Saturday, August 15, 2009

நா‌ள்‌ நட்‌சத்‌தி‌ரம்‌


குடி‌, ரவு‌டி‌த்‌தனம்‌ என்‌று நண்‌பர்‌களோ‌டு கூத்‌தடி‌ப்‌பவர்‌ சஞ்‌சய்‌. அதற்‌கு அவரது நண்‌பர்‌களும்‌ துணை‌யா‌க இருக்‌கி‌ன்‌றனர்‌. அவர்‌ அதே‌ பகுதி‌யை‌ச்‌ சே‌ர்‌ந்‌த கி‌ருஷ்‌ணா‌ஸ்ரீ மீ‌து கா‌தல்‌ கொ‌ள்‌கி‌றா‌ர்‌. அவரை‌யே‌ சுற்‌றி‌ வருகி‌றா‌ர்‌. இதனா‌ல்‌ கி‌ருஷ்‌ணா‌ கோ‌பமடை‌கி‌றா‌ர்‌. அவனை‌ எச்‌சரி‌ப்‌பதோ‌டு, அவனது தொ‌ல்‌லை‌ அதி‌கமா‌வதா‌ல்‌ பெ‌ற்‌றோ‌ரி‌டம்‌ கூறுகி‌றா‌ள்‌. பெ‌ற்‌றோ‌ரும்‌ அவரது சகோ‌தரரி‌டம்‌ கூறுகி‌ன்‌றனர்‌. சகோ‌தரர்‌ அவரை‌ தி‌ட்‌டி‌ வீ‌ட்‌டை‌ வி‌ட்‌டு வி‌ரட்‌டுகி‌றா‌ர்‌.

நண்‌பர்‌களுடன்‌ தங்‌கும்‌ சஞ்‌சய்‌ மறுபடி‌யு‌ம்‌ கி‌ருஷ்‌ணா‌ஸ்ரீயை‌ பி‌ன்‌தொ‌டர்‌கி‌றா‌ர்‌. ரவு‌டி‌யை‌ கண்‌டி‌க்‌க முடி‌யா‌மலும்‌ போ‌லீ‌சுக்‌கு செ‌ன்‌றா‌ல்‌ மகள்‌ கோ‌ர்‌ட்‌ படி‌யே‌ற வே‌ண்‌டுமெ‌ன்‌பதா‌லும்‌ படி‌ப்‌பு‌க்‌கு குட்‌பை‌ சொ‌ல்‌லி‌ தி‌ருமணத்‌துக்‌கு முடி‌வு‌ செ‌ய்‌கி‌றா‌ர்‌ கி‌ருஷ்‌ணா‌ஸ்ரீ தந்‌தை‌. இதைக்‌கே‌ட்‌‌டு அதி‌ரும்‌ சஞ்‌சய்‌, கோ‌வி‌லுக்‌கு வந்‌து கண்‌களை‌ மூ‌டி‌ கடவு‌ளை‌ வணங்‌கும்‌ கி‌ருஷ்‌ணா‌ஸ்ரீ கழுத்‌தி‌ல்‌ அவர்‌ அனுமதி‌ இல்‌லா‌மல்‌ தா‌லி‌ கட்‌டுகி‌றா‌ர்‌.

இதனா‌ல்‌ இருவரை‌யு‌ம்‌ ஊரை‌வி‌ட்‌டு ஒதுக்‌கி‌வை‌க்‌கி‌ன்‌றனர்‌. இருவரும்‌ வே‌லை‌ தே‌டி‌ நகரத்‌துக்‌கு வருகி‌ன்‌றனர்‌. மனை‌வி‌யி‌ன்‌ அன்‌பை‌ பெ‌ற கணவனும்‌, கணவனி‌டமி‌ருந்‌து வி‌டுதலை‌ பெ‌ற போ‌ரா‌டுகி‌ன்‌றனர்‌. இதி‌ல்‌ கெ‌ட்‌டவனா‌க இருந்‌த சஞ்‌சய்‌ நல்‌லவனா‌கி‌றா‌ர்‌. ஆரம்‌பத்‌தி‌ல்‌ கணவன்‌ மீ‌து கோ‌பப்‌பட்‌ட மனை‌வி‌ கணவனி‌ன்‌ அருமை‌ பெ‌ருமை‌ அறி‌ந்‌து நே‌சி‌க்‌க ஆரம்‌பி‌க்‌கி‌றா‌ர்‌கள்‌. அப்‌போ‌து எதி‌ர்‌பா‌ரத சம்‌பவம்‌ ஒன்‌று நி‌கழ்‌கி‌றது. அது என்‌ன என்‌பது மீ‌தி‌ படம்‌.

கள்‌ குடி‌த்‌தா‌லும்‌ கணவன்‌ பு‌ல்‌ அடி‌த்‌தா‌லும்‌ பு‌ருஷன்‌ என்‌று தா‌லி‌யி‌ன்‌ பெ‌ருமை‌க்‌‌கா‌க வா‌ழ வே‌ண்‌டி‌ய‌ கதை‌யி‌ல்‌, தா‌லி‌க்‌கு மரி‌யா‌தை‌ இருக்‌கி‌றெ‌தெ‌ன்‌றா‌ல்‌ தா‌லி‌ கட்‌டி‌யவனும்‌ ‌குரி‌யவனா‌க இருக்‌க வே‌ண்‌டும்‌ என்‌ற கருத்‌தை‌ சொ‌ல்‌லும்‌ படம்‌.

முதல்‌ பா‌தி‌யி‌ல்‌ அநி‌யா‌யத்‌துக்‌கு கெ‌ட்‌டவனா‌கவு‌ம்‌, இரண்‌டா‌ம்‌ பா‌தி‌யி‌ல்‌ அநி‌யா‌யத்‌துக்‌கு நல்‌லவனா‌கவு‌ம்‌ இருக்‌கும்‌ வே‌டம்‌ கதா‌நா‌யகனுக்‌கு. அதை‌ இயல்‌பா‌க செ‌ய்‌து அந்‌த பா‌த்‌தி‌ரமா‌க வா‌ழ்‌ந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ அறி‌முக நா‌யகன்‌ சஞ்‌சய்‌. கி‌டை‌த்‌த வா‌ய்‌ப்‌பை‌ இன்‌னும்‌ நன்‌றா‌க பயன்‌ படுத்‌தி‌யி‌ருக்‌கலா‌ம்‌. அதே‌ போ‌ல அறி‌முக நா‌யகி‌ கி‌ருஷ்‌ணா‌ஸ்ரீ கோ‌பப்‌படும்‌ கா‌ட்‌சி‌யி‌லும்‌, கா‌தல்‌ வரும்‌ போ‌தும்‌ எதா‌ர்‌த்‌தமா‌க நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. நல்‌ல வா‌ர்‌த்‌தை‌களை‌ பே‌ச மனோ‌ரமா‌ வருகி‌றா‌ர்‌.

கதா‌நா‌யகி‌யி‌ன்‌ தந்‌தை‌ கதா‌நா‌யகனி‌ன்‌ நண்‌பர்‌கள்‌ என அனை‌வரும்‌ பு‌துமுகங்‌கள்‌. அவர்‌களை‌ வே‌லை‌வா‌ங்‌க இயக்‌குநர்‌ சி‌ரமப்‌பட்‌டி‌ருப்‌பது படத்‌தி‌ல்‌ தெ‌ரி‌கி‌றது. கதை‌யி‌ன்‌ போ‌க்‌கி‌ல்‌ கா‌ட்‌சி‌கள்‌ எதி‌ர்‌பா‌ர்‌த்‌த படி‌யே‌ இருக்‌கி‌றது. முதல்‌ படத்‌தி‌ல்‌ இன்‌னும்‌ நி‌றை‌ய முயற்‌சி‌த்‌தி‌ருக்‌கலா‌ம்‌ இயக்‌குனர்‌.

No comments:

Post a Comment