
நிறுவனம்: அக்ஷயா மல்ட்டி மீடியா கிரியேஷன்ஸ்
தயாரிப்பு: குடந்தை எஸ்.பி.சந்திரசேகர், கிருஷ்ணவேனி சந்திரசேகர்
இயக்கம்: குணசேகரன் இசை: ஆதிஷ் உத்ரியன்
நடிப்பு: புதுமுகம் ஆதித்யா, மனோகா, விசு, மணிவண்ணன், எம். எஸ்.பாஸ்கர், ஜோதிஷா, காதல் தண்டபானி, அழகு, வின்சென்ட் ராய்,
பாடல்கள்: குடந்தை எஸ்.பி.சந்திரசேகர், காதல்மதி
நடனம்: சிவசங்கர், ரமேஷ்ரெட்டி, தினா, தருண்ராஜ்
சண்டைப்பயிற்சி: ஆக்ஷன் பிரகாஷ் கலை: சிவா யாதவ்
ஒளிப்பதிவு: கனகராஜ் படத்தொகுப்பு: ஆர்.டி.அண்ணாதுரை
தயாரிப்பு நிர்வாகம்: சின்னமணி மக்கள்தொடர்பு: எஸ். செல்வரகு
குப்பை பொருக்கும் ஒருவன் விவேகானந்தர் வாசகத்தை கேட்டு கோபுரவாசியாவதுதான் கதை. அதை நகைச்சுவை படமாக தந்திருக்கிறார் புதியவர் குணசேகரன்.
குப்பை பொருக்கும் ஆதித்யா நீதிபதி விசு சொல்லும் விவேகானந்தர் வார்த்தையால் தன்னம்பிக்கை பெறுகிறான். தன் தந்தை வேலை செய்த பேப்பர் மில்லை விலைக்கு வாங்க வேண்டும் என்று லட்சியம் கொண்டு உழைக்கிறான். அதன் நடுவே அவன் ஆசைப்பட்ட பெண்ணுக்கு பிரச்சனை வருகிறது. அந்த பெண்ணுக்கு உதவுவதோடு அதற்கு காரணமான அரசியல்வாதியை பதவி போகவைத்து அரசியல் வாதியின் கோபத்துக்கு ஆளாகிறான். பிறகு அரசியல்வாதியிடமிருந்து எப்படி தப்பித்து காதலியை காப்பாற்றி தனது லட்சியத்தை அடைகிறான் என்பது படம். அதை எளிமை இனிமை ஜாலி என ஜனரஞ்சகமான படமாக கொடுத்திருக்கிறார்கள்.
புதுமுகம் ஆதித்யா இயல்பான கதாநாயகனாக நடித்து முதல் காட்சியிலேயே இடம் பிடிக்கிறார். அவர் பேச்சும் நடிப்பும் கதையோடு ஒன்றியிருப்பது பாராட்டுக்குரியது. புதுமுகம் மனோகா கோபப்டும் காட்சிகளில் பளிச்சிடுகிறார். அரசியல் வாதியாக நடித்திருக்கும் தண்டபாணி இதில் இன்னும் மிரட்டியிருக்கிறார் ஆவேசப்படும் காட்சிகளில் பிரமாதப்படுத்துகறார். எமாற்றுபவனை ஏமாற்றும் பாத்திரத்தில் மணிவண்ணன் நடித்திருக்கிறார்.
படத்தில் ஹைலைட்டாக அமைந்திருப்பது எம்.எஸ்.பாஸ்கர்,கிரேண் மனோகர் காமெடி. அவர்கள் செய்யும் குறும்பு தியேட்டரில் ரகளை. அதிலும் எம்.எஸ்.பாஸ்கரை விரும்பும் அந்த பெண் சம்மந்தப்பட்ட காட்சிகல் கலகலப்பு. போலீஸ் அதிகாரியாக வந்து அதிரடி நடவடிக்கை எடுக்கும் அரவிந்தராஜ் நடிப்பு பலே.
ஆதிஷ் உத்திரியன் இசையில் பாடல்கள் பரவா இல்லை. அதில் எம்.எஸ்.பாஸ்கர் பாடிய நாயுமே பாடல் செம ஆட்டம். அதில் ஆட்டம் போட்டிருக்கும் அந்த கவர்ச்சி தாரகையும் தன் பங்கிற்கு இடுப்பை வெட்டி, உதட்டை சுழித்து ஆடி ரசிகர்களை கொண்டாட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார். பாடல்களை எழுதியதோடு சில பாடல்களை பாடி படத்தை தயாரித்திருக்கிறார் குடந்தை எஸ்.பி.சந்திரசேகர். நல்ல படமாக கொடுக்க வேண்டும் அவரது பாசிட்டிவ் திங்க் எடுபட்டிருக்கிறது.
எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய் என்ற கருத்தை ஆழமாக அழுத்தமாக சொல்லிருப்பதோடு அதை இயல்பான காட்சிகளோடு கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் குணசேகரன். வழக்கமான பாணியோடு படம் இருந்தாலும் புதுமுகங்களை வைத்துக்கொண்டு முகம் சுழிக்காதபடி படத்தை கொடுத்திருப்பது அவரது திறமை
No comments:
Post a Comment