Saturday, August 15, 2009

கா‌ர்‌த்‌தி‌க்‌ அனி‌தா‌


நி‌றுவனம்‌: கி‌ங்‌ மோ‌ஜி‌க்‌‌ தயா‌ரி‌ப்‌பு‌: ஷங்‌கர்‌ வி‌.ரா‌ஜன்‌

இயக்‌கம்‌: ஸ்ரீஹரி‌ இசை‌: ஜா‌க்‌ ஆனந்‌த்

‌நடி‌ப்‌பு‌:‌ ரத்‌தன்‌, மஞ்‌சு, கோ‌ட்‌டா‌ சீ‌னி‌வா‌சரா‌வ்‌, ரா‌ஜன்‌ பி‌.தே‌வ்‌

பா‌டல்‌கள்‌: நா‌.முத்‌துக்‌குமா‌ர்‌, யு‌கபா‌ரதி‌, தா‌மரை‌, சீ‌னி‌வா‌ஸ்‌

நடனம்‌: பி‌ரபு‌ ஸ்ரீனி‌வா‌ஸ்‌, டி‌.சி‌வா‌ கலை‌: ஜி‌.கே‌.

ஒளி‌ப்‌பதி‌வு‌:கே‌.ஜி‌.சங்‌கர்‌, ஏ.வே‌ல்‌முருகன்

‌படத்‌தொ‌குப்‌பு‌: சா‌ய்‌சுரே‌ஷ்‌ தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கம்‌: வி‌.பா‌க்‌யரா‌ஜ்‌

மக்‌கள்‌தொ‌டர்‌பு‌: மெ‌ளனம்‌ ரவி‌


ஒரு பெரிய குடியிருப்பில் எதிரெதிர் வீட்டில் வசிக்கும் கோட்டா சீனிவாசராவும், ராஜன் பி.தேவும் நெ‌ருங்‌கி‌ய நண்‌பர்‌கள்‌ . கோட்டா மகன் கார்த்திக், ராஜன் பி‌.தே‌வ்‌ மகள் அனிதா. இருவரும் நண்பர்கள் ஒன்றாக படிக்கி‌ன்‌றனர்‌. இந்த ஜோடிகளுக்கு அடிக்கடி மோதல் எப்போது நேரம் கிடைக்கும் ஒருவரை ஒருவர் மாட்டி விடலாம் என்று நினைப்பவர்கள்.


இந்த சூழ்நிலையில் கல்லூரி பெண்களிடம் கேலியும் கிண்டலும் செய்ததற்காக கல்லூரி பிரின்சிபால் கார்த்திக்கின் தந்தையை அழைத்து வர சொல்கிறார். அப்போது ஒரு கோல் மால் செய்து வேறொருவரை தந்தை போல் நடிக்க செய்கிறார் கார்த்திக். இந்த தகவலை அனிதா பிரின்சிபாலிடம் கூற கார்த்திக் ஒரு மாதம் சஸ்பெண்ட் செய்யப் படுகிறார். இதனால் அனிதா மீது கார்த்திக்கு கோபம் அதிகரிக்கிறது. இந்த நிலையில் அனிதாவிற்கும் அபிநய்க்கும் திருமண ஏற்பாடுகள் நடை பெறுகிறது. கார்த்திக்கும் அனிதாவும் ஒருவரை ஒருவர் மனதார விரும்பினாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ள அவர்களது ஈகோ மறுக்கின்றது. முடிவில் இருவரும் ஒன்றாக இணைந்தார்களா என்பதே மீதி.


கார்த்திக்‌காக ரத்தன், அனிதாவாக மஞ்சு இருவரும்‌ அடிக்கும் லூட்டிகள் அமர்களம். இருவரும் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொள்வது என்பது பழைய பார்முலாவாக இருந்தாலும் இருவரும் புதுசாக இருப்பதால் கண்களுக்குகுளிர்ச்சி. டேய் எனக்கு மாப்பிள்ளை பார்க்குறாங்கடா என்று கூறும் போதும் இருவரும் முட்டி மோதிக் கொள்ளும் போதும் கார்த்திக்கின் அப்பாவிடம் பாசத்தை பொழிவதும் அமர்களப் படுத்துகிறார் மஞ்சு. இருவரது காதலையும் பத்‌து ரூபாய் நோட்டு சேர்த்து வைப்பது பழைய பார்முலாவாக இருந்தாலும் இனிமையாக இருக்கிறது.


வில்லன்களாகவே பழக்கப்பட்ட கோட்டாவும், ராஜனும் இதில் அடக்கமான அப்பாக்களாக வருவது அடடே போட வைக்கிறது. சி‌ங்‌கமுத்‌து மகளுக்‌கா‌க படும்‌பா‌டு நல்‌லகா‌மெ‌டி‌. ஜாக் ஆனந்த் இசையில் பாடல்கள் கேட்கலாம். பிற்பகுதி கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் கார்த்திக் அனிதா குளு குளுவாக இருந்திருக்கும். இருந்தாலும் இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச காட்சிகள் இல்லாமல் இருப்பது ஆறுதல்.

No comments:

Post a Comment