய துடிக்கும் திருடியாக நமீதா. மருத்துவ டாக்டராக வரும் மீனாட்சியுடன் காதல்.... இரட்டை வேட விவேக் என்று பெரிய பட்டாளத்தை வைத்துக் கொண்டு வின்சென்ட் செல்வா இவர்களை பயன் படுத்தாமல் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனை மட்டுமே நம்பி படமெடுத்துள்ளார்.
படத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே தமிழ் வசனங்கள் வருகிறது. ஏதோ தெலுங்கு படம் பார்த்த உணர்வு. ஸ்ரீகாந்த் தேவா இசையில் காதல் வைபோகமே கேட்கும் ரகம். நமீதாவின் அழகு பிரதேசங்களை அழகாக படமெடுத்துள்ளத பானமுருகன் கேமிரா. நல்ல படங்களை தந்த வின்சென்ட் செல்வாதான் இப்படத்தை இயக்கினாரா என்பது சந்தேகமே.
No comments:
Post a Comment