
படத்தின் தலைப்பிலேயே படத்தை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.' ஆனந்தமாய் ஒரு தாண்டவம்' இளமையான காதல் , உண்மையான பாசம், என நகரும் கதை, வில்லன் வந்துவிட கொஞ்சம் விரு விருப்புபோடு செல்கிறது. தென்காசியில் திறக்கிறது திரை. ரகு, (சித்தார்த்) இன்சினியர் படிப்பு படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கிறார். அளவான வீடு, அன்பான அப்பா என நாட்கள் கழிகிறது.
மதுமிதா (தமண்னா) , சிறு பிள்ளைத் தனமாக தம்பியோடு அட்டகாசம் செய்யும் அழகான பொண்ணு. அப்பா அம்மா என்ன சொன்னாலும் தலையாட்டிக்கிற பொம்மை. முக்கியமா காசு பணம் நிறைய இருக்கிற குடும்பத்தில் பிறந்தவர். ரகுவைப் பார்த்த உடனே மதுமிதாவின் அப்பா அம்மாவிற்கு பிடித்துவிட உடனே நிச்சயதார்த்தம் நிகழ்கிறது. ரகு மதுமிதா, பல நாடுகள் சென்று டூயட் பாடி முடித்துவிட்டதும் , ரகுவிற்கு வேலை கிடைக்கிறது, திருமணத்திற்காக வீடு திரும்புகிறார்.காதலியை சென்று பார்க்கும்போது , இன்னொருவன் ராதாகிருஷ்ணன் (ரிஷி) காதலிக்கு முத்தமிட்டு கொண்டிருக்கிறான்.
அதிர்ந்துபோன ரகு, விஷயத்தை விசாரித்தால், உன்னைவிட இவரிடம் நிறைய பணம் இருக்கு அதனால் அம்மா அப்பா இவரை கல்யாணம் செய்துக்க சொல்லிட்டாங்க என்று சொல்லிவிடுகிறார் மதுமிதா. மதுமிதாவிற்கு திருமணம் முடிகிறது. ரகுவின் தற்கொலை முயற்சி தோல்வியடைகிறது.
ரகு மீண்டும் மேல் படிப்பிற்கு அமெரிக்கா செல்கிறார். அங்கே அவருடன் டூயட் பாட வருகிறவர் ரத்னா (ருக்மணி) . ரகுவிற்கும் ராதாவிற்கும் திருமணம் நிச்சயமாகிறது, கணவர் கெட்டவர் என்று தெரிந்தவுடன் மதுமிதா ரகுவை மீண்டும் காதலிக்கிறார். அதற்கு ராதா தடையாக இருக்கிறார். ரகு மதுமிதாவின் காதல் புதுப்பிக்கப்பட்டதா இல்லையா என்பதே க்ளைமாக்ஸ்.
கதாபாத்திரப் படைப்பில் சுஜாதா பிரம்மிக்க வைக்கிறார். படத்தின் சஸ்பென்ஸ் க்ளைமாக்ஸ் வரை நீடித்தாலும் வழக்கமான சினிமாதனங்களால் படம் வலிமை இழக்கிறது. அமெரிக்க போனால் மட்டும் சந்தோஷமான வாழ்க்கை வந்துவிடுவதில்லை என்பதை மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.
செய்கிற தவறு வெளியே தெரியாத வரைக்கும் எல்லாருமே நல்லவங்க தான் என்ற வசனம் 'நச்'. என்னென்றால் படத்தில் வருகிற அனைத்து கதாபாத்திரங்களையும் 'யார் நல்லவர் யார் கேட்டவர்' என்பதை சட்டென்று யூகித்துவிட முடியாது.
கதையில் இருக்கிற சஸ்பென்ஸ் கதாபாத்திரப் படைப்பிலும் இருப்பது சூப்பர். தமண்னா, க்ளைமாக்ஸ் காட்சியில் அசத்துகிறார். புதுமுகம் சித்தார்த் நடனங்களில் நிறைவு இருந்தாலும், நடிப்பில் பரவாயில்லை என்றே சொல்லலாம், இனி வரும் படங்களில் மெனக்கெடல் அவசியம். ருக்மணி, கொடுத்த பாத்திரத்தை அழகாய் வெளிப்படுத்தி இருக்கிறார்.
புது முக வில்லன் நடிகர் ரிஷி சில காட்சிகளில் வந்தாலும் கத்தால் இல்லாத மிரட்டல் நடிப்பு. பட்டாம் பூச்சி..., கனா காண்கிறேன்... பாடல்கள் ஹிட். ஜி. வி. பிரகாஷின் பின்னணி இசை திரைக்கதைக்கு பெரிதும் உதவி செய்திருக்கிறது. ஜீவா ஷங்கரின் கேமரா பதிவு அழகு. இயக்கத்தில் காந்தி கிரிஷ்ணா இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.
ஆனந்த தாண்டவம் - காதலர்க்கு
No comments:
Post a Comment