
நிறுவனம்: ஆஞ்சநேய புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பு: எம்.சத்தீஷ்குமார் இயக்கம்: சந்தோஷ்சிவன்
இசை: ராதாகிருஷ்ணன் மக்கள் தொடர்பு: மவுனம்ரவிநடிப்பு: பிருத்விராஜ், காவ்யா மாதவன் , மனோஜ்கே.ஜெயன், ரியாசென், கலாபவன்மணி, நெடுமுடிவேணு, ஹனிபா, ரேவதி
தயாரிப்பு: எம்.சத்தீஷ்குமார் இயக்கம்: சந்தோஷ்சிவன்
இசை: ராதாகிருஷ்ணன் மக்கள் தொடர்பு: மவுனம்ரவிநடிப்பு: பிருத்விராஜ், காவ்யா மாதவன் , மனோஜ்கே.ஜெயன், ரியாசென், கலாபவன்மணி, நெடுமுடிவேணு, ஹனிபா, ரேவதி
சிவுபரத்தில் உள்ள சிவன் கோவில் பற்றி சிறுவயதிலிருந்து தாயிடம் தெரிந்துகொள்கிறார் பிரித்விராஜ். தாய் இறந்த பிறகு அவரது கடைசி ஆசையான சிவன்கோவிலில் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்ற வெளிநாட்டிலிருந்து சிவபுரம் வருகிறார் பிருத்விராஜ்.
மந்திர குகைக்குள் உள்ள பாம்பு புற்றுக்குள் இருக்கும் மரகதமாணிக்கத்தை எடுக்கவும், இந்த உலகத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் திட்டமிடும் மந்திரவாதி மனோஜ்.கே.ஜெயன், அவருக்கு எதிரானவர்களை இல்லாமல் செய்துவிடுகிறார். அவரை தாண்டி சென்று சிவன் கோவிலை அடைய வேண்டும் என்பதால் அவரோடு பிருத்விராஜ் மோத வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. தனது மந்திர சக்தி மூலம் பிருத்விராஜை தனது கட்டுப்பாட்டில் வைப்பதோடு தேவையான சமயத்தில் அவரது உடம்புக்குள் புகுந்து (கூடு விட்டு கூடு பாய்தல்) பிருத்விராஜின் மாமன் மகள் மூலம் மரகதமாணிக்கத்தை எடுக்க முயற்சி செய்கிறார். இதை எப்படி உணர்ந்து மனோஜ் கே.ஜெயனையும் அவரது சக்திகளையும் அழிக்கிறார் பிருத்விராஜ் என்பது படம்.
முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை திகிலுடன் அழைத்துச் செல்லும் மந்திரதந்திர படம். மலையாளத்திலிருந்து வந்திருப்பதால் இன்னும் மந்திரத்துக்கு முக்கியத்துவம் விலாவாரியாக தரப்பட்டிருக்கிறது.
பாவமான பாத்திரத்தில் நடித்து பரிவுகளை அள்ளிச்செல்கிறார் பிருத்விராஜ். அபார நடிப்பால் மிரள வைக்கிறார் மனோஜ்.கே.ஜெயன். காவ்யா மாதவன் காதலில் உருகி மனதை அள்ளுகிறார். ஞாபக மறதி ஹனிபா சிரிக்க வைக்கிறார். நெடுமுடிவேணு, கலாபவன்மணி, பிஜூ மேனன் என ஏகப்பட்ட பாத்திரங்கள். அதில் ரியாசென் கவர்ச்சி விருந்து படைக்கிறார்.
கதைக்கேற்ப நேர்த்தியான ஒளிப்பதிவால் படத்தோடு ஒன்ற வைத்து விடுகிறார் சந்தோஷ்சிவன். எம்.ஜி. ராதாகிருஷ்ணனின் இசையும் பாடலும் அருமை. சஸ்பென்ஸ், திரிலர், ஆக்ஷன் என கலந்து கட்டி ஒரு மாயாஜால படமாக சிவபுரத்தை தந்திருக்கிறார் சந்தோஷ்சிவன். பாட்டியிடம் கேட்ட கதை போல திகிலுடன் பார்க்கலாம்.
No comments:
Post a Comment